'>
Showing posts with label Horoscope. Show all posts
Showing posts with label Horoscope. Show all posts

Wednesday, February 22, 2012

லக்னாதிபதி - ஒரு க்ளோசப் லக்னாதிபதி - ஒரு க்ளோசப்



ஜாதகத்துல லக்னம் ,லக்னாதிபதி பொசிஷன் ரெம்ப முக்கியம். லக்னாதிபதி எந்த நிலையில இருந்தா என்ன பலன்னு இப்ப பார்ப்போம்.

லக்னாதிபதி உச்சமானால்:

சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்- திருமண வாழ்வு ஃபணால்

லக்னாதிபதி நீசம்:

இதன் பலனாக ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னாதிபதி கடைக்கால் மாதிரி .6 அடி ஆழத்துக்கு போடவேண்டிய கடைக்காலை 3 அடியில முடிச்சிட்டா
Read More

Friday, February 10, 2012

யோகங்களின் மறுபக்கம்

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடம் 360 வேலைகள் ஒரு வழியா முடிஞ்சது. ரொட்டீன் லைஃபுக்கு வந்துட்டன். இன்னைக்கு எடுத்துக்க வேண்டிய மேட்டர் கில்மா கனவுகள். இத்தீனி நாள் வண்டி ஓடாம இருந்ததால கொஞ்சம் அதிகமாவே சத்தம் போடுது.

இந்த சந்தர்ப்பத்துல கில்மா மேட்டருக்கு போனா ரெம்ப மொக்கையாயிரும்.ஏன்னா அதெல்லாம் எந்த புஸ்தவத்துலயும் இருக்காது.

நம்ம சொந்த அருள் வாக்கு. அதுக்கு ஒரு மூட் இருக்கனும். இப்பம் அதில்லை. அதனாலதேன் இன்னைக்கு யோகங்களின் மறுபக்கம்


பவர் ஃபுல் ஃப்ளட் லைட்டை ஆன் பண்ணா வெளிச்சம் மட்டும் வராது .. அனலுக்கு முகத்துல வேர்வையும் ஆறா வரும். அதே சமயம் அந்த லைட்டுக்கு பின்னாடி அமாவாசை கணக்கா இருட்டும் இருக்கும்.

ஒளுங்கு மரியாதையா ஒர்க் அவுட் ஆகிற யோகமே இந்த கதி.. இன்னம் அரை குறை யோகம்லாம் இன்னா மேரி சைட் எஃபெக்ட் பண்ணும்னு இப்ப பார்ப்போம்.

அ நபாயோகம்:
சந்திரனுக்கு 12 ஆவது ராசியில் ராகு கேதுக்களை தவிர இதர கிரகங்கள் இருப்பது

பலன் : நல்ல ஆரோக்கியம் ,பெயர் புகழ்

அதியோகம்:
சந்திரனுக்கு 6,7,8 வீடுகளில் சுபர்கள் ஒன்றாகவோ தனித்தனியாகவோ இருப்பது.
பலன்: உயர்ந்த உத்யோகம், போலீஸ் முதலான துறைகளில் ஈடுபடுவர்,பண வசதி ,பெயர் புகழ்

(இதே ஐட்டம் லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆனா லக்னாதி யோகம்னு பேராம்)

அஷ்ட லட்சுமி யோகம்:
ராகு 6 ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பது

பலன்: அனைத்து சுகம்,சந்தோஷம்

அகண்ட சாம்ராஜ்ய யோகம்:

2,9 அல்லது 11 க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று குரு 5 க்கோ அ பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகம்

பலன்: தீர்காயுள் ,பணவசதி,பெயர் புகழ்

சுபகிரகங்கள் 3,6,10,11 வீடுகளில் இருப்பது

பலன்:பெரும் உத்யோகம் பெயர் புகழ்

விபரீத ராஜயோகம்:

6,8,12 அதிபதிகள் கூடியோ /தனித்தோ இதே ராசிகளில் இருப்பது. ஏழையும் செல்வசீமானாவார்.ராஜயோகம் ஏற்படும்

நீசபங்க ராஜயோகம்:

ஒரு கிரகம் நின்ற ராசி அதற்கு நீச வீடாகி - அந்த ராசிக்குரிய கிரகம் தன் ஆட்சி உச்ச வீட்டில் அல்லது லக்னம் /ராசிக்கு கேந்திரத்தில் இருப்பது.

பலன்: திடீர் தனயோகம் , பெயர் புகழ்

இதான் டேட்டா.. இதை உடனே டைரியில எழுதிக்கிராதிங்க. இதெல்லாம் எந்த அளவுக்கு பொதுப்படையான விதிகள்னா .. வேணா கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் வருது . நாம அம்பேல் .

நாளைக்கு மேற்சொன்ன கிரக ஸ்திதிகள் யோகத்தை தருமா ? (இப்பமே சொல்றேன் ஒரு ..மயி..ம் தராது. (தந்தாலும் ஒன்னு ரெண்டு லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆனா சாஸ்தி)

மேற்சொன்ன கிரகஸ்திதிகளால் ஜாதகர் எந்தளவுக்கு டர்ராகி நாறிருவாருன்னு சொல்றேன்.

உடுங்க ஜூட்

Thursday, June 23, 2011

2011 சனிப்பெயர்ச்சி பலன்



இந்த ஆண்டு இறுதியில் சனி கன்னியிலிருந்து துலாவுக்கு பெயர்கிறார்.அதுவரை கன்னியில் உள்ள சனி தரும் பொதுப்பலனையும் - மேஷம் முதலான 12 ராசிக்காரர்களுக்கு நடைபெற கூடிய பலனையும் பார்ப்போம்



என்ன இன்னம் 6 மாசம்தானே இருக்கு இதுக்கு ஒரு பதிவு தேவையான்னு சலிச்சுக்காதிங்க பரீட்சைக்கு வருசம் முழுக்கவா படிக்கிறோம். கடேசி 3 மாசத்துல படிச்சு கிழிச்சுரலை. அதே மாதிரிதான் இதுவும். விவரம் புரியாம சனிப்பெயர்ச்சி காலத்தை வீணடிச்சுட்டவுக இந்த ஆறுமாசம் ஒரு பிடி பிடிச்சா போதும் தூள் பண்ணலாம்.  என்ன பதிவுக்கு போயிரலாமா?

Read More

Saturday, May 28, 2011

ரஜினி நலம் பெற நறுக் பரிகாரம்

பார்ட்டி ஹேல் அண்ட் ஹெல்த்தியா இருக்கிறப்பயே ஃபுட் பாய்சன்,  நுரையீரல், சிறு நீரக பாதிப்பு இத்யாதியை முன் கூட்டியே கணிச்சு தெரிவிச்ச பதிவின் முக்கிய பகுதிகளை மறுபடி இங்கே தரேன். இன்னைக்கு நடந்துக்கிட்டிருக்கிறதை அன்னைக்கே ஐ மீன் 2011,பிப்ரவரி 28 ஆம் தேதியே கரீட்டா கணிச்ச தில்லு தந்த தில்லால  ரஜினி நலம் பெற சில நறுக் பரிகாரங்களை இங்கே தர்ரேன்.

தொடர்ந்து படிக்க

Thursday, April 7, 2011

சுதேசி மாத இதழ்ல ஜெ,கலைஞர்,சோனியா,ராகுல் ஜாதக அலசல்


அண்ணே வணக்கம்ணே !
சுதேசி மாத இதழ்ல ஜெ,கலைஞர்,சோனியா,ராகுல் குறித்த நம்ம ஜாதக அலசல் வெளி வரப்போகுதுன்னு சொல்லியிருந்தேன். அது வந்தே உட்டுது. நம்ம டவுசர் பாண்டி தான் முதல்ல பார்த்து தகவல் தந்தாரு. சுதேசி வலைதளத்துல அவிக ஒட்டு மொத்த இதழையும் பி.டி.எஃப் ஃபைலா வச்சிருக்காய்ங்க. இங்கே அழுத்தி ஃப்ரீயா டவுன் லோட் பண்ணிக்கலாம். ரைட் சைட் அரியணையில் அரங்க நாயகி தலைப்புள்ள ஃபைலை டவுன் லோட்பண்ணுங்க.
( ஹும்.. பதிவு போட நேரமில்லாத குறைக்கு என்னெல்லாம் கிம்மிக் செய்ய வேண்டி வருது)

Wednesday, March 23, 2011

உங்கள் குருவும் - முற்பிறவி ரகசியங்களும்

 நம்ம ஜாதகப்படி நமக்கு குருவா வரக்கூடியவர் யாரா இருக்கக்கூடும்னு முன் கூட்டியே தெரிஞ்சுவச்சுக்கிட்டா எவ்ளோ நல்லாருக்கும். பாடாவதி பத்திரிக்கைகள்ள ஸ்பான்சர்ட் ஃபீச்சர்ஸை பார்த்து விளம்பரங்களை பார்த்து கல்கி கிட்டே போய் போதை ஊசி, நித்யானந்தா கிட்டே போய் "பலான ஆராய்ச்சி"க்கு உதவினு அல்லாடாம அசால்ட்டா ஆன்மீக கடல்ல குதிச்சுரலாமே.

நேத்து மரணம் என் ஆசான்ங்கற பதிவுல இந்த டீட்டெயிலை நாளைக்கு தரேனு சொல்லியிருந்தேன். அதுக்காகத்தேன் இந்த பதிவு. தொடர்ந்து படிக்க

Tuesday, March 22, 2011

மரணம் என் ஆசான்


ஜாதகசக்கரத்துல ஒன்பதாவது இடம் அப்பவை மட்டுமில்லை. குருவை கூட காட்டுது. ஐ மீன் எப்படி ஃபிகரை கரெக்ட் பண்றதுனு கத்துக்கொடுத்த குருவை இல்லிங்கண்ணா. குருவை ஆசான் என்றும் சொல்றோம். ஆசான் என்ற இந்தி  வார்த்தைக்கு  ஈசினு அர்த்தம். கடினமான மேட்டரை எளிமையாக்கி தர்ரவுகளை ஆசான் என்று சொல்வது பொருத்தம் தானே. மேலும் படிக்க

Tuesday, February 15, 2011

2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு கவிழும்?

2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு ஆட்டம் காணும்
மொதல்ல இந்த பதிவுக்கு இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகம்னுதான் தலைப்பு வச்சேன். அப்பாறம் ஆதித்தனார் எழுத்தாளர் கையேடு மாதிரி கடைசில உள்ளதை தூக்கி டாப்ல கொண்டு வந்தேன்.

நான் வைக்க நினைச்ச தலைப்பு 100% கரீட். இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகமா இருக்கு. இதுக்கும் அவாளோட சதிதான் காரணம். விஐபிங்களுக்கு சின்ன வீட்டை கர்பப்படுத்தறதுக்கு கூட பக்காவா டைம் வச்சு கொடுக்கிற அவாள் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க குறிச்சுக்கொடுத்த டைம் இருக்கே . வயிறு எரியுதுங்க.

லக்னம் ரிஷபம்:
ரிஷப லக்னம் ராசி சக்கரத்துல ரெண்டாவது ராசி. இதனோட குணம் என்னன்னா சுருக்கமா சொன்னா செக்கு மாடு. நம்ம தலைவருங்க நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு போகாம இருக்க காரணம் இதான். நம்ம நாடு செக்கு மாடாட்டம் ஒரே வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வரவும் , அசலான பிரச்சினையை விட்டுட்டு ஜல்லியடிக்கவும் இதான் காரணம். மேலும் தங்களோட செல்வம்,செல்வாக்கு,சொல்வாக்கு,
பணம், குடும்பம்னு அவிக இருக்கவும் இதான் காரணம்.நம்ம தலைவருங்க உசரு போற நேரத்துல கூட "விகட வினோத பரிகாச பிரசங்க பிரியர்களா" இருக்க காரணம் இதான்.

இது ஸ்திர ராசி. தாளி இஞ்சி முரபா விக்கறதுக்கு கூட சரலக்னமா பார்த்து வையின்னு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் இவ்ளோ பெரிய எஸ்டாப்ளிஷ்மெண்டுக்கு ஸ்திர லக்னத்தை வச்சிருக்கானுவ.

ராசிய பாருங்ககடகம். இதனோட அதிபதி யாரு சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறுவாரு. 24 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திரம் மாறுவாரு. 6 மணிக்கொருதரம் பாதம் மாறுவாரு. 15 நாள் வளர்பிறை, 15 நாள் தேய் பிறை. இந்த ராசிக்காரவுகளுக்குனு ஒரு "சுயம்" இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளைகள்னா அது இந்த ராசிக்கரவுகதான்.


ரஷ்யா இருந்தவரை அவிக அழிச்சாட்டியத்துக்கெல்லாம் சால்ரா போட்டுக்கிட்டிருந்தம். இப்ப அமெரிக்கா.
சரி இதுவாச்சும் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். சனத்தொகை படபடனு எகிறுது (ரிசபத்துக்கு அதிபதி சுக்கிரன் - கில்மாவுக்கு இவர் தான் அதிபதி) உலகம் போற போக்குல இன்னைக்கும் ஒரு சமயம் இல்லாட்டியும் ஒரு சமயம் சென்டிமென்ட் பார்க்கிற சனம் இந்தியாவுலதான் இருக்காய்ங்கனு ஆறுதல் பட்டுக்கலாம்.

லக்னத்தை பாருங்க ராகு -ஏழைப்பாருங்க கேது. ராகு கேதுக்களிடையில எல்லா கிரகமும் சிக்கி பிதுங்கிக்கிட்டிருக்கு. இதனோட பலன் என்னடான்னா 45 வருசம் வரை சொல்லிக்கிறா மாதிரி டெவலப் மென்டே இருக்காது. மேலும் ஊழல்வாதிகள் + சாமியார்களிடையில நாடாள்வோரும், நாடும், நாட்டு மக்களும் சிக்கி சீரழியனும்.( ஞா இருக்கா திரேந்திர பிரம்மச்சாரி, சந்திராசாமி)

ஜோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவன் கூட இந்த மாதிரி ஒரு நேரத்தை ரெக்கமெண்ட் பண்ணமாட்டான். நேரு மாமாவுக்கு நாள் குறிச்சு கொடுத்த பன்னாடை பரதேசி ஆருனு விசாரிக்கனும்ணே.

சரி லக்னமும் - (சொந்த பலம்) ஏழாமிடமும் ( நட்பு நாடுகள்) தான் நாறிப்போச்சு . ரஷ்யா சிதறிப்போகவும் அமெரிக்கா இப்படி அல்லாடவும் நம்ம சங்காத்தமும் ஒரு காரணமுங்கோ.

லக்ன,சப்தமாதிபதிகளாவது பலம் பெற்று உருப்பட வைக்கிற நிலைல இருக்காய்ங்களானு பார்த்தா லக்னாதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்து( சத்ரு ரோகம் ருணம்) ஆதிபத்யமும் பெற்று 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தாரு.ஆறுன்னா கடன் ..தீராக்கடன். எதிரி (பாக்,சீனா, அட நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்த வங்காளம் கூட தாலியறுக்குதே)

3ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம். (இங்கன சுக்கிரன் நின்னதாலதான் நாடு பத்தி எரியறச்ச கூட மன்மோகன் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் லக்சரியா உலகம் சுத்தபோறாருபோல) இங்கன லக்னாதிபதி நின்னா என்னாகும்? மேலும் அது சுக்கிரங்கறதால சாப்பிடற சோறு, கட்டற துணி,இருக்கிற ஊட்டுக்கும் கூட சனம் அல்லாடவேண்டியதுதேன்.

காலம் காலமா நிலை கொண்ட ஏழ்மை, உணவு தானிய பற்றாக்குறைக்கும், சமீப காலமா பெருகி வரும் ஆண்மையின்மை,செக்ஸ் குற்றங்கள்,பெண்கள் மீதான வன்கொடுமை ,பெண் சிசுக்கொலை இத்யாதிக்கும் இதான் காரணம்.

லக்னாதிபதியான சுக்கிரனோட ஆரெல்லாம் சேர்ந்தாய்ங்கனு பாருங்க. கண்ல ரத்தம் வரும்:

சந்திரன்:
நம்ம நாடு சுதந்திரம் வந்து 63 வருஷம் முடிஞ்சும் அன்னாடங்காய்ச்சியாவே இருக்கவும் எழுவதும்,விழுவதுமா இருக்கவும் இந்த கிரகசேர்க்கை தான் காரணம். ஆறுதல் என்னன்னா ஒரு 15 வருஷம் ஸ்டெபிலிட்டி, நல்ல வளர்ச்சி இருக்கும், அடுத்த 15 வருஷம் இன்ஸ்டெபிலிட்டி, தேக்கம் இருக்கும்.நம்ம தலைவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இருக்கவும் இதான் காரணம். கடல் வழியா வந்து மும்பை தாஜ் ஹோட்டலை தாக்கற அளவுக்கு கொண்டு போனது இந்த கிரக நிலைதான்.

சூரியன்:
இவர் வீர , தீரத்தை தந்தாலும் இவர் நான்காமிடத்துக்கு அதிபதியாக உள்ளதால நம்ம தலைவருங்க நாட்டை பார்த்துக்கறதை விட தங்களோட வீட்டைத்தான் பார்க்கிறாய்ங்க. (4- வீடு) லக்சரியா பயணம் போகவும், ஏற்கெனவே பளபளக்கும் தங்கள் வீட்டை அரசு நிதி கொண்டு "மராமத்து"பண்ணிக்கிறதுலயும் , விமானபயணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாகன வசதிகளை ஏற்படுத்திக்கிறதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு கடமைய கோட்டை விட்டுர்ராய்ங்க. நம்ம நாடு வீரத்தை காட்டினா ஏழை இந்தியனோட ஓட்டைக்கூரையும் பொத்தலாயிருமுங்கோ. அரைப்பட்டினி முழுப்பட்டினி ஆயிரும்.

புதன்:
இவர் 2/5க்கு அதிபதி 3ல் மாட்டினாரு. ரெண்டுன்னா ரெவின்யூ இன் கம், அஞ்சுன்னா இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி. 3ன்னா பயணம் போறது. பாருங்க நம்ம காசு பணம்லாம் பயணம் போயிருச்சு. நம்ம இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டியெல்லாம் கடல் கடந்து போயி அவிகளுக்கு பொருளீட்டி கொடுக்குது.
புதன்னா கல்வி,மருத்துவம், தொலைதொடர்பு (இதையும் விளக்கனுமா என்ன?)

அடுத்து ரெண்டாவது இடத்தை பாருங்க சப்தமாதிபதி ( நட்பு நாடுகள்) விரயாதிபத்யம் பெற்று ( வேறென்ன ஆப்புதேன்) இங்கு உட்கார்ந்தாரு. அதுவும் ஆரு? செவ்வாய். பாக்கிஸ்தான் பங்காளி நாடு (செவ் -சகோதரகாரகன்) ஆப்பு வைக்கவும் சீனாக்காரன் "இந்தோ சீனா பாய் பாய்னிக்கிட்டேதானே ஆப்பு வச்சதுக்கும் இதான் காரணம்.

உள்ளார்ந்த ஒற்றுமை குலையவும், ஒரு மொழி காரன் இன்னொரு மொழிகாரனோட - இந்த ஸ்டேட்டு
அடுத்த ஸ்டேட்டோட வெட்டி மடிய இதான் காரணம்.

இன்னம் இங்கன ஆரிருக்கானு பார்த்தா சனி. ரிஷபலக்னத்துக்கு யோககாரகனான சனி மாரகஸ்தானங்கற 3ஆவது இடத்துல மாட்டினாரு.இத்தீனி ஓட்டையிருந்தும் இந்தியா சிதறாம இருக்க காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.

அஷ்டமாதிபதியான குரு சத்ரு ரோகஸ்தானத்துல உட்கார்ந்தாரு. இவர் மட்டும் இங்கே இல்லேன்னா துண்டு துண்டா பீஸ் பீஸா சிதறிப்போயிருக்கும்.

நம்ம நாட்டை இன்னைக்கு ஒரு விதேசி ஆளவு 1-7ல இருக்கிற ராகு கேது தான் காரணம்.அதுவும் ராகுன்னா விடோயருனு அர்த்தம்.

நம்ம நாட்டை அதிக காலம் ஆண்டவுக எல்லாம் ஒன்னு வெஸ்டர்ன் ஸ்டைல் (நேரு,ராஜீவ்), அல்லது விடோயர்ஸ்/ பேச்சிலர் தான் .இதுக்கு காரணம் கூட 1-7ல இருக்கிற ராகு கேது தான்.

ஆன கண்ணாலத்துக்கு ஆர்கெஸ்ட்ரா எதுக்கு? எதிர்காலம் எப்படி இருக்கும்னு கேப்பிக. சொல்றேன்.

இப்ப 03/Nov/2010 => முதல் 27/Sep/2011 வரை சூரிய தசை ராகு புக்தி நடக்குது. ஆட்சியாளர்களுக்கு கெண்டம்தேன். அரசாங்கம்னு ஒன்னிருக்கானு நினைக்கிறாப்ல ஊழல்வாதிகளும், விதேசிகளும் தூள் கிளப்புவாய்ங்க.

அடுத்து வரப்போற குரு புக்திதான் ஒரு நல்ல அரசை அமைக்கனும். அது 27/Sep/2011 => முதல் 15/Jul/2012 வரைதான் நடக்கும். அப்பாறம் மறுபடி சனிபுக்தி மாட்டிக்குது. அரசு திண்டாட வேண்டியதுதான். இந்த சந்தடில தலித் அமைப்புகள், தொழிலாளர் யூனியன்கள், கம்யூனிஸ்டுகளோட பிராபல்யம் அதிகமாகலாம்.

சூரியதசை முழுக்க (09/Sep/2009 முதல் 09/Sep/2015 )அல்லாட்டமாதான் இருக்கும் அடுத்து வர்ர சந்திர தசையும் (09/Sep/2015 முதல் 08/Sep/2025) ஒன்னும் கழட்டற மாதிரி தோனலை.

2011, மே 8 ஆம் தேதி ராசிக்கு பத்துல குரு வர்ராரு. இப்ப ஆள்றவுகளுக்கு பதவி பறிபோகலாம்.

எச்சரிக்கை:
ஆமாம் முருகேசன் பரிகாரம் அதுஇதுன்னு அவுத்துவிடறிங்களே நம்ம நாட்டை காப்பாத்த எதுனா பரிகாரம் வச்சிருக்கிங்களானு கேப்பிக. சொல்றேன்.அடுத்த பதிவுல.

Monday, February 14, 2011

குரு பெயர்ச்சி பலன்கள் 2011


அண்ணே வணக்கம்ணே,

நான் எழுதின 2010 குரு பெயர்ச்சி பலன்களுக்கு 15 ஆயிரத்துக்கு மேல ஹிட்ஸ் கிடைச்சிருக்கு. கோசார பலனோட எஃபெக்ட் 20 முதல் 30% . கோசார பலன் வேலை செய்யுதுன்னா உங்க ஜாதகத்துல தாக்கத் இல்லேனு அர்த்தம். உங்க ஜாதகம் தேன் காரு. தசாபுக்தி ரோடு. அப்ப கோசாரம்? முன்னே அடிக்கிற காத்துனு வேணா வச்சுக்கலாம்.

இதையெல்லாம் சொன்னா கேட்டுக்கவா போறிங்க? எத்தீனி பத்திரிக்கையில எத்தீனி விதமா பலன் போட்டாலும் அல்லாத்தையும் ஒரு தாட்டி புரட்டத்தான் போறிங்க.


அது சரிப்பா எங்கேப்பா குருபெயர்ச்சி பலனுன்னு நீங்க துடிக்கிறது தெரியுது.நம்ம சைட்டு போனியாகாம கிடக்கு. அதனால பலனை நம்ம சைட்ல போட்டேன். இங்கே அழுத்தி படிச்சுருங்கண்ணா.

Saturday, February 12, 2011

இந்தியா - ஒரு எண் கணித பார்வை

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தேதி 15/08/1947. இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 6 வரும். இதன் அதிபதி சுக்கிரன்.(பிறப்பு எண்) தேதி,மாதம்,ஆண்டுகளில் உள்ள இலக்கங்கள் எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 8 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சனி.

நம் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது 26/01/1950 . இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 8 வரும்.(பிறப்பு எண்) இதற்கு அதிபதி சனி.தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 6 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சுக்கிரன்.

ஆக‌ எண்க‌ணித‌ப்ப‌டி ந‌ம் நாடு சுக்கிர‌ன்,ச‌னி ஆதிக்க‌த்தில் உள்ள‌து.

ஜோதிட‌ விதிப்ப‌டி ச‌னியும் சுக்கிர‌னும் ந‌ட்பு கிர‌க‌ங்க‌ளே. ஆன‌ல் ச‌ற்றே ஆழ‌மாக‌ யோசித்தால் இதுவே இந்தியாவின் முன்னேற்ற‌த்தை முட‌க்கியுள்ள‌து என்று ஆணித்த‌ர‌மாக‌ கூற‌லாம். கார‌ண‌ம், ச‌னி ஏழ்மை,ப‌சி,ப‌ட்டினி,தாம‌த‌ம்,கூலிக்கு மார‌டித்த‌ல்,ஏழை ம‌க்க‌ளை இம்சித்து பொருளீட்டுத‌ல்,முதிய‌வ‌ர்க‌ள் அங்க‌ஹீன‌முள்ள்வ‌ர்க‌ளை காட்டும் கிர‌க‌மாகும்.

முட்டிவ‌லியால் அவ‌ஸ்தைப் ப‌ட்ட‌ வாஜ்பாயி,தொண்டு கிழ‌மான‌ பி.வி.ந‌ர‌சிம்ம‌ ராவ்,ஒட்டிய‌ முக‌ம் கொண்ட‌ சோனியா ,எல்லோருமே ச‌னியின் தூதுவ‌ர்க‌ள்தான். இவ‌ர்க‌ளின் தாம‌ஸ‌ புத்தியாலும்,கூலிக்கு மார‌டிக்கும் எண்ண‌த்தாலும் ஏழ்மை அதிக‌ரித்த‌து.

க‌லை உள்ள‌ம் கொண்ட‌ நேரு, இள‌மை தோற்ற‌ம் கொண்ட‌ இந்திரா,ஓவிய‌ரான‌ வி.பி.சிங் எல்லாம் சுக்கிர‌னின் தூதுவ‌ர்க‌ள் . இவ‌ர்க‌ளின் ஆட்சி ச‌னியின் த‌டைக‌ளையும் மிறி ஓர‌ள‌வேனும் ஏழை ம‌க்க‌ளின் உண‌வு,உடை,இருப்பிட‌ம் (சுக்கிர‌னின் ஆதிப‌த்ய‌ம் உள்ள‌) ஆகிய‌ விஷ‌ய‌ங்க‌ளில் அக்க‌றையுட‌ன் ந‌ட‌ந்த‌து.

சுக்கிர‌ன் காத‌ல், சிற்றின்ப‌ங்க‌ளின் மீதான‌ நாட்ட‌த்தை அதிக‌ரிப்ப‌தால் தான் நேருவுக்கும், லேடி மவுண்ட் பேட்ட‌ன் இடையில் காத‌ல், இந்திராவின், ராஜீவின் காத‌ல் திரும‌ண‌ம் ஆகிய‌ன‌ ந‌ட‌ந்த‌தோடு , ராகுல் கதையும் அதே ட்ராக்கில் போகிறது.

ம‌க்க‌ள் தொகையும் பெரும‌ள‌வில் அதிக‌ரித்து வ‌ருகிற‌து. ம‌த்திய‌ அர‌சாங்க‌ முடிவுக‌ளில் பெண்ணான‌ சோனியாவின் ஆதிக்க‌ம் தொட‌ர்ந்து வ‌ருகிற‌து.

சுக்கிர‌ன் என்றால் கூட்டுற‌வு. ச‌னி என்றால் விவ‌சாய‌ம். கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும்.அதிலும் விவ‌சாய‌ கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு ச‌ம‌மான‌ இட‌ம் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும்.மேலும் பூக்க‌ள்,ப‌ழ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ உற்ப‌த்தியில் க‌வ‌ன‌ம் செலுத்தினால் ச‌னி,சுக்கிர‌ தொட‌ர்பினால் ஏற்ப‌ட்ட‌ முன்னேற்ற‌ த‌டைக‌ள் வில‌கி சுக்கிர‌னின் ஆதிக்க‌த்திற்குட்ப‌ட்ட‌ உண‌வு,உடை,இருப்பிட‌ம் ஆகிய‌ன‌ எல்லோருக்கும் கிடைக்கும். அதோடு ம‌க்க‌ள் தொகை பெருக்க‌மும் க‌ட்டுப் ப‌டுத்த‌ப்ப‌டும்.இது ஜோதிட‌ ரீதியில் ம‌ட்டும் அல்ல‌ விஞ்ஞான‌ முறைப்ப‌டியும் சாத்திய‌மே.

இதை .. இந்த கனவை நனவாக்க ஒரு திட்டம் தீட்டி அதன் அமலுக்கும் பிரச்சாரத்துக்கும் உழைத்துவருகிறேன். அது குறித்த முழு விவரங்களை அறிய இங்கே அழுத்துங்கள்

Tuesday, February 8, 2011

செவ்வாயும் கில்மாவும்



இன்னாபா இது யுத்தகிரகத்தை போயி கில்மாவோட அநியாயத்துக்கு சேர்க்கிறேனு உ.வ பட்டுராதிங்க. பல யுத்தங்கள் வரதுக்கு கில்மாதான் காரணமா இருந்திருக்கு. யுத்தத்துல வேற்றி கிடைச்சாச்சுன்னா கில்மாவுக்கு குறைவே இருக்காது.

செவ்வாய்னா ரத்தம். பலான இடத்துக்கு ரேப்பிட் ஃபோர்ஸ் மாதிரி ரத்தம் பாயலைன்னா அதை அல்பசங்கியைக்கு மட்டும் தான் உபயோகிக்கமுடியும்.

ஆண்,பெண்கள் சுய இன்பம் இத்யாதியில் இறங்காம, பெண்கள் சாகசங்கள் புரியாம இருந்தா முதல் உறவின் போது கருமுத்துக்களை பார்க்கலாம். ( இது எல்லாருக்கும் கட்டாயமில்லிங்கோ) சிவப்புதுளிகள் ஜீரோ வாட்ஸ்ல கரு முத்தாதான் தெரியும்.

பெண்கள் விசயத்துல ஒவ்வொரு மாதவிலக்குக்கப்பாறம் தான் புதிய எக் செல் ஓவரிலருந்து புறப்பட்டு வந்து கருப்பையில தன் காத்திருப்பை துவங்குது . அப்பத்தேன் அவிக "உணர்ச்சிகள்" தீட்டப்பட்டிருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்துல சிவந்திருக்க வேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்டே இருக்கு. இதனோட அடிப்படை என்ன? ரத்த ஓட்டம் கரீட்டா நடக்குதா இல்லியாங்கறதுதேன்.

(ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)


எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே

இவ்ளோ டீட்டெயில்டா போவானேன் செவ்.......வாய்ங்கற பேரை பாருங்க. ஒடனே சால்னா கடையில நமீதா கணக்கா ஒரு கேரக்டர். வெற்றிலை போட்டு சிவந்த வாய் ஞா வரலை. மத்த கிரகங்கள் செரியில்லைன்னா அது சரியில்லை இது சரியில்லைனு தான் சொல்வாய்ங்க. இவரு சரியில்லைன்னா மட்டும் ( லக்னம் முதற்கொண்டு 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருத்தல்) செவ் தோஷம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.

இன்னாபா இது அக்குறும்புனு பொங்கி எழுந்துராதிங்க. மேட்டர் கீது வாத்யாரே. மன்சனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்ரது வெள்ளயணுக்கள். அது உற்பத்தியாகிறது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜையில. அந்த மஜ்ஜைக்கு காரகன் செவ்வாய். தாளி நோ.எ.ச இல்லாத பார்ட்டிக்கு எந்த ரோகம் தான் வராது?

மேலும் செவ் சரியில்லின்னா ரத்த சுத்தி சரியா இருக்காது. சொறி சிரங்கு கட்டி எல்லாம் வரும். இப்படி காட்பாடியா போன பாடி கொண்டவன் பலவீனனாதான் இருப்பான். கோபத்துக்கு காரணம் இயலாமை. பலவீனனுக்கு இயலாமை அதிகம். கோபமும் அதிகம்.

இப்ப கில்மாவுலயே பாருங்க. எத்தினியோ சந்தர்ப்பத்துல விட்டுக்கொடுக்கவேண்டி வரும். " விளக்கை அணை" "அம்மா தூங்கட்டும் - ஆட்டுக்குட்டி தூங்கட்டும்" செவ் தோஷமுள்ளவன் சீக்கிரத்துல கோபப்படுவான். கோபப்பட்டவனுக்கு காரியம் நடக்காது.

செவ்வாய் காரகத்தின் கீழ் வரும் அம்சங்களையும் அதனால கில்மாவுக்கு வரக்கூடிய ஆப்பையும் இப்ப பார்ப்போம்.
வயதில் இளையவர்கள்:
ஜாதகத்துல செவ் நல்ல இடத்துல உட்கார்ந்தா ஆண்டொன்று கூடுமே தவிர வயதொன்று கூடவே கூடாது. பார்ட்டி சொம்மா நச்சுனு இருப்பாப்டி. சப்போஸ் பார்ட்டி ஜாதகத்துல செவ் சரியில்லைனு வைங்க. சின்னப்பசங்களை எல்லாம் தனக்கு போட்டியா நினைக்கிற சைக்காலஜி வந்துரும். டிஷ் பையன், பால் பாக்கெட் போடற பையன் மேல கூட சந்தேகம் வரும்.( காரணம் உற்சாகத்தை தர்ரது செவ். உற்சாகம் குறைஞ்சிக்கிடக்கறச்ச துடியா இருக்கிற பசங்களை பார்த்தா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வருமா வராதா?)
போலீஸ், மிலிட்டரி, ரயில்வே:
செவ் நல்ல இடத்துல இருந்தா இந்த மாதிரி டிப்பார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும். ( செவ் சரியில்லாத ஜாதகத்துல பிறந்து லஞ்சம் கொடுத்து இந்த வேலையெல்லாம் வாங்கினா செவ்வாயின் இதர காரகங்களான ஆயுதங்கள், வெடி பொருட்கள், அறுவை சிகிச்சை, விபத்து, தீ விபத்து இத்யாதிக்கு பலியாகவேண்டி வரும்ங்கோ. மேற்படி உத்யோகங்கள்ள இருந்தா கண்ணாலம் கன்னா (சீக்கிரமா) ஆகும். அப்பாறம் என்ன கில்மாதான்.
எரிபொருள், மின்சாரம்:
வீட்ல கியாஸ் ஆயிருச்சு. கெரசின் இல்லை. எலக்ட்ரிக் ஓவன்ல ஆக்கி முடிச்சுரலாம்னு பார்த்தா வீராசாமி புண்ணியத்துல கரண்டு வாரா சாமி ஆயிருச்சு. சமையல் எப்படி முடியும். பெட் ரூமுக்கு எப்படி போகமுடியும். செவ் நல்லா இருந்தாதான் எல்லாமே கணக்கா முடியுங்கோ. எரிபொருள் தொடர்பான துறையில வேலை,தொழில் அமைஞ்சாலும் சுராங்கனிக்கா சேக்குதேன். தினம் தினம் அல்வா மல்லிப்பூதேன்..
தர்க்கம், வியூகம்:
அட என்ன பாஸ் எதுலதான் தர்க்கம் பார்க்கிறதுனு விவஸ்தையே இல்லையானு கேப்பிக சொல்றேன். ஆன்மீகத்துல மட்டும் தேன் தர்கம் நாலு காலை தூக்கிரும். உ.ம்: இழப்பவன் பெறுவான். காப்பவன் இழப்பான்.
கில்மாங்கறது உலகியல் வாழ்க்கையில ஒரு அங்கமே. அதனால ஜஸ்ட் ஒரே ஒரு தர்கத்தை கேட்ச் பண்ணினா ஊடல் கீடலையெல்லாம் ஊதித்தள்ளிட்டு காம் நகர்ல அப்பார்ட்மென்டே கட்டிரலாமுங்கோ.
அடுத்தது வியூகம். இதென்ன யுத்தமா வியூகம் வகுக்கனு கேப்பிக சொல்றேன். அச்சம், நாணம்,மடம்,பயிர்ப்பு அது இதுனு சொல்றாய்ங்கல்ல இதெல்லாம் என்னவாம் ஒவ்வொன்னும் ஒரு கோட்டை .இந்த கோட்டைகளுக்கெல்லாம் வேட்டு வைக்கலைன்னா நோ கில்மா. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு வியூகம் வகுத்து டமார் பண்ணாதான் கில்மா.
அறுவை சிகிச்சை:
செவ் சரியில்லைன்னா அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படுது. போதாதகுறைக்கு அவருக்கு சனியோட பார்வை தொடர்பு ஏற்பட்டுதுனு வைங்க அது எவ்ள தூரத்துக்கு போவும்னு சொல்லமுடியாது. அட ஒரு சிசேரியனை எடுத்துக்கங்க. லேடி டாக்டர் " ஒரு ஆறு மாசத்துக்கு பொஞ்சாதிய தங்கச்சி மாதிரி பார்த்துக்கங்க"னு சொல்ட்டா கில்மாவாவது வேறொன்னாவது. இன்னம் ஓவரிய தூக்கறது, யூட் ரஸை தூக்கிர்ரதுனு கதைபோச்சுன்னா ஹார்மோன் சுரப்புலயே பிரச்சினை வந்து சம்சாரத்துக்கு மீசை தாடியெல்லாம் வர ஆரம்பிச்சுரும்.
சமையல்:
யுத்த காரகனான செவ்வாயை சமையலுக்கும் காரகம்னு சொல்லியிருக்காய்ங்க.ரெண்டுக்கு என்ன சம்மந்தம்? யுத்தம்னா மொதல்ல எதிரி நாட்டை வேவு பார்க்கனும், எதிராளியோட படைபலம் ,வியூகம் தெரியனும். அதுக்கேத்தமாதிரி நம்ம படைய பலப்படுத்தனும். சமையல்னா நாம யாருக்கு சமைக்கப்போறோம், அவிக காஞ்சு கிடக்காய்ங்களா?, ஓஞ்சு கிடக்காய்ங்களா? பசியேப்பமா? புளியேப்பமா தெரிஞ்சிக்கிடனும். அப்பாறம் கிச்சன்ல என்ன இருக்கு என்ன இல்லைனு (முக்கியமா கியாஸ்/கரண்ட்) பார்த்துக்கனும்.
யுத்தம்னா மொதல்ல ஏர் பாம்பிங்கா, காலாட்படையா, கடல் வழி தாக்குதலா முடிவு பண்ணனும். சமையல்னா மொதல்ல கொறிக்க ஏதாச்சும் கொடுத்துரலாமா? இல்லை அவசர அடியா பிரியாணி பண்ணி அதுக்கு தயிர் சட்னி கொடுத்துட்டு அதுக்குள்ளாற கோழிகுருமாவ ஒப்பேத்தமுடியுமானுல்லாம் ஸ்கெட்ச் பண்ணனும்.
இப்படி யுத்தத்துக்கும் சமையலுக்கும் நிறைய சம்பந்தமிருக்குங்கோ. சமைக்கிற கணவன் மாரை வச்சு நிறைய ஜோக்கெல்லாம் எழுதறாய்ங்க. ஆனால் சமைக்க தெரிஞ்ச கணவனா இருக்கிறதுல நிறைய லாபம் இருக்கு பாஸ்.
பொஞ்சாதி ஏகத்துக்கு பில்டப் கொடுக்கமுடியாது ( ஸ்டவ்வு கிட்டே நின்னு பாருங்க தெரியும்) - நெஜமாலுமே பொஞ்சாதிக்கு முடியாத சமயம் கோதாவுல இறங்கி கேட்டு கேட்டு செஞ்சா அவிகளுக்கும் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் ஆகும். மனசுல நன்றி உணர்ச்சி பொங்கும். அது கில்மாவுல கூட முடியலாம்.
ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்:
செவ் சரியில்லைன்னா இதெல்லாம் வந்து கழுத்தறுக்க ஆரம்பிக்கும். லோ பிபி,ஹை பிபி உள்ளவுக,அல்சர் ,பெப்டிக் அல்சர் உள்ளவுக கில்மாவுக்கும் இந்த வியாதிகளுக்கும் என்ன தொடர்புனு சொல்லலாம்.
மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்:
இதுல வெறி கொண்டு ,வெற்றியே குறியா உள்ளவுகளுக்கு மைண்ட் கில்மா பக்கம் போகவே போகாது. உடம்பு கெட்டுரும்ங்கறதெல்லாம் சொம்மா சாக்கு. மனுஷன் பேசிக்கலா பண்றது ரெண்டுதேன். கொல்றது,கொல்லப்படுவது.இது செக்ஸுல சாத்தியம். ஆனால் இது ரெண்டுமே மேற்படி மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்ல சைக்கலாஜிக்கலா -சுத்தி வளைச்சு நடந்துருது -அதனாலதான் மேற்படி ஃபீல்டுல உள்ள பார்ட்டிங்க கில்மா பக்கம் திரும்பறதில்லை. ஆனால் தமாசு என்னடான்னா அதுகள்ள சாதனை பண்ணி முடிஞ்ச பிற்பாடு பலான மேட்டர்ல ஆர்வம் பீறிட்டு கிளம்பும். சில பிக்காலிங்க (முக்கியமா கோச்சுங்க) "ஏடாகூடமா"பிஹேவ் பண்றாய்ங்கனு கேள்வி. இதுக்கு காரணம் அவன் வெறி கொண்டு ,வெற்றியே குறியா செயல்படலைங்கறதுதேன்.
பால்:
மேட்டருக்கு மின்னாடி ஒரு தம்ளர் பால் (முடிஞ்சா ஒரு சில மசாலாக்கள் சேர்த்து) அடிச்சா தெம்பா இருக்கும்.
கொம்புள்ள பிராணிகள்:
மஞ்சு விரட்டு தெரியும்ல. மஞ்சு விரட்டுல குடல் சரியாம தப்பிச்சா குட்டிக மேலாடை சரிக்கும்னு சரித்திரம் சொல்லுதுல்ல .
மாமிசம்:
இது காம உணர்வை தூண்டும்.

ஆக ஒடனே உங்க குடும்ப ஜோதிடரை சந்திச்சு சாதகத்துல செவ் சாதகமா இல்லியானு ஒடனே தெரிஞ்சிக்கிடுங்க. சாதகமா இல்லாட்டி கீழ்காணும் பரிகாரங்களை ஆரம்பிச்சுருங்க.


1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

Sunday, February 6, 2011

உங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம்னு வாத்தியார் பாடி வச்சிருக்காருங்கண்ணா. உங்களை மட்டுமில்லை உங்கள சுத்தி இருக்கிறவுகள கூட அறிஞ்சிக்கிட்டா நெஜமாலுமே வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காம வாழலாங்கண்ணா. உங்க ஜன்ம ராசி/லக்னத்தை வச்சு உங்க கேரக்டரை சொல்லியிருக்கேண்ணா.

உங்க ராசிய நீங்க எப்படி டிரைவ் பண்ணிங்கங்கறது ரெம்ப முக்கியம் ஜாதகம், நட்சத்திரம்,பாதம், சந்திரனோட இருப்பை வச்சு டிரைவ் பண்ணியிருந்தா ரெம்ப நல்லது. அதான் சைன்டிஃபிக் அப்ரோச்.ஜாதகப்படி வைக்கப்பட்ட பெயர்ல முதலெழுத்தை வச்சு பார்த்தாலும் ஓகே. டோனி, பிங்கி மாதிரி இஷ்டாத்துக்கு வச்ச பேரை வச்செல்லாம் பார்க்கிறதை விட 12 கேரக்டரையும் படிங்க. உங்களுக்கு எது செட் ஆகுதோ அதான் உங்க ராசி ஓகே.(அனுபஜோசியம்னா இதான் பாஸ்!)

வெறுமனே உங்க கேரக்டரை மட்டும் கண்டுகிட்டு பக்கத்தை மூடிராதிங்க. உங்க அப்பா,அம்மா, அப்பப்பா,அம்மம்மா ( சிலோன் ரேடியோ சொல்வாய்ங்களே அந்த மாதிரி ) எல்லாரோடதையும் படிக்கனும்ல . பேசாம ஒரு ப்ரிண்ட் அவுட் கொண்டு போயிருங்க. ஒதவும்.

ஒரு ஹ்யுமேனிஸ்டான ஜோசியரா எந்த வித ஒளிவு மறைவுமில்லாம ரூ.250 கன்சல்டன்ஸி ஃபீஸா தர்ர க்ளையண்ட்ஸுக்கு சொல்ற பலன்களை அப்படியே இங்கன தந்திருக்கேண்ணா. பொத்தி பாதுகாத்துக்கங்க. இந்த பக்கத்தை ஆர்க்குட்,ஃபேஸ்புக்,கூகுல் புஸ்,டிவிட்டர் இப்படிப்பட்ட சைட்ல இருக்கிற உங்க ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் கண்ட மேனிக்கு ஷேர் பண்ணுங்க அண்ணாத்த ! அதென்னமோ ஓட்டு ஓட்டுங்கறாய்ங்களே அதையும் போட்டுத்தான் தொலையுங்களேன்.

உங்களை பத்தியும் தெரிஞ்சிக்காம,உங்கள சுத்தி உள்ளவுகளை பத்தியும் தெரிஞ்சிக்காம கோதாவுல இறங்கறது தற்கொலைக்கு சமானம்.

கட்டுச்சோறு கட்டிக்கொடுத்த மாதிரி வெறுமனே பலனை கொடுத்தாலும் படிச்சிட்டு போயிருவிக. இருந்தாலும் மனசாட்சி கேட்கமாட்டேங்குது . நிறைய ஜோசியர்ங்க இப்படித்தான் புஸ்தவத்தை படிச்சு மனப்பாடம் பண்ணி கதை பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. ஆனால் நான் இந்த பலனை ஒர்க் அவுட் பண்ண வழியையும் சொல்லி வைக்கிறேண்ணா.

உங்கள்ள ஆர்வமுள்ளவுக கொஞ்சமா முக்கினா மஸ்தா மேட்டரு வெளிய வருங்கண்ணா. அதை எல்லாம் எனக்கு மெயில் பண்ணா நம்ம வலைப்பூவுல வெளியிடறேங்கண்ணா.

ராசி/லக்னங்களின் குண நலனை அறிய வழிகள்:
1.முதல்ல அந்த ராசிக்குனு கொடுத்திருக்கிற படத்தை பாருங்க. சின்னவயசுல படம் பார்த்து கதைசொல்லு வந்திருக்கில்ல. நம்ம ரிஷிகள் மகரிஷிகள் வெறுமனே கதை பண்ணிட்டு போயிரல தம்பி ! நிறைய ரோசிச்சு நமக்கெல்லாம் க்ளூ கொடுத்துட்டு போயிருக்காய்ங்க.
2.மேஷத்தை முத ராசியா கொண்டா உங்க ராசி எத்தனையாவது ராசினு பாருங்க. துவாதச பாவங்கள் தெரியுமில்லை. பாவ காரகத்வம் தெரியுமில்லை. அந்த ராசியை பாவமா கொண்டா அந்த பாவ காரக்த்வத்துக்கும் உங்க ராசிக்கும் பிரிக்க முடியாத ஒரு லிங்க் இருக்கிறதை புரிஞ்சிக்கிடலாம்.
3.உங்க ராசி/லக்னத்துக்கு அதிபதி யாருனு பாருங்க. அவரோட காரகத்வம் என்னனு பாருங்க. அவரோட காரகத்வம் உங்க லைஃபை நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். குளிர் காயறச்ச ரெம்ப நெருங்கியும் போயிரக்கூடாது (தோல் வெந்துரும்) ரெம்ப எட்டியும் வந்துரக்கூடாது குளிரும்னு சொல்லுவாய்ங்க. உங்க லக்னாதிபதி/ராசியாதிபதி உங்களுக்கு ரெம்ப நெருக்கமாயிர்ரதால தன்னோட காரகத்வத்துல கொஞ்சம் போல தீங்கும் செய்துருவாருங்கோ.

இனி உங்க குண நலன் களை பார்ப்போமா?
1.மேஷம்:
இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)
போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா? விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா உங்க மாதிரி பார்ட்டிங்கள விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான்.
2.ரிஷபம்:
இவிக குழந்தை மாதிரி .அல்ப்ப சந்தோஷி. எதிராளி கொஞ்சம் போல அக்கறையோட பேசினா போதும் மனசுல எதுவும் வச்சிக்காம உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி வம்பில் மாட்டிப்பாய்ங்க. ஆனா போக போக மித பாஷியாயிரவும் வாய்ப்புண்டு. (முக்கியமா பெண்கள்) கொடுத்த பேச்சை காப்பாத்தனும்னு துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பாரு. . தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லனாக பெயரெடுக்கலாம். மாற்றங்களை விரும்பாத ராசி இது. செக்கு மாடு மாதிரி ரொட்டீனுக்கு பழக்கப்பட்டவுக. பணம், பேச்சு, குடும்பம்னால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே இந்த விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்ப உறவுகளில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
3.மிதுனம்:
மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். அதே போல் உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம். இவிக வாழ்க்கைல மரண சமானமான ஒரு துக்கமோ, நஷ்டமோ வந்தா உடனே ஒரு சொத்து வாங்கற அமைப்பு ஏற்படும். பட்டுனு ஒரு லிஃப்ட் கிடைக்கும். தூர தேசத்துலருந்து உதவி வரும்.

4.கடகம்:
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
திடீர் கோபம் கொள்ளுதல், சில நிமிடங்களில் சமாதானமடைதல். பெரிய்ய விஷயங்களை சகித்து கொள்ளுதல், சின்ன விஷயங்களுக்கு பெரிதாக கோபித்தல் இத்யாதி குணங்களால் இவர் எப்படித்தான் பிழைக்க போகிறாரோ என்ற எண்ணம் குடும்பத்தார் மனதில் ஏற்படலாம். வீடு கட்ட முனையும் போது ரொம்ப யோசனைகள் செய்தல் அடிக்கடி திட்டத்தை மாற்றுதல் வேண்டாம். முடிந்தவரை காண்ட் ராக்ட் மூலமாகவே கட்டிக்கொள்ளவும். கையில் முழுப்பணத்தை வைத்துக்கொண்டே இறங்கவும். இந்த லக்னக்காரர்கள் வீடுகட்ட ஆரம்பித்து அதை ஒரு தவணையில் முடிப்பது சந்தேகமே
இவர் கடல் போன்றவர். கடலின் கரையோரம் அலையடித்தபடி இருக்கும். அதே போல் இவரும் ஒதகாத மேட்டருக்கெல்லாம் பதைச்சுக்கிட்டு இருப்பார். கடல் ஆழத்துல ரெம்ப அமைதியா இருக்கும். இவருக்குள்ளயும் ஆழ்மனதில் ஒரு வித அமைதி இருக்கும்.
கடல்ல எப்படி அனைத்துவகையான தண்ணீரும் வந்து சங்கமமாகிறதோ அதே போல் இவரும் பல்வேறு நபர்களின் குண நலன்களை கிரகித்து வெளிப்படுத்துவார்.
முகம் பார்க்கும் கண்ணாடி. எதிரில் நிற்கும் நபரின் முகமே ,முகபாவனையே இவரை ரெஸ்பாண்ட் ஆக வைக்கும். நேத்து முந்தா நேத்து நடந்ததெல்லாம் கணக்கு வைக்கமாட்டார்.
நேத்து என்ன நடந்திருந்தாலும் இன்னைக்கு நீங்க சினேக பூர்வமா புன்னைகைச்சா இவரும் உடனே ஸ்மைல் பண்ணுவார்.
இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் இருக்கும். தெய்வ பக்தி, இன்னபிற சென்டிமென்ட்ஸ் இருக்கும். தன்னை யாராவது காப்பாத்தனும்னு நினைக்கிறவரு. அதே சமயத்துல தன்னை சரணடைஞ்சவங்களை காப்பாத்த பெரிய பெரிய ரிஸ்க் எல்லாம் எடுப்பாரு.
5.சிம்மம்:
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், (அல்லது இவர் வளர வளர தந்தையின் நிலை பலகீனமடைந்து வரும்) தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.
தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட். இவரை கண்டிப்பதோ,குறை கூறுவதோ கூடாது. மீறி செய்தால் நாம ஷெட்.

6.கன்னி:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்.பப்ளிக் ரிலெசன்ல புலிங்க.ஆனால் புலி தன் குட்டியை தானே தின்னுர்ராப்ல தன் செட்டுக்குள்ள இருக்கிறவகளையே லொள்ளு பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
7.துலாம்:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும் மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா. பிஹைண்ட் தி ஸ்க்ரீன் பெட்டர்.
9.தனுசு:
ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். நீங்க எதிர்காலத்துல குரு ஸ்தானத்துல இருந்து நாலு பேருக்கு நல்லது சொல்லவேண்டிய பார்ட்டி. அதனால இளமைல கெட்ட ஆட்டம் போடவும் வாய்ப்புண்டு. சிலர் மத்திம வயசுல கூட டபுள் ஆக்டு கொடுப்பாய்ங்க. ஒரு பஞ்சாயத்து கெட்டுப்போகனும்னா இவிகளை விட்டா போதும் வெகண்டையா பேசி விவகாரத்தை முதலுக்கு கொண்டு வந்துருவாய்ங்க. இவிக லைஃப்ல தந்தை,தந்தை வழி சொத்து ,இவர் சேமிப்பு, இவர் வாங்கின சொத்து,தீர்த்த யாத்திரைகள்,தூரபிரயாணங்கள், தூர தேசத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இதுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும். இவிகளுக்கு ரெண்டாமிடத்ததிபதி சனிங்கோ. அதனால இந்த வருசம் வந்த லாபத்தை இந்த வருசம் சாப்பிடற யோகம் கிடையாது. எட்டுவருசம் கழிச்சு அழுது புரண்டு ரிட்டர்ன் வாங்கி சாப்பிடுவாய்ங்க.
10. மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள்.அதே சமயம் ஏதோ ஒரு கலையில் ஆர்வம், திறமை இருக்கும். பேச்சு குறைவாகவே இருக்கும். கணவருடனான இவரது நெருக்கம் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். ஒற்றைத்தலைவலி,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். சாஸ்திர சம்பிரதாயங்களை தன்னிச்சையாக (பிரத்யேக ஆர்வமோ, பிடிப்போ இல்லாமலே) கன்டின்யூ பண்ணுவாய்ங்க.
11.கும்பம்:
என்னைக்கும் எதுவும் சுத்தமா தீர்ந்து போகாது (செல்வம்,செல்வாக்கு முதலியவை) எவ்ள கஷ்ட காலம் வந்தாலும் கொஞ்சமாச்சும் மிஞ்சும். ரகசியங்கள் இருக்கும். எதை செய்தாலும் நமக்கென்ன லாபம்னு பார்த்து செய்யற நேச்சர் இருக்கும். (இளமைல இதுக்கு மாறா இருந்திருக்கலாம்) கொஞ்சம் போல சோம்பல் இருக்கலாம். வெட்டி பந்தா, நாவல்ட்டீஸ்,ஃபேன்சி, காஸ்மெடிக்ஸ்ல விருப்பம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆகுதானு மட்டும் பார்க்கிற குணம் இருக்கும். வாழ் நாள் முழுக்க இரும்பு,ஆயில், எண்ணெய் கறை உங்களை விடாது. அல்லது யூனிஃபார்ம் போடற வேலை . நீங்க என்னதான் லாபம் பார்த்து இறங்கினாலும் நேரம் கெட்டதா இருந்தா நஷ்டம் வரத்தானே செய்யும். உங்க லைஃப்ல உங்க மூத்த சகோதரன்,சகோதிரியோட ரோலுக்கு ரெம்ப முக்கியத்துவம் இருக்கும். எவன் எக்கேடுகெட்டுப்போனா என்ன என் கூலி எனக்கு கிடைச்சதாங்கற மென்டாலிட்டி இருக்கும். இருந்தாலும் படக்குனு அதிகாரி, சூப்பர் வைசர்கிட்ட முட்டிக்குவிங்க.
12.மீன ராசி:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும். பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)

சந்திரபலமும் கில்மாவும்:2

கடந்த பதிவுல சந்திரன் இல்லாட்டி கில்மாவே இல்லேங்கற ரேஞ்சுக்கு எஸ்டாப்ளிஷ் பண்ணியிருந்தேன். அதுக்கு முந்தின பதிவு சூரியபலமும் கில்மாவும். அதுல சூரியன் இல்லாட்டி கில்மாவே இல்லைனு எஸ்டாப்ளிஷ் பண்ணியிருந்தேன். எல்லா ஜாதகர்களோட வாழ்க்கையிலயும் சூரிய,சந்திரர்களோட பலம் இல்லைன்னா இழந்த சக்தி வைத்தியர்களை அணுக வேண்டிவரும்தான் இல்லேங்கலை. அதுலயும் மனிதர்களில் சூரிய மனிதர்கள் ,சந்திர மனிதர்கள்னு ரெண்டு கேட்டகிரி இருக்கு. சூரிய மனிதன் ஜாதகத்துலயோ அ அவனுக்கு கோசாரத்துலயோ சூரியபலம் இல்லேன்னா நாஸ்திதேன். இன் தி சேம் வே சந்திர மனிதனோட ஜாதகத்துலயோ அ அவனுக்கு கோசாரத்துலயோ சந்திர பலம் இல்லேன்னா டங்குவார் அறுந்துரும்.

மொதல்ல சந்திர மனிதர்களோட கேரக்டரிஸ்டிக்ஸை பார்த்துருவம்.

ஒருவித குளுமை ( இவிக மனசுலயும் இருக்கும் -இவிக கிட்ட கொஞ்ச நேரம் பேசினா அது நமக்குள்ளயும் பரவும்) , தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும்)

தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும்.

எவரேனும் ஏற்கெனவே போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம்.

பெரிய பிரச்சினை வந்துவிட்டால் நம்பியவரை கைவிட்டு தப்பித்துக்கொள்ளுதல் இந்த சந்திரமனிதர்களின் இயல்பு. சிக்கனம். இன் செக்யூரிட்டி , சந்தேகம் இவர்களுடன் பிறந்தவையாகும். குடும்பபாசம், க்ஷணிக காதல்கள் (கண்டதும் காதல்?). பெரிய மனிதர் வீட்டு பெண்கள் இவர்களால் சீக்கிரம் கவரப்படுவார்கள். சுருக்கமாய் சொன்னால் பெண்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.

இவிக விருச்சிக ராசில பிறந்து தொலைச்சா (அங்கன சந்திரன் நீசம்) அல்லது சந்திரனொட ராகு,கேது,சனி, அல்லது 6,8,12 அதிபதிகள் சேர்ந்த ஜாதகத்தில் பிறந்தா என்ன ஆகும். டப்பா டான்ஸ் ஆடும்.

சூரிய மனிதர்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் ஆண்மை நிரம்பிய குணம். ஃபாதர்லி நேச்சர்.

இதுல நீங்க எந்த கேட்டகிரில வர்ரிங்கனு பாருங்க. சூரிய மனிதனா இருந்தா சூரியன் சுப பலமா இருக்கனும். சந்திர மனிதனா இருந்தா சந்திரன் சுபபலமா இருக்கனும். ஜாதகத்துல மட்டும் இப்படி ஒரு அமைப்பு இருந்துட்டா போதாது.

முக்கிய முயற்சிகள்ள ஈடுபடும்போது கோசாரத்துலயும் அந்த கிரகங்கள் நல்ல நிலையில இருக்கனும்ங்கறதை மறந்துராதிங்க.

கோசாரத்துல சந்திர பலம் இல்லைன்னா ரெண்டேகால் நாள்ள வந்துரும் .இவிக பலான மேட்டரை விட்டு விலகியிருக்கலாம்.

சூரிய பலம் இல்லேன்னா அது வர மாசக்கணக்குல ஆகுமே அப்ப என்ன செய்ய? பகல்ல ஈடுபடறதை தவிர்க்கலாம். ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்லாம, கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லாம ஈடுபடலாம். ஐ மீன் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிரனும்.

Saturday, February 5, 2011

சந்திர பலமும் கில்மாவும்

சந்திர பலமும் கில்மாவும்

நாட் நாட் சினிமாலருந்து, லேட்டஸ்ட் படம் வரை டூயட்டுன்னா சந்திரனை ஒரு மேண்டேஜ் ஷாட்டாவாச்சும் காட்டிர்ராய்ங்க. ஏன்னா கில்மாவுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு இது. மனித மனதின் அடியாழத்தில் இது பொதிஞ்சு கிடக்கு.

உச்சி வெய்யில்ல கூட "ஷோ"போடற சிங்கங்கள் இருக்கலாம். ஆனால் ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். விதியில்லாத குறைக்கு போடலாமே தவிர சந்திரன் அதுவும் வளர்பிறை சந்திரன் அதுவும் பவுர்ணமி சந்திரனோட ஒளியில உரசி ,உலவி, கொஞ்சி மகிழறதுல இருக்கிற த்ரில்லே வேற.

பவுர்ணமி சந்திரன் கடல் நீரை ஈர்ப்பது அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர்தான். தெரியாத மேட்டர் என்னடான்னா ஹ்யூமன் பாடில உள்ள வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனும் ,சமுத்திர நீரோட கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதான்ங்கறது.

மனுஷனொட பாடில 90% வாட்டர் கன்டென்டுதானு நினைக்கிறேன். தாளி ரெண்டு மூனு தாட்டி வாயால,வயித்தால போனா டெலிவரி ஆன பெண் மாதிரி டீலாயிர்ரம். தோல் எல்லாம் பாட்டி கணக்கா சுருங்க ஆரம்பிச்சுரும். இதான் சந்திரனுக்கும் ஹ்யூமன் பாடிக்கும் உள்ள லிங்க்.

ஜோதிஷத்துல சந்திரன் மனோகாரகன்னு சொல்றாய்ங்க. அதாவது மனசுக்கு அதிபதி இவரு. சந்திர பலம் இருந்தா நல்ல மனமிருக்கும். மனோபலமிருக்கும்னு அர்த்தம். சந்திரனுக்கு மதினு இன்னொரு பேர். மதிங்கற வார்த்தைக்கு மரியாதை கொடு. ரெஸ்பெக்ட் (அதர்ஸ்)னும் ஒரு அர்த்தம் உண்டு. நல்ல மனசு இருக்கிறவன் எவனையும் அவமதிக்கமாட்டான். மலையாளத்துல மதிங்கற வார்த்தைக்கு போதும்னு ஒரு அர்த்தம் இருக்கு. நல்ல மனசுன்னா என்ன? போதுங்கற மனசுதான். மதி (சந்திரன்) நல்ல இடத்துல இருந்தாதேன் மன்சன் மதி(போதும்)ன்னுவான்.நீங்க போதும்னு நின்னுட்டா எல்லாமே உங்களை தேடிவரும். எனக்கே எனக்கேனு அலைஞ்சு பறைசாத்தினா உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கதைதேன்.

"எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு"னு ஒரு பழமொழி இருக்கு. எண்ணம்னா வந்து போற எண்ணங்கள் இல்லை. எண்ணங்களுக்கெல்லாம் விதையான எண்ணம் அது நல்லதா இருந்தா இன் ப்ராசஸ் மனம் நல்லதா மாறிரும். மனம்போல் வாழ்வுங்கறதால வாழ்வும் பெட்டரா மாறிரும். மேற்படி விதை எண்ணம் எங்கருந்து விதைக்கப்படுதுனு புரியலை. ஜீன் வழியானு சொல்றாய்ங்க. அப்ப என்.டி.ஆர் போட்ட டஜன் குட்டியும் ஏன் டம்மி பீசாயிருச்சு. நம்ம தாத்தா மேட்டர்ல கூட அழகிரிக்கும்,
ஸ்டாலினுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு.. இங்கே தான் சந்திரன் விளையாடறாரு.

சந்திர ஆதிக்கத்துல உள்ளவுக இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமானவுகனு ஒரு கணக்கிருக்கு. (ஸ் ..அப்பாடா ..நம்முதும் கடக லக்னம் தேன் -வாக்குல சந்திரன் -ஆக நம்ம பேச்சு/எழுத்து இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கம் தான் போல)

மனமிருந்தால் மார்கம் உண்டுங்கறாய்ங்க. "அவன் மனசு வைக்கலைப்பா.." " ஐயா மனசு வச்சா இதெல்லாம் ஜுஜுபி" இந்த கான்வர்சேஷன் எல்லாம் நெஜம் தான் பாஸ்! மனசு வச்சாத்தான் எதையும் சாதிக்க முடியும். அதுக்கு சந்திரபலம் தேவை.

தெலுங்குல சந்தோஷம் சகம் பலம்ங்கறான். சந்தோஷத்தை தர்ரது ஸ்தூலமான பொருட்கள் இல்லே. சனம் பொருளுக்கு அலையுதுன்னா அதுல கிடைச்சுருமோங்கற எண்ணத்துலதான். வெறும் பொருட்களால சந்தோஷம் கிடைச்சுர்ர மாதிரி இருந்தா அவனவன் 3 ட்யூட்டி பண்ணுவான். சந்தோசத்தை தர்ரது மனசு.

மனசுல உள்ளதெல்லாம் ரெண்டே ரெண்டு கோரிக்கை தேன். ஒன்னு கொல்லனும் ரெண்டு கொல்லப்படனும். இது ரெண்டுக்கும் வாய்ப்புள்ள எல்லா மேட்டர்லயும் மனசு துள்ளும். இது ரெண்டுமே செக்ஸுல சாத்தியமாகுது.அதனாலதான் கில்மாவுக்கு இம்மாம் கிராக்கி.

மனசு ஒத்துழைக்கலைன்னாலும் ஆஃபீஸ் வேலைய வேணம்னா செய்துர முடியும். ஆனால் கில்மா மேட்டர்ல இது இம்பாசிபிள். அதுவும் நீங்க ஆண் என்றால் அசம்பவம். சந்திர பலம் இருந்தாதான் மனசு ஒத்துழைக்கும்.

கும்ப லக்ன காரவுகளுக்கு இவர் சஷ்டமாதிபதி (6) ங்கறதால இவர் 8 அ 12லருந்தா பெட்டர்
தனுசு லக்ன காரவுகளுக்கு இவர் அஷ்டமாதிபதிங்கறதால 6 அ 12ல இருந்தா பெட்டர்.
சிம்ம லக்ன காரவுகளுக்கு இவர் விரயாதிபதிங்கறதால 6 அ 8லருந்தா பெட்டர்.

அதே மாதிரி சந்திரனோட 6,8,12 அதிபதிகள் சேர்ரது, ராகு கேதுக்கள் ஜாய்ன் பண்ணிக்கிறது , நீசமாயிர்ரது (விருச்சிக ராசி) சனி கூட்டு சேர்ரதுல்லாம் இருந்தா மன நலம் கோவிந்தா. மனம் கெட்டா மண வாழ்வும் போயிந்தா..

(சந்திர பலத்தை பத்தியே இன்னம் மஸ்தா சொல்லனும் நைனா அடுத்த பதிவுல பார்ப்போம்..உடு ஜூட்)



தெலுங்குல கூட மதிங்கற வார்த்தை இருக்கு . ஆனா அதை madhi ன்னு ப்ரனவுன்ஸ் பண்ணமாட்டாய்ங்க. mathiன்னு ப்ரனவுன்ஸ் பண்றாய்ங்க. "நா மதி நின்னு பிலிச்சிந்தி கானமை வேணு கானமை" என் மனம் உன்னை அழைக்குது கானமாய் முரளி கானமாய் "னு அர்த்தம்.

மதிங்கற வார்த்தைக்கு முகம்னும் ஒரு அர்த்தம் இருக்குங்கோ .உ.ம் பானுமதி (சூரியனை போன்ற முகமுடையவள்) சந்திரமதி (சந்திரனை போன்ற முகமுடையவள்) மதின்னா மனம் . மனம் மலர்ந்திருந்தா முகமும் மலர்ந்திருக்கும்.

Friday, February 4, 2011

கில்மாவும் சூரிய பலமும்


கில்மாவும் கிரகபலமும் தொடரின் முதல் அத்யாயம் முன்னுரைக்கே சரியா போச்சு. கடைக்கால் கண்ணுக்கு தெரியாதுதேன் ஆனால் பில்டிங்குக்கு அதான் முக்கியம். தம்பிமாருக்கு கொஞ்சம் கடுப்பாகூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த முன்னுரை மிக மிகத்தேவையானதுங்கறது என்னோட கருத்து.

இப்ப சூரிய பலம் கில்மாவுக்கு என்னெல்லாம் சப்போர்ட்டை தரும், பலகீனமா இருந்தா ( சூரியனை சொன்னேனுங்கோ) எப்படியெல்லாம் லொள்ளு பண்ணும்னு இந்த பதிவுல பார்த்துருவம்.
பகல்ல பிறந்தவுகளுக்கு சூரியன்தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இத்யாதிக்கெல்லாம் பொறுப்பேத்துக்கறாரு (ராத்திரில பிறக்கிறவுகளுக்கு சனி)
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே"னு பாரதியார் சொல்றாரு. ஒரு குழந்தைக்கு அப்பாதான் மொதல் ரோல் மாடல். அப்பனுக்கு பிள்ளை தப்பாம - விரையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா - புலிக்கு பிறந்தது பூனையாகுமா - மாதிரி பஞ்ச் டயலாகெல்லாம் நிறைய கேட்டிருப்பிங்க.
சூரியன் நல்ல நிலையில இருந்தாதான் அப்பா நல்ல நிலைல இருப்பாரு. அவர் நல்ல நிலையில இருந்தாதான் அவரோட குடும்பவாழ்க்கை நல்லாருக்கும். அது நல்லாருந்தாதான் பசங்களோட வாழ்க்கையும் நல்லாயிருக்கும்.
சப்போஸ் ஜாதகத்துல சூரியன் கெட்டுக்கிடக்காருனு வைங்களேன் அப்ப நிலைமை எப்படி இருக்கும்? ஏறுமாறாதான் இருக்கும். இந்த ஏறுமாறான சூழ் நிலையில "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி "இருக்கிறதெங்கே?
எல்லாம் உன்னாலே நான் கெட்டேன் என்னால நீ கெட்டேங்கற ரூட்ல தான் வாழ்க்கை போயிட்டிருக்கும். கண் பார்த்தா கை செய்யும் - அதே ரூட்டை ஜாதகர் கூட பிடிச்சுர்ராரு. முதல் கோணல் முற்றும் கோணல் தேன்
அதுசரிங்கண்ணா " பண்டித புத்ரஹா பரம சுண்ட்டஹா" வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகின்னு சொல்றாய்ங்களே இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுனு கேட்டு க்ராஸ் பண்ணுவிங்க. சொல்றேன்.
இந்த பழமொழி 100% உண்மை நிலவரத்தை காட்டுதுனு சொல்ல முடியாதுதான்.ஆனால் இந்த பழமொழி உருவாக ஓரளவாவது உண்மை நிலவரம் தூண்டுதலா இருந்திருக்கனும்.
வாத்தியார் ஜாதகத்துல அஞ்சாவது இடம் அவர் புத்திய காட்டுது, பிள்ளையையும்காட்டுது. அந்த அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருந்திருந்தா அவரும் நல்லா படிச்சு வாத்தியார் ஆயிருப்பார். அவரோட பையனும் நல்லா படிச்சிருப்பான்.
ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நல்லது கெட்டது கலந்தேதான் இருக்குது. எந்த பாவமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே. அதே மாதிரி எந்த கிரகமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே.
இதனால என்னாகுதுன்னா அந்த அஞ்சாவது பாவம் வாத்தியாருக்கு புத்திஸ்தானமா ஒர்க் அவுட்டாயிருச்சு. வாத்தியாராயிட்டார். புத்ரஸ்தானமா டப்ஸாயிருச்சு. பையன் மக்காயிட்டான்.
இது ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூ. இன்னொரு கோணத்துல பாருங்க. அதே வாத்தியார் ஊர் பிள்ளைங்களுக்கெல்லாம் பாடம் கத்துக்கொடுக்கிறார். அவிக மக்காகலே. ஏன்? அவர் " ஸ்கூல்ல எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு தான் பாடம் நடத்தறார். அவருக்கு அந்த ஸ்கூல் பிள்ளைங்களோட எந்த விதமான அட்டாச் மெண்டும் இல்லை. ஆனா வீட்ல வந்து பெத்த பிள்ளைக்கு பாடம் நடத்தறப்போ அதிக அக்கறையோட அதிக அட்டாச் மெண்டோட பாடம் நடத்தறார். இங்கே அந்த அட்டாச்மெண்டே வில்லனாயிருது.
இதுலருந்து என்ன தெரியுது?இவன் என் மகன், இது என்னோட காருன்னு அட்டாச் மெண்ட் வரும்போதுதான் கிரகம் வேலை செய்யுது. அந்த அட்டாச் மெண்ட் இல்லாத இடத்துல கிரகம் வேலையே செய்யறதில்லை.
இது ஒரு கோணம். இன்னொரு கோணம் என்னடான்னா இவன் ஜாதகத்துல சூரியன் நல்ல இடத்துல உட்கார்ந்திருந்தா அப்பனோட வித்து மொதல் டிகாஷன் மாதிரி ஸ்ட்ராங்கா இருந்திருக்கும். இவனும் ஃபில்ட்டர் காஃபி மாதிரி இறங்கியிருப்பான். ஒரு வேளை இவன் ஜாதகத்துல சூரியன் டுபுக்காயிட்டா என்னாகும்? நாலாவது அஞ்சாவது டிக்காஷன் மாதிரி தான் இறங்கும் ( நான் ஜீன்ஸை சொல்றேன்)
சூரியன் பல், எலும்பு, முதுகெலும்பு இத்யாதிக்கு காரகர். இதெல்லாம் நல்லா அமையனும்னா அம்மா ஹெல்தியா இருந்து ,தாய்பால் கொடுத்திருக்கனும். அந்த தாய்பால்ல கால்ஷியம் இத்யாதி புஷ்கலமா இருந்திருக்கனும். அதுக்கு ஜாதகனோட அப்பா இவனோட அம்மாவுக்கு நல்ல சத்துணவை கொடுத்திருக்கனும். அப்பத்தேன் பால் சுரக்கும். பால்ல கால்ஷியம் இருக்கும். எலும்பு ஸ்ட்ராங்கா அமையும். குழந்தை வளர வளர அவனுக்கு கால்ஷியம் நிறைய இருக்கிற உணவை கொடுத்து வளர்த்தா ஏன் அவனுக்கு பல், எலும்பு, முதுகெலும்பு ட்ரபுள் கொடுக்கப்போவுது.
சூரியன் வீக்கு. அப்பன் சோம்பேறி. பையன் சின்ன வயசுல வேலை வெட்டினு போறானு வைங்க. இளம் எலும்பு , சத்துக்குறைவு வேற, இதுல கடும் உழைப்பு நிலைமை என்னாகும்? உடம்பு உடம்பை திங்க ஆரம்பிச்சுரும்.
மொதல்ல பல்லு காலி. பல் போனா சொல் போச்சு. " மனதிலே உறுதி வேண்டும் வாக்கினிலே தெளிவும் வேண்டும்" அது சரி இதுக்கெல்லாம் அடிப்படியான ஹெல்த் நல்லாருக்கனுமே. பல்லுல பிரச்சினை இருந்தா சிரிக்க கூட முடியாதே. அப்பாறம் எங்கன இருந்து தன்னம்பிக்கை, டீம் ஒர்க், தலைமை பண்புல்லாம் சாத்தியம்.
பார்ட்டியை கை கால் வலி,முட்டிவலி,முதுகுவலியெல்லாம் பின்னியெடுக்கும். பொஞ்சாதியை கை கால் அமுக்க சொல்லிட்டு அந்த சொகத்துலயே தூங்கிபோயிருவான். அப்பாறம் என்னத்த கில்மா?
சூரியன் மலைப் பிரதேசங்களுக்கும் காரகர். சின்னவயசுல நாலு மலை ஏறி இறங்கினா எலும்பெல்லாம் உறுதிப்படும். தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டிக்கெல்லாம் சூரியன் தேன் இன்சார்ஜ்
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. சவுண்ட் பாடிக்கு தேவை நல்ல வித்து. நல்ல சத்தான தாய்ப்பால் சத்துணவு. இதுக்கெல்லாம் அப்பன் கரீட்டா இருக்கனும். அதுக்கு இவன் ஜாதகத்துல சூரியன் பக்காவா உட்கார்ந்திருக்கனும் ( நீல் கமல் சேர்ல இல்லிங்கண்ணா)
தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டியெல்லாம் அமையனும்னா நல்ல ஜீன்ஸ் இருக்கனும், ஆரோக்கியமான உடல் இருக்கனும் உடலுக்கு ஒரு ஷேப்பை,உறுதிய கொடுக்கிற எலும்பு வலிமையோட இருக்கனும். உங்களுக்கு முட்டிவலி,முதுகுவலி ஏதோ இருக்குனு வைங்க மொதல்ல நேர நிக்கமுடியுமா? பப்ளிக் மேட்டர்ல ஆர்வம் வருமா? தாளி எவன் அம்மாள எவன்னா வச்சுட்டு போவட்டுங்கற மென்டாலிட்டி வருமா வராதா? அப்பாறம் எங்கன இருந்து லீடர்ஷிப்.
மேற்சொன்ன தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டில்லாம் இருந்தாதேன் பொஞ்சாதி மதிப்போ. அவள் மதிச்சாத்தேன் இளமை குதிச்சு ஆட்டம் போடும். இல்லாட்டி நாளாவட்டத்துல பேட்டரி வீக்குதேன்.
இதுல இன்னொரு தமாசு என்னடான்னா சூரியன் மிக நல்ல நிலையில உள்ளவன் தலைவனா ஆகாமயே கூட போயிரலாம் (தலைவனுக்கே இவனை பார்த்தா பல்லு தந்தியடிக்கிறப்ப இவன் தலைவனா இருந்தா என்ன இல்லாட்டி என்ன?) ஆனால் சூரியன் கெட்டு போன ஜாதகர்கள் மட்டும் தலைமைப்பதவிக்கு அலைஞ்சு பறைசார்த்துவாய்ங்க.
இவிக மேட்டர்ல தலைமைப் பண்புகள்னா "சனத்தை மேனேஜ் பண்றது" தன்னம்பிக்கைன்னா " சாவு வீட்டுக்கு போனா பிணமா இருக்கனும், கண்ணால வீட்டுக்கு போனா மாப்பிள்ளையா இருக்கனுங்கற புத்தி"
ப்ராக்டிக்காலிட்டின்னா ஆனைக்கு காலு ரயில்வே ட்ராக்ல மாட்டிக்கிச்சா நீ எலியா இருந்தா என்ன ஏறி விளையாடுங்கறதுதேன்.
விளம்பரங்கள், நாளிதழ்கள்,பயன் கருதா பொது நலப்பணிகளுக்கும் சூரியன் தேன் பொறுப்பு. சூரியன் நல்ல நிலையில இருந்தா இந்த மேட்டர்ல எல்லாம் ஆர்வமிருக்கும், ஞானமிருக்கும், என்ட்ரி இருக்கும்.
பொம்பள வீக்கர் செக்ஸ். அவளுக்கு தன்னை சுத்தி உள்ள சின்னவட்டம் தான் முக்கியம். ஆனால் சூரியன் நெல்ல இடத்துல உள்ளவன் ஊர் ,உலக சேதிகளையெல்லாம் அதிகாலையிலயே அறிய துடிக்கிறதை கண்டா அவளுக்கு ஒரு உதறல் வரும். இவன் நம்மை விட பவர்ஃபுல்ங்கற எண்ணம் வரும்.
பொஞ்சாதி அடங்கியிருந்தா பெட்டைக்கும் ஆண்மை வருங்கோ..
திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்களுக்கும் இவர் தான் அதிகாரி. தெலுங்குல ஒரு பழமொழி. " திரிகி செடிந்தி ஆடதி - திரக்க செட்டாடு மகவாடு. (ஊர்)சுத்தி கெட்டா பொம்பளை, சுத்தாம கெட்டான் ஆம்பளை. ங்கறது இதனோட அர்த்தம்.
ஆம்பளை மட்டுமில்லை,பொம்பளை கூட சுத்தனும் - ஒரு மனித உடல்ல தன் தினசரி உணவை தேடவே 11 கிமீ சுத்தற அளவுக்கு சக்திய வச்சிருக்காம் இயற்கை. உங்க வீட்ல ரீடிங் ரூமுக்கும், டைனிங் டேபிளுக்கு எவ்ளோ தூரம் இருக்கு தலைவா? இதுல சில பார்ட்டிங்க மேகிய வச்சுக்கிட்டு ரீடிங் ரூம்லயே, டிவி பார்த்துக்கிட்டே கொறிச்சுர்ராய்ங்க.ஏன்யா வராது ஷுகரு.. ஏன்யா வராது ஆண்மைகுறைவு
சூரியன் நல்ல இடத்துல இருந்தா வூடுதங்க விடாது. சுத்தவைக்கும். சுத்த சுத்த வலிமை கூடும். உலக அறிவு கூடும். இப்படியாகொத்தவனை தான் பொம்பளை விரும்புவா.அட்லீஸ்ட் இப்படியாகொத்தவனோட தான் சண்டை போடவும் விரும்புவா..
உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்களுக்கும் இவர் தான் காரகம். இங்கல்லாம் ஏதோ ஒரு நா ரெண்டு நாளுன்னா மந்திரி மச்சான், மாமன்னா மதிப்பாய்ங்க, உங்களுக்கா மதிப்பு வேணம்னா நீங்க இந்த ஏரியாவுல நோட்டட் பர்சனா இருக்கனும். அப்படி இருந்தா மந்திரிகளும் உங்ககிட்டே தொங்குவாய்ங்க. இதுக்கும் சூரியபலம் தேவை. இதுக்கு அப்பாவோட இமேஜும் உதவும்/
ஒளிவு மறைவற்ற பேச்சை தர்ரவரு சூரியன். இவர் வீக்கா இருந்தா பாயிண்டுக்கு வரவே பத்து நாள் பிடிக்கும்.எதிராளி "யோவ் ச்சொம்மா சொதப்பாம விசயத்துக்கு வான்னிருவான்" அப்ப பக்கத்துல பொஞ்சாதி இருந்தா வாயிதா போயிரும்.
திறந்த வெளிக்கு சூரியன் தேன் அதிபதி. ஜாதகத்துல சூரியன் சரியில்லைன்னா ஒரு வீ(கூ)ட்டுக்குள்ள அடங்கிக்கிடக்கத்தான் ஜாதகன் விரும்புவான். பொஞ்சாதியே " இன்னாபா.. பஜார்ல ஒன்னும் வேலையில்லியா"னு கேட்டுருவா.
உலகத்தையெல்லாம் விழிக்க வைக்கிறவர் சூரியன். இவர் சரியான இடத்துல அமைஞ்சா இயற்கையோட ஒட்டின லைஃப் கிடைக்கும். ஐ மீன் சூரிய உதயத்துல விழிப்பு - சூரிய அஸ்தமனத்துல வீட்டை வந்து சேர்ரது.

