'>

Wednesday, May 23, 2012

கூகுல் ஆட்சென்ஸ் கிடைச்சுருச்சுங்கோ !


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ட்ராக் மாறாம நேத்து கொடுத்த பிக்சர்ல உள்ள சனத்துக்கு சொல்யூஷன் கொடுத்தே தீர்ரதா முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு மிந்தி கொஞ்சம் மொக்கை.

அனுபவஜோதிடம் டாட் காம் சைட்டுக்கு போனவுக நொந்து போயிருப்பாய்ங்க. மேட்டர் இன்னாடான்னா அல்லாம் இங்கிலீஷு. இதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு.அதான் கூகுல் ஆட்சென்ஸ்.

ஒரு நாள் கூத்துக்கு மீசை வச்ச மாரிதானேன்னு தமிழ் போஸ்டை எல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணிட்டு ப்ளாக்ல இருந்த இங்கிலீஷ் போஸ்டையெல்லாம் கொண்டாந்து போட்டு நிரவி கூகுல் ஆட்சென்ஸுக்கு ரீ சப்மிட் பண்ணேன்.

கொய்யால எந்த அக்ரகாரம் கொளுத்திக்கிட்டு போயிருச்சோ தெரியலை. டெம்ப்ரவரியா அப்ரூவ் பண்ணி ஆட் கோடும் கொடுத்துட்டாய்ங்க. அதனால அமலா பாலை தேடாத சமயத்துலயாச்சும் தமிழ்ப்பாலை தேடி அ.ஜோ சைட்டுக்கு வர்ர சனம் இன்னம் கொஞ்ச நாள் பொறுக்கனும்.

கூகுல் காரவுக இன்னம் டீப்பா ரெவ்யூ பண்ணி அப்ரூவ் பண்ண பிற்காடுதேன் கூகுல் ஆட்ஸ் டிஸ்ப்ளே ஆகும். அது நடந்தாதேன் சில்லறை புரளும். ஆருனா கூகுல் ஆட்சென்ஸ்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவுக டிப்ஸ் கொடுத்தா நல்லாருக்கும். ( டூ அண்ட் டோன்ட்ஸ்) நாம சகட்டுமேனிக்கு ஐட்டம் போட்டு கூகுல் காரன் டிஸ் அப்ரூவ் பண்ணிட்டான்னா கட்டில்ல கிடத்தினதை தொட்டுக்கூட பார்க்காமயே கோட்டை விட்ட்ட கதையா ஆயிரும்.

இன்னைக்கு தலையணை பூக்கள் நாவல்ல ஜெயேந்திரரை பாத்திரமாக்கி ஜல் ஜக் போட்ட பாலகுமாரன் இன்னைய தேதிக்கு மன்னிப்பு கேட்கனுனு ஒரு பதிவை போட்டிருக்கேன்.நம்ம இங்கிலீஷெல்லாம் ஓட்டை. ரெம்ப ஈஸியா புரியும்.தகிரியமா ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கண்ணா

நேத்திக்கு நான் கொடுத்த பிக்சர்ல உள்ளவுக பொருளாதார ரீதியில ரிலீஃப் ஆகனும்னா கீழ்கண்ட பரிகாரம்லாம் செய்துக்கிடனும்.


தாய்மாமன்னு ஆரும் இல்லையா? பிரச்சினையே இல்லை விட்டுருங்க. . இருந்தாலும் அவிகளால சகாயமில்லையா ? விட்டது சனி. அவிக ரெம்ப லொள்ளு பண்றாய்ங்களா? வம்பு வழக்கு வல்லடில்லாம் இருக்கா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை.

1.வசதி இருந்தா நல்ல தரமான வார பத்திரிக்கைகளை வாங்கி (படிக்காட்டாலும் நல்லதே) படிக்கிறவுகளுக்கு ஓசி கொடுங்க

2.அக்கம்பக்கத்துல ஏழை பிள்ளைங்க இருந்தா அவிகளுக்கு ஸ்லேட்டு ,பல்ப்பம், நோட்டு ,புஸ்தவம்,பேனா பென்சில்னு வாங்கி கொடுங்க

3. கெட்டுப்போன சொந்தக்காரனோ , ஃப்ரெண்டோ மெடிசின் வாங்க காசில்லாம தவிக்கிறானா உதவுங்க


உங்களுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை இருக்கா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை

எச்சரிக்கை:

1.தோல் பிரச்சினை இருந்தா முடிஞ்சவரை அப்டியே விட்டுருங்க. ரெம்ப இமிசையா இருந்தா இயற்கை வைத்தியம் ட்ரை பண்ணுங்க. (உண்ணாவிரதம் - புத்து மண்ணை உரசி போடறது -மண் குளியல் எட்செட் ரா) இதுக்கு வழியில்லையா ? சித்தா,ஆயுர்வேதம்,ஹோமியோ பதின்னு கதை பண்ணிக்கிட்டிருங்க/ இங்கிலீஷ் மெடிசினுக்கு மட்டும் போகாதிங்க. அது அமுக்கிரும் -கிளப்பி விட்டுரும் -உசுருக்கே ஆபத்தாயிரும். # லாஜிக்

2.கீல் பிரச்சினை இருந்தா அதுக்கு என்ன காரணம்னு பார்த்து அதுக்கு ட்ரீட் பண்ணுங்க. பெயின் கில்லர்ஸுக்கு அடிக்ட் ஆயிராதிங்க.

