'>
Showing posts with label பரிகாரம். Show all posts
Showing posts with label பரிகாரம். Show all posts

Monday, August 6, 2012

கிரக பலம் இல்லா(போதா)தவர்கள்


அண்ணே வணக்கம்ணே !

பதிவுக்கு போறதுக்கு மிந்தி ஒரு ரிக்வெஸ்ட்: ( நேத்திக்கு போட்டதேதான்.ஏற்கெனவே படிச்சிருந்தா-படிச்சது ஞா இருந்தா ரிக்வெஸ்டை ஸ்க்ரால் பண்ணிருங்க.

நீங்க நம்மை ஃபேஸ்புக்ல ஃபாலோ பண்ற பார்ட்டியா இருந்தா பக்கத்தை மூடிட்டு போயிருங்க. ஏன்னா இந்த மேட்டரை எல்லாம் பிட்டு பிட்டா (மலையாள பிட்டு இல்லிங்கோ) ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணியிருக்கேன்.

வலைதளம்/வலைப்பூவில் ரீடர்ஸ் -கோ ப்ளாகர்ஸ் பார்ட்டிசிப்பேஷன் குறைஞ்சுக்கிட்டே போறதால ஒரு சேஞ்சுக்கு 15 நாள் ஃபேஸ் புக்ல கேம்ப் அடிக்கலாம்னு சின்னதா ஐடியா.

ஃபேஸ்புக்ல சோசிய மேட்டரு வேணம்னா இங்கே அழுத்தி ஃபாலோ பண்ணுங்க. நாட்டு நடப்பை ஃபாலோ பண்ண இங்கே அழுத்துங்க.

இப்பம் பதிவுக்கு போயிரலாம்.

கிரக பலம் கூட மின்சாரம் மாதிரி தான். சிங்கிள் ஃபேஸ்,டபுள் ஃபேஸ்,த்ரீ ஃபேஸ் மாதிரி. எந்த அளவு மின் அழுத்தம் இருந்தா எந்த மாதிரி வேலைகளை செய்யலாம்னு ஒரு கணக்கு இருக்கு.

பவரே இல்லாம போறதுல்லாம் கிரக பலம் மேட்டர்ல நடக்காது.டோன்ட் ஒர்ரி. எப்படியா கொத்த தரித்திரம் பிடிச்ச ஜாதகத்துலயும் ஒரு பாவம் , ஒரு கிரகமாவது பெட்டர் பொசிஷன்ல இருக்கும்.

அதை ஐடென்டிஃபை பண்ணி ரெம்ப கேரா இருக்கிற கிரகங்கள் ,பாவங்களோட காரகத்வங்களை அவாய்ட் பண்ணி / செகண்ட் குவாலிட்டி/செகண்ட்ஸ்ல அரேஞ்ச் பண்ணி அஜீஸ் பண்ணிக்கிட்டா லைஃபே பெட்டர் ஆயிரும்.

ஃபேஸ் புக்ல துண்டு துண்டா போட்டதை இங்கன தொகுத்து தந்திருக்கேன். கொண்டாடுங்க. பை தி பிறந்த நாள் வாழ்த்து சொன்னவுகளுக்கெல்லாம் நன்றி. நன்றி. நன்றி. இன்னம் அரைமணி நேரத்துல பவர் கோவிந்தாவாயிரும். பத்தரைக்கு பவர் வந்த பிற்காடு இதை பத்தி ரெண்டு வரி சொல்றேன்.


1.சூரிய பலம் இல்லாதவர்கள்:

சொந்த தொழில், ஷெட்யூல்ட் ட்ராவல்ஸ் உள்ள தொழில்கள், அப்பாவின் தொழிலை தொடர்வது, ரிமோட் வில்லேஜஸ்,மலை பிரதேசங்களில் செய்யும் தொழில் இத்யாதியை விட்டுவிடுவது நல்லது. உங்க பேச்சு/எழுத்து நான் ங்கற வார்த்தையோட ஆரம்பிக்கப்படாது. உட்கார்ரச்ச முதுகை நிமிர்த்தி வச்சு உட்காருங்க. உப்பு போட்ட பேஸ்டை உபயோகிங்க. லாஸ் ஆஃப் கால்ஷியம் கூடாது. கால்ஷியம் அதிகமுள்ள உணவை எடுத்துக்கங்க. லீடர்ஷிப்புக்கு அம்பேல் வச்சுட்டு கும்பல்ல கோவிந்தா போடலாம்

2.சந்திர பலம் இல்லாதவர்கள்:

புகை,பகை,தூசு,மாசை தவிர்க்கவும். மாஸ் என்றால் ஆங்கில மாஸ் (கூட்டம்) தமிழ் மாசு ரெண்டையும் தவிர்க்கவும்.

தனிய உட்கார்ந்து ரோசிக்காதிங்க. மக்களுடன் நேரடி தொடர்புள்ள ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ் இத்யாதி தவிர்க்கவும். தேர்தல் .. மூச் பேசவே படாது .

தோட்டம் போடவும். தண்ணீருக்காக சிரமப்படுங்க (ஓவர் ஹெட் டாங்கை சுத்தப்படுத்தறது - அடி பம்புல தண்ணி அடிக்கிறது)

ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்கள்ள தொழில் கூடாது. முக்கிய முடிவுகள் கூடாது.


3.செவ்வாய் பலம் இல்லாதவர்கள்:

ப்ளட் டெஸ்ட் பண்ணிக்கங்க. பி.பி செக் பண்ணுங்க. ரத்தவிருத்திக்கான உணவை (மருந்து மாயமில்லை) எடுத்துக்கங்க.

போட்டி,விரோதம்,ரியல் எஸ்டேட்டுக்கெல்லாம் அம்பேல் வச்சுருங்க. போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே காரவுக கிட்டே விவகாரம் வேணாம்.

சகோதரர்கள் விசயத்துலயும் பி கேர்ஃபுல். எரிபொருள்,மின்சாரம்,கூர்மையான ஆயுதங்களும் ஆபத்தை விளைவிக்கலாம்.

ஒசரமான இடங்கள்ள ஏறி வேலை செய்றதெல்லாம் வேணாம்.


4.ராகு பலம் இல்லாதவர்கள்:
ஆர் எஸ் எஸ், பா.ஜ.க எல்லாம் ரெம்ப கவரும்.கவர் ஆயிராம பார்த்துக்கனும். சினிமா,லாட்டரி சாராயம் பக்கம் ஒதுங்கப்படாது.சூது கூடவே கூடாது.

வெளியிடத்துல சாப்பிடகூடாது. தண்ணி கூட வீட்லருந்து கொண்டு போயிட்டா பெட்டர். டாக்டர் கிட்டே போகவேண்டிய நிலை வந்தா ஸ்பெஷலிஸ்டையே பார்த்துருங்க.

வெளி நாட்டு மோகம், இம்போர்ட் ,எக்ஸ்போர்ட், ஷேர் மார்க்கெட்லாம் நஹின்னு வாழ்ந்துரனும்

5.குரு பலம் போதாதவர்கள்:

ஒரு வேலைக்கு ஒரு ரூபா தேவைன்னா 3 ரூபா கையில வச்சுக்கிட்டு ஆரம்பிக்கனும். அந்த வேலை ஒரு வாரத்துல முடிஞ்சுரும்ங்கற நிலை இருந்தாலும் 3 வாரம் பிடிக்கும்ங்கற எச்சரிக்கையோட முன் கூட்டியே ஆரம்பிச்சுரனும். இன்ஃப்ளுயன்ஸை/செல்வாக்கை உபயோகிச்சு செலவை குறைச்சுரலாம்னு - ப்ராசஸை ஃபாஸ்ட் அப் பண்ணிரலாம்னு ஓவர் கான்ஃபிடன்டா இருக்கக்கூடாது

சமுதாயத்துல எவன்லாம் பெரீ மன்சனா இருக்கானோ அவன்லாம் உங்க கிட்டே சில்லறைத்தனமா நடந்துக்கிருவான்.

மனைவி ,குழந்தைகள் ,ரொக்கம்,தங்கம் மேட்டர்லயும் அடக்கி வாசிங்க.


6.சனி பலம் போதாதவர்கள்:

ஐரன்,ஸ்டீல்,ஆயில்,விவசாயம்,எருமை வளர்ப்பு ,ட்ரேட் யூனியன்லாம் கூடாது. கருப்பானது,தூசு தும்பை கிளப்பக்கூடியது, நாற்றம் நிறைந்தது,செகண்ட்ஸ்,ஸ்க்ராப் இத்யாதி பொருள்களை டீல் பண்ணப்படாது. வேலைக்காரவுக, தலித், க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயிஸ் கூட ஆப்படிக்கலாம்.

சனி பிடிச்ச காலம் முயற்சிகளை செய்யற காலம். இந்த முயற்சிகளுக்கான பலன் சனி விட்ட பிறகு கிடைக்கும்ங்கற க்ளேரிட்டியோட பொறுமையா செயல்படனும்.அவசரம் கூடாது

குறிப்பு:

குரு,சனி பலம் போதாதவர்கள்:

முடிவெடுக்கிற பொசிஷன்ல இருக்கக்கூடாது.(கழண்டுக்கலாம் அ பழைய முடிவுகளையே ஃபாலோ பண்ணலாம்) .முக்கியமா லீட் பண்ண கூடாது. முதல் வைக்கக்கூடாது ( கு.ப அடிஷ்னல் இன்வெஸ்ட்மென்ட்) இடமாற்றம்,சீட் மாற்றம் வந்தா ஏத்துக்கனும்

7.புத பலம் இல்லாதவர்கள்:

எழுத்து ,கவிதை பக்கம் வரப்படாது. அடுத்தவுக மேட்டர்ல தலையிடக்கூடாது.முக்கியமா பஞ்சாயத்து -தூது கூடாது.

போஸ்டல் எஸ்.டி.டி கூரியர் மெடிக்கல் எஜுகேஷன் அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங் துறைகள்ள இறங்கப்படாது.

தாய்மாமன் மேட்டர்ல அலார்ட்டா இருக்கனும். லங்கோடு கட்ட கத்துக்கிடுங்க. இல்லாட்டி ப்ராண்டட் அண்டர்வேர்ஸ் மட்டும் யூஸ் பண்ணுங்க.

மேனி அழகை பராமரிக்கிற வேலைல்லாம் வேணாம். ஸ்கின் ப்ராப்ளம் வந்துரும்.


8.கேது பலம் இல்லாதவர்கள்:
தியானம் யோகம்னு போகப்படாது. குண்டலி எந்திரிச்ச மாதிரியே எந்திரிச்சு படக்குனு விளுந்துரும்.பித்து பிடிச்சு அலையனும்.

முக்கியமா கோவூர் பெரியார் மாதிரி மந்திரவாதிங்க கிட்டே சாலஞ்ச் எல்லாம் பண்ணப்படாது.மந்திரம் /மந்திரவாதி எதையும் கிளிக்கலின்னாலும் தானா கிளிஞ்சுரும். ராகு பலம் இல்லாதவர்களுக்கு தந்த சஜஷனையும் ஃபாலோ பண்ணிக்கிடுங்க.



9.சுக்கிர பலம் போதாதவர்கள்:

ஃபேன்சி,நாவல்ட்டீஸ்,மியூசிக்,சினிமா,ஐ பாட், சாட்டிங்க, ஃபர்னிச்சர்,வாகனம்லாம் அவாய்ட் பண்ணனும்.

பெண்கள்,பெண் பெயர் கொண்ட ஆண்கள், நிறுவனங்கள் ஆப்படிச்சுரும்.

கோக்கு,பீட்சால்லாம் அவாய்ட் பண்ணிரனும். விருந்து, பார்ட்டி,பிக்னிக், டூர் தவிர்க்கனும்.

மாதர் போகம் மாதம் இருமுறைன்னு கட்டுப்பாட்டோட வாழ முயற்சி பண்ணனும்.

முயற்சி தோல்வியடைஞ்சுட்டா ஃபீல் பண்ணப்படாது. இயற்கையை வெல்ல முடியாதுங்கோ. முக்கியமான மேட்டர் சொந்த வாகனம்,வீடு மேட்டர்ல இறங்கப்படாது. ஃபெயில் ஆயிரும்னுல்ல. இது சக்ஸஸ் ஆனா பேட்டரி எம்ப்டி ஆயிரும்.

Tuesday, June 5, 2012

1-3 பாலியல் விருப்பங்கள் & பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
12+12 பாலியல் விருப்பங்கள் தொடரில் 3 விதமான செனேரியோவை கொடுத்திருந்தம். இந்த செனேரியோக்கள்ள வாழ்ந்துக்கிட்டிருக்கிறவு இன்னா மேரி பரிகாரங்களை செய்துக்கலாம்னு இன்னைக்கு பார்த்துரலாம். நாளையிலருந்து 4 , 5 , 6 ன்னு 12+12 வரை பார்ப்போம்.

மொதல்ல கொடுத்த 3 வகையான செனேரியோல எந்த பிரச்சினையும் இல்லாம வண்டி ஓடிக்கிட்டிருந்தா அவிக எந்த பரிகாரமும் செய்ய தேவையில்லை. பிரச்சினை உள்ளவுக மட்டும் பரிகாரம் செய்தே ஆகனும்.
இத்தீனி நாள் நம்ம ப்ளாகை/சைட்டை ஃபாலோ பண்ணாதவுக வசதிக்காக மேற்படி 3 செனேரியோவை இங்கே மறுபடி தரேன்.

1.சுகமான கற்பனைகள் - நல்ல ரசனை - கலைகள்ள ஈடுபாடு -பெண்களுடன் இரண்டற கலக்கும் மென்மை/பெண்மை உ.ம் ரெசிப்பி பத்தி கூட டிஸ்கஸ் பண்ணுவாய்ங்க. டிப்ஸ் கொடுப்பாய்ங்க. இவிகளை பொருத்தவரை வீடு,வாகனம்லாம் அனுபோகத்துல இருக்கும். (சொந்தம்னு அடிச்சு சொல்லவரலை -எவனுதோ இவிக தங்களோடதை போல அனுபவிக்கறாபல் ஒரு அமைப்பு.

பிரச்சினை:
கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி கியாரண்டி இதை சீரணிச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ் இல்லின்னா பிரச்சினைதேன்.

பரிகாரம்:

1.சாயந்திரம் போடப்போற பதிவை பத்தி காலையில ரோசிச்சா புண்ணியம் உண்டு. அட்லீஸ்ட் வேலை கிடைச்சு,அது பர்மனன்டாகி , தரகர் கிட்டே ஜாதகம் கொடுத்துட்டு வந்து பொஞ்சாதிய பத்தி கற்பனை பண்ணா புண்ணியம் உண்டு. அதை விட்டுட்டு "ஆலு லேது ச்சூலு லேது கொடுக்கு பேரு சோமலிங்கம்"னுட்டு கற்பனை குதிரையை விரட்டக்கூடாது. ( ஆலு=மனைவி ; ச்சூலு = கர்பம் ; கொடுக்கு =மகன் ) பொஞ்சாதியும் இல்லை -அவள் கர்பமாவும் இல்லை. பிள்ளை பேரு சோமலிங்கம்னு கற்பனை பண்றது வீண் தானே.

முதலிரவு அறைக்குள்ள நுழையறதுக்கு முந்தி கற்பனை செய்தா விந்தும் முந்தும் ( சூப்பர் எதுகை மோனைப்பா) அப்பாறம் இல்லாத பொல்லாத இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இழந்த சக்தி வைத்தியர்கள் இதெல்லாம் தேவையா?

கற்பனைக்கு கர்த்தா நாம. அதனால கற்பனை பழைய தமிழ்படம் மாதிரி ஸ்மூத் கோயிங்கா இருக்கும். ஆனால் லைஃப் ? இதுக்கு கர்த்தா நம்ம கருமம். டப்பிங் தெலுங்கு படம் மாதிரி கத்தி,குத்து,ரத்தம்லாம் இருக்கும்.

நல்லதை நினைக்கும் போதே கெட்டதையும் நினைச்சு பாலன்ஸ் பண்ணிக்கிரனும். அதுலயும் இந்த கில்மா மேட்டர்ல அசலான வேலைய செய்ய வேண்டியது வேற டிப்பார்ட்மென்ட். கற்பனைக்கு கேந்திரம் மூளை.

காமம் தலைக்கேறின்னு சொல்வாய்ங்க. அப்படி ஏறிட்டா "கிளிச்சுரலாம்"ங்கற மாதிரி ஒரு ஐடியா வரும். மேட்டர் இன்னாடான்னா காமம் தலைக்கு ஏறக்கூடாது. ( ஐ மீன் அது குறித்த எண்ணங்கள் ,கற்பனைகள்) அப்டி ஏறிருச்சுன்னா பெர்ஃபார்மென்ஸ்ல பல்பு வாங்கிர வேண்டியதுதான்.

இந்த பாய்ண்டையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு அடக்கி வாசிக்கனும். கற்பனைய தூண்டக்கூடிய உப்பு,காரம்,புளிப்பு, தனிமை , மசாலா ,ஸ்வீட்ஸ், ஸ்ன்ட், நொறுக்கு தீனி ,பட்டை ,லவங்கம் முதற்கொண்டு நம்ம சைட்டு உட்பட எல்லாத்தையும் தவிர்க்கனும்.

லைஃப் ஸ்டைலை மாத்திக்கிடனும். கடுமையான் உடல் உழைப்பு , ஆழ்ந்த தூக்கத்தை தரும். ஆழ்ந்த தூக்கத்துல கனவு வராது.

பாடியில ஜெனரேட் ஆகக்கூடிய எனர்ஜியை எங்கேஜ் பண்ணிரனும்.உபரியா உள்ள எனர்ஜி நிச்சயமா செக்ஸ் பவராத்தான் வெளிப்படும். இந்த புரிதல் தான் முழு முதல் பரிகாரம்.

நல்ல ரசனை - கலைகள்ள ஈடுபாடு :

ரசனைன்னு சிம்பிளா ஒரே ஒரு வார்த்தை.ஆனால் வாழ்க்கைக்கான அருத்தமே இதுல அடங்கிருது. ரசனை இல்லாதவன் மன்ச ஜன்மமே கிடையாது.

நம்ம ஃப்ரெண்டு ஒருத்தரு கீறாரு . நல்ல உயர்தர சைவ உணவகத்துக்குத்தான் போவாரு. இட்லி தோசை இத்யாதிக்கு என்னெல்லாம் சைட் டிஷ் இருக்கோ எல்லாத்தையும் கேட்டு வாங்குவாரு. ரெண்டு மூனு வாய் தனித்தனியா தொட்டு சாப்பிடுவாரு. அப்பாறம் என்ன பண்ணுவாருன்னா எல்லா சைட் டிஷ்ஷையும் ப்ளேட்ல கவுத்து பிசைஞ்சு ( சாரி .. ரெம்ப குமட்டுதோ?)

ஒரு செருப்பு வாங்க நூறு ஜோடியையாவது பார்த்துருவாரு. ஐ நூறு,ஆயிரத்துக்கு குறைச்சு எடுக்கவே மாட்டாரு, வயசு 55 இதுவரைக்கு கண்ணாலமாகல்லை.

இன்னொரு ஃப்ரெண்டு . 1987 ல திடீர்னு அப்பா செத்துப்போக 007 ஜீ.ஓ படி அவர் வேலைய இவருக்கு கொடுத்தாய்ங்க. அப்பாவோட பாண்ட் சட்டை எல்லாத்தையும் அள்ளிட்டு போயி ஆல்ட்டர் பண்ணி அதையே 3 வருசம் போட்டாரு.

அதையாவது ஒரு ரீஜனா போடுவாரு -களட்டி வைப்பாருன்னா ஊஹூம்.பாண்டோடயே தூங்கிருவாரு. தூங்கி எந்திரிச்சு அப்டியே ஆஃபீஸ் வந்துருவாரு.

மொதல் கல்யாணம் 35 வயசுல நடந்தது. ரெண்டு வருசத்துல பொஞ்சாதி செத்துப்போச்சு. போன வருசம் செகண்ட் மேரேஜ்.

ஒரு அய்யரு வீடு. கோவில்ல பூஜைல்லாம் கூட செய்துக்கிட்டிருந்தாய்ங்க. ஃப்ரீயா வர்ர வேட்டி,துண்டையெல்லாம் கடையில வித்துருவாரு போல. அவர் கட்டியிருக்கிற வேட்டி துண்டை பீத்துணியை கூட வச்சு விளையாடற நாய் குட்டி. கூட சீண்டாது. அம்மாம் அழுக்கு. அவிக வீட்டுக்குள்ள காலை வச்சு எடுக்கிறதுக்குள்ள நம்ம பாதங்களோட அடையாளம் கிருஷ்ண ஜெயந்தி கணக்கா பதிஞ்சுரும். அம்மாம் தூசு.

பிள்ளை குட்டி கிடையாது. வெள்ளையோ வெள்ளையா ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்தாய்ங்க. அதுவும் கண்ணாலம் கட்டிக்கிட்டு பூட்ச்சி. திரும்பி பார்க்கலை. அய்யரும் போய் சேர்ந்துட்டாரு. அய்யரம்மா தனிமரமா நிக்காய்ங்க.

இதையெல்லாம் படிச்சுட்டு ஓஹோ.. ரசனையோட வாழ்ந்தாதான் கண்ணாலம்,கில்மா, பிள்ளை குட்டில்லாம் அமையுமோன்னு ஒரு முடிவுக்கு வந்துராதிங்க.

இதே ரசனை ஓவரா போனாலும் சுக்கிர பலம்லாம் அதுக்கே செலவாகி கண்ணாலம்,கில்மால்லாம் கானல் நீரா போயிரும். சாக்கிரதை .

வசதியான வீடு இருக்கு. ஏஜ் பார் ஆயிட்டே இருக்கு. கண்ணாலம் அமையலியா? ஒரு பத்து ரூபா ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி உங்க வீட்டை லட்சுமிக்கு எழுதிவச்சுர்ரதாவும் வாழ் நாள் முழுக்க பிரதி மாதம் 1 முதல் 5 ஆம் தேதிக்குள்ள ரூ.108 லோக்கல் பெருமாள் கோவில் உண்டியில செலுத்திர்ரதாவும் கமிட் பண்ணிக்கங்க.

இதுல நீங்க ரூ.108 போடறது ஸ்தூலமான சமாசாரம் இது முக்கியம் கிடையாது. வாடகை வீட்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் உங்க மனசுல இருக்கனும். அதான் முக்கியம். வாகன மேட்டர்லயும் இதே ஃபார்முலாவ யூஸ் பண்ணுங்க.

படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்களை அவாய்ட் பண்ணிருங்க. சீக்கிரமே தூங்கப்போயி விடியல் 4 அ 4.30 க்கெல்லாம் எந்திரிச்சுருங்க. நடனம், சங்கீதம் மாதிரி ப்ரோக்ராம்ஸுக்கு காசு கொடுத்து டிக்கெட் வாங்கி போய் பாருங்க

தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாக்களை நீங்க அவாய்ட் பண்ணுங்க. ஃப்ரெண்ட்ஸ் கேட்டா வாங்கி கொடுங்க.

ஏசி இருந்தா அதை அப்பப்போ ஆஃப் பண்ணிருங்க. பயணம்னு கிளம்பினா ஸ்லீப்பர், சூப்பர் டீலக்ஸ் இத்யாதியை அவாய்ட் பண்ணுங்க.

வீட்டுக்கு தென்கிழக்குத்திசையில பள்ளம், வீட்டுல உபயோகிக்கிற தண்ணீர் வெளிய போறது இத்யாதி இருந்தா மாத்துங்க.

நட்பு ,உறவு வட்டத்தில் விசேஷங்களுக்கு வெள்ளிச்சாமான்களை ப்ரசன்ட் பண்ணுங்க. நீங்க பெண்ணா இருக்கும் பட்சத்துல ப்யூட்டிபார்லரை கட்டாயம் அவாய்ட் பண்ணுங்க.

குறிப்பு: 3 செனேரியோவுக்கும் பரிகாரம் கொடுத்துரலாம்னு பார்த்தேன். ஊஹூம்.. வேலைக்காகலை . நாளைக்கு பார்ப்போம்.

சீ யு..

Wednesday, May 23, 2012

கூகுல் ஆட்சென்ஸ் கிடைச்சுருச்சுங்கோ !


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ட்ராக் மாறாம நேத்து கொடுத்த பிக்சர்ல உள்ள சனத்துக்கு சொல்யூஷன் கொடுத்தே தீர்ரதா முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு மிந்தி கொஞ்சம் மொக்கை.

அனுபவஜோதிடம் டாட் காம் சைட்டுக்கு போனவுக நொந்து போயிருப்பாய்ங்க. மேட்டர் இன்னாடான்னா அல்லாம் இங்கிலீஷு. இதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு.அதான் கூகுல் ஆட்சென்ஸ்.

ஒரு நாள் கூத்துக்கு மீசை வச்ச மாரிதானேன்னு தமிழ் போஸ்டை எல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணிட்டு ப்ளாக்ல இருந்த இங்கிலீஷ் போஸ்டையெல்லாம் கொண்டாந்து போட்டு நிரவி கூகுல் ஆட்சென்ஸுக்கு ரீ சப்மிட் பண்ணேன்.

கொய்யால எந்த அக்ரகாரம் கொளுத்திக்கிட்டு போயிருச்சோ தெரியலை. டெம்ப்ரவரியா அப்ரூவ் பண்ணி ஆட் கோடும் கொடுத்துட்டாய்ங்க. அதனால அமலா பாலை தேடாத சமயத்துலயாச்சும் தமிழ்ப்பாலை தேடி அ.ஜோ சைட்டுக்கு வர்ர சனம் இன்னம் கொஞ்ச நாள் பொறுக்கனும்.

கூகுல் காரவுக இன்னம் டீப்பா ரெவ்யூ பண்ணி அப்ரூவ் பண்ண பிற்காடுதேன் கூகுல் ஆட்ஸ் டிஸ்ப்ளே ஆகும். அது நடந்தாதேன் சில்லறை புரளும். ஆருனா கூகுல் ஆட்சென்ஸ்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவுக டிப்ஸ் கொடுத்தா நல்லாருக்கும். ( டூ அண்ட் டோன்ட்ஸ்) நாம சகட்டுமேனிக்கு ஐட்டம் போட்டு கூகுல் காரன் டிஸ் அப்ரூவ் பண்ணிட்டான்னா கட்டில்ல கிடத்தினதை தொட்டுக்கூட பார்க்காமயே கோட்டை விட்ட்ட கதையா ஆயிரும்.

இன்னைக்கு தலையணை பூக்கள் நாவல்ல ஜெயேந்திரரை பாத்திரமாக்கி ஜல் ஜக் போட்ட பாலகுமாரன் இன்னைய தேதிக்கு மன்னிப்பு கேட்கனுனு ஒரு பதிவை போட்டிருக்கேன்.நம்ம இங்கிலீஷெல்லாம் ஓட்டை. ரெம்ப ஈஸியா புரியும்.தகிரியமா ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கண்ணா

நேத்திக்கு நான் கொடுத்த பிக்சர்ல உள்ளவுக பொருளாதார ரீதியில ரிலீஃப் ஆகனும்னா கீழ்கண்ட பரிகாரம்லாம் செய்துக்கிடனும்.


தாய்மாமன்னு ஆரும் இல்லையா? பிரச்சினையே இல்லை விட்டுருங்க. . இருந்தாலும் அவிகளால சகாயமில்லையா ? விட்டது சனி. அவிக ரெம்ப லொள்ளு பண்றாய்ங்களா? வம்பு வழக்கு வல்லடில்லாம் இருக்கா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை.

1.வசதி இருந்தா நல்ல தரமான வார பத்திரிக்கைகளை வாங்கி (படிக்காட்டாலும் நல்லதே) படிக்கிறவுகளுக்கு ஓசி கொடுங்க

2.அக்கம்பக்கத்துல ஏழை பிள்ளைங்க இருந்தா அவிகளுக்கு ஸ்லேட்டு ,பல்ப்பம், நோட்டு ,புஸ்தவம்,பேனா பென்சில்னு வாங்கி கொடுங்க

3. கெட்டுப்போன சொந்தக்காரனோ , ஃப்ரெண்டோ மெடிசின் வாங்க காசில்லாம தவிக்கிறானா உதவுங்க


உங்களுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை இருக்கா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை

எச்சரிக்கை:

1.தோல் பிரச்சினை இருந்தா முடிஞ்சவரை அப்டியே விட்டுருங்க. ரெம்ப இமிசையா இருந்தா இயற்கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க. (உண்ணாவிரதம் - புத்து மண்ணை உரசி போடறது -மண் குளியல் எட்செட் ரா) இதுக்கு வழியில்லையா ? சித்தா,ஆயுர்வேதம்,ஹோமியோ பதின்னு கதை பண்ணிக்கிட்டிருங்க/ இங்கிலீஷ் மெடிசினுக்கு மட்டும் போகாதிங்க. அது அமுக்கிரும் -கிளப்பி விட்டுரும் -உசுருக்கே ஆபத்தாயிரும். # லாஜிக்

2.கீல் பிரச்சினை இருந்தா அதுக்கு என்ன காரணம்னு பார்த்து அதுக்கு ட்ரீட் பண்ணுங்க. பெயின் கில்லர்ஸுக்கு அடிக்ட் ஆயிராதிங்க.

3.அண்டம் தொடர்பான பிரச்சினை இருந்தா - லாஜிக்கலா ரோசிச்சு சர்ஜரி அது இதுன்னு போங்க. அவசரப்படாதிங்க.


பரிகாரம்:
1.தூது போற வேலை வேண்டாம் ( அதுவும் லாபம் கருதின்னா வேண்டவே வேண்டாம்)

2.பொயப்புக்கு தேவையில்லாத மேட்டரை தெரிஞ்சுக்க கூட நினைக்காதிங்க

3.பொளப்பா இருந்தா தவிர தினசரிகளை லெஃப்ட் ஹேண்ட்ல கூட தொடாதிங்க .கம்ப்யூட்டருக்கு தடா. நெட்டுக்கு பொடா

4.ஓய்வு நேரத்துல போஸ்ட் ஆஃபீஸ்/ தாசில்தார் ஆஃபீஸுன்னு போயி ஏழை மக்களுக்கு மனு எழுதிக் கொடுங்க.

5.புல்லாங்குழல் ஊதாத கண்ணனோட படத்தை வீட்ல வச்சு துளசி மாலை போட்டு பூஜை பண்ணுங்க. துளசி ஃப்ரெஷா இருக்கும் போதே அதை தண்ணில போட்டு கொதிக்க வச்சு குடிங்க. ( நன்னா அலம்பிட்டு)

6.வசதி இருந்தா நாமம் போட்ட சாமிகளோட நாமாவளி/ ஸ்லோகங்களை பாக்கெட் புஸ்தவமா போட்டு இலவசமா டிஸ்ட் ரிப்யூட் பண்ணுங்க


படிப்பு ? சொல்லிக்கிறாப்ல இல்லை.அதுலயும் கணக்குன்னாலே மைண்ட் ப்ளாக் ஆயிருது. ஃபிசிக்ஸ் ,கெமிஸ்டரின்னா கண்ணை கட்டுது. ஒரு சாதாரண லெட்டர் எளுதனும்னா கூட அடிச்சு திருத்திதான் எளுத வேண்டியதா கீது. - இதான் உங்க நிலைமையா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை.