இதுவே சூரியன் எக்கு தப்பான இடத்துல மாட்டியிருந்தா தூக்கமின்மை அவதிக்குள்ளாக்கும். தூக்கமாத்திரைக்கு வழக்கப்பட்டுட்டா மீளவே முடியாது. இப்படிப்பட்ட கிராக்கிங்கதான் செக்ஸை தூக்க மாத்திரையா யூஸ் பண்றது.

ஒனக்கு தூக்கம் கிடைக்குது சரி.அவளுக்கு உச்சமும் கிடைக்காம் தூக்கமும் கெட்டா என்னாகும்? சுயம் (செல்ஃப்), அகந்தை ( ஈகோ) க்கும் சூரியன் தான் காரகர். இவர் எந்த அளவுக்கு ஜாதகத்துல பவர்ஃபுல்லா இருந்தா அந்த அளவுக்கு சுயம் பிரகாசிக்கும். அகந்தை கட்டுக்குள்ள இருக்கும்.

பலான மேட்டர்ல மட்டும் சுயமரியாதை, கவுரவம்னு போனா வெட்டி ..லு நித்திரைக்கு கேடு கதையாயிரும். சூரியபலமிருக்கிறவனுக்கு எப்ப எதை எப்படி எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கிறதுனு தெரியும். விட்டுக்கொடுத்ததை மீட்டுக்கிடவும் தெரியும்.

சூரிய பலம் இல்லாதவனுக்கு இது எதுவுமே தெரியாது. மாட்டிக்கிடு முழிப்பான். ஆக கில்மாவுல புகுந்து விளையாடனும்னா சூரியபலம் அவசியத்திலும் அவசியம்.

Thursday, February 3, 2011

கிரக பலமும் கில்மாவும்: 1

அண்ணே வணக்கம்னே.. ஒவ்வொரு தொடரை முடிச்சதுமே " இத்தீனி நாளு எப்படியோ காலத்தை ஓட்டியாச்சு..இனி என்னத்த எழுதறது"னு ஒரு திகில் பரவும். ஆனால் பாருங்க முருகர் முக்தித்தருனு  அடியெடுத்து தர அருணகிரி நாதர் எழுதின மாதிரி,  வியாசர் சொல்ல சொல்ல எழுதின வினாயகர் மாதிரி அதும்பாட்டுக்கு போய்க்கினே கீது.

எல்லாம் நல்லாருக்கு தம்பி.. எல்லாத்துலயும் கில்மாவை ஏன் கொண்டு சேர்க்கறேனு அண்ணன் மாருங்க சிலரு கேட்கிறாய்ங்க. நான் என்ன ஆருக்காச்சும் எச்சி உமிஞ்சி சத்தியமா பண்ணி தந்திருக்கேன்.கூகுல் ஸ்டேட்ஸ்ல  டாப் டென் போஸ்டு எதுனு பார்த்தா இந்த சமாசாரம்தேன் மொதல்ல நிக்கிது.

நான் எழுதறது நான் மட்டும் வாசிச்சிக்க இல்லை. நாலு பேரு ( ஹி ஹி..இப்பல்லாம் அபவ் 500 தேன்) படிக்கனும். சுஜாதால்லாம் போண்டாவுல விஷம் வச்சாய்ங்க. நான் கசப்பு மாத்திரைக்கு ஷுகர் கோட் தரேன். நல்லதை நல்லவழியிலயே சாதிக்கிறது ராமரோட ரூட்டு. நல்லதை கெட்ட வழியில போயாச்சும் சாதிக்கிறது கிருஷ்ணர் வழி.

என் நோக்கம் புனிதமானது. ஆன்மீகத்துக்கான முதல் படி கில்மாதான். "காமி கானி வாடு மோட்ச காமி காலேடு" காமத்தை கடந்து வரனும்னா ( ஓஷோ ) அதை என்னா ஏதுனு நிறுத்தி நிதானமா விசாரிச்சுரனும். சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவனையும் சந்தோசப்படுத்துவான். ஒன்னு நாலாகி நாலு நாற்பதான ஒட்டு மொத்த  சமூகமே சந்தோசமா மாறும். தெலுங்குல "சந்தோஷம் சகம் பலம்"னுவாய்ங்க.

மனுஷன் என்னா செய்தாலும் அதும்பின்னாடி இருக்கிற ரெண்டே உந்துதல் கொல்லுதல்,கொல்லப்படுதல். இது ரெண்டுமே  விழிப்பு,ஆழத்துடன் கூடிய செக்ஸுல சாத்தியம். ( காரே மூரேனு காஞ்ச மாடு கம்பங்கொல்லைல விழுந்த மாதிரி செயல்பட்டா செக்ஸுல கூட  இது சாத்தியமில்லாம போயிரும்)

செக்ஸ் மறுக்கப்பட்டா, செக்ஸ் தடை செய்யப்பட்டா,செக்ஸுல உண்மையான ஆர்காசம் கிட்டலின்னா அது வன்முறையா, பண வெறியா, பதவி வெறியா மாறி வெளிப்படுதாம். அதென்ன உண்மையான ஆர்காசம்னு கேப்பாய்ங்க.

ஆணுக்கு ஜஸ்ட் செமன் வெளிப்பட்டா அது ஆர்காசம்னு நினைக்கிறாய்ங்க. இது தவறு ஒரு முறை ஈடுபட்டா பத்து பதினைஞ்சு நாளைக்கு அந்த எண்ணம் கூட வரக்கூடாது. அப்பத்தேன் காரியம் முறைப்படி நடந்திருக்குனு அர்த்தம்.

குறைஞ்ச மார்க் வந்தவுக இம்ப்ரூவ்மென்டுக்கு கட்டின கதையா தினம் தினம் அதே  நினைவு வந்தா காரியம் முறைபப்டி நடக்கலைனு அர்த்தம்.பெண்கள் நிலை இதை விட மோசம். பார்க்க லேட்டஸ்ட் சர்வேக்கள்.

ஓகே ஓகே முன்னோட்டம் போதும் விஷயத்துக்கு வரேன். கடந்த 12 தினங்களாக  செக்ஸ் விஷயத்துல சக்ஸஸ் ஆக  துவாதசபாவங்கள் எப்படி இருக்கனும்னு விவரிச்சேன்.

நாளைலருந்து சக்ஸஸ் ஃபுல் கில்மாவுக்கு ஒன்பது கிரகங்களின் நிலை எப்படி இருக்கனும். ஒன்பது கிரகங்களும் கில்மாவுக்கு எப்படியெல்லாம் ஹெல்ப் ஃபுல்லா இருக்குதுனு பார்ப்போம். பை தி பை எந்த கிரகமாவது சோனியா இருந்தா அதனோட எஃபெக்ட் என்ன? அதை எப்படி ஓவர்கம் பண்றது? அதுக்கு லாஜிக்கல் ரெமிடீஸ் என்னங்கறதையும் பார்ப்போம்.

நம்ம வலைப்பூக்கள் எல்லாமே நித்ய கண்டம் பூர்ணாசுதேன். எப்ப ஆரு தடை பண்ணுவாய்ங்கனு தெரியாது.அதனால உடனே சைட்ல மெம்பராயிருங்க..ட்
உடு ஜூட்

Tuesday, February 1, 2011

பிரபல பதிவர் முருகேசன் கருகி சாவு


பிரபல பதிவர் முருகேசன் கருகி சாவு
டிஜிட்டல் பேனர் வைக்கும்போது
உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது
சித்தூர்(பிப்.3)

ஆந்திர மானிலம்,சித்தூரை சேர்ந்தவர் முருகேசன். இவர் சித்தூர் பஜார் தெருவில் உள்ள தம் அலுவலக முகப்பில் டிஜிட்டல் பேனர் வைக்கும் போது பேனரின் இரும்பு சட்டம் உயர் அழுத்த மின் கம்பியில் உராய்ந்தது. மின்சாரம் தாக்கியது. பரிதாபமாக கருகி செத்தார். தகவல் அறிந்த டூ டவுன் போலீஸார் சம்பவ ஸ்தலத்துக்கு வந்து முருகேசன் உடலை கைப்பற்றி பிணப்பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

முருகேசன் வலையுலகத்தில் பிரபல பதிவராகவும் இருந்தார். 2009 மே முதலான 20 மாதகாலத்தில் 3 லட்சம் ஹிட்சை நெருங்கிகொண்டிருந்த நிலையில் திடீர் என்று இறந்ததை அடுத்து பதிவுலகத்தினர் அஞ்சலி தெரிவித்து பதிவுகள் போட்டுவருகின்றனர்

இப்படி நாளை ஏதேனும் ஒரு தெலுங்கு தினசரியிலாவது செய்தி வெளியாகியிருக்கும்.ஆனால் பிராமணாள் தபஸ் போதலியோ, என் பக்கம் தர்மம் இருந்ததோ பை மிஸ்டேக் தர்மம் இருக்கிற பக்கம் நான் இருந்தேனோ கையில தினசரியில வர்ர தலைப்பிலான கொட்டை எழுத்து ப்ராக்கெட் மாதிரி ஒரு ஆழமான தீப்புண்ணும் ,மணிக்கட்டுக்கு பின் புறம் அந்த காலத்து கல்பனா கேக் சைஸ்ல ஒரு தீப்புண்ணுமா தப்பிச்சேன். இதை நான் இங்கன சொல்றது ஏதோ உங்க அனுதாபத்தை வாங்க இல்லை.


என் எழுத்துக்களுக்கு மூலம் என்னோட அப்சர்வேஷன் தேன். என்னோட அனலிட்டிக்கல் கெப்பாசிட்டிதேன். குடுமி அய்யருங்க விடற ஊருக்கு உபதேசத்தை கூட என் அனுபவங்கற உரைகல்ல உரசித்தேன் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்துருச்சு. இதை நான் என் ஸ்டைல்ல அனலைஸ் பண்றேன். முடிஞ்சா நீங்களும் சம்பவங்களை அனலைஸ் பண்ண கத்துக்கிடுங்க.


எந்த காலத்துலயும் நாம பிணத்துக்கு அலைஞ்சதில்லை. மசாலா இருந்தா போதும் ரசஞ்சோறு கூட கப கபனு இறங்கிரும். இடையில பாடி பில்டிங் மோஜுல கொஞ்ச நாள் மாட்டுக்கறி தின்னதுண்டு. ஆனால் அதுக்கு பிரதிபலனா பசுவை அகாரணமா வெட்டற மாதிரி என்னை சனம் வெட்டினாய்ங்க. அதை விட்டுத்தொலைச்சாச்சு.

சமீபத்துல ராப்போதுல கஞ்சி குடிச்சா என்னனு ஒரு நல்ல எண்ணம் வந்தது. நல்லது சிங்கிளா வருமா கூடவே ஒரு கெட்டதையும் கூட்டிட்டு தான் வரும்.அதான் லைஃபு.சோத்தைதான் கட் பண்ணிட்டமே வெஞ்சனமா ரெண்டு பீஸ் சிக்கன் பக்கோடா கட்சிக்கினா இன்னாங்கற கெட்ட எண்ணம் வந்தது.
இடது உள்ளங்கையில கரீட்ட சுக்ர மேட்ல ப்ராக்கெட் தனமா ஏற்பட்ட தீப்புண்ணை பார்த்தா சிக்கன் பக்கோடா பீஸ் மாதிரியே இருக்குதுங்கண்ணா.

ஆமா நம்ம ஜாதகத்துல செவ் 4ல தானே இருக்காரு. அப்பாறம் இந்த ரேஞ்சுல எப்டி இந்த சீன் நடந்ததுன்னு ரோசிச்சேன். கூட இருந்தது என் மகள். அவளுக்கு ஜாதகத்துல எட்டுல செவ். கோசாரம் எப்படினு பார்த்தா செவ் மகரத்துல உச்சம். பிப்ரவரி 15 ஆம் தேதி கும்பத்துக்கு வரப்போறாரு. இது அவளோட மீனராசிக்க்கு லாப/விரய ஸ்தானங்களாகுது. அவளோட லக்னத்துக்கு 6 /7ஆம் ராசியாகுது.

சரி செவ்வாய் ராசி மாறி வர்ரதுக்கு ஒருவாரம் முன்னாடி எஃபெக்ட் கொடுக்கலாம்.அப்ப பிப்ரவரி 8ஆம் தேதிக்கு மேலதானே எஃபெக்ட் கொடுத்திருக்கனும்.

செவ் தற்போதுள்ள மகரமும் , பிப்ரவரி 15 க்கு மாறப்போற கும்பமும் என்னோட கடகலக்னத்துக்கு 7/8 + சிம்மராசிக்கு 6/7 ஆவது ராசிகளாகுது. ஆக கெட்ட நேரம்னா பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு மேல - முன் கூட்டி பலன் தர்ராப்ல இருந்தா 8ஆம்தேதிக்கு மேலதானே வேலை செய்திருக்கனும்?

இதென்ன 2ஆம் தேதியே செவ் பல்பு கொடுத்துட்டாரு? அஞ்சு நாள் அட்வான்ஸாயிருச்சு.. பஞ்சாங்க கணக்கு தப்பா?

2009,செப் 9 துலா ராசிக்கு சனி பிடிக்கப்போறாருன்னா செப் 2 ஆம்தேதியே ஒய்.எஸ்.ஆர் போய் சேர்ந்துட்டாரு. அவருது துலா ராசி..

பஞ்சாங்கம்,ஜோசியம்லாம் கடவுள் கையில கீற அஜெண்டாவை காப்பியடிக்கிறாப்லதான். கொஞ்சம் முன்ன பின்னேதான் இருக்கும்போல..

மூணு மாசத்துக்கு முந்தி மேற்படி ஆஃபீஸ் முடிவானதுமே பந்தாவா பேனர் போட்டாச்சு. ஆஃபீஸ் பால்கனி க்ரில்லுல பில்டிங் ஓனருக்கு க்ளாஸ் மெட்டான ஒரு ஃப்ரிட்ஜ் ரிப்பேர் கடைக்காரரு தன்னோட டிஜிட்டல் பேனரை வச்சிருந்தாரு.

என் மகள் அப்பா.. மொதல்ல அதை கழட்டி வீசாட்டுப்பான்னு கொம்பு சீவினா நானு அட விடுப்பா பாவம் எவ்ள காலமா வச்சிருக்காய்ங்களோ அதும்பாட்டுக்கு இருந்து போவட்டும் . நாம உள்பக்கமா சுவத்தோட சுவரா தொங்க விட்டுரலாம்னேன்.

ஆனால் தொங்க விட்ட பிறவு பார்த்தா அது இருக்கிற மாதிரியே தெரியலை. தாளி ஒரு ட்யூப் லைட், ரெண்டு மூணு சீரியல் செட்டுதான் வேஸ்டு. பவர் வேஸ்டு. மூணு நாள் முந்திதான் நாம வீட்டோட இருந்துக்கிட்டு ஆன் லைன் க்ளையண்ட்ஸையே பார்த்துக்கிட்டிருந்தா ஊர்ல பொழப்பு நாறிரும்.

ப்ளாகை யாராச்சும் தடை பண்ணிட்டா வம்பாயிரும். புருசனை விட்டு அரசனை பிடிச்சு அரசன் கை விட்ட கதையா போயிரப்போவுதுன்னு தயக்கதோடயே நான் வேணாம்ன வேலைக்கு தலையாட்டினேன்.

பாவம் என் பொண்ணும் ஐரன்ல ஃப்ரேம் எல்லாம் ரெடி பண்ணி ,பேனரை கழட்டிக்கிட்டு போய் ஒட்டி ஆட்டோல கொண்டுவந்து பால்கனில கூட ஏத்திட்டா. அந்த நேரம் பார்த்து பாவம் குழந்தை தனியா அல்லாடப்போவுதுன்னு பார்க்க போனேன். பல்பு வாங்கிட்டேன்.

மேலும் அமாவாசை காலை 6.28க்கு துவக்கம்.இதுல மொதல் ஆறு மணி நேரம் கடேசி 6 மணி நேரம் நல்லதில்லைனு ஒரு ரூல். இந்த சீன் நடந்தது 7.45 . நட்சத்திரம் உத்ராடம் .அதிபதி சூரியன். நம்ம நட்சத்திரத்துக்கு 3 ஆவது நட்சத்திரம். சூரியன் இப்ப மகரத்துல இருக்காரு.

செவ் தனியா இருந்தவரை சமாளிச்சாச்சு. அவரோட சூரியன் வந்து சேர தெலுங்கு பதிவுலகில் அனல் வீச ஆரம்பிச்சது. மொத்தத்துல தெலுங்கு பிராமணாள் ரெம்ப பவித்ரமா இருக்காபல் இருக்கு. அவிக வயித்தெரிச்சல் எதாச்சும் வேலை செய்துருச்சா? டிசம்பர் 6 ஆம் தேதி குரு கும்பம் டு மீனம் வந்தாரு. இது ராசிக்கு எட்டு,லக்னத்துக்கு ஒன்பது.

ரெண்டு நாளைக்கு மிந்திதான் ஆன்லைன் நண்பர் ஒருத்தர் ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல வெப் சைட் வச்சித்தரேன்னாரு. நான் உங்க உழைப்ப வேணா தாங்க. நீங்க பே பண்ணவேண்டியது எதுனா இருந்தா நான் பே பண்றேன்னேன். ரூ.500 டொமைனுக்காக நான் கமிட் ஆனேன்.

இதுவல்லாது கடந்த 3 நாட்களா ஒரு ஜாதகம் அஷ்டமஸ்தானம் ஹவுஸ் ஃபுல்.அதுக்குத்தேன் மாஞ்சு மாஞ்சு பலன் அடிச்சிட்டிருந்தேன் .அந்த ஜாதக எஃபெக்ட் இப்படி வேலை செய்ததா?

ரெண்டு மாசத்துக்கு முந்தி ராம் சரண் சினிமாவுக்கு இதே மாதிரி பேனர் கட்டறச்ச நரிக்குறவ இளைஞன் ஒருத்தனும் ரசிகர்கள் 3 பேரும் கருகி செத்தாய்ங்க. அதனோட தீவிரம் உறைச்சாலும் "இதெல்லாம் இவிகளுக்கு தேவையா"ன்னு அசால்டா கிண்டலடிச்சிட்டிருந்தது ஞா வருது. அதனோட தீவிரம் எனக்கு உறைக்கனும்னு இந்த சம்பவம் நடந்ததா என்ன தெரியலை.


வழக்கமா 1992 லருந்து 2003 வரை வருசத்துக்கு 2 தாட்டி ரத்ததானம் பண்ணிக்கிட்டிருந்தேன். இடையில கேப் விட்டு போயிருச்சு. நான் என்னவோ 2010 அக்டோபர் 2 ஆம்தேதி ரத்ததானம் பண்ணத்தான் போனேன்.ஆனா ப்ளட் பேங்க்ல ஸ்டாக் ஃபுல் - டிமாண்ட் நில்னுட்டு திருப்பி அனுப்பிட்டாய்ங்க.

என்னமோ போங்க நான் பிழைச்சது "அவாளுக்கு " சந்தோசத்தை தராதுனு எனக்கு தெரியும். என் நோக்கம் அவிகளையும் சென்ட்ரல் ஸ்ட்ரீமுக்கு கொண்டுவர்ரதுதான். ஜஸ்ட் ஒரே ஸ்டேட்மெண்ட் எனஃப்.

கடந்தகாலத்துல எங்க மூதாதையர் பண்ணதெல்லாம் வடிகட்டின முட்டாள் தனம். அந்த கடந்தகாலத்தை நாங்க திரஸ்கரிக்கிறோம்.அதை நினைச்சு வெட்க படறோம். எங்களையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்கனு சொன்னா போதும். (அவிக சொல்லமாட்டாய்ங்க)

நேத்துகூட ஆர் எஸ் எஸ் சார்புல மல்ட்டி கலர்ல ஒரு ப்ரவுச்சர் வினியோகம் நடந்தது. ஜெயேந்திரரை அரெஸ்ட் பண்ணினதுக்கும் இந்து விரோத போக்குக்கு லிங்க் வைக்கிறாய்ங்க.

ங்கொய்யால ராசா டெலிகாம்ல மாட்டினப்ப கலைஞர் தான் தலித் வாதத்தை முன் வச்சாரே தவிர தலித் சமூகமில்லை.

இந்த ரூட்ல பிராமண குலம் வந்துட்டா அப்பாறம் நான் ஏன் வையப்போறேன். நான் சர்வே ஜனா சுகினோபவந்துங்கறதை பந்தாவா யூஸ் பண்ணிக்கிட்டிருந்தேன்.அதுக்கு மின்னாடி ஒரு லைன் வருதுங்கண்ணா

"கோ பிராம்ஹனேப்யோ சுபமஸ்து நித்யம்"

(கோ = பசுக்களுக்கும் ; ப்ராம்ஹனேப்யோ =பிராமணர்களுக்கும் ; சுபமஸ்து நித்யம் = நித்தம் நன்மை உண்டாகட்டும்)

போங்கடாங்கோ.... இதையெல்லாம் கேட்டுக்கிட்டு, பொத்திக்கிட்டு நூறுவருசம் வாழறதை விட இதையெல்லாம் கேள்வி கேட்டு அரை நிமிசத்துல சாகக்கூட நான் ரெடி..

12ஆம் பாவமும் பலான மேட்டரும்: 2

12 ஆம் பாவம் நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம்ங்கறது ஞா இருக்கும்னு நினைக்கிறேன். கடந்த பதிவுல செக்ஸுக்கும்,செலவழிக்கும் முறைக்கும் உள்ள தொடர்பு பத்தி பொதுவா  பார்த்தோம்.

மரணத்தோட போராட செலவழிக்கிறிங்களா? அல்லது மரணத்தோட நிழல்களோட போராட செலவழிக்கிறிங்களாங்கறத பொருத்து செக்ஸுவல் பிஹேவியர் மாறும்னு கடந்த பதிவுல  சொல்லியிருந்தேன்.

கிரக நிலை:
ஏற்கெனவே  6ஆம் பாவம் பத்தின பதிவுல சொன்னதா ஞா இருந்தாலும் ரிப்பீட்டு (புதிய வரவுகளுக்காக) . 6,8,12 ல்லாம் துஸ்தானங்கள். இந்த பாவங்கள் காலியாயிருந்தா பெஸ்ட். மேற்படி துஸ்தானாதிபதிகளே துஸ்தானங்கள்ள இடம்  மாறி நின்னா பெட்டரு. உதாரணமா:

6ஆமிடத்துல எட்டாமிடத்து அதிபதி, 8ஆமிடத்துல 12 ஆமிடத்து அதிபதி, 12 மிடத்துல ஆறாமிடத்து அதிபதி. இவிக பரிவர்த்தனமும் ஆகக்கூடாது. அவர் ராசியில இவரு கூடாது. ஆட்சி பெறவும் கூடாது.

இந்த இடம் சுபபலமா இருந்தா மரணத்தோடவே மோத ஆரம்பிச்சுருவிங்க.(உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்)

உயிர் வாழ்தலின் அடையாளம் இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் . இதுல ஏதாவது ஒரு ஐட்டத்துல உங்க மைண்ட் ஃபிக்ஸ் ஆயிட்டா போதும் நீங்க மரணத்தோட மோத ஆரம்பிச்சுட்டிங்கனு அர்த்தம்.

சிலகாலம் செக்ஸ் உங்களை கவரலாம். உறவின் சமயத்தை நீட்டிக்க பெரிதும் விரும்புவிங்க. பலர் சக்ஸஸும் ஆகலாம். ஆனா நாளடைவுல இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் ஆகிய அம்சங்களின் மீதான உங்க கவர்ச்சி உங்க பாலியல் ஆர்வத்தை குறைச்சுரும்.இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் தன் உச்சத்துல இருக்கும்போது உங்க ஈகோ காணாம போயிருது. இந்த படைப்போட தொடர்பு கொண்டுர்ரிங்க.  ஒட்டு மொத்த மனித இனமே உங்களுக்கு உறவாயிருது . ஷார்ட்டா சொன்னா உங்க லைஃப்   ஆன்மீக பாதையில தறிகெட்டு  ஓட ஆரம்பிச்சுரும்

இந்த 12 ஆம் இடம் மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு மாறா தீயபலன் தரக்கூடிய வகையில இருந்தா மரணத்தோட நிழல்களோட மோத ஆரம்பிச்சுருவிங்க. ( இருட்டு -தனிமை-ஏழ்மை இத்யாதி). (உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்) இதுக்கு எவ்ள பணமிருந்தாலும் போதாது. நிழல் யுத்தத்துல வெற்றி கிடைக்க வாய்ப்பே இல்லை.அதனால தோத்துட்டதாவே நினைச்சு மறுபடி மறுபடி போராடிக்கிட்டே இருப்பிங்க.

பணம் சம்பாதிக்கனும்னா மக்களோட கொல்லும் இச்சையை நீங்க நிறைவேத்தனும். ( ஈகோவை விட்டுரனும்) . இது கொல்லும் வெறியா மாறும். அதை செக்சுல நிறைவேத்திக்க ட்ரை பண்ணுவிங்க.

ஓரளவு சம்பாதிச்சுட்டா அப்பாறம் நீங்க கொல்ல ஆரம்பிச்சுருவிங்க. இதுக்கு பணம் தேவை. பெரும்பணம். ( முகேஷ் அம்பானி வீடு கட்டினது இன்னாத்துக்கு தெரீமா .. நம்மையெல்லாம் சைக்கலாஜிக்கலா கொல்லத்தான் )  அந்த பணத்தை பெரிய அளவுல சம்பாதிக்க உங்களை நீங்க கொன்னுக்கனும். ( ஐ மீன் உங்களுக்குள்ளே இருக்கக்கூடிய மனிதத்தை,கருணையை )

மனிதனோட பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் ரெண்டும் பணத்தின் மூலமாவே நிறைவேறிர்ரதால ஒரு ஸ்டேஜுக்கு அப்பாறம் செக்ஸை விட பணத்துலயே ஆர்காசம் கிடைக்க ஆரம்பிச்சிரும்.சோகம் என்னடான்னா பொருளாதார ரீதியில உசர உசர சிகரத்துல தான் தனிமை அதிகமா உணரப்படும்.  மறுபடி செக்ஸ் பேட்டைப்பக்கம் ஒதுங்குவிங்க  நடுவயசுல மறுபடியும்  செக்ஸ் உங்களை கவரும். நீங்க அதை தாண்டிவர முடியாம அதுலயே தேங்கிப்போயிருவிங்க.


தூக்கம் Vs செக்ஸ்:

தூங்கிப்போயிட்டா செக்ஸ் கிடையாது. செக்ஸ் வேணம்னா தூங்கமுடியாது. ஆனால் ஒழுங்கா தூங்கி எழுந்தா மைண்டுங்கற கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் பண்ண பிறவு அது லோட் ஆக   டைம் பிடிக்கும். அதனால உச்சத்தை தள்ளிப்போடலாம். அதுவே தள்ளிப்போகும். ஆழ்ந்த செக்ஸுக்கு பிறகு ஆழ்ந்த தூக்கம் வரும்.

செக்ஸும் -மோட்சமும்:

இதை அடுத்த பதிவுல பார்ப்போம். உடு ஜூட்..

12ஆம் பாவமும் பலான மேட்டரும்

நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம் 12 ஆம் பாவம். மொதல்ல ட்
இந்த 4 ஐட்டத்துக்கும் உள்ள பரஸ்பர தொடர்பு என்னன்னு பார்த்துருவம்.

செலவழிக்கும் விதம் Vs தூக்கம்:
மறுபடி மறுபடி சொல்றேனு நினைக்காதிங்க (  நவீன மனிதனின் மறதி எனக்கு தெரியும்ல) மன்சங்க இன்னா பண்ணாலும் அதும் பின்னாடி இருக்கிற ரெண்டே ஆசை 1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல். பணத்தை வச்சிக்கினு இன்னா பண்றோம்னு ரோசிச்சிங்களா?

இருட்டு ,கல்லாமை, தனிமை,பாதுகாப்பின்மை,வாரிசின்மை இதையெல்லாம் மனித மனம்  மரணத்துக்கு சமமா  பார்க்குது. அதனால தான் பணத்தை உயிரா மதிக்கிறோம். உயிரை பணயம் வச்சு பணம் சம்பாதிக்கிறோம். உயிரா மதிக்க வேண்டிய தன்மானத்தை பலி கொடுத்து சம்பாதிக்கிறோம்.

சம்பாதிச்ச பணத்தை வச்சு இருட்டை விரட்டறோம் (கரண்ட் பில் கட்டறோம்),தனிமைய தவிர்க்கிறோம்,  அறிவை விருத்தி பண்றோம்( ஸ்கூல் போறோம், ட்யூஷன் போறோம் -இதெல்லாம் டூ இன் ஒன் ப்ராஸசுங்கோ),வேலை வாய்ப்பு தேடறோம் ( பணத்துக்காக ) ,கண்ணாலம் கட்டறோம் (செக்ஸுக்காக) குழந்தை பெத்துக்கறோம் ( நம்மோட மறுபதிப்பை விட்டுட்டு போக)

இப்படி நை நைன்னு சொல்றதை விட சிம்பிளா சொன்னா பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட யுத்தம் பண்றோம். நீங்க பணம் செலவழிக்கிறதெல்லாம் மரணத்தை ஏதோ ஒரு விதத்துல எதிர்க்கத்தான். இன்னா ஒரு தமாசுன்னா நிஜத்தை விட்டுட்டு நிழலோட ஃபைட் பண்றோம்.

சர்தான்பா இது அல்லாருக்கும் பொருந்தாதே. சில பேரு கரண்ட் பில் கட்டாமயே ,கனெக்சன் கட்டானாலும்  ரீ  கனெக்சன் வாங்காமயெ இருட்லயே வாழ்ந்துர்ராய்ங்களே, படிக்காதவன் நிலை என்ன? தண்டத்தீனிங்க நிலை என்ன? கண்ணாலம் கட்டாதவன் நிலை என்ன? குழந்தை பெத்துக்காம தள்ளிப்போடறவன் நிலை என்னனு கேப்பிக.

சொல்றேன். இவிகளுக்கு ரெண்டு சான்ஸ் இருக்கு ஒன்னு மரணத்தோடயே ஃபைட் பண்ணிக்கிட்டிருக்கலாம் (நிஜத்தோட) அ தாளி அந்த மரணம் என்ன என்னை தேடிவர்ரது நானே தேடிப்போறேன் அதைங்கற நினைப்புல இருக்கலாம் ( ஐ மீன் சப்கான்ஷியஸா)

ஆக நீங்க செலவழிக்கிற விதம் ரெண்டா இருக்கலாம்

ஒன்னு:

மரணத்தோட நிழல்களோட மோதறது  அல்லது மரணத்தை ஒத்திப்போடறது. (க்ளைமேக்ஸ்ல தான் புரியும் உங்க முயற்சிகள் உங்களை  நிஜமான மரணத்தை நோக்கியே உங்களை செலுத்தியிருக்கிறதை

ரெண்டு:
மரணத்தை அதனோட எந்த வடிவத்துலயும் எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிர்ரது. ஏழ்மை ,இருட்டு,தனிமை,நிராகரிப்பு ..இப்படி எந்த வடிவத்துல வந்தாலும் தப்பியோட பார்க்காம முழுக்க ஃபேஸ் பண்றது விட்டா அனுபவிக்கிறது.

தற்கொலை எண்ணங்களோடு  மோதறது .( கணக்கு வழக்கில்லாத தீனி, தூக்கம் ,செக்ஸ், இல்லீகல் அண்ட் இம்மாரல் எர்னிங்ஸ் எல்லாமே தற்கொலை எண்ணங்களோட வெளிப்பாடுதேன்.

இந்த ரெண்டு கேட்டகிரில நீங்க எந்த பக்கம்னு பார்த்துக்கனும்.

நீங்க மொதல் கேட்டகிரியா இருந்தா  மரணத்தோட நிழல்கள்,உருவகங்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கி கை கால் உதறி கச்சாமுச்சானு சம்பாதிக்கதுடிப்பிங்க. சம்பாதிப்பிங்க. தாளி "இத்தீனி சாவு செத்து சம்பாதிச்சது செலவழிக்கத்தானே"ன்னு செலவழிக்க ஆரம்பிச்சிருவிங்க.

உங்களோட கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டுமே பண விஷயத்துலயே ஒர்க் அவுட் ஆயிர்ரதால செக்ஸ் மேட்டர்ல ஈடுபாடு போக போககுறைஞ்சுரும்.

இதுவே செகண்ட் கேட்டகிரியா இருந்தா இருட்டுக்கு அஞ்சமாட்டிங்க (இருட்ல தான் செக்ஸ் பீறிட்டு கிளம்பும்)  தனிமைக்கு அஞ்ச மாட்டிங்க. . நிராகரிப்புக்கு அஞ்ச மாட்டிங்க இப்படி மரணத்தோட எந்த நிழலுக்கும் அஞ்சாம மரணத்தையே எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிருவிங்க. வீரிய ஸ்கலிதத்தின் போதான அந்த குட்டி மரணம் உங்களை பெரிதும் கவரும்.

( சமிக்கனும்.. இது ஏதோ துக்கடா சப்ஜெக்டு ஒரு சாப்டர்ல அடிச்சு விட்டுரலாம்னு நினைச்சேன்.. ஊஹூம் இது பெண்டை நிமிர்த்திரும் போல இருக்கு - எனவே...................

தொ..............ட...................ரும்

Sunday, January 30, 2011

பத்தாம் பாவமும் படுக்கையறை சுகமும்

ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது  இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ஆனாலும் எதுக்கிந்த பாவி,பாம்பு சமாசாரம்? இதுக்கும் படுக்கையறை சுகத்துக்கும் என்ன சம்பந்தம்? கேப்பிக சொல்றேன்.

9ஆவது இடத்தை தர்ம ஸ்தானம்னும் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதுல பெரிய சூட்சுமம் இருக்கு. 9ங்கறது சொத்தை காட்டற இடம். உங்க கணக்குல தர்மம் இருந்தாதான் சொத்து  இருக்கும். சொத்து இருந்தா நிலையான வருமானம் இருக்கும். கு.ப வருமானவரியை குறைக்கவாச்சும் செய்விக.

பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்.............னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.

இதை பாலன்ஸ் பண்ணா நல்லாருக்குமே - இது ரெண்டும் சேர்ந்திருந்தா நல்லாருக்குமேனுதான் இந்த ரெண்டு பாவாதிபதியும் சேர்ந்தா நல்லது .அது தர்ம கர்மாதிபதியோகம்னு சொல்லியிருக்காய்ங்க. சொத்தும் இருக்கும் -நிலையான வருமானமும் இருக்கும் -கூடவே கருமமும் செய்விக (தொழில்) சாரிட்டியும் அமோகமா நடக்கும் . இது பெட்டருனு நினைச்சாப்ல இருக்கு.


ஆனால் எத்தனையோ வள்ளல்களோட வாரிசுகள் இன்னைக்கு பிச்சையெடுக்கிறதை பார்க்கிறோம் படிக்கறோம். இது எப்டி? எப்டி? எப்டி? 

நீங்க மூதாதையரோட சொத்துல கிடைச்ச பணத்தால சாரிட்டி பண்ணா அந்த மூதாதையர்களோட கருமம்தான் தொலையும், உங்க கருமம் தொலையாது. இன்னம் சொல்லப்போனா அவிக கருமம் வந்து உங்க தலையில உட்காரும்.

சரிங்க .. நான் தொழில் செய்து பொருளீட்டி தர்மம் பண்றேம்பிங்க. தொழிலே கருமம்தேன். வியாபாரம் த்ரோஹ சிந்தஹா.

நாம பாவம்ங்கறது பென்சில் எழுத்து -புண்ணியங்கறது ரப்பர் மாதிரினு நினைக்கிறோம். அது தப்பு. அன்னமாச்சாரி "தெகது பாபமும் -தீரது புண்ணியம்"ங்கறாரு.

பாவம் அறுந்து போகாது. புண்ணியம் தீர்ந்து போகாதுனு அர்த்தம். ரெண்டும் ரெண்டு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். அப்ப நான் தொழிலே செய்ய கூடாதானு கேட்கலாம். செய்யலாம். ஆனால் நான் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன், நான் கர்ண மகா பிரபு தானம் பண்றேன் தர்மம் பண்றேன்னெல்லாம் கிளம்ப கூடாது.

நம்ம தேவைக்கு+ எதிர்கால பாதுகாப்புக்கு  பொருளீட்டின பிறவு  ஃப்ரீயா உடுமாமேனு  விட்டுரனும். இன்னைக்கிருக்கிற நிலைமைக்கு ஒழுங்கு மரியாதையா மானம்,ஈனம்,சூடு ,சுரணை எல்லாத்தயும் விட்டுட்டு "பொழப்ப" பார்த்தா ,சிக்கனமா வாழ்ந்து பத்துரூபா எடுத்து வச்சா இந்த மாதிரி ஒரு திட்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிச்சா ஒரு பத்து வருஷம் தொழிலை தொழிலா செய்தா போதும் . அப்பாறம் ரிட்டையர்டு லைஃபுக்கு வந்துரனும்.

உனக்கு பசி . ரோட்டோரம் ஏதோ தோட்டம் இருக்கு. பசிக்கு ரெண்டு பழம் சாப்பிட்டே. ரெண்டை மடில கட்டிக்கினே. போய்க்கினே இரு. நீ என்ன பாடையில போறவரை  கூடையில எடுத்து  கூப்டு கூப்டு தர்மம் பண்றது? தோட்டத்துலயே விட்டுரு.  உனக்கு பின்னாடி பசியோட வர்ரவன் ரெண்டை தின்னுட்டு ரெண்டை மடில கட்டிக்கிட்டு போவட்டும்.

அடடா..பதிவு  ரெம்ப சீரியஸா போயிட்டாப்ல இருக்கு.  பத்து தொழில் ஸ்தானம். இங்கன பாபகிரகமோ,பாம்புகிரகமோ இருந்தாதேன் மனுசன் "எதையோ" ஒன்னை பண்ணி துட்டு சேர்ப்பான். துட்டு சேர்த்தாதேன் பொஞ்சாதி. ( கொண்டு வந்தால் மனைவி).

பணம் சம்பாதிக்கனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய  கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா)  இல்லை நீங்க சாகனும். தொழில்ல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கொலைவெறி ஏறும். இது தீர நீங்க செக்ஸ்ல இறங்க வேண்டி வரும்.செக்ஸ் லைஃப் ஓஹோ தான்.

கொல்றதுன்னா எதிராளியோட  ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)

இதுக்கு சின்னதா ஒரு  உதாரணம்:


கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்

வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை

இதுல கடைக்காரரோட செக்ஸ் லைஃப் சூப்பரா இருக்கும். வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை இங்கேயே நிறைவேறிட்டதால அவரோட செக்ஸ் லைஃப் நியூஸ் ரீல் மாதிரிதேன் இருக்கும்.

தொழில் ஸ்தானத்துல பாவகிரகம்,பாம்புகிரகம் உள்ளவன் எதையோ உருட்டி பிரட்டி, பொய்யோ,புரட்டோ பண்ணி ஒப்பேத்தி பணம் சம்பாதிச்சுருவான் - குடும்பத்துல ,சமூகத்துல அவனோட சர்வைவல் ஓகே ஆயிரும். நேச்சுரலாவே அவனுக்குள்ள தன்னம்பிக்கை பெருகும்.ஆண்மை பெருகும். கில்மால விளையாடுவான்.

பை சான்ஸ்.  பத்துல சுபகிரகம் இருக்குதுனு வைங்க உஞ்ச விருத்திதேன். அவன் ஆன்மீக ரீதியில பெரிய ஆளா வளரலாம்.ஆனால் லோகாயதமா பார்த்தா அதுவும் செக்சுவலா பார்த்தா வீக்குதேன். இதை வீக்குனு சொல்ல முடியாது. சுலபமா தாண்டிருவான்.

சரிங்கண்ணே என் ஜாதகத்துல பத்துல கிரகமே இல்லையேனு ஃபோன் பண்ணிராதிங்க.அந்த பாவம் காலியா இருந்தாலும் அந்த பாவாதிபதி பாபியா சுபனா எங்க நின்னாரு பத்தை ஆரு பார்க்கிறாய்ங்கங்கறத பொருத்து தொழிலும் , கில்மாவும் அமையும். உடு ஜூட்டு..