'>
Showing posts with label பிரச்சினைகள். Show all posts
Showing posts with label பிரச்சினைகள். Show all posts

Saturday, May 26, 2012

படுக்கையறை பிரச்சினைகள்: 2


அண்ணே வணக்கம்ணே !
நம்ம ஹிட்ஸ் 1000+ ஆ இருந்தது 800+க்கு வந்துருச்சு. இன்னாடா மேட்டருன்னா ஒரு நாள் கூத்துக்கு மீசைய வச்ச கணக்கா கூகுல் ஆட்சென்சுக்காவ இருந்த தமிழ்பதிவையெல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணி அனுபவஜோதிடம் டாட் காமை இங்கிலீஷ் தளமாக்கி சீன் போட்டோம். டெம்ப்ரரி அப்ரூவல் என்னமோ கிடைச்சது.ஆனால் மறு நாளே டிஸ் அப்ரூவ் பண்ணிட்டாய்ங்க.

இந்த கூத்துல 200 ஹிட்ஸ் குறைஞ்சு போச்சு. சைட்டு தமிழாயிட்ட மேட்டர் சனத்துக்கு தெரிஞ்சு அவிக திரும்பிவர நாள் பிடிக்கும். இந்த மேட்டர் எப்டி நடந்ததுன்னு ஜோதிட ரீதியா பார்த்தா லக்னத்துக்கு அஞ்சுல ராகு -11 ல கேது. அஞ்சுல ராகு இருந்ததால குறுக்கு வழி மேல கவர்ச்சி. 11 ல கேது இருந்ததால ஞானோதயம்.

ஆனால் ஜூன் 14 ஆம் தேதி பாப்பாவுக்கு கண்ணாலங்கற இந்த சிச்சுவேஷன்ல இது வரபிரசாதம் தான். அஞ்சுல ராகு இருந்தா வாரிசுக்கு ஹார்ம் நடக்கனும். அது இப்படி சின்ன புத்திகுழப்பம் - நிராசையோட போயிருச்சு.

இதனாலத்தேன் ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்ல கில்மா பிரச்சினைகளுக்கு ஒரு நாள் முன் கூட்டியே வந்தோம். இதுக்கு மிந்தியே ஒரு எபிசோட் கொடுத்திருக்கனும். தாவிட்டம். ( ஆளில்லாத டீக்கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுர்ராய்ங்கண்ணா)

அது இன்னா மேட்டருன்னா நல்லா போயிக்கினு இருக்கிற லைஃப்ல படக்குன்னு தர்கமே இல்லாம சடன் ட்விஸ்ட் வந்து பிச்சை எடுக்கிறது - இனி முப்பது நாளும் பவுர்ணமிடான்னு நெஞ்சை நிமிர்த்தின சமயம் இடி இறங்கிர்ரது.

முதலிரவு தினம் - பால் தம்ளரோட பொஞ்சாதி வருவான்னு காத்திருக்கிறச்ச மாமியார் வர்ரது ( அடச்சே.. என்ன ஒரு உதாரணம் ) போலீஸுன்னு திருத்திக்கங்க.

உலக சுற்று பயணத்துக்கு புறப்படற சமயம் வாயால வவுத்தால போறது - "என் பேரு படையப்பா -இள வட்ட நடையப்பா - என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா"ன்னு சோலோ பாடற சமயம் உள்ளதெல்லாம் குள்ள நரிப்படைன்னு தெரிய வர்ரது.

பழைய தமிழ் சினிமாவுல கடேசியில சுபம் போடுவாங்களே அந்த மாரி ஒரு சிச்சுவேஷன்ல லாஜிக்கே இல்லாம போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடுன்னு போக வேண்டி வந்துர்ரது

போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு.மறைமுக எதிரிகள், செக்யுலரிசம்னாலே கடுப்பாயிர்ரது - நாட்ல உள்ள பாய்க்கெல்லாம் நாலு சப்பாத்தி கொடுத்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பிரனும்னு பேசறது.

என்னதான் ஃபாரின் சோப்பு போட்டு 4 தாட்டி மினரல் வாட்டல குளிச்சாலும் புண்கள் வர்ரது.,வெளிநாடு போற மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாவது

ஃபுட்பாய்சன்,மெடிக்கல் அலர்ஜி , அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியா திரிய வேண்டி வர்ரது.மனதில் இனம் புரியாத பீதி, மந்திர ஜெபம், யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம்,வீட்டில் விஷபூச்சிகளின் நடமாட்டம்.

இப்படி ஒரு பிக்சர் உங்க லைஃப்ல இருந்தா நீங்க செய்துக்க வேண்டிய பரிகாரங்கள் கீழே:

1.தினசரி 1 மணி நேரம் வாரத்துக்கு ஒரு நாள் காவி உடை கட்டி - வினாயகரை தியானம் பண்ணுங்க

2.மாசம் ஒரு நாள் இரவு கோவில்,சத்திரம் , கோவிலை ஒட்டின லாட்ஜு மாதிரி இடங்கள்ள தங்கிட்டு வாங்க. (போகும் போது எந்த பொருளையும் கொண்டு போகக்கூடாது - ரிட்டர்ன்லயும் எதையும் கொண்டு வரக்கூடாது -பிரசாதம் உட்பட)

3.தர்கா,சர்ச்,குருத்வாரா போங்க ( நீங்க முஸ்லீமா இருந்தா தர்கா போக தேவையில்லை -சீக்கியரா இருந்தா குருத்வாரா தேவையில்லை)

4.டாட்டூ -பச்சை வரைஞ்சுக்க / குத்திக்க வாய்ப்பிருந்தால் பாம்போட வடிவத்தை வரைஞ்சுக்கங்க/ குத்திக்கங்க

5.பெண்கள் பாம்பு வடிவிலான ஸ்டிக்கர் பொட்டை யூஸ் பண்ணலாம்

6. தாழம்பூ ஸ்மெல் வர்ர சென்ட் யூஸ் பண்ணுங்க ( இதை போட்டுக்கிட்டு காடு,கம்மா கரைன்னு போயிராதிங்க)

7.பர்ஸ்,பேக் பாம்பு தோல் நிறத்துல இருந்தா நல்லது.

8.துர்கை ,கணபதியை உங்க லைஃப்ல ஒரு பாகமாக்கிக்கங்க

9.பாம்பு வடிவ மோதிரம் அணியலாம்.

10.Om Gam Ganapathe swaha - Om Dhum durgaayai swaha னுட்டு ஜபிச்சிக்கிட்டே இருங்க

பவர் கட் நேரம் நெருங்கிருச்சு . கீழே தந்திருக்கிற பரிகாரங்களையும் ஒரு லுக் விடுங்க. ரிப்பிட்டேஷன் இருந்தா அவாய்ட் பண்ணிருங்க.

1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.

1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

படுக்கையறை பிரச்சினைகள்: 1


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு பதிவு இழந்த சக்தி வைத்தியரோட விளம்பரம் மாதிரி இருந்தா அதுக்கு நாம பொறுப்பு கடியாது. ஏன்னா நாம எடுத்துக்கின சப்ஜெக்ட் அது மேரி.

அந்த காலத்துல ஆருனா புருசன் பொஞ்சாதி முட்டிக்கிட்டா - சண்டை சாடின்னு நடந்தா பெருசுங்க.. இன்னா சொல்லும்? அட விடுப்பா.. எல்லாம் பொயுது போனா செரியா பூடும்.

பொயுது போனா என்னாவும்? சாப்டுவாய்ங்க. சாப்டுட்டு படுப்பாய்ங்க. படுத்த பிற்காடு இவன் அவள் பக்கம் திரும்புவான். அவள் சுவத்தை பார்த்து படுத்திருப்பாள். அந்த அவுட் லைனை பார்த்ததுமே மூடு மாறிரும்.

இங்க ஒரு சைக்கலாஜிக்கல் பாய்ண்டை சொல்லனும். ஆரு கான்ஃபிடன்டா இருக்கானோ அவன் "எதையும்" நேருக்கு நேரா பார்ப்பான்.ரசிப்பான் டீல் பண்ணுவான். இதுவே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவன் சைடா பார்ப்பான், பேக்ல இருந்து பார்ப்பான்.ரசிப்பான்.

புருசன் பொஞ்சாதி சண்டையில 99.99 சதவீதம் இ ன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள புருசனாலயும், சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள பொஞ்சாதினாலயும் தேன் வரும்.

பொஞ்சாதிக்கு ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இருந்தா அவள் சரண்டர் ஆஃப் இண்டியா. நோ ப்ராப்ளம்ஸ். புருசனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்தாலும் நோ ப்ராப்ளம். ( இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டியில இதை நார்மலா எடுத்துக்கறாய்ங்க -மேஜரா இருக்கிறதெல்லாம் நார்மல்ங்கறது டெமோக்ரடிக் ஃபோபியா (ஹய்யா மனவியல்ல ஒரு புது வியாதிய கண்டுபிடிச்ச நமக்கு பட்டம் கிட்டம் தருவாய்ங்களா.. )

தகராறு எங்கன வருதுன்னா.. பொஞ்சாதி சு.காம்ப்ளெக்ஸ் உள்ளவன்னு வைங்க. புருசன் என்னமோ அஜீஸ் ஆயிருவான் ( ஐ மீன் சரண்டர்) ஆனால் அம்மா,அக்கா,அண்ணன் தம்பி,ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவனை நோண்டிக்கிட்டே இருப்பாய்ங்க. அவனும் மன்சந்தானே ஏதோ சந்தர்ப்பத்துல " இவள் ஓவராத்தான் போறா"ன்னுட்டு சீறிர்ரான். முட்டிக்குது.


//அவள் சுவத்தை பார்த்து படுத்திருப்பாள். அந்த அவுட் லைனை பார்த்ததுமே மூடு மாறிரும்.//னு ஆரம்பிச்சு சைக்காலஜிக்கு தாவிட்டன். புருசன் கான்ஃபிடன்ட் ஃபெலோவா இருந்தா தகராறுக்கே சான்ஸில்லை. அவன் ஐ.சி பார்ட்டிங்கறதாலதேன் தகராறே வந்தது.

ஐ.சி உள்ளவன் சைடா பார்ப்பான், பேக்ல இருந்து பார்ப்பான்.ரசிப்பான்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். உடனே இவனுக்குள்ள பலான மூட் சீறி கிளம்பும். அப்பாறம் என்ன காத்தாலயோ மதியமோ முட்டிக்கிட்டதெல்லாம் சமாதானமாயிரும்.

ஆனால் இந்த தியரி அந்தகாலத்துக்குத்தேன் ஒர்க் அவுட் ஆகும். இந்தகாலத்துக்கு ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா..

அப்பத்துல சனங்களோட உணவு முறை , வழ்க்கை முறை வேறு . பாடி கண்டிஷன் அவிக பாடியிலருந்த மெட்டஃபாலிசம் வேறு.

இப்பம் எல்லாம் தலைகீழா மாறிருச்சு. சகட்டுமேனிக்கு ஆன்டிபயாடிக்ஸ் உபயோகிச்சு பாடியோட இம்யூன் சிஸ்டமே அடிவங்கிட்ட நிலைமை இப்போ இருக்கு.

செக்ஸ் பவர்ங்கறது இயற்கை கொடுக்கிற வரபிரசாதம். இயற்கையோட ஒன்றி வாழறவுகளுக்குத்தேன் செக்ஸ் பவர்.

இயற்கை விழிக்கும்போது விழிச்சு - இயற்கை தூங்கபோகும்போது தூங்கினாய்ங்க. எவ்ரி திங் வேர் பர்ஃபெக்ட். இன்னைக்கு ?


சரிங்ணா.. திடீர்னு கில்மாவை நுழைக்கிறான்யான்னு நினைச்சிருப்பிங்க. மேட்டர் இன்னாடான்னா நம்ம இஸ்மாயில் சார் சொன்னாப்ல ப்ராப்ளம் பேஸ்டு சொல்யூஷன்ஸ் தந்துக்கிட்டிருக்கம். எல்லா பிரச்சினைகளுக்கு மூலம் இந்த கில்மா.

கில்மா பிரச்சினைகளை எப்படி ஜோதிட ரீதியா புரிஞ்சுக்கறது.. எப்டி சால்வ் பண்றதுன்னு எழுத ஆரம்பிச்சம். லேசா மொக்கை போட்டு பதிவுக்கு வந்துரலாம்னு ப்ளான் பண்ணா பவர் கட் நேரம் நெருங்கிருச்சு.

என்ன பண்றது? கில்மா பிரச்சினைகளுக்கு ஜோதிட ரீதியிலான தீர்வுகளை நாளைக்கு பார்ப்போம்.. உடுங்க ஜூட்.

Wednesday, May 23, 2012

கூகுல் ஆட்சென்ஸ் கிடைச்சுருச்சுங்கோ !


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ட்ராக் மாறாம நேத்து கொடுத்த பிக்சர்ல உள்ள சனத்துக்கு சொல்யூஷன் கொடுத்தே தீர்ரதா முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு மிந்தி கொஞ்சம் மொக்கை.

அனுபவஜோதிடம் டாட் காம் சைட்டுக்கு போனவுக நொந்து போயிருப்பாய்ங்க. மேட்டர் இன்னாடான்னா அல்லாம் இங்கிலீஷு. இதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு.அதான் கூகுல் ஆட்சென்ஸ்.

ஒரு நாள் கூத்துக்கு மீசை வச்ச மாரிதானேன்னு தமிழ் போஸ்டை எல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணிட்டு ப்ளாக்ல இருந்த இங்கிலீஷ் போஸ்டையெல்லாம் கொண்டாந்து போட்டு நிரவி கூகுல் ஆட்சென்ஸுக்கு ரீ சப்மிட் பண்ணேன்.

கொய்யால எந்த அக்ரகாரம் கொளுத்திக்கிட்டு போயிருச்சோ தெரியலை. டெம்ப்ரவரியா அப்ரூவ் பண்ணி ஆட் கோடும் கொடுத்துட்டாய்ங்க. அதனால அமலா பாலை தேடாத சமயத்துலயாச்சும் தமிழ்ப்பாலை தேடி அ.ஜோ சைட்டுக்கு வர்ர சனம் இன்னம் கொஞ்ச நாள் பொறுக்கனும்.

கூகுல் காரவுக இன்னம் டீப்பா ரெவ்யூ பண்ணி அப்ரூவ் பண்ண பிற்காடுதேன் கூகுல் ஆட்ஸ் டிஸ்ப்ளே ஆகும். அது நடந்தாதேன் சில்லறை புரளும். ஆருனா கூகுல் ஆட்சென்ஸ்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவுக டிப்ஸ் கொடுத்தா நல்லாருக்கும். ( டூ அண்ட் டோன்ட்ஸ்) நாம சகட்டுமேனிக்கு ஐட்டம் போட்டு கூகுல் காரன் டிஸ் அப்ரூவ் பண்ணிட்டான்னா கட்டில்ல கிடத்தினதை தொட்டுக்கூட பார்க்காமயே கோட்டை விட்ட்ட கதையா ஆயிரும்.

இன்னைக்கு தலையணை பூக்கள் நாவல்ல ஜெயேந்திரரை பாத்திரமாக்கி ஜல் ஜக் போட்ட பாலகுமாரன் இன்னைய தேதிக்கு மன்னிப்பு கேட்கனுனு ஒரு பதிவை போட்டிருக்கேன்.நம்ம இங்கிலீஷெல்லாம் ஓட்டை. ரெம்ப ஈஸியா புரியும்.தகிரியமா ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கண்ணா

நேத்திக்கு நான் கொடுத்த பிக்சர்ல உள்ளவுக பொருளாதார ரீதியில ரிலீஃப் ஆகனும்னா கீழ்கண்ட பரிகாரம்லாம் செய்துக்கிடனும்.


தாய்மாமன்னு ஆரும் இல்லையா? பிரச்சினையே இல்லை விட்டுருங்க. . இருந்தாலும் அவிகளால சகாயமில்லையா ? விட்டது சனி. அவிக ரெம்ப லொள்ளு பண்றாய்ங்களா? வம்பு வழக்கு வல்லடில்லாம் இருக்கா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை.

1.வசதி இருந்தா நல்ல தரமான வார பத்திரிக்கைகளை வாங்கி (படிக்காட்டாலும் நல்லதே) படிக்கிறவுகளுக்கு ஓசி கொடுங்க

2.அக்கம்பக்கத்துல ஏழை பிள்ளைங்க இருந்தா அவிகளுக்கு ஸ்லேட்டு ,பல்ப்பம், நோட்டு ,புஸ்தவம்,பேனா பென்சில்னு வாங்கி கொடுங்க

3. கெட்டுப்போன சொந்தக்காரனோ , ஃப்ரெண்டோ மெடிசின் வாங்க காசில்லாம தவிக்கிறானா உதவுங்க


உங்களுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை இருக்கா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை

எச்சரிக்கை:

1.தோல் பிரச்சினை இருந்தா முடிஞ்சவரை அப்டியே விட்டுருங்க. ரெம்ப இமிசையா இருந்தா இயற்கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க. (உண்ணாவிரதம் - புத்து மண்ணை உரசி போடறது -மண் குளியல் எட்செட் ரா) இதுக்கு வழியில்லையா ? சித்தா,ஆயுர்வேதம்,ஹோமியோ பதின்னு கதை பண்ணிக்கிட்டிருங்க/ இங்கிலீஷ் மெடிசினுக்கு மட்டும் போகாதிங்க. அது அமுக்கிரும் -கிளப்பி விட்டுரும் -உசுருக்கே ஆபத்தாயிரும். # லாஜிக்

2.கீல் பிரச்சினை இருந்தா அதுக்கு என்ன காரணம்னு பார்த்து அதுக்கு ட்ரீட் பண்ணுங்க. பெயின் கில்லர்ஸுக்கு அடிக்ட் ஆயிராதிங்க.

3.அண்டம் தொடர்பான பிரச்சினை இருந்தா - லாஜிக்கலா ரோசிச்சு சர்ஜரி அது இதுன்னு போங்க. அவசரப்படாதிங்க.


பரிகாரம்:
1.தூது போற வேலை வேண்டாம் ( அதுவும் லாபம் கருதின்னா வேண்டவே வேண்டாம்)

2.பொயப்புக்கு தேவையில்லாத மேட்டரை தெரிஞ்சுக்க கூட நினைக்காதிங்க

3.பொளப்பா இருந்தா தவிர தினசரிகளை லெஃப்ட் ஹேண்ட்ல கூட தொடாதிங்க .கம்ப்யூட்டருக்கு தடா. நெட்டுக்கு பொடா

4.ஓய்வு நேரத்துல போஸ்ட் ஆஃபீஸ்/ தாசில்தார் ஆஃபீஸுன்னு போயி ஏழை மக்களுக்கு மனு எழுதிக் கொடுங்க.

5.புல்லாங்குழல் ஊதாத கண்ணனோட படத்தை வீட்ல வச்சு துளசி மாலை போட்டு பூஜை பண்ணுங்க. துளசி ஃப்ரெஷா இருக்கும் போதே அதை தண்ணில போட்டு கொதிக்க வச்சு குடிங்க. ( நன்னா அலம்பிட்டு)

6.வசதி இருந்தா நாமம் போட்ட சாமிகளோட நாமாவளி/ ஸ்லோகங்களை பாக்கெட் புஸ்தவமா போட்டு இலவசமா டிஸ்ட் ரிப்யூட் பண்ணுங்க


படிப்பு ? சொல்லிக்கிறாப்ல இல்லை.அதுலயும் கணக்குன்னாலே மைண்ட் ப்ளாக் ஆயிருது. ஃபிசிக்ஸ் ,கெமிஸ்டரின்னா கண்ணை கட்டுது. ஒரு சாதாரண லெட்டர் எளுதனும்னா கூட அடிச்சு திருத்திதான் எளுத வேண்டியதா கீது. - இதான் உங்க நிலைமையா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை.

1.பச்சை நிற ஆடை அணிகலன் நிறைய யூஸ் பண்ணுங்க. புஸ்தவங்களுக்கு பச்சை நிறத்துலயே அட்டை போட்டு வச்சுக்கங்க . ரைட்டிங் பேட் / கம்ப்யூட்டர் டேபிள் எல்லாமே பச்சை .

2.படிக்கிறச்ச வடக்கு மூலையிலயோ வடக்கை பார்த்தோ உட்காராதிங்க. சரும வியாதி ,அண்ட வியாதி, கீல் வாதம் உள்ள ஏழைகளுக்கு முடிஞ்ச உதவியை செய்ங்க

3.பெருமாள் பேர் கொண்டவுக ,வைசிய பிள்ளைங்க டச்சுல இருந்தா அவிகளுக்கு சின்ன சின்ன குறிப்பு நோட்டுகளை இலவசமா கொடுங்க (ஸ்பைரல்)


ஐ.டி,கம்ப்யூட்டர், மெடிசின்,அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங், போஸ்டல், கூரியர்,கமிஷன் ஏஜென்ஸி,டீலர்ஷிப் ,மீடியேஷன் இப்படி எந்த லைன்ல போனாலும் முட்டு சந்துல தான் போய்விடுது. ஆரு மூலமாவாச்சும் ஆருக்காச்சும் எதுனா மெசேஜ் கொடுத்தா தப்பாவே போய் சேருது. ஆரை பிடிக்க ஆரை அணுகனுங்கற டெக்னிக்கே கைவரமாட்டேங்குது. இதான் உங்க நிலையா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை

லெஃப்ட் ஸ்மால் ஃபிங்கர்ல மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும். இதுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்திருக்கிற எல்லா பரிகாரங்களையும் பின்பற்றவும். இனம் இனத்தோடு சேருங்கறாப்ல இதே பிரச்சினை உள்ளவுக உங்க க்ரூப்ல நாலஞ்சு பேரு இருந்தா நாலு பேரும் ப்ளான் பண்ணி நான் சொல்லியிருக்கிற எம்.ஜி.ஆர் வேலைகளை செய்யலாம்.

பைசாவை கண்ல பார்க்க முடியலை . கொடுக்க வேண்டியதை ஆருகிட்டனா கொடுத்தனுப்பினா போய் சேரமாட்டேங்குது. சரியான விலாசத்தை எழுதி அனுப்பினாலும் லெட்டர் என்ன இ மெயில் கூட டெலிவரி ஆகமாட்டேங்குது.

Monday, May 14, 2012

பலான இடத்துல மச்சம் நல்லதா?


அண்ணே வணக்கம்ணே !
தலைப்பு ஒரு மாதிரியா இருந்தாலும் சமீபத்துல ஆரம்பிச்ச தொடரோட லேட்டஸ்ட் அத்யாயம் இது . டோன்ட் ஒர்ரி. தலைப்பை ஜஸ்டிஃபை பண்ணிட்டு தொடருக்கு போயிரலாம்.

பலான இடத்துல மச்சமிருந்தா அதிர்ஷ்டம்னு சில பேர் நினைக்கிறாய்ங்க. அது தப்பு. மச்சங்களைஏற்படுத்துவது ராகுகேதுக்கள். ராகு கருப்பு மச்சத்தையும் , கேது சிவப்பு மச்சத்தையும் ஏற்படுத்துவாய்ங்க.

எட்டுங்கறது மர்மஸ்தானத்தை காட்டும். இங்கன ராகு இருந்தால் தான் கருப்பு மச்சம். பெண்களுக்கு இது மாங்கல்ய ஸ்தானம்.ஆண்களுக்கு இது ஆயுள் ஸ்தானம் .ஆகவே பலான இடத்துல மச்சமிருந்தா அந்த நபர் பெண்ணானால் கணவருக்கு பிரச்சினை -ஆணா இருந்தால் ஜாதகருக்கே பிரச்சினை.

ரஜினிகாந்துக்கு தனுஸ் எந்தளவுக்கு தொல்லை கொடுக்கிறாரோ அதை விட பல நூறு மடங்கு தொல்லைய நம்ம எதிர்கால மாப்ளை கொடுத்துர்ராரு. ஃபையர் இஞ்சின் வேலை செய்து எல்லாத்தையும் ஆத்தறதுக்குள்ளாற நமக்கு கிளிஞ்சிருச்சு.

இந்த இழவுல தொடரை எங்கனருந்து தொடர்ரது ? இடையில நம்ம பத்திரிக்கை வேலை வேற மாட்டிக்கிச்சு. நேத்துதேன் வினியோகம் முடிஞ்சது. இன்னைக்கு ஃப்ரீ ஆயிட்டம். ( எவன் புண்ணியம் கட்டிக்குவானோன்னு ஒரு உதறல் இருந்துக்கிட்டே இருக்கு) ஆனாலும் இதோ தொடருக்கு வந்துட்டன்.

நான் என்ன நினைக்கிறேன்னா நான் கொடுக்கிற தீர்வுகள்ள "மசாலா இருக்கு" ஆகா சனங்க பிரச்சினை அவ்ள சீக்கிரம் தீர்ந்துர்ரதான்னு ஜேஜிங்களுக்கு ஈகோ ப்ராப்ளமா என்ன தெரியலை. எப்பல்லாம் நாம ஒரு லைன் அப்புக்கு வந்து அல்ட்டிமேட் சொல்யூஷன்ஸ் தர ஆரம்பிக்கிறமோ அப்பல்லாம் பல்பு மாட்டிக்கிது.

இந்த இம்சையில ஒரு ஆறுதல் என்னடான்னா ஜோதிடம் 360 கடந்த வாரத்துல சென்னையில ஒரு அஞ்சு பிரதியும், வேலூர்ல 9 பிரதியும் வித்திருக்கு. கார்ப்பரேஷன் காரவுக குப்பை கொட்டற இடமா இருக்கிற நம்ம வெப்சைட்டை அஞ்சறை டப்பா கணக்கா மாத்த பூர்வாங்க வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. ஆன்லைன் ஜோதிட ஆலோசனை -லோக்கல் மேகசின் வழியா ரூ.52 ஆயிரம் வரை நம்ம கைக்கு வந்து போயிருக்கு. இதுல எவ்ள மிச்சமாகும்ங்கறது அப்பாறம் கதை.

சரிங்ணா நோயும் மருந்தும் எழுதின கண்ணப்பர் - அதை பாய்ண்ட் டு பாய்ண்ட் தொகுத்த அப்பா -அம்மா, இதையெல்லாம் ஞா படுத்தி இன்ஸ்பிரேஷன் கொடுத்த இஸ்மாயில் சாருக்கு ஜே போட்டுட்டு மேட்டருக்கு போயிருவம்.

இந்த சீரிஸ்ல மொதல்ல பாப்பா - அப்பாறம் பைசாங்கற லைன் அப்ல போய்க்கிட்டிருக்கும். பைசா மேட்டருக்கு எதெல்லாம் தடையா இருக்குங்கறதை பொருத்து பரிகாரம் சொல்லிக்கிட்டு வர்ரேன்.

இன்னைக்கு உங்க வறுமை -ஏழ்மை இத்யாதிக்கு கீழ்கண்ட காரணங்கள் இருந்தா என்ன பரிகாரம்னு பார்ப்போம்:

1.குடி, சூதாட்டம்,லாட்டரி ,கள்ளக்கடத்தல் , வெளி நாட்டு தொடர்பு இத்யாதிகளால் ஏழ்மை.

2 எவனாச்சும்/எவளாச்சும் .புதுசா அறிமுகமாகி அறிமுகமான வாரம் - பத்து நாட்கள்ளயே குல்லா போட்டுட்டு போயிர்ரது.

3.ஈசி மணி மேல கவர்ச்சியோட ஒர்க் அவுட் பண்ணி அசலுக்கு மோசம்.

4.ஒங்க பாடி ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரியோ அ உசிலைமணி மாதிரியோ இருக்கிறது.

5.மேனி நிறம் கருப்புன்னு கூட சொல்லமுடியாம கருப்பும், சிமெண்ட் நிறமும் சேர்ந்தாப்ல மினுமினுக்கிறது.

6.அன்வான்டட் -அன் வாரண்டட் மோஷன்ஸ் - வாமிட்டிங் சென்சேஷன் -ஃபுட் பாய்சன் -மெடிக்கல் ரியாக்சன்.அதனால காசு பணம் க்ஷவரம்

7.சட்டவிரோத செயல்பாடுகளில் தெரிந்தோ தெரியாமலோ லிங்க் அப் ஆயிர்ரது - அதனால ஒளிஞ்சு வாழவேண்டி வந்துர்ரது

8.இதரமதத்தை சேர்ந்தவுக ஆப்படிச்சுர்ரது.அதனால ஏழ்மை .

9.பணம்,காசு கொள்ளை போயிர்ரது -பிக் பாக்கெட் போயிர்ரது -கொடுத்து ஏமாந்துர்ரது.

10.அமாவாசை இருட்ல பவர்கட் சமயம் கூலிங் க்ளாஸ் போட்ட கணக்கா மூளை பஜ்னு ஆயிர்ரது

11.எந்த முயற்சியில இறங்கினாலும் சுத்துவழியே அமையும். பேச்சு கூட சுத்தி வளைச்சே வரும்.பாய்ண்ட் டு பாய்ண்ட்ங்கற பாவத்தே இருக்காது.

12.வேளைக்கு திங்க முடியாது -பகல் எல்லாம் மந்தமா இருக்கும்.ராத்திரியில ஏக சுறு சுறுப்பு

13.எதுலயும் ஒரு விரக்தி - துரோகங்கள் - ஆரும் உங்களை நம்பமாட்டேங்கறாய்ங்க -உங்களாலயும் ஆரையும் நம்ப முடியலை. நம்பினா ஆப்படிச்சுர்ராய்ங்க

14.எங்கிட்டு போனாலும் இன்சல்ட் -அவமானம்

15.வீட்டுக்காரம்மாவுக்கு உங்களுக்கும் எப்பப்பாரு நோய் /முட்டல் மோதல்

இந்தமாதிரி சிம்ப்டம்ஸ் இருந்தா - நீங்க ஏழ்மைய விரட்டி காசு பணம் பார்க்க என்ன பண்ணனும்னு பார்ப்போம்.

மதங்கள்னா ஆயிரத்தெட்டு மதங்கள் இருக்கு.மதங்களின் நோக்கம் மன்சனை லோகாயத வாழ்விலிருந்து ஆன்மீக வாழ்வுக்கு திருப்பறதுதான். மதங்களோட வழிமுறை -நடை முறையில வித்யாசம் இருந்தாலும் டார்கெட் ஒன்னுதேன்.
சிமெண்ட் தயாரிக்க எத்தனையோ ரா மெட்டீரியல்ஸை அதுல சேர்க்கிறாய்ங்க.ஆனால் அந்த ரா மெட்டீரியல்ஸ் எல்லாம் தங்கள் உருவத்தை இழந்து -பவுடராகி கலந்தாதான் சிமெண்ட்.அப்பத்தேன் அதுக்கு வலிமை.
அப்படி எந்த மதமா இருந்தாலும் அதை உண்மையா பின்பற்ற ஆரம்பிச்சுட்டா அதனோட தனித்தன்மைன்னு உலகம் நினைக்கிற சமாசாரம் உட்பட எல்லாமே பழுத்த புளியிலருந்து ஓடு மாதிரி விலகி நிற்கும். ஓட்டால உபயோகம் இருக்காது.புளியிலத்தான் இருக்கு மேட்டரு.
மறுபடி சிமெண்ட் உதாரணத்துக்கே வருவம் . வெறும் சிமெண்ட்டை உபயோகிக்கிறதுல சில சிக்கல்லாம் இருக்கு. அதனாலதேன் அதுல மணலை சேர்த்துக்கறாய்ங்க. சிமென்டுங்கறது ஆன்மீகம்.மணல்ங்கறது தான் சம்பிரதாயங்கள்.
இதுல எது மணல் எதுக்கு மணல் ,எது சிமெண்ட் ,எதுக்கு சிமெண்டுன்னு புரிஞ்சிக்கிட்டா ப்ராப்ளம் ஓவர்.
மதவெறி கொண்டவுக பிற மதத்தினரை மட்டுமில்லை - தங்கள் மதத்தினரை கூட வெறுப்பாய்ங்க. அவிக இதரமதத்தை சேர்ந்தவுகளுக்கு வெறுக்கறது மட்டும் தான் ஃபோக்கஸ் ஆகும்.
மதப்பற்று உள்ளவுக பிறமதத்தினரை மட்டுமில்லை - எல்லா மதத்தினரையும் விரும்புவாய்ங்க.லாஜிக்.
இதே போல மொழி. மொழிங்கறது மோட் ஆஃப் கம்யூனிக்கேஷன் தான். நல்லவன் அன்னிய மொழியில பேசினாலும் நமக்கும் நல்லவனாவே தான் இருப்பான்.கெட்டவன் நம்ம தாய் மொழியிலயே பேசினாலும் நமக்கு ஆப்படிக்காம விடமாட்டான். இதெல்லாம் உபதேசம் கடியாது. அக்மார்க் உண்மை. இதை உணர்ந்து செயல்பட்டால்
யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவுக்காரங்க)
ஆனால் மேற்சொன்ன 1 -15 சிம்ப்டம்ஸ் உள்ளவுகளுக்கு மட்டும் இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை.
லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது.
இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.
விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.
மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ஸ்பெசலிஸ்டையயே பார்த்துருங்க. ரியாக்ஷன் நடக்கலாம்.
வெளியிடத்துல சாப்பிடாதிங்க
கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு)
கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.
பாம்பு வடிவ மோதிரம் அணியவும்.முடிஞ்சா படமெடுத்து நிக்கிற பாம்பு வடிவம். அதனோட கண்களுக்கு பதிலாக வைடூரியம் +கோமேதகம் கற்கள்.
வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

Sunday, May 6, 2012

பிரச்சினை எதுவானாலும் தீர்வு இதோ


அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம் 360 புஸ்தத்தை படிச்சுட்டு நம்ம இஸ்மாயில் சார் ஒரு தூள் ஐடியா கொடுத்தாரு. அதாவது ப்ராப்ளம் பேஸ்ட் அனலைஸ் அண்ட் சொல்யூஷன்.

ராஜமன்ட்ரி கொல்லப்புடி வீராஸ்வாமி அண்ட் கோ வினர் பரிகாரங்கள் பற்றிய நம்ம ஸ்க்ரிப்டை படிச்சுட்டு ஓகே பண்ணாய்ங்க.ஆனாலும் ஃபைனலா வெரிஃபை பண்ணி திருத்தங்களுடன் ஓகே சொல்ல வேண்டிய அவிக ஆஸ்தான வித்வான் டிக்கெட் போட்டுட்டாரா அந்த ப்ராஜெக்ட் ஊத்திக்கிச்சு.

இதை ஏன் இங்கே சொல்றேன்னா அந்த புஸ்த்வத்துல இப்படி ஒரு அத்யாயமே வச்சிருந்தன். தினசரி வாழ்க்கையில சனத்துக்கு பலப்பல பிரச்சினைகள் . கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு கிரகத்தை கேட்ச் பண்ண முடியும் (லாஜிக்) .பிரச்சினை தரக்கூடிய பாவத்தை – கிரகத்தை கேட்ச் பண்ண பிற்காடு பரிகாரம் சொல்றதும் சாத்தியம்தேன்.Read More

Sunday, December 11, 2011

முல்லை பெரியார் அணை - தீர்வு

அண்ணே வணக்கம்ணே !
முல்லை பெரியார் அணை பற்றிய விவாதங்களும் வன்முறையும் - பற்றி எரியுது.அம்மா பாவம் கொட நாடு கூட போகாம சட்டமன்ற சிறப்பு கூட்டம் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க.இன்னைக்கு மன்சங்க முடிவெடுக்க மிஷினுங்க வேலை செய்யுது. மிஷினுங்க முடிவெடுக்க மன்சங்க வேலை செய்யற காலம் வந்தாதான் இந்த நிலைமை மாறும் போல.

ஆருனா சாஃப்ட் வேர் நிபுணர் ஒருத்தரு இந்த மாதிரி பிரச்சினைகளை அக்கு வேறு ஆணி வேறா அனலைஸ் பண்ணி சால்வ் பண்ற சாஃப்ட்வேர் ஒன்னை கண்டுபிடிச்சா நெல்லா இருக்கும். நாம இந்தியா பாக்கிஸ்தான் பற்றி எழுதும் போது ஒரு பாய்ண்ட் சொல்றது வழக்கம்.

கொய்யால ரெண்டு நாட்லயும் பட்டினி இருக்கு ,தீவிரவாதம் இருக்கு,விபசாரம் இருக்கு. இந்த இழவுல என்னாத்த யுத்த முஸ்தீபு -என்னாத்த வீர வசனம். மொதல்ல ரெண்டு நாட்லயும் பட்டினி -தீவிரவாதம்-விபசாரம் ஒழியனும். இதுக்கு மூல காரணம் தேசீய வருமானத்தையும் தங்கள் தலைவருமானத்தையும் உசத்திக்க மக்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகள்ள சமமான பங்கில்லை. அதுல பங்கில்லைங்கறதால தேசீய வருமானம் உசந்தாலும் தலைவருமானம் உசரலை. ஏழ்மை தொடருது.பட்டினி -தீவிரவாதம்-விபசாரத்துக்கெல்லாம் மூல காரணம் ஏழ்மை.

வீரவசனம், யுத்த முஸ்தீபெல்லாம் இந்த பட்டினி -தீவிரவாதம்-விபசாரத்தை அதிகரிக்குமே தவிர ஒரு ம..ரு உபயோகமும் கிடையாது.

இந்தியா பாக் மேட்டர்லயே இதான் நம்ம ஸ்டாண்ட். இந்த பெரியார் அணை வித் இன் இண்டியா பத்தி எரியுது. கேரளா காரவுக உபரியா மின்சாரம் தயாரிக்கத்தேன் புது அணைக்கு அடி போடறாய்ங்கனு கேள்வி.
அடங்கொய்யால ..

இந்த உலக மய ,தாராள மய யுகத்துல மின் தேவைய பூர்த்தி செய்ய எந்த கொம்பனாலயும் முடியாது. நீங்க 10 மெகாவாட்டுக்கு திட்டம் போட்டு அது செயல்பட ஆரம்பிக்கிறதுக்குள்ளாற 1000 மெகாவாட்டுக்கு தேவை ஏற்பட்டு போயிருக்கும்.

மெகா அணைகளை கட்டறதெல்லாம் இந்திர லோகத்துல இருந்து வெள்ளை ஆனைய கொண்டு வந்து கட்டி வச்சு தீனி போட்ட கதைதேன். மேலும் அன்னைக்கிருந்த இஞ்சினியருங்க வேற இன்னைக்கு இருக்கிற "சில்லறை"ங்க வேற.

தப்பித்தவறி ஒழுங்கா கட்ட ஆரம்பிச்சாலும் வனத்துறை அனுமதி - சுற்று சூழல் அனுமதி லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வில்லங்கமிருக்கு.

இதையும் மீறி கட்ட ஆரம்பிச்சாலும் ஊழல்னு ஒரு பூதம் இருக்கு. ஆந்திராவுல ஜலயக்னம் இப்படித்தேன் நாறிக்கிடக்கு.

ஊழலையும் மீறி அணை கட்ட துவங்கினாலும் அது முடியறதுக்குள்ள கட்டுமான செலவு பல ஆயிரம் மடக்கு எகிறிக்கும்.

இதெல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கற கதை. அணை என்ன பட்டா பட்டி அண்டர்வேர் நாடாவா ஒடனே கட்டிக்கிறதுக்கு. இது எப்படியா கொத்த பை.தனம்னு கேரளா காரவுக ரோசிக்கனும்.

நதி நீர் அணைக்கு வந்த பிற்காடு மின்சாரம் தயாரிக்கிறது மாட்டோட வாலை பிடிச்சிக்கிட்டு ஓடற மாதிரி. அந்த நதி நீர் அணைக்கு வந்து சேர்ரதுக்கு மிந்தியே மூக்கணாங்கயிறை பிடிச்சு எங்கெல்லாம் வசதி வாய்ப்பிருக்கோ அங்கெல்லாம் சின்ன சின்ன ஹைட்ரோ பவர் ப்ராஜெக்ட்ஸ் ப்ளான் பண்ணி மின்சாரம் தயாரிக்கலாமே.

இந்த அணை பிசினஸெல்லாம் விட்டுட்டு நதி நீர் இணைப்பின் மீது கவனம் செலுத்தினா அஞ்சு பத்து வருசம் கஷ்டப்பட்டாலும் நீடித்த பலன் இருக்கும்.

ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட்டுங்கறதே மன நோயின் அறிகுறி. நல்லதோ கெட்டதோ ஒப்பந்தம்னு ஒன்னு போட்ட பிறகு அதனோட காலம் முடியற வரை அதுக்கு கட்டுப்பட்டு இருக்கிறதுதான் ஆரோக்கியமான மனதின் அறிகுறி.

இன்னொரு முக்கியமான மேட்டர் எதிர்காலத்துல உலக யுத்தம்னு வந்தா அது தண்ணீக்காகத்தான் வரும்னு சொல்லிவச்சிருக்காய்ங்க. உபரி நீருக்காக -உபரி மின் உற்பத்திக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆப்படிச்சு ஆப்பசைச்ச குரங்கா மாட்டி தவிக்கிறதை விட நீர் வினியோகத்தை ,மின் வினியோகத்தை குறைக்கறதுல கவனம் செலுத்தனும்.

இதை கேரள அரசுக்கு மட்டும் சொல்லலை. தமிழக அரசுக்கும் சேர்த்துதேன் சொல்றேன். 99 வருட ஒப்பந்தம்னா அது என்னைக்கோ ஒரு நாள் காலாவதியாகும். ஆகித்தீரும்.அதுவரை காத்திருக்காம ஆல்ட்டர்னேட்டிவ்ஸை பார்த்துக்கனும்.


இன்னொரு மிக முக்கியமான மேட்டர் இந்த பஞ்சாயத்தை இந்திய கோர்ட்டுகள் ,பாராளுமன்றம்லாம் விசாரிக்கிறதை விட உலக அளவில் பெயர் பெற்ற களங்கமற்ற நிபுணர்கள் குழு தீர்க்கறது பெட்டர் சாய்ஸ்.

Tuesday, November 15, 2011

ஜாதகம் இல்லாதவுக: பிரச்சினையும் தீர்வும்


அண்ணே வணக்கம்ணே!
ரெண்டு நாளைக்கு மிந்தி ஜாதகம் இல்லாதவுக தங்கள் பிரச்சினைகளை வைத்தே அந்த பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ஒரு குன்ஸா தெரிஞ்சுக்க ஒரு பதிவு போட்டோம். நேத்து பிரச்சினைக்கு காரணம்சூரியன்,சந்திரன்,செவ்வாய்னு தெரிஞ்சா செய்துக்கவேண்டிய பரிகார பேக்கேஜையும் தந்திருந்தம்.

இன்னைக்கு உங்க பிரச்சினைக்கு காரணம் ராகு,குரு,சனி,புத,கேது,சுக்கிரன்னு தெரிஞ்சா செய்துக்க வேண்டிய பரிகாரங்களை பதிவா போட்டிருக்கம். Read More

Tuesday, December 14, 2010

பெண்களால் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள்

ஜோதிட ரீதியாக பெண்களை 9 வகையாக பிரித்து அவர்களின் குணாம்சங்கள் என்ன? அவர்களால் எந்தெந்த வகையில் பிரச்சினைகள் வரும் அவற்றிற்கு தீர்வு என்ன என்று விலாவாரியாக சொல்லும் தொடர் (?)  ஒன்றை கவிதை07 வலைப்பூவில் துவக்கியுள்ளேன். அதைப்படிக்க இங்கே  அழுத்தவும்