1.பச்சை நிற ஆடை அணிகலன் நிறைய யூஸ் பண்ணுங்க. புஸ்தவங்களுக்கு பச்சை நிறத்துலயே அட்டை போட்டு வச்சுக்கங்க . ரைட்டிங் பேட் / கம்ப்யூட்டர் டேபிள் எல்லாமே பச்சை .

2.படிக்கிறச்ச வடக்கு மூலையிலயோ வடக்கை பார்த்தோ உட்காராதிங்க. சரும வியாதி ,அண்ட வியாதி, கீல் வாதம் உள்ள ஏழைகளுக்கு முடிஞ்ச உதவியை செய்ங்க

3.பெருமாள் பேர் கொண்டவுக ,வைசிய பிள்ளைங்க டச்சுல இருந்தா அவிகளுக்கு சின்ன சின்ன குறிப்பு நோட்டுகளை இலவசமா கொடுங்க (ஸ்பைரல்)


ஐ.டி,கம்ப்யூட்டர், மெடிசின்,அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங், போஸ்டல், கூரியர்,கமிஷன் ஏஜென்ஸி,டீலர்ஷிப் ,மீடியேஷன் இப்படி எந்த லைன்ல போனாலும் முட்டு சந்துல தான் போய்விடுது. ஆரு மூலமாவாச்சும் ஆருக்காச்சும் எதுனா மெசேஜ் கொடுத்தா தப்பாவே போய் சேருது. ஆரை பிடிக்க ஆரை அணுகனுங்கற டெக்னிக்கே கைவரமாட்டேங்குது. இதான் உங்க நிலையா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை

லெஃப்ட் ஸ்மால் ஃபிங்கர்ல மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும். இதுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்திருக்கிற எல்லா பரிகாரங்களையும் பின்பற்றவும். இனம் இனத்தோடு சேருங்கறாப்ல இதே பிரச்சினை உள்ளவுக உங்க க்ரூப்ல நாலஞ்சு பேரு இருந்தா நாலு பேரும் ப்ளான் பண்ணி நான் சொல்லியிருக்கிற எம்.ஜி.ஆர் வேலைகளை செய்யலாம்.

பைசாவை கண்ல பார்க்க முடியலை . கொடுக்க வேண்டியதை ஆருகிட்டனா கொடுத்தனுப்பினா போய் சேரமாட்டேங்குது. சரியான விலாசத்தை எழுதி அனுப்பினாலும் லெட்டர் என்ன இ மெயில் கூட டெலிவரி ஆகமாட்டேங்குது.

Sunday, May 6, 2012

பிரச்சினை எதுவானாலும் தீர்வு இதோ


அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம் 360 புஸ்தத்தை படிச்சுட்டு நம்ம இஸ்மாயில் சார் ஒரு தூள் ஐடியா கொடுத்தாரு. அதாவது ப்ராப்ளம் பேஸ்ட் அனலைஸ் அண்ட் சொல்யூஷன்.

ராஜமன்ட்ரி கொல்லப்புடி வீராஸ்வாமி அண்ட் கோ வினர் பரிகாரங்கள் பற்றிய நம்ம ஸ்க்ரிப்டை படிச்சுட்டு ஓகே பண்ணாய்ங்க.ஆனாலும் ஃபைனலா வெரிஃபை பண்ணி திருத்தங்களுடன் ஓகே சொல்ல வேண்டிய அவிக ஆஸ்தான வித்வான் டிக்கெட் போட்டுட்டாரா அந்த ப்ராஜெக்ட் ஊத்திக்கிச்சு.

இதை ஏன் இங்கே சொல்றேன்னா அந்த புஸ்த்வத்துல இப்படி ஒரு அத்யாயமே வச்சிருந்தன். தினசரி வாழ்க்கையில சனத்துக்கு பலப்பல பிரச்சினைகள் . கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு கிரகத்தை கேட்ச் பண்ண முடியும் (லாஜிக்) .பிரச்சினை தரக்கூடிய பாவத்தை – கிரகத்தை கேட்ச் பண்ண பிற்காடு பரிகாரம் சொல்றதும் சாத்தியம்தேன்.Read More

Saturday, March 10, 2012

ஆண்மை இழப்பு : பரிகாரம் 5

அண்ணே வணக்கம் ! டைப்படிச்சவன் கீபோர்டை கெடுத்தான் .க்ளிக் பண்ணவன் மவுசை கெடுத்தாங்கறாப்ல எம்மாம் நெல்ல ஜாதகத்துல பிறந்தாலும் நாறிப்போறவுக இருக்காய்ங்க. அதுலயும் இந்த கண்ணாலம் – கில்மா மேட்டர்ல நிறையவே நாறிப்போறாய்ங்க.

இந்த செனேரியோல லக்னாதிபதி எங்கே இருந்தாலும் ஆண்மை இழப்பு – கண்ணாலத்தடைக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதையடுத்து பரிகாரங்கள் சொல்லிட்டு இருக்கேன். நேத்திக்கு லக்னாதிபதி 1 டு 5 பாவங்கள்ள இருந்தா என்ன பரிகாரம்னு சொல்லியிருந்தேன். இன்னைக்கு லக்னாதிபதி ஆறுல இருந்தா என்ன..ஏதுன்னு பார்ப்போம்..

குறள்னு சொன்னதுமே அறம் ,பொருள்,இன்பம் ஞா வரும். அண்ணான்னதுமே கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஞா வரும்.

ஆறாம் பாவம்னதும் ஞா வரவேண்டியது சத்ரு,ரோகம்,ருணம். லக்னாதிபதின்னா தெரியும். ஜாதகர். ஜாதகரை காட்டும் லக்னாதிபதி சத்ரு,ரோகம்,ருணங்களை காட்டும் 6 ஆமிடத்துல நின்னா என்ன ஆகும்?

மேற்படி சத்ரு,ரோகம்,ருணங்கள் ஜாதகரின் வாழவில் இருந்து பிரிக்க முடியாத அம்சங்களாயிரும்."பகைவர்க்கருள்வாய் நெஞ்சே"ன்னு சொன்னது பகை நம் ஸ்தூல வாழ்வை கெடுக்கிறது கெடுக்காதது அப்பாறம் கதை. பேசிக்கலா நம்ம மன் ஓட்டத்தை -ரத்த ஓட்டத்தை -பாடில நடக்கிற மெட்டஃபாலிசத்தையே மாத்திரும்.

அதனாலதேன் பகைவனுக்கருள்வாய் நெஞ்சேன்னு அந்த சப்ஜெக்டையே கழட்டி விட்டுட்டாய்ங்க. ஜா.ரா என்னை எதிரியா நினைக்கிறாருன்னா அது அவரோட பிரச்சினை. நான் ஜா.ராவை எதிரியா நினைச்சுட்டா அது என் பிரச்சினை ஆயிருது.

கடனை பத்தி சொல்லனுமா? கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னுட்டு கம்பரே சொல்லிப்புட்டாரு.

நோய் மேட்டர்ல வர்ரதுக்கு அது வர்ரதுக்கு மிந்தியே அலார்ட் ஆயிக்கிறது பெட்டர். லக்னாதிபதி 6 ல கீறாருன்னு தெரிஞ்ச அதே கணத்துலருந்து இதனோட சீரியஸ்னெஸ்ஸை புரிஞ்சிக்கிட்டு ஒரு 6 மாசம் லைஃப் ஸ்டைல மாத்திக்கிட்டா போதும். எல்லாமே பளிங்கு மாதிரி துல்லியமாயிரும்.

இந்த கிரக நிலை உங்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் 3

1.நீங்க நோயாளியாகனும்
2.கடனாளி ஆகனும்
3.வழக்கு வில்லங்கம்னு அல்லாடனும்

இந்த 3 ல எது பெட்டர்னு பார்த்து ச்சூஸ் பண்ணிக்கிர வேண்டியதுதேன். எந்த தொழில்ல உங்க க்ளையன்ட்ஸ் நோயாளி,கடனாளி அ விவகாரமுள்ளவுகளா இருப்பாய்ங்களோ அப்படியா கொத்த தொழிலை ச்சூஸ் பண்ணிக்கனும்.

ஒவ்வொரு நாளையும் கடன்ல ஆரம்பிக்கனும் ( இல்லாட்டி கடன்ல முடியுங்ணா) பட்டிமன்றங்களுக்கு போங்க.முடிஞ்சா கலந்துக்கங்க.

அதுவும் கஷ்டம்னா தினசரி ரெண்டு வெள்ளை பேப்பர் எடுத்துக்கிட்டு ஒரே விஷயத்துக்கு அனுகூலமா ஒரு பக்கம் பிரதிகூலமா ஒரு பக்கம் எழுதி ஃபைல்ல போட்டுக்கிட்டே வாங்க. உ.ம் பால்யமணம் நல்லது /பால்ய மணம் கெட்டது

ஜெனரல் ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க. வீம்புக்கு கெட்ட பழக்கங்களை தொடராதிங்க
( பான்,பீடா,பீடி,சிகரட்,வெத்தா தின்னு தூங்கறது ,ஸ்ட்ரெஸ் )

மொக்கை:
அது சரி .. ஊர் உலகத்துல கண்ணால மேட்டர்ல கசாப் ஆறவுக மேல உனக்கென்னப்பா அக்கறைன்னு கேப்பிக சொல்றேன்.

க்ளோபலைசேஷன் காரணமா ஒரு சிங்கிள் பர்சன் நெல்லாருக்கனும்னா கூட டோட்டல் உலக மக்கள் நெல்லாருக்கனும்.

ஜான்.எஃப்.கெனடி சொன்னாராம். இந்த உலகத்துல வறுமைங்கறது ஏதோ ஒரு மூலையில் சிறிய அளவே இருந்தாலும் அது உலகம் பூரா பரவ ரெம்ப நாளாகாது.

வறுமையே இம்மாம் சீக்கிரம் பரவுதுன்னா மனித மனங்களிலான அதிருப்தி - அசாந்தி -சமூகத்துல எவ்ள சீக்கிரம் பரவும்னு ரோசிச்சு பாருங்ணா.

மனிதனை மனிதனா உலாவ அனுமதிக்கிறதே பொஞ்சாதி புள்ளைக்குட்டிங்கற மேட்டருங்கதான். இதுலயும் தாளி ஆப்பாயிட்டா அவன் வெடிகுண்டை விட ஆபத்தானவன்.

அதானலதேன் இந்த மேட்டரை நை நைன்னு எளுதிக்கிட்டிருக்கேன். நாளைக்கு 7 ஆம் பாவத்தை பார்ப்போம்.

Thursday, March 8, 2012

ஆண்மை இழப்பு: பரிகாரம்: 4


அண்ணே வணக்கம் !
எளுதினவன் ஏட்டை கெடுத்தான் -பாடினவன் பாட்டை கெடுத்தாங்கறாப்ல எம்மாம் நெல்ல ஜாதகத்துல பிறந்தாலும் நாறிப்போறவுக இருக்காய்ங்க.

அதுலயும் இந்த கண்ணாலம் - கில்மா மேட்டர்ல நிறையவே நாறிப்போறாய்ங்க. இந்த செனேரியோல லக்னாதிபதி எங்கே இருந்தாலும் ஆண்மை இழப்பு - கண்ணாலத்தடைக்கு காரணம் இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதையடுத்து பரிகாரங்கள் சொல்லிட்டு இருக்கேன்.

நேத்திக்கு லக்னாதிபதி 1 டு 4 பாவங்கள்ள இருந்தா என்ன பரிகாரம்னு சொல்லியிருந்தேன். இன்னைக்கு லக்னாதிபதி அஞ்சுல இருந்தா என்ன..ஏதுன்னு பார்ப்போம்..

1-5
லக்னாதிபதி அஞ்சுல இருந்தா சதா சர்வ காலம் தன்னை பற்றியே யோசிச்சுக்கிட்டு கனவுலகுல சஞ்சாரம். ஆகாய கோட்டை கட்டிக்கிட்டு அதுலயே வாசம். இப்டி இருந்தா என்ன ஆகும்? இவரோட உலகமே வேறயா இருக்கும்.

இங்கன யதார்த்தமா உள்ள உலகம் இவிகளை நெக்லெக்ட் பண்ணிரும். கண்ணாலமாவது கருமாதியாவது.மூச்.

மேலும் இவிக அதிர்ஷ்டத்தையே நம்பிக்கிட்டு இருப்பாய்ங்க. மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி தம் மக்கள் ( வாரிசுகள்) நலனையே நாடுவாய்ங்க , கனவு கண்டுக்கிட்டு இருப்பாய்ங்க.

இயற்கையில ஒரு விசித்திர விதி என்னன்னா எவன் எதை முக்கியம்னு நினைக்கிறானோ அதான் அவனுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கிட்டே இருக்கும்.

எவன் எதை கண்டுக்கலியோ அது இவனை விடாது பின் தொடரும். பெயர்,புகழ்,வாரிசுகள்,அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு இழவுதேன்.

நீங்க கண்டுக்கிடலின்னா ஃபாலோ பண்ணும். கண்டுக்கிட்டா லொள்ளு பண்ணும். ஒரே ஆசாமி மேற்படி ஐட்டங்களை கண்டுக்காதவரைக்கும் ஃபாலோ பண்ணும். கண்டுக்கிட்டா ஃபணால் ஆயிரும். கண்ணாலம் கூட இதே கேஸுதேன்.

லக்னாதிபதி அஞ்சுல இருந்தா " எனக்கொரு மகன் பிறப்பான் -அவன் என்னைப்போலவே இருப்பான்"னுட்டு கனவு காண தொடங்குவாய்ங்க.

உயிர் வாழ்தல் அசலுக்கே ஆப்படிச்சுரும். கண்ணாலமே மாய்மாலம் பண்ணும். அதனால ஃப்ரீயா உடு ராசா !

தன்னையே தான் நினைத்திருந்தால் என்னாகும்ங்கறதுக்கு ஒரு பலான கதை .

ஒரு அணிலுக்கு ரொம்ப நாளா லைஃப்ல ஒரு ஆனையோட கில்மா பண்ணனும்னு ஆசை. இதுக்காக என்னென்னமோ தகிடு தத்தமெல்லாம் பண்ணி காதல் கீதல்னு படம் காட்டி ஒரு ஆனைய லைனுக்கு கொண்டு வந்துருச்சு. காரியத்துலயும் இறங்கிருச்சு.

அந்த நேரம் பார்த்து ஆனை தலை மேல ஒரு பனங்காய் கொத்து விழுந்துச்சு. ஆனை வலில பிளிருச்சு.உடனே அணில் . " என்ன..டா.. செல்லம் ரொம்ப வலிக்குதா?" னு கேட்டுச்சாம்.

தன்னையே தான் நினைத்திருந்தால் இந்த மாதிரிதேன் இழவெடுக்கும்.

ஒரு பிரபல எழுத்தாளர் தன் நண்பர் ஒருவரை தன் கதைகளை உரக்க படிக்க சொல்லிவிட்டு பின்னாலிருந்து அவரும் அதை ரசிப்பாராம்.

நம்ம தாத்தா கூட பாசத்தலைவனுக்கு பாராட்டு , மோசத்தலைவனுக்கு சீராட்டுன்னு விழால்லாம் எடுத்து சனம் புகழ புகழ கேட்டுக்கிட்டே இருந்தாரு நிலைமை என்னாச்சு?

இந்த மாதிரி கிராக்கிங்களுக்கு இதர கிரக பலம் காரணமா கண்ணாலமானாலும் பொஞ்சாதி சீக்கிரத்துலயே கழண்டுக்குவா.

அடுத்தது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டம்ங்கறது நாம அடிக்கடி எடுத்து விடற அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்" மாதிரி "

அது நம்ம மூளையில தெறிக்கனும்னா அதுக்கும் முயற்சி தேவைப்படுது. " நான் என்னிலிருந்து விலகி நின்றால்" மட்டுமே இது சாத்தியம்.

சதா தன்னை நினைத்து தன்னில் மூழ்கி இருக்கும் பார்ட்டி எங்க தன்னிலிருந்து தான் விலகுவது?

வாரிசுகள் மேட்டரும் இதே கதைதான். எங்க அப்பா வருசா வருசம் ட்ரான்ஸ்ஃபர் ஆயிக்கினே இருப்பாரு. ஆறு மாசத்துக்கொரு தபா ஊருக்கு வருவாரு.

வந்தப்பல்லாம் எங்கம்மா கிட்டே " சுசி.. இப்ப முருகன் எந்த க்ளாஸு படிக்கிறான்" னு கேட்டு தெரிஞ்சுக்குவாரு.

லோக்கல்ல வந்த பிறகும் 9 மணி ஸ்கூலுக்கு மொதல் பெல் அடிச்ச பிற்காடுதேன் ( நம்ம ஊடு அம்மாம் கிட்டக்க) எளுப்பி விடுவாரு.

ஆனால் இன்னைக்கு நிறைய அப்பா அம்மா பசங்க என்னமோ ரேஸ் குதிரை மாதிரியும் தாங்கள் ஏதோ ஜாக் பாட் அடிக்க காசு கட்டறாப்லயும் வெறி பிடிச்சு அலையறாய்ங்க.

நான் சொன்ன விதியை ஞா படுத்திக்கங்க. நீங்க கண்டுக்காதது விளங்கும். துலங்கும் . கண்டுக்கிட்டு லொள்ளு பண்ண ஆரம்பிச்சா தண்ணி காட்டும்.

இதுக்கெல்லாம் என்ன பரிகாரம்?

1.மேஷ லக்னம்:
அதிபதி செவ். இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (சிம்மத்துல ) இன்னா பண்ணனும்?

2.ரிஷப லக்னம்:
அதிபதி சுக். இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (கன்னியில ) இன்னா பண்ணனும்? இங்கன சுக்ரன் நீசம் வேற .

3.மிதுனம்:
அதிபதி புதன் இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (துலா ) இன்னா பண்ணனும்?

4.கடகம்:
அதிபதி சந்திரன் .இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (விருச்சிகம் ) இன்னா பண்ணனும்?இங்கன இவர் நீசம் வேற

5.சிம்மம்:
அதிபதி சூரியன் இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (தனுசுல ) இன்னா பண்ணனும்?

6.கன்னி:
அதிபதி புதன் . இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (மகரம் ) இன்னா பண்ணனும்?

7.துலா:
அதிபதி சுக்கிரன் இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (கும்பம் ) இன்னா பண்ணனும்?

8.விருச்சிகம்:
அதிபதி செவ் இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (மீனத்துல ) இன்னா பண்ணனும்?

9.தனுசு:
அதிபதி குரு இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (மேஷம் ) இன்னா பண்ணனும்?

10.மகரம்:
அதிபதி சனி. இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (ரிசபத்துல ) இன்னா பண்ணனும்?

11.கும்பம்:
அதிபதி சனி.இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (மிதுனத்துல ) இன்னா பண்ணனும்?

12.மீனம்:
அதிபதி குரு. இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க ( கடகத்துல) இன்னா பண்ணனும்? இங்கன இவரு உச்சம் வேற.

இந்த எல்லா கேள்விகளுக்கும் விடை அடுத்த பதிவில் .. உடுங்க ஜூட்...

Wednesday, March 7, 2012

ஆண்மை இழப்பு பரிகாரம்: 3

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகம் எப்டி இருந்தாலும் மன்சன் நாறிப்போக வாய்ப்பிருக்கு. முக்கியமா தன் திருமணம் -திருமண வாழ்க்கையை நாறடிச்சுக்க வாய்ப்பிருக்குன்னு லக்னாதிபதியை உதாரணமா வச்சு சொல்லிக்கிட்டு வந்தேன்.

அதுல லக்னாதிபதி 1 முதல் 3 பாவங்களில் இருந்தா - மன்சன் விலை கொடுத்து வாங்கிக்கிற பிரச்சினைகள் அதுக்குண்டான பரிகாரங்களை நேத்து பார்த்தோம்.

இன்னைக்கு லக்னாதிபதி 4 முதல் 12 பாவங்களில் நின்றால் என்னா பிரச்சினை என்னா சொல்யூஷனுன்னு பார்த்துருவம்.

ஆதி நாட்கள்ளயே நாம ஒரு பஞ்ச் அடிக்கிறது உண்டு. நட்பு புனிதம் - நண்பர்கள் தான் அத நாறடிக்கிறாய்ங்க. காதல் புனிதம் -ஆண் பெண் தான் அதை நாறடிக்கிறாய்ங்க.

இந்த வரிசையில நம்ம ஜாதகம்ங்கறது நம்ம முக்திக்காக நாம கெஞ்சி கூத்தாடி வாங்கின வரம். அதையே சாபமாக்கிக்கிறதுல நாம கில்லாடிங்களா இருக்கம்.

சாபத்தையும் வரமா மாத்திக்கனும். (அர்ஜுனன் அஞ்ஞாத வாச காலத்துல திரு நங்கையா வாழ்ந்த கதையா) வரங்களை சாபமாக்கிக்ககூடாது ( அசுரர்கள் கதையா)

ஓகே இப்பம் பதிவுக்கு போயிருவமா?


1-4
லக்னாதிபதி 4 ல இருந்தால் பலான பரீட்சையில செயிச்ச பிற்காடுதேன் கண்ணாலம்/ டாக்டர் பட்டம் வாங்கினபிறவுதேன் கில்மான்னு திருமணத்தை தள்ளி போடலாம். அம்மா மேல அதீத பாசம் வச்சு வர்ரவ கொடுமை பண்ணா என்ன பண்றதுன்னு தள்ளி போடலாம்.

கச்சாமுச்சான்னு வாகனசுகத்தை அனுபவிக்கலாம்/ கண்ணாலத்துக்கு மிந்தியே ஊடு கட்டி கடனாளி ஆகி கடனை நினைச்சு நினைச்சே ஆண்மை இழப்புக்கு ஆளாகலாம்.

வாகன சுகத்தால இல்லற சுகம் எப்டி பாதிக்கப்படும்?

மனித உடலின் சராசரி உஷ்ண நிலை 98.4 டிகிரி. இதுல உயிரணு உயிர் வாழமுடியாதுனுதான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளிய விட்டிருக்கு.பாடி டெம்பரேச்சர் அதிகமா இருக்கிறப்ப இன்னம் கொஞ்சம் கீழே இறங்கி சூட்டை குறைக்கற ஏற்பாடும் இருக்குது.

ஆண்கள் 24 மணி நேரம் டென்டெக்ஸ் போட்டு/ஜீன் போட்டு விதைகளை அழுத்தி வைக்கிறதால விந்துல உயரணுக்களோட கவுண்ட் குறைஞ்சி போயிருது. இதுல தாளி விழிச்சிருக்கிற நேரம்லாம் வண்டி வாகனத்துல சுத்திக்கிட்டிருந்தா என்ன ஆகும்? இதான் கணக்கு.

பரிகாரம்:

1 படிப்பு போட்டி தேர்வு:

.நாம ஒரு உயிரணுவா அம்மா கருப்பையை அடைய போட்டோமே ஒரு நீச்சல் - மில்லியன் கணக்கான உயிரணுக்களோட போட்டோமே ஒரு போட்டி -அதான் அசலான நீச்சல் -அதான் அசலான போட்டி. கொய்யால கரணம் தப்பினா மரணம்.

அதுலயே செயிச்சாச்சு. அப்படின்னா இன்னா அருத்தம் ? நமக்கு இந்த பூமியில வாழக்கூடிய எல்லா தகுதிகளும் நமக்கிருக்கு.

நெஜமாலுமே நாம மில்லியனில் ஒருவன்/ஒருத்தி. ஆனால் நாம ஒலிம்பிக்ல செயிச்சவன் பாப்பம்பட்டி அணியோட மோதின கணக்கா இந்த உதவாக்கரை படிப்புகளையும் , பரீட்சைகளியும் பெருசா நினைக்கலாமா?

இதுக்காவ உயிரின் அடிப்படை உணர்வுகளான / இயற்கையின் அடிப்படை ஆணைகளான உருவாக்குதல் - பரவுதலுக்கு வழி செய்யும் கண்ணாலத்தை தள்ளிப்போடலாமா? ரோசிங்க நைனா..

2.அம்மா:
குடியிருந்த கோயில் ,அன்னை ஓர் ஆலயம், தாய் காலடியில் சொர்கம் எல்லாம் ஓகே தான் . இல்லேங்கலை.

ஆனால் அம்மாங்கறது ஒரு பெண். வீக்கர் செக்ஸ். சர்வைவல் பிரச்சினை உள்ள கேரக்டர் யங் அண்ட் எனர்ஜட்டிக் கணவர் - உத்யோகம் - சொத்து சொகம் , சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கைன்னு இருந்தா அது வேற கதை.

தாய்ப்பறவை கூட்டில் இருக்கும் குஞ்சை குத்தி குத்தி துரத்தி பறக்க கத்துக்கொடுக்கிறாப்ல கண்ணாலம் கண்ணாலம்னு அவிக பரபரப்பாய்ங்க.

மேட்டர் வேற மாதிரி இருந்து நீங்க கண்ணாலம் பண்ணிக்கிட்டா பாசத்தை பங்கு வைக்கனும் - சம்பள கவர் நம்ம கைக்கு வராதுன்னு நினைக்கிற சூழல் இருந்தா? அவிக ஒரு விதவையா -டைவர்சியா
இருந்தா ?

அம்மா,ஆயா,அண்ணா,தம்பி ஆரையாவது சந்தோசமா வச்சுக்கனும்னு உண்மையிலயே நீங்க நினைச்சா அதுக்கு நீங்க சந்தோசமா இருக்கனும்.

கண்ணாலம் கட்டினவன் எல்லாம் சந்தோசமா இருக்கான்னு பீலா விடமாட்டேன். ஆனால் கண்ணாலங்கறது அதுக்கான முயற்சி. முயற்சி செய்து ஃபெயிலாயிட்டா அது வேற கதை.ஆனா முயற்சியை கூட செய்யலின்னா தன்னிரக்கம் - மன அழுத்தம் அது இதுன்னு ஏகப்பட்ட சிக்கலுங்ணா.

3.வாகனம்:
வாழ்க்கையில வாகனம்னா நாம பாப்பாவா இருந்தப்ப அம்மா இடுப்பு - ஃபிகர் தேத்தற வயசுல ஒரு லேட்டஸ் பைக் - கண்ணாலமான புதுசுல பொஞ்சாதியை ஷாப்பிங் கூட்டிட்டு போயி காசை கரியாக்கறதுக்கு ஒரு டூ வீலர் - விபரீதம் நடந்துட்டா ஆஸ்பத்திரிக்கு வாரிக்கிட்டு போக ஒரு 108 - செத்துத்தொலைச்சா ஒரு அமரர் ஊர்தி. இதான் முக்கியம்.

இடையில சொன்ன ஐட்டங்க இல்லாட்டியும் குடி முழுகி போயிராது . ஆனால் ஆரம்பத்துல சொன்ன அம்மா இடுப்பு - 108 -அமரர் ஊர்தி என்ற 3 ஐட்டம்தான் ரெம்ப முக்கியம்.

நாலாவது இடம் 100 சதம் சுபபலமா இருந்தாலும் - சுக்கிரன் உச்சத்துலயே இருந்தாலும் வாரத்துல ரெண்டு நாள் ( கு.பட்சம்) முடிஞ்சா கால் நடையா போங்க - இல்லாட்டி சைக்கிள் - டிஸ்டன்ஸ் ரெம்ப அதிகம்னா பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட்டை யூஸ் பண்ணுங்க.

காலா காலத்துல கண்ணாலம் நடக்கும்.வயாக்ரா சாப்பிட்ட கணக்கா கில்மால தூள் பண்ணுவிங்க

லக்னாதிபதி மற்ற பாவங்களில் நின்றால் என்னா பண்றதுன்னு நாளைக்கு பார்ப்போம்..

Tuesday, February 28, 2012

திருமண தாமதம் : உ.பிக்கள்? : பரிகாரம்


அண்ணே வணக்கம்ணே !
நாட்டு நடப்பை பத்தி எளுதறதை ஏறக்குறைய ஏறக்கட்டியாச்சு. ஆனால் ஒன்னு நாம 1986 லருந்து நாட்டை பத்தி ரோசிச்சதும் - ஆப்பரேஷன் இந்தியா 2000 னு அலைக்கழிஞ்சதும் வீண் போகல்லே. இந்தியாவை பணக்கார நாடாக்க நாம செய்த முயற்சியை பார்த்து ஆத்தா மனமிரங்கி ( அல்லது ஒரு சதி பண்ணி) நம்மை கை தூக்கி விட்டுட்டா.

ஆ.இ இல்லாட்டி நம்ம லைஃபுக்கும் கலைஞர் லைஃபுக்கும் வித்யாசமே இருக்காது. நாம என்ன செய்தாலும் அதனோட அதனோட அந்திம இலக்கு ஆ. இ தான்.

சுப்ரீம் கோர்ட் நதிகளை இணைக்கிற மேட்டர்ல ஏதோ குட்டு வச்சாப்ல இருக்கு. நதிகளை இணைக்க ஒரே வழி சிறப்பு ராணுவம்தான்.

கவைக்குதவாத அரசியல் வாதிகளோட எண்ணிக்கை உசந்துக்கிட்டே போயி இப்பம் கோர்ட்டுங்க தான் பரிபாலனம் பண்ணிக்கிட்டிருக்கு.

இவிகளோட அலப்பறை காரணமா அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஏன் ராணுவ அதிகாரிகள் கூட அரசியல்ல குதிக்கப்போறாய்ங்க. நடிகர்களை இந்த பட்டியல்ல கொண்டு வரலை ஏன்னா அவிகளுக்கு மறைமுகமாவாச்சும் அவிக பிம்பத்துக்காச்சும் சனங்களோட இறுக்கமான உறவு இருக்கு. இந்த அதிகாரிங்க கதைதேன் கண்ணை கட்டுது. போதாக்குறைக்கு கோர்ட்டுங்க.

இதெல்லாம் எங்கன போயி முடியப்போகுதோ பயம்மா இருக்கு. பை தி பை சமீபத்திய சட்டமன்ற தேர்தல்கள்ள காங்கிரஸ் பயங்கர பல்பு வாங்கினா பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் கியாரண்டி. உங்க ஓட்டு எவரிக்கன்டி?

நிற்க திருமண தாமதம்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சம். அதுல திருமண தாமதத்துக்கு அப்பா,அம்மா காரணமா இருந்தா அதுக்கென்ன பரிகாரம்னு பார்த்தோம் . நேத்து பி எஸ் என் எல் காரவுக ஸ்ட் ரைக் காரணமா நெட் கனெக்சனை ஃபணாலாக்கிட்டாய்ங்க. ( புது ட்ரெண்டா இருக்கு) அதனாலதான் பதிவு போட லேட்டாயிருச்சு.

மேலும் திருமண தாமதத்துக்கு உ.பிக்கள் காரணமா இருந்தா பரிகாரம் என்னங்கற விஷயத்தை சொல்லவே இல்லை. அதை இன்னைக்கு பார்த்துருவம். Read More


Monday, December 12, 2011

கேதுவும் வினாயகரும்

நாங்களும் யூத்துதான் !



அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் -கடவுளும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கிற மேட்டர் உங்களுக்கு தெரியும்.இடையில் ஒரு சில பதிவுகள் அவசியம் - அவசரம் கருதி வேற ரூட்ல போயிருச்சு.

இன்னைக்கு கேதுவை பற்றி பார்த்துருவம். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்னு பஞ்சாங்கம்/ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

மொதல்ல கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்னு பார்த்துருவம் .அப்பாறமா கேதுவால் வரும் இம்சைகளை கட்டுப்படுத்த ஆன்மீக ரீதியில் வேறு ஏதாச்சும் வழி இருக்கான்னும் பார்ப்போம்.

கேது விரக்தியை தந்து இலவச இணைப்பாக ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர், வினாயகருக்கு பெண்டாட்டி,
பிள்ளைகள் கிடையாது. (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.). கேது த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர்.விக்னம்+ஈஸ்வரன் = விக்னேஸ்வரர் (விக்னம்னா தடைகள்)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)

கேது என்றால் எளிமை. எளிமைக்கு மறு பெயர் வினாயகர் .மற்ற சாமிகளை ஸ்தாபனம் பண்ணனும்னா கல்லெடுத்து -சிலை செய்து வைக்கனும். ஆனால் பிள்ளையார் அப்படி இல்லை களி மண்ணிருந்தாலோ ஒரு பிடி மஞ்சள் தூள் இருந்தாலோ போதும், அட .. கொஞ்சம் சாணி இருந்தா அதுல கூட "பிடிச்சு"வச்சுரலாம்.

மேலும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் காரணமா அம்மா மாதிரியே பொஞ்சாதி வேணம்னு ஆத்தங்கரையில அரச மரத்தடியில செட்டில் ஆன பார்ட்டி.

என்ன ஒரு சோகம்னா ஆக்கிரமிப்பு,மணல் கொள்ளை ,கழிவுகள் காரணமா ஆறுகளே காணாம போயிட்டிருக்கு.

கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி.

ஞானம் பிரணவத்தில் அடக்கம். பிரணவத்தின் பொருளை தர்க ரீதியாக விளக்கியவர் ஞான பண்டிதனாகிய முருகன்.

ஆனால் ஓங்காரத்தின் வடிவாகவே இருப்பவர் வினாயகர் எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம்.

ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது. வினாயகருக்கு ரெம்ப பிடித்தமானது.

இதை பத்தி வேலூர் மூலிகை மணி டாக்டர் இரா.கண்ணப்பர் கூட எளுதியிருக்காரு. ( பாம்பு -கீரி சண்டைக்கு பிறகு பாம்புக்கடி வாங்கின கீரி அருகம்புல் முளைச்ச இடத்துக்கு வந்து அது கடிச்சு குதறி – வெளிப்பட்ட ரசம் தன் காயங்களின் மேல படும்படியா செய்யுமாம். உடனே பாம்பு விசம் முறிஞ்சுருமாம்)

அது பச்சைப்புல் , ரசம் , கீரியோட கிட்னி சைஸு, அதனோட கப்பாசிட்டியை பொருத்தவரை ஓகே. ஆனால் நம்ம சைஸுக்கு அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்.

Sunday, December 11, 2011

கேதுவும் வினாயகரும்

அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் -கடவுளும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கிற மேட்டர் உங்களுக்கு தெரியும்.இடையில் ஒரு சில பதிவுகள் அவசியம் - அவசரம் கருதி வேற ரூட்ல போயிருச்சு.

இன்னைக்கு கேதுவை பற்றி பார்த்துருவம். இவ‌ருக்குரிய‌ க‌ட‌வுள் வினாய‌க‌ர்னு பஞ்சாங்கம்/ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

மொதல்ல கேதுவுக்கும்,வினாய‌க‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்னு பார்த்துருவம் .அப்பாறமா கேதுவால் வரும் இம்சைகளை கட்டுப்படுத்த ஆன்மீக ரீதியில் வேறு ஏதாச்சும் வழி இருக்கான்னும் பார்ப்போம்.

கேது விரக்தியை தந்து இலவச இணைப்பாக ச‌ந்யாச‌த்தை த‌ருப‌வ‌ர், வினாயகருக்கு பெண்டாட்டி,
பிள்ளைகள் கிடையாது. (இவையில்லாத‌வ‌ர் ச‌ந்யாசி தானே.). கேது த‌ர்க‌ம‌ற்ற‌ த‌டைக‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர். பிள்ளையார் த‌டைக‌ளை வில‌க்குப‌வ‌ர்.விக்னம்+ஈஸ்வரன் = விக்னேஸ்வரர் (விக்னம்னா தடைகள்)

ஆஞ்ச‌னேய‌ர் கூட‌ பிர‌ம்ம‌ச்சாரிதான். ஆனால் அவ‌ருக்கு ராம‌னுட‌ன் ஆண்டான்/அடிமை உற‌விருந்த‌து. பிள்ளையாருக்கு அப்ப‌டி ஏதும் கிடையாது. சொந்த‌ அப்பாவின் தேர‌ச்சையே பொடி செய்த‌வ‌ர் அல்ல‌வா? (ப‌ட்ட‌ண‌ம் பொடி இல்லிங்க‌)

கேது என்றால் எளிமை. எளிமைக்கு மறு பெயர் வினாயகர் .மற்ற சாமிகளை ஸ்தாபனம் பண்ணனும்னா கல்லெடுத்து -சிலை செய்து வைக்கனும். ஆனால் பிள்ளையார் அப்படி இல்லை களி மண்ணிருந்தாலோ ஒரு பிடி மஞ்சள் தூள் இருந்தாலோ போதும், அட .. கொஞ்சம் சாணி இருந்தா அதுல கூட "பிடிச்சு"வச்சுரலாம்.

மேலும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் காரணமா அம்மா மாதிரியே பொஞ்சாதி வேணம்னு ஆத்தங்கரையில அரச மரத்தடியில செட்டில் ஆன பார்ட்டி.

என்ன ஒரு சோகம்னா ஆக்கிரமிப்பு,மணல் கொள்ளை ,கழிவுகள் காரணமா ஆறுகளே காணாம போயிட்டிருக்கு.

கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி.

ஞானம் பிரணவத்தில் அடக்கம். பிரணவத்தின் பொருளை தர்க ரீதியாக விளக்கியவர் ஞான பண்டிதனாகிய முருகன்.

ஆனால் ஓங்காரத்தின் வடிவாகவே இருப்பவர் வினாயகர் எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம்.

ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது. வினாயகருக்கு ரெம்ப பிடித்தமானது.

இதை பத்தி வேலூர் மூலிகை மணி டாக்டர் இரா.கண்ணப்பர் கூட எளுதியிருக்காரு. ( பாம்பு -கீரி சண்டைக்கு பிறகு பாம்புக்கடி வாங்கின கீரி அருகம்புல் முளைச்ச இடத்துக்கு வந்து அது கடிச்சு குதறி – வெளிப்பட்ட ரசம் தன் காயங்களின் மேல படும்படியா செய்யுமாம். உடனே பாம்பு விசம் முறிஞ்சுருமாம்)

அது பச்சைப்புல் , ரசம் , கீரியோட கிட்னி சைஸு, அதனோட கப்பாசிட்டியை பொருத்தவரை ஓகே. ஆனால் நம்ம சைஸுக்கு அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்.

கீழே உள்ள ஸ்லைட் ஷோவை பார்க்க மாட்டிங்கனு தெரியும். இதெல்லாம் ச்சொம்மா நம்ம திருப்திக்கு போட்டுவைக்கிறதுதேன்



Friday, December 9, 2011

வேசியாவதே வெற்றிக்கு வழி !


அண்ணே வணக்கம்ணே !

இன்னாங்கடா இது அனுபவஜோதிடத்துல கிரகமும் கடவுளும்னு ஒரு மினி தொடர்தானே போய்க்கிட்டிருந்தது. இன்னைக்கு புதனை பற்றி வரும்னு பார்த்தா வேசியாவதே வெற்றிக்குவழிங்கறாய்ங்கன் பயந்துக்காதிங்க.

கத்துக்கனுங்கற துடிப்புதான் முக்கியம். நமக்கு கத்துக்கற துடிப்பிருந்தா கலைஞர் கிட்டேருந்து கடும் உழைப்பை கத்துக்கிடலாம், ஜெ கிட்டருந்து செமை தில்லை கத்துக்கிடலாம்,ரஜினி கிட்டேருந்து கூட வேகத்தை கத்துக்கிடலாம் (சினிமாவுல மட்டும்தேன்).

வேசிக்கிட்டேருந்து கத்துக்கிடவும் நிறைய மேட்டர் கீது நைனா. ஒரு சாதகர் திருடனோடு தங்கி இருந்தப்போ " இன்னைக்கும் ஒன்னும் கிடைக்கலை.ஆனால் நாளைக்கு நிச்சயம் எதுனா கிடைக்கும்"ங்கற நம்பிக்கைய பெற்றாராம்.

தாராளமயம், தனியார் மயம், உலக மயம்லாம் அமலான பிற்காடு அல்லாரோட பொயப்பும் வேசி பிழைப்பாத்தான் போச்சு. அதுசரி வேசிக்கும் புதனுக்கு இன்னா லிங்குன்னு கேப்பிக. சொல்றேன். புதனோட பல்வேறு காரகங்களில் வேசியும் ஒன்னு.

புதன்னா பேசிக்கல் காரகம் கலெக்டிங் இன்ஃபர்மேஷன் , மேனேஜிங் இன்ஃபர்மேஷன், ப்ராசசிங் இன்ஃபர்மேஷன், கம்யூனிக்கேட்டிங் தி இன்ஃபர்மேஷன் தான். இதுல ஒரு நிலையில நிலை தடுமாறினாலும் பல்புதேன்.

"லாயர் மாதிரி பட் பட்டுன்னு அடிக்கிறிங்க.இவருக்கு பதில் நீங்க லாயர் ஆகியிருக்கலாம்" இது கம்யூனிகேஷன்.

"ஒரு குண்டு ராட்சஸி வெளிய போயிருக்குன்னு சொன்னிங்களே அது இவங்கதானா?" - இது மிஸ் கம்யூனிகேஷன்.

வேசிக்கு சமூகத்தின் எல்லா தளங்களோடவும் டீல் இருக்கும். லாட்ஜ் ஓனர்,மேனேஜர்,ரூம் பாய்,புரோக்கர், எஸ்.ஐ, ஏ.எஸ்.ஐ, ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள், ஹோம் கார்ட்லருந்து ஸ்டேசனை பெருக்கி தண்ணி வைக்கிற விசாரணை கைதியின் அம்மா வரை எல்லாரோடயும் டீல் இருக்கும். இருக்கனும்.அப்பத்தேன் "தொழில்" நெல்லா நடக்கும்.

ரெய்டு நடக்குமா ,எஸ்.ஐ எப்படிங்கறதுலருந்து -அறுத்து போட்டுட்டு போற சாடிஸ்ட் எவனா ஜில்லாவுல இறங்கியிருக்கானாங்கறது வரை மேட்டர் கையில இருக்கனும்.அப்பத்தேன் தொழில் சுமாரா நடக்கும்.

புதன் நல்லா இருந்தா இதெல்லாம் ஜுஜுபி. இல்லைன்னா நாஸ்திதேன். ஒரு வேசி தன் தொழிலுக்கான கால நேரத்தை சூஸ் பண்றாள், ஆஃபீஸை கரீட்டா சூஸ் பண்றாள், சரிய்யான சென்டரை செலக்ட் பண்ணிக்கிட்டு மார்க்கெட்டிங் பண்றா - டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை நேரத்துக்கு ஏத்தாப்ல மாத்திக்கிறா - அகாலமா வர்ர கஸ்டமரை - அலங்கோலமா வர்ர கஸ்டமரை கூட டாக்கிள் பண்றாள் .

அவளுக்கும் ஒரு மனசிருக்கு -அவளுக்குள்ளயும் வேதனைகள் இருக்கு -அவளுக்கும் வெள்ளை வெட்டைன்னு ஏக பிரச்சினைகள் இருக்கு -ஆனால் எல்லாத்தையும் கவர் பண்ணிக்கிட்டு கஸ்டமரை என்டர்டெய்ன் பண்றாள் - தானும் என்டர்டெய்ன் ஆனதா நடிக்கிறாள்.

இதையெல்லாம் இந்த போட்டிகள் உலகத்துல நாம ஃபாலோ பண்ணலின்னா கஸ்டமர்,கொலிக்,ஹவுஸ் ஓனர்,கோ டெனென்ட்,டெனென்ட், ஏஜெண்ட் இப்படி நம்மோடு தொடர்புள்ள ஆரையுமே ஃபேஸ் பண்ண முடியாது . உத்யோகம் காலி,வியாபாரம் திவால்,தொழில் முட்டை.

ஏஜெண்ட்,புரோக்கர் ,நிருபர், ரெப், ஜோதிடர்,,மருத்துவர்,ஆடிட்டர்,கன்சல்ட்டன்ட் இவிகல்லாம் புதகாரகத்வத்துல வர்ர பார்ட்டிங்க. இவிகளுக்குள்ள -இவிக தொழில் நேர்த்தியில ஒரு "வேசித்தனம்" ஒளிஞ்சிருக்கும். ஐ மீன் அந்த நேரத்துக்கு உங்களுக்கே சொந்தம்னு ஒரு ஃபீலிங்கை வரவைப்பாய்ங்க.ஆனால் அவிக மைண்ட்ல உங்களுக்குன்னு இடமோ -மடமோ நிச்சயம் இருக்காது. வேசியும் இதைத்தான் பண்றாள். அதனாலதான் புத காரகத்வங்கள்ள வேசியையும் வச்சிருக்காய்ங்க.

சரி .. புத கிரகம் ஜாதகத்துல தேசலா நின்னிருந்தா - அதுக்கு பரிகாரமா ஆரை வணங்கனும்னு கேப்பிக சொல்றேன். கிருஷ்ணர்.இவர் ஒரு ஜங்க்சன் பாய்ண்ட். மகா பாரதம் மெகா சீரியல் கணக்கா தறிக்கெட்டு ஓடினாலும் -ஆயிரக்கணக்கான கேரக்டர்ஸ் இருந்தாலும் இதை ஒருங்கிணைக்கிறவர் கிருஷ்ணா தான்.

புதன் என்றால் ஒருங்கிணைத்தல். நெட் ஒர்க், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் ( நியாயமான -சட்டப்படியான) இதுக்கெல்லாம் புதன் தான் காரகம்.கிருஷ்ணரோட முடிவான லட்சியம் கௌரவர்களை ஒழிச்சுக்கட்டிர்ரது.இதுக்காவ கிருஷ்ணா பண்ண வேலைகளை உடைச்சு சொன்னா வேசித்தனம்னு தான் சொல்லனும்.( புத காரகம்) இதுல தூது கூட போறாரு (புத காரகம்).

புதன் சரியில்லின்னா சர்ம ரோகம் வரும். கிருஷ்ணருக்கு உகந்தது துளசி. இது சரும நோய்களை தீர்க்க வல்லது.புதன் பச்சை நிறத்துக்குரியவர். துளசியும் பச்சைதான்.

புதன் அலிகிரகம். கோகுலத்துல தங்களோட மனைவி மார் எல்லாம் கிருஷ்ணரோட கூத்தடிச்சிக்கிட்டிருந்தா அவிக புருசன் மார் எல்லாம் பெருசா ரெபல் ஆகலை. அதுக்கு காரணம் என்னடான்னா நம்மாளுகிட்டே அசலான மேட்டர் கிடையாது. ஊர்காரவுகளோட பசு மாடுகளை மேய்ச்சுட்டு அவிகவிக வீட்டுக்கு கொண்டு சேர்த்தாப்ல - கோபிகைகளையும் நெல்லா டைம் பாஸ் பண்ணி வீடு சேர்த்தாரு. ஒருத்தி கூட கர்பம் ஆகலை.

மேலும் ஒவ்வொரு கோபிகையும் கிருஷ்ணன் தனக்கே சொந்தம்னு நினைக்கிறாப்ல அவிகளையெல்லாம் கிருஷ்ணா டாக்கிள் பண்ணாரு ( ஜோதிடர்,ஆடிட்டர் கணக்கா)

இப்படி புதனுக்கும் கிருஷ்ணருக்கு நிறைய லிங்க் இருக்கு அதனால புதன் கிழமை - அல்லது புதனுக்குரிய நட்சத்திரங்கள்ள துளசி மாலையோட கிருஷ்ணரை போய் பார்த்துட்டு வாங்க. கிருஷ்ணரை ரோல் மாடலா வச்சிக்கிட்டு லைஃபை லீட் பண்ணுங்க. (வேசி கணக்கா) வெற்றி நிச்சயம்.

Thursday, December 8, 2011

சனியும் ஆஞ்சனேயரும்

அண்ணே வணக்கம்ணே !
எந்த கிரகம் சரியில்லின்னா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கு.அதுல இன்னைக்கு சனியை பற்றி பார்ப்போம்.

சனி 3,6,10,11 ல் நின்றால் பிரச்சினை இல்லை. இதர இடங்களில் இருந்தால் பிரச்சினை. இப்படி இதர இடங்களில் நின்ற சனியால என்னெல்லாம் பிரச்சினைகள் வரும்னு தெரிஞ்சுக்க இங்கன அழுத்தி 2012 சனிப்பெயர்ச்சி பலன் களை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க.

என்ன? உங்க ராசிக்கு இந்த சனி சரியில்லையா? அப்பம் நீங்க ஆஞ்சனேயரை வணங்கனும். ஆஞ்சனேயருக்கும் சனிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக சொல்றேன். சனி வேலைக்காரர்களுக்கு காரகம் வகிக்கும் கிரகம். (அடிமைகள்) ஆஞ்சனேயருக்கு ராம தாஸர்னு இன்னொரு பேரும் உண்டு. தாஸ்னா என்ன அருத்தம்? லாஜிக்கலா பார்த்தா சுக்ரீவனுக்குத்தான் அடிமையா இருந்திருக்கனும்.ஆனால் ஆஞ்சனேயர் ராமனுக்கு அடிமையாக மாறினார். ( பாரதி -பாரதி தாசன் /பெரியார் -பெரியார் தாசன்)

சனிபிடிச்சா நீங்களும் யாரோ ஒருத்தருக்கு அடிமையாக வேண்டி வரும். உலக ரீதியில் அப்படி அடிமையா மாறினா உங்க ரெப்புடேஷன் கோவிந்தா. நீங்க ஒரு அடிமைக்கு அடிமையா மாறினா என்ன ஆகும்? சனியோட வேக்குவம் பாதிக்கு பாதி குறைஞ்சு போயிரும்.

சனி பிதுர்களுக்கு காரகர். ( இறந்து போன மூதாதையர்) கிராம தேவதைகள் ,காவல் தேவதைகள்ளாம் ஆரு.இறந்து போன நம் மூதாதையர்கள் தான்.

சனி பிடிச்சா எள் சோறு , எள் எண்ணெய், காக்காய்க்கு சோறு ,பசுமாட்டுக்கு அகத்திக்கீரைன்னு பரிகாரம் சொல்றதெல்லாம் நம்ம பிதுர்களை திருப்தி படுத்தத்தேன்.

இதுல சின்ன சிக்கல் இருக்கு. சனி ஆயுள் காரகன். ஆயுள் காரகனே நமக்கு பிரதிகூலமா இருக்கும் போது வெறும் பிதுர்களை,கிராம தேவதைகளை மட்டும் ப்ரீதி பண்ணிக்கிட்டிருந்தா அவிகளுக்கு நம்ம மேல கவர்ச்சி ஏற்பட்டு " இன்னாத்துக்கு நைனா இம்மாம் வேதனை படறே இங்க வந்துரு"ன்னு கூப்டுக்க சான்ஸ் இருக்கு.

அதனால ஆஞ்சனேயரையும் சைடுல கவனிச்சுக்கங்க. இவரு சஞ்சீவினி மூலிகைய தேடினா லேட் ஆகும்னு அந்த மூலிகை விளைந்த சஞ்சீவினி பர்வதத்தையே தூக்கிக்கிட்டு வந்து ராம லட்சுமணர்களோட உயிரையே காப்பாத்தின பார்ட்டி.

நான் சம்சாரிங்க. அ நான் கில்மா பார்ட்டிங்க. நான் எங்கன இருந்து ஆஞ்சனேயரை கவனிச்சுக்கறதுன்னு கேப்பிக. சொல்றேன்.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். நீங்க சம்சாரியாவோ /கில்மா பார்ட்டியாவோ இருந்து பிரம்மச்சாரியான ஆஞ்சனேயரை வணங்கறச்ச தான் உங்க ஈகோ சுருங்கும்- ஈகோ இல்லாத பக்திதேன் பலன் தரும். அதனால எந்த வித கில்ட்டியும் இல்லாம ஆஞ்சனேயரை கவனிச்சுக்கோங்க.

ஆஞ்சனேயரை நம்ம இடத்துக்கே வரவழைக்கிற ஒரு டெக்னிக் இருக்கு. அது இன்னாடான்னா ராம நாமம் ஜெபிக்கிறது. ராம காதை வாசிக்கிறது.ராம காதை கேட்கிறது. எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுதோ -எங்கெல்லாம் ராம காதை வாசிக்கப்படுதோ /கேட்கப்படுதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரு ஆஜராயிருவாராம்.

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது. ( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம். ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மரத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்ஜெக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும். கிரகங்களும் பஞ்ச பூதங்களால் ஆனவைதான். கிரகங்களுக்கு நாம கட்டுப்பட்டிருக்கும் நிலை மாறி ..கிரகங்கள் நமக்கு கட்டுப்படும் நிலை வரும்.

இப்பம் புரியுதா..சனி பிடிச்சா ஆஞ்சனேயரை ஏன் வணங்கனும்னு? நாளைக்கு புதனை பற்றி பார்ப்போம்..

Tuesday, December 6, 2011

குரு Vs தட்சிணா மூர்த்தி


எச்சரிக்கை:
கடந்த சில நாட்களாக கமெண்ட்ஸே வர்ரதில்லை. ஆனால் ஹிட்ஸ் மட்டும் 1200 க்கு குறையவே இல்லை.ஆனால் கல்லா பெட்டி மட்டும் நெல்லாவே ரொம்புது.

என்னங்கடா இதுன்னு ஒரே கொயப்பம். அப்பாறம் சரி உடு பழைய நீர் விலகி புதுவெள்ளம் பாயுது போலன்னு ஆறுதல் படுத்திக்கிட்டம்.

நேத்தெல்லாம் ஆருக்காவ எழுதறோம்னு ஒரு விரக்தி.ஒரு ஆறுதலா தேன் கூடு தளத்துல நம்ம பதிவு ரெண்டாவது சூடான பதிவா வந்திருக்கு. ஸ்க்ரீன் ஷாட் மேலே.. பதிவுக்கு போயிரலாமா?



அண்ணே வணக்கம்ணே !

கடவுளும் கிரகமும்னு மினி தொடர் ஆரம்பிச்சு சூ,சந்,செவ்,ராகு முடிச்சாச்சு. படக்குனு ஜம்ப் பண்ணி சுக்கிரனை முடிச்சோம்.

இப்பம் விட்ட இடத்துல தொடரனும். இன்னைக்கு குரு. பதிவின் இறுதியில் வாழ்க்கை பற்றிய என் கண்ணோட்டத்தை தத்துவமா சொல்லியிருக்கேன். படிச்சுட்டு சட்டைய கிழிச்சுக்கிட்டா நாம பொறுப்பு கிடையாது.

இனி குரு. மொதல்ல குருவை பற்றி ஒரு சின்ன மேட்டர் (இதை அய்யர் தி கிரேட் ங்கற முகமூடியில சொல்லியிருந்தம் - நம்மை ஏன்னு கேட்க நாதியில்லாம போயிருச்சா - நம்மை நாமே கிளிச்சு ஒரு நாடகம் போட்ட கால கட்டம் அது. இந்த உண்மை தெரியாம நம்ம ஜானகிராமன் அந்த எழுத்துக்களையெல்லாம் கர்மசிரத்தையா கமெண்டா போட்டு தீர்த்தாரு. அன்னாருக்கு நன்றி.

நிற்க குருவை பற்றி அய்யர் தி கிரேட்:

ஒரு மனிதன் திரிமூர்த்திகள் கிட்டே மோதிட்டு குரு கிட்டே வந்து " தலை! தப்பு பண்ணிட்டன் நீங்கதேன் காப்பாத்தனும்"னு கேட்டா குரு காப்பாத்துவாரு.

ஆனால் குரு கிட்டே மோதிட்டு திரிமூர்த்திகள் கிட்டே போய் "குரு கிட்டே மோதிட்டன் . என்னை நீங்கதேன் காப்பாத்தனும்னு போயி கேட்டா அவிக "போடாங்கொய்யால எங்க 3 பேர் கிட்டே ஒட்டு மொத்தமா மோதிட்டு போனாலும் காப்பாத்தற பார்ட்டி குரு - நீ அவர்கிட்டயே மோதிட்டு வந்திருக்கேன்னா எங்க கிட்டே மோத எவ்ள நேரம் ஆகும் போ போ"நன்னிருவாய்ங்களாம்.

இது குருவுக்குரிய சிறப்பு. உடைச்சு சொன்னா திரி மூர்த்திகள் கிட்டே மோதிட்டு வந்தவனை கூட காப்பாத்தற ரேஞ்சுக்கு "கப்பாசிட்டி"ய கொடுக்கற கிரகம் குரு. இவர் ஜாதகத்துல/கோசாரத்துல சரியில்லைன்னா ஆரை வணங்கறதுங்கற கேள்விக்கு தட்சிணா மூர்த்திய வணங்குன்னு சொல்றாய்ங்க.

த.மூர்த்திய வணங்கறதுக்கும் - குரு தொடர்பான தீய பலன்கள் குறையறதுக்கும் என்ன தொடர்புன்னு கேப்பிக.

த.மூர்த்தின்னா வேற யாரோ இல்லை . மிஸ்டர் ஷிவாதேன். என்ன ஒரு வித்யாசம்னா தட்ச யாகத்துல அவிர்பாகத்தை கொடுக்க சொல்லி வாதாட மிஸஸ் ஷிவா போறாய்ங்க. வேலைக்காகலை. ஆத்துக்காரர் வீரபத்ரரையும் - இந்தம்மா காளியையும் உருவாக்கி ஏவ யாகம் காலி.

தட்சனால கிடைச்ச உடல் தனக்கு வேணாம்னு ஆத்தா யாக குண்டத்துல இறங்கிர்ராய்ங்க. அந்த சாம்பல் உலகமெல்லாம் விழுந்ததாம்.

அந்த சாம்பல் விழுந்து இடங்களைத்தேன் சக்தி ஸ்தலங்கள்னு டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் காரவுக வாரி குவிக்கிறாய்ங்க.

இந்த மாதிரி ஆன்டி க்ளைமேக்ஸ்ல பொஞ்சாதி புள்ளை குட்டி ஆருமில்லாம சிவனார்- யோகத்துல ஆழ்ந்துர்ராரு இந்த ஃபோஸைத்தேன் தட்சிணா மூர்த்தின்னு வணங்கறோம்.

குரு ஸ்வர்ண காரகன் (தங்கம்) குரு தனகாரகன் . நம்மாளுகிட்டே இதெல்லாம் மருந்துக்கும் கிடையாது.அதனாலதேன் தியாகேசன்னு பேரு.

குரு கங்கண காரகன். (வாழ்க்கை துணை) பொஞ்சாதியே யாக குண்டத்துல இறங்கியாச்சு) குரு புத்ரகாரகன் ( இவர் மோனத்துல இருக்க - தேவர்கள் மன்மதனை அனுப்பி அம்பு ஏவி -இவர் அவரை எரிச்சு -இப்படி பல எப்பிசோட் கடந்த பிற்காடுதேன் முருகர் வராரு. அதுவரை தனியாளு) சிவனார் இந்த கட்டத்துலதேன் சனத்குமாரர்களுக்கு உபதேசம்லாம் பண்றாரு (குரு) .

இவரு சாதாரணமா ஜொள்ளு பார்ட்டி .தாருகாவனத்து ரிஷிபத்தினிகளையெல்லாம் கர்பமாக்கின படு கில்மா பார்ட்டி. ஒரு கட்டத்துல விஷ்ணுவோட ஹோமோ. ஆனால் தென் திசை நோக்கி மோனத்துல அமர்ந்திருக்கிறச்ச அவர் குரு மூர்த்தி -தட்சிணா மூர்த்தி. அந்த சமயம் இவருக்கு குரு காரகங்கள்ள ஒன்னு கூட கிடையாது.ஆனால் ஜகத்குருவா இருக்காரு.

யத்பாவம் தத்பவதி. நீங்க எதை நினைக்கிறிங்களோ அதுவா மாறலாம். நீங்க த.மூர்த்திய (முழு மன்சா) மனசுல நிறுத்தினா நீங்களே குருவா மாறலாம். நெருப்பை நெருப்பு என்ன செய்ய முடியும். ஜீவனுள்ள குருவை வெறும் ஸ்தூல உருவமுள்ள குரு கிரகம் என்ன செய்ய முடியும்? இது ஒரு வ்யூ..

இன்னொரு வ்யூல பார்த்தா நீங்க இந்த பதிவை படிச்ச பிறவு தட்சிணா மூர்த்திய தரிசிச்சா உங்க மைண்ட்ல என்ன ஓடும்?

த பார்ரா மும்மூர்த்திகளில் ஒருத்தரு.. இவரே பொஞ்சாதி - பிள்ளை குட்டி ஆருமில்லாம கிடக்காரு. நாம எந்த மூலைக்கு? இங்கன ஆருக்கும் எதுவும் நிரந்தரமில்லை போலன்னுட்டு எளிமைக்கும் -தனிமைக்கும் ப்ரிப்பேர் ஆயிருவிங்க.

தனிமைக்கு ப்ரிப்பேர் ஆன பிறவு பொஞ்சாதி ராசாத்தி அம்மாள் மாதிரி ஆட்டம் போட்டா "ஆளை விடுன்னு மஞ்ச துண்டை அவுத்து போட்டுட்டு கருப்பு சால்வை போட்டுக்கிட்டு பெரியார் கொள்கையை பரப்புறேன்னு கிளம்ப தயாராயிருவிக. அப்பம் ராசாத்தி அம்மாள் என்ன பண்ண முடியும்? குருவால என்ன பண்ண முடியும்?

தனிமைக்கு ப்ரிப்பேர் ஆன பிறவு பிள்ளை அழகிரி மாதிரி ஆட்டம் போட்டா "ஆளை விடுன்னு மஞ்ச துண்டை அவுத்து போட்டுட்டு கருப்பு சால்வை போட்டுக்கிட்டு பெரியார் கொள்கையை பரப்புறேன்னு கிளம்ப தயாராயிருவிக. அப்பம் அழகிரியால என்ன பண்ண முடியும்? குருவால என்ன பண்ணமுடியும்.

நீங்க தனிமைக்கு ப்ரிப்பேர் ஆகி உறவுகளை டாக்கிள் பண்ணா உறவுகளால லொள்ளு வராது. உறவுகளை சஸ்டெய்ன் பண்ணிக்க அஜீஸ்மெண்டை ஆரம்பிச்சிங்கனா கொஞ்ச நாள் காலம் ஓடும். ஆனால் 193 நாளு பிரிவுக வேக வேண்டி வந்துரும்.

இப்பம் புரியுதா குருவுக்கும் -தட்சிணா மூர்த்திக்கும் என்ன உறவு -என்ன லிங்குன்னு ? உடுங்க ஜூட்..


வாழ்க்கையே ஒரு காத்திருப்பு

வாழ்க்கைய புரிஞ்சிக்கிட்டா அது அரித்மெட்டிக் புரிஞ்சிக்கலின்னா அல்ஜீப்ரா மாதிரி குழப்பி அடிக்கும்.வாழ்க்கைய பல பேர் பல விதமா டிஃபைன் பண்ணியிருக்காய்ங்க.எனக்கென்னமோ இன்னைக்கு ஒரு வெத்து ஆசாமியோட பேசிக்கிட்டிருந்தப்ப ஒரு ஃப்ளோவுல இந்த பஞ்ச் வந்துருச்சு. ரோசிச்சு பார்த்தா இதான் கரீட்டுன்னும் தோணுது.

இன்னம் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லனும்னா வெற்றி பெற்றவன் தோல்விக்காக காத்திருக்கனும், தோல்வியுற்றவன் வெற்றிக்காக காத்திருக்கனும்.இதான் வாழ்க்கை இது உண்மையா இல்லின்னாலும் சரி இதை நம்பி நம்ம மைண்டை ட்யூன் பண்ணிக்கிட்டா தோல்வி துவளச்செய்யாது, வெற்றி துள்ள செய்யாது.

இப்பமும் காத்திருக்கேன். 1991 ல திருமணமாகி 2011 மேரேஜ் டே தினம் ஃபோட்டோ எடுக்க அது நாம என்னா மாதிரி கிழடு தட்டி போயிருக்கோம்னு காட்ட , மகள் ஃபீல் பண்ணாத டாடின்னுட்டு என்னென்னமோ தகிடு தத்தம்லாம் செய்து - ஃபோட்டோ செஷனே நடத்திட்டா .ஆனால் இந்த கம்ப்யூட்டர் பைத்தியம் பிடிச்சு உளறிக்கொட்ட ஃபோட்டோ ஞா இல்லாம ஃபார்மெட் அடிச்சாச்சு. இப்பம் ஃபைல் ரெக்கவரி போட்டிருக்கன்.

போனதுல எத்தனை மீறுதுன்னு காத்திருக்கேன் . ஓஷோ என்னமோ அந்தந்த நொடிக்கு வாழனும்ங்கறாரு. ஆனால் மனசு பிரிவுல உறவை தேடுது - உறவுகள் இருக்கும்போது தனிமைக்கே ஏங்குது. இது எப்படியா கொத்த பை.தனம்னு புரியுது.

பிரம்மச்சரியத்துல காமத்தை நினைச்சா பிரம்மச்சரியம் அவுட். காம விளையாட்டில் பிரம்மச்சரியத்தை பற்றி கவலைப்பட்டா கில்மாவும் அவுட். புரியுது. என்ன நாம ஆட்டோசஜஷன்ல புலி. நாம எந்த கட்சியில இருக்கோமோ அந்த கட்சிதான் சூப்பருன்னு மொதல்ல நம்மை நம்பவச்சிருவம்ல. அதனாலதேன் காலம் ஓடிக்கிட்டிருக்கு.

அதே சமயம் நம்ம கட்சிக்கு அப்பாற்பட்டும் நல்ல கட்சிகள் இருக்கிறதை சின்னதா ஸ்டார் சிம்பல் போட்டு பொடிப்பொடியா குறிச்சு வச்சிருப்பம்.அதனாலதேன் பிழைச்சோம். இல்லாட்டி நாறியிருப்பம்.

நான் பல தடவை சொல்லியிருக்கேன். எனக்கு நான் உபதேசிச்சு ஆறுதல் பெற்ற விஷயங்களைத்தேன் இன்னைக்கு அறிவிச்சிக்கிட்டு இருக்கேன். எடுத்தா எடுங்க உட்டா உடுங்க.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கிட்டே அடிமைப்பட்டு கிடந்தப்போ சுதந்திரத்துக்கு ஏங்கினோம் -சுதந்திரம் பெற்ற பிறகு அன்னிய முதலீட்டுக்கு தொங்கறோம்.தேவையா இது? நாம நல்ல அடிமைகளாவும் வாழலை. சுதந்திரத்தோட பெருமையும் நமக்கு உறைக்கலை.




Saturday, December 3, 2011

ராகுவும் -துர்கையும்


அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் கடவுளும்ங்கற தலைப்புல ஒரு மினி தொடர் ஆரம்பிச்சு சூரியன்,சந்திரன்,செவ் ஆகிய கிரகங்கள் சரியில்லின்னா வணங்க வேண்டிய தெய்வங்கள் அதற்கும் அந்த கிரக காரகத்வத்துக்கும் என்ன சம்பந்தம்னு பார்த்துக்கிட்டு வந்தோம்.

இன்னைக்கு ராகுவும் துர்கையும்.

சிவனார் ஆலால விஷத்தை விழுங்கிட்டதாவும் அப்பம் ஆத்தாதான் கப்புன்னு கழுத்தை பிடிச்சு அதை நிறுத்தினதாவும் படிச்சிருப்பிங்க.ராகுன்னா விஷம். அந்த விஷத்தை தடுத்து நிறுத்தின ஆத்தாவை வணங்கினா ராகுவால் வரக்கூடிய ஆல்கஹாலிசம்,ட்ரக் அடிக்சன்,மெடிக்கல் அலர்ஜி,ஃபுட் பாய்சன் ஆகிய பிரச்சினைகளை தவிர்க்கமுடியும்.

ராகு சர்ப்ப கிரகங்களில் ஒன்று. மனித உடலில் மூலாதார கேந்திரத்தில் சக்தி ஸ்வரூபமாக இருக்கும் குண்டலி சக்தி ஒரு பாம்பின் வடிவில் தன் வாலை தானே கடித்தபடி உள்ளதா யோக நூல்கள் சொல்லுகின்றன.

இந்த சக்தி சாதனைகளின் விளைவாக உச்சந்தலையில் உள்ள சஹஸ்ராரத்தை அடைவதே யோகத்தின் லட்சியம். சஹஸ்ராரம் சிவ தத்துவம். சிவனை அடையவேண்டும்ங்கற ஸ்பார்க் சக்தி மனசுல விழுந்துட்டா அப்பாறம் ஸ்ரீஹரிகோட்டாவுல இருந்து புறப்படற ஏவுகணை மாதிரி சர்..தான்

நதி கடலை தேடி ஓடுவது போல - சக்தி சிவனை தேடி செல்வது இயல்பு. சூரியன் தலைக்கு காரகன்.சூரிய பலமில்லாதவர்கள் சிவனை வணங்க வேண்டும் என்று சொல்வதற்கு இது கூட ஒரு காரணமா இருக்கலாம்.

நமக்கு அறிவு சாஸ்தியாச்சா. ஒரு ராத்திரி சிவன் அசமஞ்சமா உச்சாணி கொம்புல உட்கார்ந்திருக்க சக்தி மட்டும் ஏன் அல்லாடனும், சிவனும் ஒரு படி இறங்கி வந்தா சந்திப்பு ஈஸியா நடக்குமேன்னு ஐடியா வந்தது.

சீனர்கள் சொல்லும் யின் -யாங் - நாம சொல்ற சிவ-சக்தி தத்துவம் ரெண்டும் ஒன்னுதேன். ஒன்னுக்கொன்னு பரஸ்பரம் ஈர்ப்பு கொண்டவை .

ஹ்ரீம் ங்கறது புவனேஸ்வரி பீஜம் - பெண் தன்மை வாய்ந்தது. ஓம்ங்கறது ஆண் தத்துவம். எனவே மந்திர உச்சாடனத்தின் போது ஓம் சொல்லும் போது மூலாதாரத்தின் மீதும் - ஹ்ரீம் சொல்லும் போது சஹஸ்ராரத்தின் மீது கவனம் வைத்து ஜெபிச்சுக்கிட்டிருந்தம்.

மாத்தி யோசிக்கிறதுன்னா இதானே. ஆனா அதுவரை ஏற்படாத புது வித வைபரேஷன்ஸ் -அனுபவங்கள் எல்லாம் ஏற்பட்டதென்னவோ நிஜம்.

இப்படி மாத்தி யோசிக்கிற தில்லை தர்ரது ராகு. ஆனா மாத்தி ரோசிச்சதால செம மாத்து வாங்காம இருக்கனும்னா ராகு பலம் தேவை. அந்த ராகு பலம் இல்லின்னா துர்கையோட கருணையாச்சும் தேவை.

ராகுன்னா லாட்டரி. ஆத்தா அருளை மிஞ்சின லாட்டரி என்ன இருக்கு? ராகுன்னா இருட்டு.துர்கையின் சஞ்சாரம் ராப்போதில் தான் நடக்கும். (ஹை வே பெட் ரோலிங் மாதிரிங்கோ). பாம்புக்கும் துர்கைக்கும் இன்னொரு லிங்க் இருக்கு. ஒரு வீரமணி கடவுள் இல்லை இல்லவே இல்லைன்னு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டிருக்க இன்னொரு வீரமணி "சக்தியின் வடிவம் பாம்பு - சத்தியமாய் நீ நம்பு"ன்னு பாடி வச்சிருக்காரு.

சாதாரணமா "அவாள்" பூஜிக்காத அம்மன் கோவில்ல எல்லாம் பாம்பு புத்து இருக்கும். அட்லீஸ்ட் அம்மன் தலை மேல ஏழு தலை பாம்பு படம் விரிச்சாப்ல இருக்கும். இப்படியா கொத்த கோவில்ல "அவாள்" பூஜை பண்ணிட்டிருந்தா அது ஆக்கிரமிப்பா கூட இருக்கலாம்.

ராகுவால் வந்த தோஷம் குறைய பிராமணர்கள் பூஜிக்காத புற்று உள்ள அம்மன் கோவிலுக்கு போறது நச் பரிகாரம்.

வருத்தம்:
இந்த மினி தொடர்ல வணங்க வேண்டிய சாமிக்கும் -கிரகத்துக்கும் என்ன சம்பந்தம்னு தான் சொல்லிக்கிட்டு வர்ரோம். கிரக நிலையை பொருத்து "எப்படி" வணங்கறதுங்கற மேட்டர் விடுபட்டு போச்சு.அதையெல்லாம் இன்னொரு சமயம் இன்னொரு மினி தொடரா பார்ப்போம்.

Friday, December 2, 2011

செவ்வாயும் -முருகனும்


அண்ணே வணக்கம்ணே

எந்த கிரகம் சரியில்லின்னா எந்த கடவுளை வணங்கனும்னு ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். அதுல செவ் சரியில்லின்னா முருகனை வணங்கனும்னும் சொல்லியிருந்தேன். அது நம்ம தனுஸ் எழுதின கொலை வெறி பாட்டு மாதிரி டுபாகூரு கிடையாது.அதுக்கு பல காரண காரியங்கள் இருக்கு. செவ்வாய்க்கும் ,முருகனுக்கும் பத்துக்கு பத்து பொருத்தம் இருக்கு.

முருகனை வணங்கினா செவ் தரக்கூடிய பிரச்சினைகள் குறையும். (உ.ம் ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள், நில தகராறுகள்,எதிரிகள்,போட்டியாளர்களால் பிரச்சினைகள் , நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடுகள் )

மொதல்ல முருகனுக்கும் செவ்வாய்க்குமான ஒற்றுமைகளை பார்ப்போம்.

செவ் நெருப்பு கிரகம். முருகன் சிவனார் நெற்றிக்கண்ணின் ஆறு பொறிகளாய் பிறந்து 6 குழந்தைகளாய் மாறியவர்.

செவ் போட்டிக்கு காரகம்.முருகன் ஆஃப்டர் ஆல் ஒரு மாங்கனி கிடைக்கலின்னு மயிலேறி மூவுலகை சுற்றி வந்தவர்.

செவ் கோபத்துக்கு காரகம். உள்ளாட்சி தேர்தல்கள்ள ரிசல்ட்டை மாத்தி லந்து பண்ண கணக்கா போட்டியில் ஜெயிச்ச தனக்கு மாங்கனி தரலைன்னு கோவிச்சுக்கிட்டு போனவர்.

செவ் யுத்தத்துக்கு காரகம். முருகன் அவதாரமே ஒரு மெகா யுத்தத்துக்கானது. (சூர சம்ஹாரம்) செவ் கிரகங்களின் சேனாதிபதி (கமாண்டர் ஆஃப் தி ப்ளேனட்ஸ்) முருகன் தேவசேனாதிபதி.

செவ் ரத்தத்துக்கு காரகம். முருகன் வேட்டுவ பெண்ணை (குறமகள்) மணந்ததால் அவருக்கு தேன் முக்கிய நிவேதன பொருள். தேனுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

முருகனுக்கு பௌமன் என்றும் ஒரு பெயர் இருப்பதாய் ஞா. இந்த வார்த்தை பூமி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. செவ் பூமிகாரகன்.

செவ் இளையவர்கள்/ யூத்தா காட்சியளிப்பவர்களுக்கு காரகர் .(கௌமார ஸ்வரூபம்) .முருகனுக்கு குமரன் என்றே பெயர் உண்டு. ( காட்ஸ்லயே செம யூத்து நம்மாளுதேன்)

இப்படி அக்கக்கா பிரிச்சு விளக்க ஒரு காரணம் இருக்கு. ஜோசியர் செவ் சரியில்லிங்க முருகன் கோவிலுக்கு போய் வாங்கன்னா மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடி போடறான்யா இந்தாளு. செவ் எங்கயோ இருக்காரு. முருகன் கோவில் நம்ம பேட்டையிலயே இருக்காரு ரெண்டுத்துக்கு என்னா சம்பந்தம்னு நீங்க நினைக்கப்படாது..

சோசியர் ஜஸ்ட் டாக்டர் மாதிரி. ஆரோ விஞ்ஞானிக தங்கள் வாழ்க்கைய தொலைச்சு கண்டுபிடிச்ச மருந்து மாயங்களை நோகாம எழுதி கொடுக்கிற டாக்டர்தான் ஜோசியர். ஜோசியர் அறிவாளியா இல்லாம இருக்கலாம்.ஆனால் ஜோதிட விதிகளை ஏற்படுத்திய ரிஷிகள் மகரிஷிகள் "சரக்குள்ள" ஆட்கள். எனவே சோசியர் சொன்னா கேட்டுக்கோங்க.


Tuesday, November 29, 2011

சனி பிடிச்சா ஆரை வணங்கனும்?


அண்ணே வணக்கம்ணே !

இன்ன நோய்க்கு இன்ன வைத்தியம்ங்கறாப்ல இன்ன கிரகம் சரியில்லின்னா இன்ன தெய்வத்தை வணங்குன்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. இதெல்லாம் போது போகாம சொல்லி வச்ச மேட்டரு இல்லிங்ணா.
செம மேட்டரு கீது.

முந்தா நாளு பொஞ்சாதி ஊர்ல இல்லின்னு நம்மூரு முனியாண்டி விலாஸுக்கு போனேன். மழையும் -கிழையுமா இருந்துதா சிலோன் பரோட்டா கொடுப்பாண்ணேன். அதை தின்னு முடிக்கிறதுக்குள்ள ஆண்டவன் தெரிஞ்சாரு.. தின்ன பரோட்டாவும் - சேர்வாவும் பாதி ராத்திரி தொண்டை வரைக்கும் வந்து களுக்குன்னு எட்டிக்கூட பார்த்துருச்சு. இந்த இழவெடுக்கிறதுக்கு ரூ.34 கழுத்துல துண்டை போட்டு வாங்கிட்டானுவ.

( எமெர்ஜென்சி கால கலைஞருக்கும் கனிமொழியை தியாகிங்கற கலைஞருக்கும் வித்யாசம் இருக்கில்லியா.. அப்படி மேற்படி மு.வி நாறிப்போன கால கட்டம் போல - நாம லாலா போடறதும் இல்லை - லாலா பார்ட்டிகளோட போனாலும் வெறுமனே திங்கலாமேன்னுட்டு பொணமும் திங்கறதில்லை -புரோட்டாவும் திங்கறதில்லை.. அதான் மேட்டரு தெரீலை. ஒரு காலத்துல பத்து நாள் ஜூரம் அடிச்சு எத்தனா காராசாரமா தின்னா நல்லாருக்குமேன்னு தோனும் போது மு.வி பரோட்டா ரெண்டு அடிச்சா போதும் ஜூரம் ஓடிப்போயிரும். அப்படி ஒரு காரம் -மணம்-குணம் )

இன்னாபா ஏதோ கெரகம் - சாமின்னு ஆரம்பிச்சு பரோட்டா தின்ன கதைக்கு பூட்டேன்னு பேஜார் படாதிங்ணா. மேட்டருக்கு வரேன்.

பொஞ்சாதி ஊர்ல இருந்திருந்து " ஆமா.. நீ வயசுக்கு வந்த புதுசுல எவனோ கோலத்து மேல லவ் லெட்டர் வச்சுட்டு போவான்னு சொன்னியே அவன் பேரென்ன"ன்னு கலாய்ச்சுக்கிட்டே மேற்படி ரூ.34 + இன்னொரு 34 மூட்டை அவுத்துருந்தா நாலு சுக்கா ரொட்டியும் -சிக்கன் ஃப்ரையும் பண்ண சொல்லிட்டு பெரிய நாயக்கரம்மாவும் (பொஞ்சாதி) ,சின்ன நாயக்கரம்மாவும் சிக்கனை ஒரு பிடி பிடிக்கிறதை பார்த்துக்கிட்டே மசாலாவை மட்டும் தொட்டு தின்னிருந்தா மழை கொடுத்த -மச மச எஃபெக்ட் ஓடியே போயிருக்கும்.

பரோட்டா -சேர்வா , சுக்கா ரொட்டி -சிக்கன் ஃப்ரை. ரெண்டுக்கும் பெரிய வித்யாசம் எதுவுமில்லை. பரோட்டா சேர்வா "ஊருக்காவ பண்ணது" ,சுக்கா ரொட்டி -சிக்கன் ஃப்ரை பேசிக்கல் ஃபார்முலாவை என்ரிச் பண்ணி நமக்காவ ப்ரிப்பேர் பண்ணது. எது சுரத்தா இருக்கும்?

இன்ன கிரகத்துக்கு இன்னா சாமிய கும்பிடனும்ங்கற மேட்டர்ல ஒரிஜினலா என்ன சொல்லி
வச்சாய்ங்களோ நமக்கு தெரியாது. (புள்ளி விரப்புலிகள் மேட்டர் எதுனா இருந்தா அவுத்து விடலாம்) . கீதைய என்ன கதி பண்ணிட்டாய்ங்கன்னு ஒரு தொடர்பதிவே போட்ட ஆசாமி நாம இந்த மேட்டர்ல "அவாளை" அவ்ளோ ஈசியா நம்பிடுவமா என்ன?

ஒரிஜினலில் உள்ள படி சனி பிடிச்சா நீங்க " சாஸ்தா"வை வணங்கனும். சாஸ்தான்னதும் ஐயப்பனுக்கு தாவிராதிங்க..சாஸ்தாங்கறது வேற கேரக்டர். விவரமானவுக அவுத்துவிடுங்கப்பு. மனோகராவுல "ஆண்டவன் கட்டளைக்கே காரணம் கேட்கிறார்கள்"ங்கறா மாதிரி பெரியவுக சொன்னதாவே இருந்தாலும் காரண காரியத்தை பார்க்கனும்ல.

அப்படி பார்த்து "ஏன் "என்ற கேள்வியோடா ஆராய்ச்சி பண்ணினதுல அவிகளோட அடிப்படை லாஜிக்கை கேட்ச் பண்ணி சனி பிடிச்சா ஆரை வணங்கனும்ங்கறதை மட்டுமில்லே அந்த கிரகம் கெட்டால் எந்த தெய்வத்தை வணங்கனும்னு பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்லிர்ரன்.

அதுக்கு மிந்தி சின்ன க்ளேரிஃபிகேஷன். ஒன்றே குலம் ஒருவனே தேவன்ங்கறாய்ங்க -விவேகானந்தரோ உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைச்சா அது வேற எங்கே இருந்தோ வந்தது இல்லே. உனக்குளே இருந்துதான் வந்தது"ங்கறாரு.

அப்பாறம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில இன்னின்ன நாள்ள இன்னின்ன ஸ்பெஷலிஸ்டுக வருவாய்ங்கனு போர்டு போட்டாப்ல இது இன்னாபா லிஸ்டை நீட்டறேன்னு கேப்பிக.சொல்றேன்.

புவனா ஒரு கேள்விக்குறியில நடிச்சதும் ரஜினிதேன் -பைரவி ,சதுரங்கத்துல நடிச்சதும் ரஜினிதேன். பில்லா ரங்காவும் ரஜினிதேன், பாட்சா,அண்ணாமலையில நடிச்சதும் ரஜினிதேன் , சந்திரமுகியில ,நடிச்சதும் ரஜினிதேன் ,சிவாஜி,ரோபோல நடிச்சதும் ரஜினிதேன் .ஆனால் சிலருக்கு சிலது பிடிக்கும்.சிலது அறவே பிடிக்காம இருக்கலாம். ஒவ்வொரு படத்துல ரஜினியோட ஒவ்வொரு கோணம் வெளிப்பட்டிருக்கும். ஒவ்வொரு விதமான வைபரேஷன் கிடைச்சிருக்கும். ரஜினிக்கே இத்தீனி கோணம், இத்தீனி வைபரேஷன் இருக்குன்னா கடவுளுக்கு?

கரண்டு ஒன்னுதேன். டிவிடியில பாய்ஞ்சா பலான படம் பார்க்கலாம், கம்ப்யூட்டர்ல பாய்ஞ்சா ட்ரிபிள் எக்ஸ் வீடியோ பார்க்கலாம், ஏ.சியில பாய்ஞ்சா ஜில்லு , ஹீட்டர்ல பாய்ஞ்சா ஊ.. அந்த மாதிரிதேன் தெய்வீக சக்தியும்.

தற்சமயத்துக்கு இன்ன கிரகம் சரியில்லின்னா இன்ன தெய்வத்தை வணங்கனும் ..ஐ மீன் தெய்வத்தை இன்ன வடிவத்துல வணங்கனும்ங்கற பட்டியலை மட்டும் தந்துர்ரன். நாளைக்கு காரண காரியங்களை விளக்கறேன்.

1.சூரியன்:

சூரியன்,சூரிய நாராயணன்,காயத்ரி (நான் படிச்ச புஸ்தவங்கள்ள சிவன்)

2.சந்திரன்:
ஆயுதம் தரிக்காத அம்மன் சிறப்பாக கன்னியாகுமாரி அம்மன் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள பார்வதி)

3.செவ்வாய்:
சுப்பிரமணியர்

4.ராகு:
துர்கை

5.குரு:
பிரம்மா ,தட்சிணா மூர்த்தி

6.சனி
ஆஞ்சனேயர் , கிராம தேவதைகள், காவல் தேவதைகள், பிதுர்கள் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள சாஸ்தா )

7.புதன்
கிருஷ்ணர் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள விஷ்ணு )

8.கேது

வினாயகர்

9.சுக்கிரன்

லட்சுமி


எதுக்கு பலான சாமிய கும்பிடசொன்னாய்ங்க/சொல்றேன்னு கொஞ்சம் ரோசிச்சு வைங்கண்ணா..தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம். நாளைக்கு காரண காரியங்களை சொல்றேன்.


பி.கு:
ஹி ஹி நேத்து கண்ணால நாளாச்சா .. கானிப்பாக்கம் போயிருந்தம். அங்கன ஃபோட்டோ எடுத்ததுல பரதேசி மாதிரி வந்துருச்சு. இன்னாங்கடா இது கு.ப சின்னத்திரையில சித்தப்பா ,மாமா ரோலுக்கு கூட அன்ஃபிட் ஆயிட்டாப்ல இருக்குன்னு ஒரே ஒர்ரியா போச்சு.

அதனால இன்னிக்கு ஆன தகிடுதத்தம்லாம் பண்ணி யூத்தா மாறி ஃபோட்டோ பிடிச்ச பிற்காடுதேன் மனசு ஆறுதலாச்சு. ஃபோட்டோவுல உள்ள கேரக்டருங்க ரெண்டும் நாமதேன். பயந்துக்காதிங்க..

Monday, November 14, 2011

உயிரை பறித்த பரிகாரம்: திகீர் அனுபவம்

அண்ணே வணக்கம்ணே .. நேத்து பவர் கட்டோட டக் அஃப் வார் செய்து ஒரு பதிவு போட்டம். மேட்டரு இன்னாடான்னா ஜாதகம் இல்லாமயே நமக்கு வர்ர/வந்த பிரச்சினைகளை வச்சு மேற்படி பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கறதுதேன்.

உங்க பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கினவுங்க இங்கே கொடுத்திருக்கிற பரிகாரங்களை செய்ய ஆரம்பிங்க. நோயை விட சில நேரம் ட்ரீட்மென்டே பயங்கர லொள்ளு பண்ணிரும். அதனால பரிகாரங்களை ஸ்டார்ட் பண்றதுக்கு மிந்தி எப்போ -எப்பூடி ஸ்டார்ட் பண்றதுங்கற டிப்ஸை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிற ப்ளேயரோட ப்ளே பட்டனை அழுத்தி முழுசா கேட்டுருங்க. சகட்டுமேனிக்கு செய்து சீன் ரிவர்ஸ் ஆயிட்டா நாம பொறுப்பு கடியாதுங்கோ

Read More

Saturday, September 24, 2011

பிறக்காத குழந்தைக்கு ஜாதக பலன்


அண்ணே வணக்கம்ணே!

நேத்து பிறந்து 44 வயசான பார்ட்டியோட ஜாதக அலசலை கேட்டிங்க. ( ஹி ஹி நம்மோடதுதேன்) இன்னைக்கு இன்னம் பிறக்காத குழந்தைக்கான ஜாதக அலசலை கேளுங்க. கூடவே பரிகாரங்களும் தந்திருக்கேன்.

பர்த் டீட்டெயில்ஸ்:

22-11-2011 , நேரம்: காலை 6.45 பிறக்க போகும் ஊர்: திருச்சியா இருந்தால்.

ஹஸ்தம்: 4 ஆம் பாதம் ராசி : கன்னி . (சக்கரத்தையே இமேஜ் ஃபைலா போட்டிருக்கேன் பாருங்கண்ணா)

இது கிரகங்களின் செயல்பாடு குறித்த ஒரு புரிதலை தரும்னு நம்பறேன். அசலான மேட்டரு இன்னாடான்னா ஒரு பார்ட்டி டேட் ஆஃப் பர்த் தரும்போது வருசத்தை ஒரு வருசம் தள்ளி தந்தாச்சு.

நாம குருட்டுத்தனமா ஜாதகம் போட்டு பலனும் ரிக்கார்டு செய்தாச்சு. நடுவுல டவுட் வந்து பார்த்தா இன்னம் பிறக்காத குழந்தைக்கு பலன் சொன்ன சங்கதி உறைச்சது.

உடனே சரியான பர்த் டீட்டெயில்ஸ் தரச்சொல்லி பார்ட்டிக்கு மெயில் பண்ணிட்டன்.

பதிவு செய்த பலனை என்ன பண்ணலாம்னு தலையை குலுக்கி குலுக்கி ரோசிச்சதுல இந்த உதாரண ஜாதகம் குறித்த அலசலை பதிவா போடலாம்னு தோனுச்சு.

போட்டுட்டன். பொறுமையா கேட்டா கிரகஸ்திதிகளை எப்படி அலசறது -அவற்றின் பலனை எப்படி கிரகிச்சுக்கறது - எப்படி பரிகாரம் சொல்றது போன்ற ஏராளமான விஷயங்களை புரிஞ்சிக்கிடலாம்.

உடுங்க ஜூட்.

போனஸ்:
நேற்றைய ஆடியோ பதிவை நிர்வாண உண்மைகள் மற்றும் அனுபவஜோதிடம் வலைப்பூ & தளங்கள் வழியே கேட்டு பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை ஜஸ்ட் ஆயிரத்து இரு நூற்று எழுபத்து நான்கு. கீப் இட் அப்..

இப்பம் வழக்கம் போல கீழ்காணும் ப்ளேயர்களின் ப்ளே பட்டனை அழுத்தி பாடம் கேளுங்க.

மொதல் ப்ளேயர்ல ஜாதக பலன் இருக்கு. ரெண்டாவது ப்ளேயர்ல பரிகாரம் இருக்கு.




பரிகாரங்கள்:

Tuesday, April 5, 2011

அனுமனை அண்டினால் சர்வதோஷ பரிகாரம்

வழக்கமா ஒவ்வொரு கிரக தோஷம் குறைய ஒவ்வொரு சாமிய கும்பிடச்சொல்லி எங்காளுங்க ( ஜோதிடர்கள்).சொல்வாய்ங்க   நம்ம பர்சனல் ப்ரிஸ்க்ரிப்ஷன் கடாசில தந்திருக்கன்.

ஆனால் அனுமனை அண்டி  வணங்கினா, அவருக்கு ப்ரீதியான ராம நாமத்தை ஜெபிச்சா சர்வதோஷங்களும் பரிகாரமாவதோடு - ஆன்மீக ரீதியிலான முன்னேற்றமும் உறுதி என்பது என் அனுபவம். Read More

Wednesday, March 2, 2011

டாப் சீக்ரெட்ஸ்


எதையெல்லாம் வெளிப்படுத்தினா நான் சாபத்துக்காளாவேனோ, தரித்திரம் என்னை பிடுங்கி தின்னுமோ அற்பாயுசுல செத்து போயிருவனோ அதையெல்லாம் வெளிப்படுத்திர்ரதா முடிவு பண்ணியிருக்கேன்.

விவேகானந்தர் சொல்வாரு "என் தனிப்பட்ட ஆன்மீக முன்னேற்றம் பாதிக்கப்பட்டாலும் நோ ப்ராப்ளம். ஒட்டு மொத்த மனித குல மேன்மைக்காக என் முயற்சிகள் தொடரும்"

என்னை பை.காரன்னு டிசைட் பண்ணாலும் சரி, நான் சொல்றதுல உள்ள சத்தியத்தை கிரகிச்சு மேலும் மேலும் இந்த சத்தியங்களை வெளிப்படுத்த என் ஆன்ம பலத்தை கூட்ட எனக்காக பிரார்த்தனை பண்ணாலும் சரி. சொல்ல வந்ததை சொல்ல முயற்சி பண்றேன்.

என்னதான் இந்த பதிவு கடவுளுக்கு, படைப்புக்கு எதிரானதா இருந்தாலும் அவன் அருளாலே அவன் தாள் பணிந்துங்கற மாதிரி இதுக்கும் கடவுளோட அருள் தேவைப்படுது.

பாண்டவருங்க பீஷ்மரை கொல்ல அவர்கிட்டேயே க்ளூ கேட்டுக்கலையா அது மாதிரி. இங்கே கடவுளை கொல்றது நம்ம உத்தேசமில்லே. கடவுள் பேரால இங்கன செலாவணில இருக்கிற பிரமைகளை, மூட நம்பிக்கைகளை ஒழிச்சுக்கட்டறதுதான்.

மொதல்ல நம்ம ஜூரிஸ்டிக்சன் (ஜோதிஷம்).அப்பாறம் ஆன்மீகம். ஆன்மீகம்னா கியாபகம் வருது (ரஜினி ஸ்டைல்) நம்ம தனிக்காட்டு ராசா நிர்வாண உண்மைகள் வலைப்பூவில் ராத்திரி கலாச்சாரம்னு ஒரு வில்லங்கமான தலைப்போட விவரமான பதிவு போட்டிருக்காரு.அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க

டாப் சீக்ரெட்ஸை தொடர்ந்து வாசிக்க இங்கே அழுத்துங்க