3.அண்டம் தொடர்பான பிரச்சினை இருந்தா - லாஜிக்கலா ரோசிச்சு சர்ஜரி அது இதுன்னு போங்க. அவசரப்படாதிங்க.


பரிகாரம்:
1.தூது போற வேலை வேண்டாம் ( அதுவும் லாபம் கருதின்னா வேண்டவே வேண்டாம்)

2.பொயப்புக்கு தேவையில்லாத மேட்டரை தெரிஞ்சுக்க கூட நினைக்காதிங்க

3.பொளப்பா இருந்தா தவிர தினசரிகளை லெஃப்ட் ஹேண்ட்ல கூட தொடாதிங்க .கம்ப்யூட்டருக்கு தடா. நெட்டுக்கு பொடா

4.ஓய்வு நேரத்துல போஸ்ட் ஆஃபீஸ்/ தாசில்தார் ஆஃபீஸுன்னு போயி ஏழை மக்களுக்கு மனு எழுதிக் கொடுங்க.

5.புல்லாங்குழல் ஊதாத கண்ணனோட படத்தை வீட்ல வச்சு துளசி மாலை போட்டு பூஜை பண்ணுங்க. துளசி ஃப்ரெஷா இருக்கும் போதே அதை தண்ணில போட்டு கொதிக்க வச்சு குடிங்க. ( நன்னா அலம்பிட்டு)

6.வசதி இருந்தா நாமம் போட்ட சாமிகளோட நாமாவளி/ ஸ்லோகங்களை பாக்கெட் புஸ்தவமா போட்டு இலவசமா டிஸ்ட் ரிப்யூட் பண்ணுங்க


படிப்பு ? சொல்லிக்கிறாப்ல இல்லை.அதுலயும் கணக்குன்னாலே மைண்ட் ப்ளாக் ஆயிருது. ஃபிசிக்ஸ் ,கெமிஸ்டரின்னா கண்ணை கட்டுது. ஒரு சாதாரண லெட்டர் எளுதனும்னா கூட அடிச்சு திருத்திதான் எளுத வேண்டியதா கீது. - இதான் உங்க நிலைமையா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை.

1.பச்சை நிற ஆடை அணிகலன் நிறைய யூஸ் பண்ணுங்க. புஸ்தவங்களுக்கு பச்சை நிறத்துலயே அட்டை போட்டு வச்சுக்கங்க . ரைட்டிங் பேட் / கம்ப்யூட்டர் டேபிள் எல்லாமே பச்சை .

2.படிக்கிறச்ச வடக்கு மூலையிலயோ வடக்கை பார்த்தோ உட்காராதிங்க. சரும வியாதி ,அண்ட வியாதி, கீல் வாதம் உள்ள ஏழைகளுக்கு முடிஞ்ச உதவியை செய்ங்க

3.பெருமாள் பேர் கொண்டவுக ,வைசிய பிள்ளைங்க டச்சுல இருந்தா அவிகளுக்கு சின்ன சின்ன குறிப்பு நோட்டுகளை இலவசமா கொடுங்க (ஸ்பைரல்)


ஐ.டி,கம்ப்யூட்டர், மெடிசின்,அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங், போஸ்டல், கூரியர்,கமிஷன் ஏஜென்ஸி,டீலர்ஷிப் ,மீடியேஷன் இப்படி எந்த லைன்ல போனாலும் முட்டு சந்துல தான் போய்விடுது. ஆரு மூலமாவாச்சும் ஆருக்காச்சும் எதுனா மெசேஜ் கொடுத்தா தப்பாவே போய் சேருது. ஆரை பிடிக்க ஆரை அணுகனுங்கற டெக்னிக்கே கைவரமாட்டேங்குது. இதான் உங்க நிலையா? அப்பம் பரிகாரம் நிச்சயம் தேவை

லெஃப்ட் ஸ்மால் ஃபிங்கர்ல மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும். இதுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்திருக்கிற எல்லா பரிகாரங்களையும் பின்பற்றவும். இனம் இனத்தோடு சேருங்கறாப்ல இதே பிரச்சினை உள்ளவுக உங்க க்ரூப்ல நாலஞ்சு பேரு இருந்தா நாலு பேரும் ப்ளான் பண்ணி நான் சொல்லியிருக்கிற எம்.ஜி.ஆர் வேலைகளை செய்யலாம்.

பைசாவை கண்ல பார்க்க முடியலை . கொடுக்க வேண்டியதை ஆருகிட்டனா கொடுத்தனுப்பினா போய் சேரமாட்டேங்குது. சரியான விலாசத்தை எழுதி அனுப்பினாலும் லெட்டர் என்ன இ மெயில் கூட டெலிவரி ஆகமாட்டேங்குது.

No comments: