'>
Showing posts with label ராசி பலன். Show all posts
Showing posts with label ராசி பலன். Show all posts

Monday, February 14, 2011

குரு பெயர்ச்சி பலன்கள் 2011


அண்ணே வணக்கம்ணே,

நான் எழுதின 2010 குரு பெயர்ச்சி பலன்களுக்கு 15 ஆயிரத்துக்கு மேல ஹிட்ஸ் கிடைச்சிருக்கு. கோசார பலனோட எஃபெக்ட் 20 முதல் 30% . கோசார பலன் வேலை செய்யுதுன்னா உங்க ஜாதகத்துல தாக்கத் இல்லேனு அர்த்தம். உங்க ஜாதகம் தேன் காரு. தசாபுக்தி ரோடு. அப்ப கோசாரம்? முன்னே அடிக்கிற காத்துனு வேணா வச்சுக்கலாம்.

இதையெல்லாம் சொன்னா கேட்டுக்கவா போறிங்க? எத்தீனி பத்திரிக்கையில எத்தீனி விதமா பலன் போட்டாலும் அல்லாத்தையும் ஒரு தாட்டி புரட்டத்தான் போறிங்க.


அது சரிப்பா எங்கேப்பா குருபெயர்ச்சி பலனுன்னு நீங்க துடிக்கிறது தெரியுது.நம்ம சைட்டு போனியாகாம கிடக்கு. அதனால பலனை நம்ம சைட்ல போட்டேன். இங்கே அழுத்தி படிச்சுருங்கண்ணா.

Sunday, February 6, 2011

உங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம்னு வாத்தியார் பாடி வச்சிருக்காருங்கண்ணா. உங்களை மட்டுமில்லை உங்கள சுத்தி இருக்கிறவுகள கூட அறிஞ்சிக்கிட்டா நெஜமாலுமே வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காம வாழலாங்கண்ணா. உங்க ஜன்ம ராசி/லக்னத்தை வச்சு உங்க கேரக்டரை சொல்லியிருக்கேண்ணா.

உங்க ராசிய நீங்க எப்படி டிரைவ் பண்ணிங்கங்கறது ரெம்ப முக்கியம் ஜாதகம், நட்சத்திரம்,பாதம், சந்திரனோட இருப்பை வச்சு டிரைவ் பண்ணியிருந்தா ரெம்ப நல்லது. அதான் சைன்டிஃபிக் அப்ரோச்.ஜாதகப்படி வைக்கப்பட்ட பெயர்ல முதலெழுத்தை வச்சு பார்த்தாலும் ஓகே. டோனி, பிங்கி மாதிரி இஷ்டாத்துக்கு வச்ச பேரை வச்செல்லாம் பார்க்கிறதை விட 12 கேரக்டரையும் படிங்க. உங்களுக்கு எது செட் ஆகுதோ அதான் உங்க ராசி ஓகே.(அனுபஜோசியம்னா இதான் பாஸ்!)

வெறுமனே உங்க கேரக்டரை மட்டும் கண்டுகிட்டு பக்கத்தை மூடிராதிங்க. உங்க அப்பா,அம்மா, அப்பப்பா,அம்மம்மா ( சிலோன் ரேடியோ சொல்வாய்ங்களே அந்த மாதிரி ) எல்லாரோடதையும் படிக்கனும்ல . பேசாம ஒரு ப்ரிண்ட் அவுட் கொண்டு போயிருங்க. ஒதவும்.

ஒரு ஹ்யுமேனிஸ்டான ஜோசியரா எந்த வித ஒளிவு மறைவுமில்லாம ரூ.250 கன்சல்டன்ஸி ஃபீஸா தர்ர க்ளையண்ட்ஸுக்கு சொல்ற பலன்களை அப்படியே இங்கன தந்திருக்கேண்ணா. பொத்தி பாதுகாத்துக்கங்க. இந்த பக்கத்தை ஆர்க்குட்,ஃபேஸ்புக்,கூகுல் புஸ்,டிவிட்டர் இப்படிப்பட்ட சைட்ல இருக்கிற உங்க ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் கண்ட மேனிக்கு ஷேர் பண்ணுங்க அண்ணாத்த ! அதென்னமோ ஓட்டு ஓட்டுங்கறாய்ங்களே அதையும் போட்டுத்தான் தொலையுங்களேன்.

உங்களை பத்தியும் தெரிஞ்சிக்காம,உங்கள சுத்தி உள்ளவுகளை பத்தியும் தெரிஞ்சிக்காம கோதாவுல இறங்கறது தற்கொலைக்கு சமானம்.

கட்டுச்சோறு கட்டிக்கொடுத்த மாதிரி வெறுமனே பலனை கொடுத்தாலும் படிச்சிட்டு போயிருவிக. இருந்தாலும் மனசாட்சி கேட்கமாட்டேங்குது . நிறைய ஜோசியர்ங்க இப்படித்தான் புஸ்தவத்தை படிச்சு மனப்பாடம் பண்ணி கதை பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. ஆனால் நான் இந்த பலனை ஒர்க் அவுட் பண்ண வழியையும் சொல்லி வைக்கிறேண்ணா.

உங்கள்ள ஆர்வமுள்ளவுக கொஞ்சமா முக்கினா மஸ்தா மேட்டரு வெளிய வருங்கண்ணா. அதை எல்லாம் எனக்கு மெயில் பண்ணா நம்ம வலைப்பூவுல வெளியிடறேங்கண்ணா.

ராசி/லக்னங்களின் குண நலனை அறிய வழிகள்:
1.முதல்ல அந்த ராசிக்குனு கொடுத்திருக்கிற படத்தை பாருங்க. சின்னவயசுல படம் பார்த்து கதைசொல்லு வந்திருக்கில்ல. நம்ம ரிஷிகள் மகரிஷிகள் வெறுமனே கதை பண்ணிட்டு போயிரல தம்பி ! நிறைய ரோசிச்சு நமக்கெல்லாம் க்ளூ கொடுத்துட்டு போயிருக்காய்ங்க.
2.மேஷத்தை முத ராசியா கொண்டா உங்க ராசி எத்தனையாவது ராசினு பாருங்க. துவாதச பாவங்கள் தெரியுமில்லை. பாவ காரகத்வம் தெரியுமில்லை. அந்த ராசியை பாவமா கொண்டா அந்த பாவ காரக்த்வத்துக்கும் உங்க ராசிக்கும் பிரிக்க முடியாத ஒரு லிங்க் இருக்கிறதை புரிஞ்சிக்கிடலாம்.
3.உங்க ராசி/லக்னத்துக்கு அதிபதி யாருனு பாருங்க. அவரோட காரகத்வம் என்னனு பாருங்க. அவரோட காரகத்வம் உங்க லைஃபை நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். குளிர் காயறச்ச ரெம்ப நெருங்கியும் போயிரக்கூடாது (தோல் வெந்துரும்) ரெம்ப எட்டியும் வந்துரக்கூடாது குளிரும்னு சொல்லுவாய்ங்க. உங்க லக்னாதிபதி/ராசியாதிபதி உங்களுக்கு ரெம்ப நெருக்கமாயிர்ரதால தன்னோட காரகத்வத்துல கொஞ்சம் போல தீங்கும் செய்துருவாருங்கோ.

இனி உங்க குண நலன் களை பார்ப்போமா?
1.மேஷம்:
இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)
போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா? விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா உங்க மாதிரி பார்ட்டிங்கள விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான்.
2.ரிஷபம்:
இவிக குழந்தை மாதிரி .அல்ப்ப சந்தோஷி. எதிராளி கொஞ்சம் போல அக்கறையோட பேசினா போதும் மனசுல எதுவும் வச்சிக்காம உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி வம்பில் மாட்டிப்பாய்ங்க. ஆனா போக போக மித பாஷியாயிரவும் வாய்ப்புண்டு. (முக்கியமா பெண்கள்) கொடுத்த பேச்சை காப்பாத்தனும்னு துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பாரு. . தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லனாக பெயரெடுக்கலாம். மாற்றங்களை விரும்பாத ராசி இது. செக்கு மாடு மாதிரி ரொட்டீனுக்கு பழக்கப்பட்டவுக. பணம், பேச்சு, குடும்பம்னால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே இந்த விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்ப உறவுகளில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
3.மிதுனம்:
மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். அதே போல் உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம். இவிக வாழ்க்கைல மரண சமானமான ஒரு துக்கமோ, நஷ்டமோ வந்தா உடனே ஒரு சொத்து வாங்கற அமைப்பு ஏற்படும். பட்டுனு ஒரு லிஃப்ட் கிடைக்கும். தூர தேசத்துலருந்து உதவி வரும்.

4.கடகம்:
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
திடீர் கோபம் கொள்ளுதல், சில நிமிடங்களில் சமாதானமடைதல். பெரிய்ய விஷயங்களை சகித்து கொள்ளுதல், சின்ன விஷயங்களுக்கு பெரிதாக கோபித்தல் இத்யாதி குணங்களால் இவர் எப்படித்தான் பிழைக்க போகிறாரோ என்ற எண்ணம் குடும்பத்தார் மனதில் ஏற்படலாம். வீடு கட்ட முனையும் போது ரொம்ப யோசனைகள் செய்தல் அடிக்கடி திட்டத்தை மாற்றுதல் வேண்டாம். முடிந்தவரை காண்ட் ராக்ட் மூலமாகவே கட்டிக்கொள்ளவும். கையில் முழுப்பணத்தை வைத்துக்கொண்டே இறங்கவும். இந்த லக்னக்காரர்கள் வீடுகட்ட ஆரம்பித்து அதை ஒரு தவணையில் முடிப்பது சந்தேகமே
இவர் கடல் போன்றவர். கடலின் கரையோரம் அலையடித்தபடி இருக்கும். அதே போல் இவரும் ஒதகாத மேட்டருக்கெல்லாம் பதைச்சுக்கிட்டு இருப்பார். கடல் ஆழத்துல ரெம்ப அமைதியா இருக்கும். இவருக்குள்ளயும் ஆழ்மனதில் ஒரு வித அமைதி இருக்கும்.
கடல்ல எப்படி அனைத்துவகையான தண்ணீரும் வந்து சங்கமமாகிறதோ அதே போல் இவரும் பல்வேறு நபர்களின் குண நலன்களை கிரகித்து வெளிப்படுத்துவார்.
முகம் பார்க்கும் கண்ணாடி. எதிரில் நிற்கும் நபரின் முகமே ,முகபாவனையே இவரை ரெஸ்பாண்ட் ஆக வைக்கும். நேத்து முந்தா நேத்து நடந்ததெல்லாம் கணக்கு வைக்கமாட்டார்.
நேத்து என்ன நடந்திருந்தாலும் இன்னைக்கு நீங்க சினேக பூர்வமா புன்னைகைச்சா இவரும் உடனே ஸ்மைல் பண்ணுவார்.
இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் இருக்கும். தெய்வ பக்தி, இன்னபிற சென்டிமென்ட்ஸ் இருக்கும். தன்னை யாராவது காப்பாத்தனும்னு நினைக்கிறவரு. அதே சமயத்துல தன்னை சரணடைஞ்சவங்களை காப்பாத்த பெரிய பெரிய ரிஸ்க் எல்லாம் எடுப்பாரு.
5.சிம்மம்:
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், (அல்லது இவர் வளர வளர தந்தையின் நிலை பலகீனமடைந்து வரும்) தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.
தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட். இவரை கண்டிப்பதோ,குறை கூறுவதோ கூடாது. மீறி செய்தால் நாம ஷெட்.

6.கன்னி:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்.பப்ளிக் ரிலெசன்ல புலிங்க.ஆனால் புலி தன் குட்டியை தானே தின்னுர்ராப்ல தன் செட்டுக்குள்ள இருக்கிறவகளையே லொள்ளு பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
7.துலாம்:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும் மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா. பிஹைண்ட் தி ஸ்க்ரீன் பெட்டர்.
9.தனுசு:
ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். நீங்க எதிர்காலத்துல குரு ஸ்தானத்துல இருந்து நாலு பேருக்கு நல்லது சொல்லவேண்டிய பார்ட்டி. அதனால இளமைல கெட்ட ஆட்டம் போடவும் வாய்ப்புண்டு. சிலர் மத்திம வயசுல கூட டபுள் ஆக்டு கொடுப்பாய்ங்க. ஒரு பஞ்சாயத்து கெட்டுப்போகனும்னா இவிகளை விட்டா போதும் வெகண்டையா பேசி விவகாரத்தை முதலுக்கு கொண்டு வந்துருவாய்ங்க. இவிக லைஃப்ல தந்தை,தந்தை வழி சொத்து ,இவர் சேமிப்பு, இவர் வாங்கின சொத்து,தீர்த்த யாத்திரைகள்,தூரபிரயாணங்கள், தூர தேசத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இதுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும். இவிகளுக்கு ரெண்டாமிடத்ததிபதி சனிங்கோ. அதனால இந்த வருசம் வந்த லாபத்தை இந்த வருசம் சாப்பிடற யோகம் கிடையாது. எட்டுவருசம் கழிச்சு அழுது புரண்டு ரிட்டர்ன் வாங்கி சாப்பிடுவாய்ங்க.
10. மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள்.அதே சமயம் ஏதோ ஒரு கலையில் ஆர்வம், திறமை இருக்கும். பேச்சு குறைவாகவே இருக்கும். கணவருடனான இவரது நெருக்கம் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். ஒற்றைத்தலைவலி,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். சாஸ்திர சம்பிரதாயங்களை தன்னிச்சையாக (பிரத்யேக ஆர்வமோ, பிடிப்போ இல்லாமலே) கன்டின்யூ பண்ணுவாய்ங்க.
11.கும்பம்:
என்னைக்கும் எதுவும் சுத்தமா தீர்ந்து போகாது (செல்வம்,செல்வாக்கு முதலியவை) எவ்ள கஷ்ட காலம் வந்தாலும் கொஞ்சமாச்சும் மிஞ்சும். ரகசியங்கள் இருக்கும். எதை செய்தாலும் நமக்கென்ன லாபம்னு பார்த்து செய்யற நேச்சர் இருக்கும். (இளமைல இதுக்கு மாறா இருந்திருக்கலாம்) கொஞ்சம் போல சோம்பல் இருக்கலாம். வெட்டி பந்தா, நாவல்ட்டீஸ்,ஃபேன்சி, காஸ்மெடிக்ஸ்ல விருப்பம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆகுதானு மட்டும் பார்க்கிற குணம் இருக்கும். வாழ் நாள் முழுக்க இரும்பு,ஆயில், எண்ணெய் கறை உங்களை விடாது. அல்லது யூனிஃபார்ம் போடற வேலை . நீங்க என்னதான் லாபம் பார்த்து இறங்கினாலும் நேரம் கெட்டதா இருந்தா நஷ்டம் வரத்தானே செய்யும். உங்க லைஃப்ல உங்க மூத்த சகோதரன்,சகோதிரியோட ரோலுக்கு ரெம்ப முக்கியத்துவம் இருக்கும். எவன் எக்கேடுகெட்டுப்போனா என்ன என் கூலி எனக்கு கிடைச்சதாங்கற மென்டாலிட்டி இருக்கும். இருந்தாலும் படக்குனு அதிகாரி, சூப்பர் வைசர்கிட்ட முட்டிக்குவிங்க.
12.மீன ராசி:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும். பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)

Tuesday, October 5, 2010

உங்கள் எதிர்காலம்

வணக்கம் நைனா! இத்தீனி காலம் கண்டுக்காத விட்டுட்டாலும் அனுபவ ஜோதிடத்துல நீண்ட இடைவெளிக்கு பிறகு  நான் எழுதின பதிவுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கனும்னு முடிவு பண்ணி  மொதல்ல ஒரு கடி ஜோக்.

"ஏங்க அவரு உங்க கூட பிறந்த அண்ணனா?"
"இல்லிங்க எனக்கு ஒரு வருசம் முந்தியே பிறந்துட்டாரு"

ஒரு ஜோசியனா இருந்தாலும் கோசார பலன் சொல்றதுல எனக்கு விருப்பமே கிடையாது.ஏன்னா உங்க ஜாதகம் ஒரு காருனு வச்சிக்கிட்டா, தசாபுக்தி பலன் தான் ரோடு.அப்போ கோசாரம்? சொம்மா காத்து மாதிரி தான்.

உங்க வண்டி (ஜாதகம்) நல்ல மேக்கா இருந்து, ஷாக் அப்சர்பர் எல்லாம் பக்காவா இருந்தா ரோடு எப்படி இருந்தாலும் நோ ப்ராப்ளம். இதுல காத்து  முன்னே இருந்து அடிச்சா என்ன? பின்னே இருந்து அடிச்சா என்ன?

இந்த கோசார பலனெல்லாம் நடந்தா/பலிச்சா  உங்க ஜாதகத்துல சரக்கே இல்லேனு அர்த்தம்.

ஆனாலும் என்ன மயித்துக்கு கோசாரபலன் சொல்றேனு கேப்பிக.

சொல்றேன். நவகிரகங்கள்ள செவ்வா கீறாரே அவரு செமை பவர் ஃபுல்லு நைனா. மத்த கிரகமெல்லாம் செரியில்லைனா அது சரியில்லை இது சரியில்லேனு தனித்தனியா தான் சொல்வாய்ங்க. ஆனால் செவ்வா சரியில்லினா தோஷ ஜாதகம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.( இதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு)

ஜாதகத்துல மட்டுமில்லிங்கனா கோசாரத்துல கூட இவரு பவர்ஃபுல் தான். அக் 17 வரை துலால இருக்கிற இவரு அக் .17 அன்னிக்கு விருச்சிகத்துல வந்து உட்காராரு.
இங்கன ஒன்னரை மாசம் இருக்கப்போறாரு.இது இவருக்கு ஆட்சி வீடு. (இதனால நான் சில ராசிகளுக்கு  சொல்லப்போற தீய பலன் எல்லாம் ரெம்ப குறைய வாய்ப்பிருக்கு)

இத்தீனி நாளு இவரு சுக்கிரனுடைய வீடான துலாவுல இருந்தது தாய்குலத்துக்கு கலைஞர்களுக்குல்லாம் நல்லதில்லிங்கண்ணா. இவரு ராசி மாறிர்ரதால தாய்குலமும், கலைஞர்களும் ஒரு ஒன்னரை மாச காலத்துக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம். நடிகர் முரளி முதலானவர்களின் மரணத்துக்கு துலா செவ்வாயும் ஒரு காரணமே ( இது பொதுப்பலன் தான் - அவிகவிக  ராசிக்கு விருச்சிகம் வில்லங்கமான இடமா இருந்தா பல்பு வாங்கித்தான் ஆகனும்)

சனி செவ் தொடர்பு:
இது பா.ஜ.க காங்கிரஸ் கூட்டுமாதிரி அம்மாம் டேஞ்சர். ( அணு உலை நஷ்டஈடு மசோதா எப்படி நிறைவேறுச்சுங்கறது தெரியுமில்லை?)  சனி செவ் சேர்க்கைன்னு தனிப்பதிவே எழுதியிருக்கேன்.

என்னதான் நவகிரகதோஷத்துக்கு பரிகாரம், நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு கலக்கியிருந்தாலும்  சனி செவ் சேர்க்கை தொடர்புன்னா நமக்கு இப்பயும் டர்ருதான்.

ஆனால நம்முது கடகலக்னம். சிம்மராசி. லக்னாதிபதியும்,ராசி  நாதனும் பரிவர்த்தனம். இதனால  கோசாரத்துல லக்னம் தான் ரெம்ப ஒர்க் அவுட் ஆகும். லக்னத்தை வச்சி பார்த்தா செவ் சனி ஜீவன,அஷ்டமாதிபத்யம் பெற்றிருக்காய்ங்க. அதனால சனி செவ் தொடர்பு வரப்பல்லாம் நாம ரெம்ப பிஸியாயிருவம். (வேறு சில சைட் எஃபெக்ட்ஸ் உண்டு இல்லேங்கலை) இருந்தாலும் டர்ருதான்.

என்னைக்குமில்லாத திரு நாளா கோசார பலன் எழுத இதுவும் ஒரு காரணம் . சனி கன்னியில இருக்காரு. செவ்வாய் விருச்சிகத்துக்கு வரப்போறாரு.அப்படி வந்தா சனி தன்னோட 3 ஆம் பார்வையா செவ்வாயை பார்ப்பார். இதுல மொதல் பல்பு யாருக்குன்னா விருச்சிகத்துக்குத்தான். அடுத்து இவிக ரெண்டு பேரோட பார்வையும் கூட்டா விழறது மிதுன ராசி மேல. இவிகளும் ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.

இப்படி சனி செவ் தொடர்பு ஏற்படறாதல என்னடா வில்லங்கம்னா ரெண்டு கிரகமும் அனுகூலமா இருந்தா தான் பலனை பெற முடியும்.இல்லின்னா நாஸ்திதான்.

யாருக்கு அனுகூலம்?
அக்டோபர் 17 முதல் செவ்வாய் வந்து தங்கப்போற விருச்சிக ராசி  மகரத்துக்கு 11 ஆமிடம் இது ஓகே , சனியும் 9ல தான் இருக்காரு.(இது கெட்ட இடம் கிடையாது) சனி செவ் தொடர்பால ரெம்ப காலமா  பெண்டிங்ல இருந்த சொத்து, சேவிங்ஸ், தூர தேச தொடர்பு பற்றிய  மேட்டருங்க ஐஸா பைசானு செட்டில் ஆகலாம்.

கும்பத்துக்கு விருச்சிகம் 10 ஆமிடம் இது செவ் க்கு நல்லதுதான். ஆனால் சனி அஷ்டமத்துல மாட்டினாரே .அதுனால ஜஸ்ட் கொஞ்சம் கேர்லெசா இருந்தாலும் ரெட் மார்க் கியாரண்டி ( ரத்த காயமுங்கோ)

மிதுனத்துக்கு விருச்சிகம்  6 ஆமிடம் இது நல்லதுதான், ஆனால் சனி செவ்வாயோட   பார்வைகள் இவிக ராசி மேலயே விழறதால தையல் விழற அளவுக்கு கூட ரெட் மார்க் விழலாம்.டேக் கேர்.

கன்னிக்கு விருச்சிகம்  3 ஆமிடம்ங்கறதால இது ஓகே.ஆனா சனி ஜன்ம சனியா இருக்காரே. இதனால இவிகளுக்கும் ஆபத்து காத்திருக்கு.

கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் அனுகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் வேட்டையாடி விளையாடலாம். பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஒன்னு ரெண்டு  ஃபாலோ பண்ணுங்க  நல்ல பலன் வேகம் பிடிக்கும்.

யாருக்கு பிரதிகூலம்?
மேஷம், ரிஷபம் ,கடகம் ,சிம்மம், துலா, விருச்சிகம், தனுசு , மீனம் ராசிக்காரவுகளுக்கெல்லாம்  பிரதி கூலம்.

கடைசியில செவ்வாயோட காரகத்வங்களை விரிவா தந்திருக்கேன். செவ் பிரதிகூலமா உள்ளவுக அந்த மேட்டர்ல எல்லாம் உசாரா இருந்தா சரி. பரிகாரங்களையும் தந்திருக்கேன். படிச்சு ஃபாலோ பண்ணுங்க ( இப்படியாச்சும் தமிழ் நாட்ல வெட்டு குத்து கொலை விபத்தெல்லாம் குறையட்டும்பா)
எச்சரிக்கை:
என்னதான் ஜூம் போட்டு பார்த்து சொன்னாலும் இந்த பலன் எல்லாம் ப்ரிலிமினரிதான். உங்க ஜாதகம், தசாபுக்தி பலன் களை பொருத்து கூடும் குறையும்.

இப்ப கொஞ்சம் தனி தனி ராசிக்கு  டீப்பா பார்ப்போம். 

மேஷம்:
இவிகளுக்கு செவ்வாய்  1,8 க்கு அதிபதி. இவர் எட்டுல வர்ரது கொஞ்சம் கூட நல்லதுல்லிங்கண்ணா. ஜாதகத்துக்கு லக்னம்தான் கடைக்கால் மாதிரி. அந்த லக்னாதிபதியே எட்டுல மறைஞ்சா நாஸ்திதான். எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி ஆயிருவிங்க, ஸ்டெடி மைண்ட் இருக்காது. ஹெல்த் ட்ரபுள் கொடுக்கும். கோபம் அதிகரிக்கும். ரெம்ப சாக்கிரதையா இருக்கனும். ஒரு சிலருக்கு மரண சம்பந்தமான வருமானம் வரலாம்.( உ.ம் எல்.ஐ.சி நஷ்ட ஈடு, உயில் வழி சொத்து)
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 10,11 க்கு அதிபதி இவருக்கு 1,8க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்பட்டதால தொழில் சூடுபிடிக்கும் ,டென்ஷன் கூடும். சின்ன சின்ன காயங்கள் ஏற்படலாம். மூத்த சகோதர சகோதரிக்கு ஆபத்து ஏற்படலாம்.அ அவிகளோட முட்டல் மோதல் பிரிவு ஏற்படலாம்.

ரிஷபம்:
இவிகளுக்கு செவ்வாய்  12, 7 க்கு அதிபதி. இவர்  ஏழுல  வர்ரது கொஞ்சம் வில்லங்கமானது தான். 7ன்னா மனைவி. அவிகளை காட்டற இடத்துல செவ் உட்கார்ரது நல்லதில்லை. 7ல நின்ன கிரகம் லக்னத்தையும் பார்க்கும்(உங்களை) செவ்வாய் காரகத்வம் வகிக்கும் பொருட்களால் வாழ்க்கை துணை(வரு)க்கும், உங்களுக்கும்  இம்சை கஷ்டம் நஷ்டம் ஏற்படும்.
சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 9,10 க்கு அதிபதி. 9+12 காரணமா முதலீடு விரயமாகலாம். அப்பாவுக்கு ஹெல்த் ட்ரபுள் அ அவரால ட்ரபுள் வரலாம். அதே சமயம் 9+7 காரணமா  மனைவி செய்தொழில்ல உதவலாம். மனைவியால ஒரு சொத்து கூட சேரலாம்.

மிதுனம்:
இவிகளுக்கு செவ்வாய் 11,6 க்கு அதிபதி .இவர் ஆறுல வர்ரது நல்லதுதான். இதனால சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது)  ஏற்படும். 11க்கு அதிபதி 6 ல வர்ரதால லாபம்ங்கறது சின்னதா ஒரு லிட்டிகேஷன்,வாக்கு வாதத்தோட வரும். உங்க மூத்த சகோதர சகோதிரியோட பிரச்சினை வரலாம்.அ அவிகளூக்கு எதுனா பிரச்சினை வரலாம். பாதம், முட்டிக்கு இடையில உள்ள பகுதில சின்ன பிரச்சினை வரலாம்.

சனி செவ் தொடர்பு:
சனி இவிகளுக்கு 8,9க்கு அதிபதி இவருக்கு 6,11 அதிபதியோட தொடர்பு காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது) பெரிய அளவுல நடக்க வாய்ப்பு ஏற்படுது. அடுத்து சொன்ன எல்டர் ப்ரதர் சிஸ்டர் விவகாரம் கூட மேஜரா நடக்க வாய்ப்பு ஏற்படுது.

கடகம்:
இவிகளுக்கு செவ்வாய் 10,5  க்கு அதிபதி .இவர் அஞ்சுல ஒரு வகையில சூப்பர். . இதனால இதனால் செய்தொழில்ல நல்ல மாற்றம் வளர்ச்சி ஏற்படும்,பெயர் புகழ் கிடைக்கும். அதிர்ஷ்டம் கதவை தட்டும். ஆனால் வாரிசுகளுக்கு ரத்தகாயம், உங்களுக்கு சின்னதா புத்தி குழப்பம், முன்  கோபத்தால் விரோதங்கள்  ஏற்படலாம். தர்கத்துல (லாஜிக்) விளையாடுவிக. எதிரிகளாலயே லாபம் ஏற்படும்னா பார்த்துக்கங்களேன்.

சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி 7,8க்கு அதிபதி. இவருக்கு 10,5க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறதால டீன் ஏஜர்ஸுக்கு தெய்வீக காதல் ஏற்படலாம் (7+5)  வேலையில்லாதவுகளுக்கு வேலை கிடைக்கலாம், தொழில் சூடு பிடிக்கலாம் (10+8). செய்தொழில்ல மனைவியோட உதவி தேவைப்படலாம்.வாரிசுகளுக்கு கால், நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.


சிம்மம்:
இவிகளுக்கு செவ்வாய் 9,4 க்கு அதிபதி .இவர் 4 ல  வர்ரது நல்லதுதான். இதனால வீட்டு மனை வாங்கறது, வீடுகட்டறது,வாகனம் வாங்கறது, எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கறது பிதுரார்ஜித சொத்து கைக்கு கிடைக்கிறது ,சேமிப்பு கைக்கு வர்ரதுல்லாம் நடக்கலாம். அம்மாவோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகமா இருக்கும். கண்ணாலமானவுக  மாமியார் -மருமக சண்டையால சிண்டை பிச்சுக்க வேண்டி வரும்.

இவிகளுக்கு சனி 6,7 க்கு அதிபதி.இவர் 9,4க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால சொத்து மேல கடன், அப்பாவோட வாக்கு வாதம் நிகழலாம். கடன் வாங்கி பொஞ்சாதியோட தூர பிரயாணம் பண்ண வேண்டி வரலாம். முழங்கால்ல பிரச்சினை வரலாம். தாய் வீடு வாகனம் தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். கண்ணாலத்துக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கிறவுகளுக்கு தாய் அ தந்தை வழில வரன் தகையலாம். ( 7+ 4/9)

கன்னி:
இவிகளுக்கு செவ்வாய் 8,3 க்கு அதிபதி .இவர் 3 ல  வர்ரது ஒரு வகையில  நல்லதுதான். இதனால மனசுல தன்னம்பிக்கை ,  தைரியம் அதிகரிக்கும்.பிரயாணங்களால அனுகூலம் ஏற்படும் இசைத்துறையில உள்ளவுக சாதனை படைப்பாய்ங்க. அண்ணன் தம்பிகளோட விவகாரம் இருந்தா உங்க பக்கமா தீர்மானமாகும். ஆனால் இளைய சகோதரன், சகோதிரிக்கு எதுனா தீமை   நடக்கலாம். அல்லது படிப்பு, திருமணம் ,தொழில் காரணமா அவிக பிரிஞ்சு போறதும் நடக்கலாம்.

சனி செவ் தொடர்பு:
இவிகளுக்கு சனி  5,6 க்கு அதிபதிங்கறதால இவர் 8,3 க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால குழந்தைகளுக்கு சிரமம், அபார்ஷன், அவியளுக்கு அலைச்சல் அ அவிகளால அலைச்சல் ஏற்படலாம். அவப்பெயர் அவமானமும் கிடைக்கலாம். அதே நேரம் 6+8 காரணமா சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண(கடன்) விமுக்தி( தீர்ரது)  ஏற்படும்.

துலா:
இவிகளுக்கு செவ்வாய் 7,2 க்கு அதிபதி .இவர் 2 ல  வர்ரது   நல்லதுதான். இதனால மனைவியால வருவாய் கூடும், அவிகளோட நெடு நாளைய கோரிக்கையை நிறைவேத்துவிக.( பெருசா ஒன்னுமில்லிங்கண்ணா ஏதோ ஒரு வீட்டு மனை அல்லது எலக்ட்ரிக்கல் சாமான் அம்புட்டுதேங்)   கொடுத்த வாக்கை நிறைவேத்த துடிப்பிக.  அதே நேரத்துல உங்களையும் அறியாம வார்த்தைகள் சூடா வந்துரலாம். கண் சிவக்கலாம். தொண்டைல ரணம் ஏற்படலாம். குடும்பத்துல சூடான வாக்கு வாதங்கள் நடக்கலாம். டேக் கேர்

இவிகளுக்கு சனி 4,5 க்கு அதிபதி.இவர் 7,2க்கு அதிபதியான செவ்வாயை பார்க்கிறதால வீடு,வாகனம் விற்பனை அ வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டி வரலாம் (4+2)  .கண்ணாலமாகாதவுகளுக்கு தாய் வழியில பழைய விரோதம் உள்ள உறவுல திருமணம் தகையலாம். பரிசா,இன்ப அதிர்ச்சியா சில்லறை புரளலாம். ஒரு சிலர் தங்கள் பூர்வ ஜென்ம காதலியை சந்திக்க வேண்டி வரலாம்.

விருச்சிகம்:
இவருக்கு செவ் . 6,1க்கு அதிபதி. லக்னத்துலயே வந்து ஆட்சி பெறுகிறார். இதனால ஹெல்த் இம்ப்ரூவ் ஆகும் (லேசா உஷ்ண கோளாறு இருக்கலாம்) தன்னம்பிக்கை மிகும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். ரெம்ப நாளா பெண்டிங்ல இருந்த கடன் ஒன்னு தீர்ந்து   நிலம் அ எலக் ட்ரிக்கல் பொருள் வாங்க புதுசா கடன் வாங்க வேண்டி வரலாம். எதிரிகள் லேசா சலசலப்பு காட்டுவாய்ங்க. சாதாரணமாவே குறை கண்டே பேர் வாங்கும் புலவர் நீங்க. அந்த குணம் இப்போ கொஞ்சம் அதிகமாகலாம்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 3,4 க்கு அதிபதி. இவருக்கு 6,1க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால தாய், மற்றும் இளைய சகோதரம்  நோய்வாய்படலாம் அ தகராறு பண்ணலாம். தில்லு துரையாயிருவிங்க.

தனுசு:
இவருக்கு செவ் 5,12க்கு அதிபதி. இவரு 12 ல ஆட்சி பெறுவது நல்லதல்ல. இதனால அவமானம்,துரதிர்ஷ்டம்,புத்தி தடுமாற்றம், கோபம், மின்சாரம்,ஆயுதம் இத்யாதியால நஷ்டம் ஏற்படலாம். செலவுகள் பிச்சிக்கிட்டு போவும். ஃபேன் வைண்டிங்ல புகை வந்துர்ரது,பல்புங்க ஃப்யூஸ் போறதெல்லாம் சகஜமா நடக்கும். பரிகாரம் கட்டாயம் செய்துக்கனும். நிலம், பெரிய எலக்ட் ரிக்கல் பொருள்  விற்பனைக்கு முயற்சி பண்ண வேண்டியிருந்தா செய்யுங்க.சக்ஸஸ் ஆகும். தோஷமும் பரிகாரமாகும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 2,3 க்கு அதிபதி. இவருக்கு  5,12க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால திடீர் பணவரவு ஏற்பட்டு , திடீர் செலவுகளுக்கு உதவலாம். சகோதரம் மூலமா அதிர்ஷ்டம் கதவை தட்டலாம்.  வாக்குவாதம் ஏற்படலாம்.கண்,வாய்,தொண்டை தொடர்பான பிரச்சினை வரலாம்.

மகரம்:
இவிகளுக்கு செவ் 4,11க்கு அதிபதி இவரு 11ல ஆட்சி பெறுவது நல்லதே. இன்னொரு மனை வாங்கறது (அடிஷ்னல்), இன்னொரு எலக்ட்ரிக்கல் பொருள் /வாகனம் வாங்கறதும் நடக்கலாம். ஜாதகத்துல பசை இருந்தா இன்னொரு வீடே கூட வாங்குவிக. பெரியம்மா, சித்தி மாதிரி தாய் வழி உறவுகள் வந்து போவாய்ங்க.அவிகளால லாபமும் ஏற்படலாம். எதிரிகளாலயே லாபம் , நன்மை ஏற்படும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,2 க்கு அதிபதி.இவருக்கு 4,11 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால ஒரே நேரத்துல 2 விதமான யோசனை,புத்தி தோணும். டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வரலாம். சின்னதா சைட் பிசினஸுக்கு சான்ஸ் மாட்டலாம். தாய் வீடு வாகனம் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கலாம். இந்த  வகையறாவில் செலவும் ஏற்படலாம். ஒன்னுக்கு ரெண்டா பேசி வம்பை விலை கொடுத்து வாங்கலாம்.

கும்பம்:
இவிகளுக்கு செவ் 3,10க்கு அதிபதி இவரு 10ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால செய்யற தொழில்ல சகோதர சகோதிரிகளோட ஒத்துழைப்பு கிடைக்கலாம். செய் தொழிலிலான முன்னேற்றம் மனதில் தைரியத்தை கூட்டும். போலீஸ்,மிலிட்டரி, ரியல் எஸ்டேட் , பவர் துறையில உள்ளவுகளுக்கு குறிப்பிடத்தக்க  முன்னேற்றம் ஏற்படும். அஷ்டம சனியால ஓஞ்சு போயிருக்கிற இவிகளுக்கு இது நிச்சயமா நல்ல ரிலீஃபை கொடுக்கும். இருந்தாலும் அஷ்டம சனி சமயம் பார்த்து வேலை கொடுத்துராம இருக்க சைவமா மாறிருங்க. ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 1,12 க்கு அதிபதி இவருகு  3,10 க்கு அதிபதியான செவ்வாயோட தொடர்பு ஏற்படறது அந்த அளவுக்கு நல்லதில்லை. தைரியலட்சுமி துணையிருப்பாள்.தொழில் மேல கவனம் கூடும். இளைய சகோதரத்தால செலவு ஏற்படலாம். சேல்ஸ் லைன்ல உள்ளவுகளுக்கு பெட்டரா இருக்கும். தயாரிப்பு துறையில உள்ளவுகளுக்கு விரயம் கூடும்.

மீனம்:
இவிகளுக்கு செவ் 2,9க்கு அதிபதி இவரு 9ல ஆட்சி பெறுவது நல்லதே. இதனால சில்லறையா சேர்த்த பணம் ஒரு முதலீடா ( வீட்டு மனை/ அ எலக்ட்ரிக்கல் பொருள்) மாறும். பல காலம் நான் ஃபங்ஷனிங் ப்ராப்பர்ட்டியா இருந்தது கைக்கு வந்து செலவுக்கு உதவும். குடும்பத்தோட தீர்த்தயாத்திரை போய்வரவும் வாய்ப்பிருக்கு. தெற்கு திசை அ ஒரு முருகனோட சேத்திரத்துக்கு போய் வருவிக. அப்பாவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் அவருக்கு கொஞ்சம் கோபம் அதிகமாயிரும். ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதியும் வரலாம்.ஏற்கெனவே இருந்தா அது அதிகரிக்கலாம். எழுத்து, ப்ளாக் துறையில் உள்ளவுகளுக்கு டர்னிங் பாயிண்ட் ஏற்படும் தூர தேசத்துலருந்து சில்லறை தேறும்.

செவ் சனி தொடர்பு:
சனி இவிகளுக்கு 11,12க்கு அதிபதி . இவருக்கு 2,9 க்கு அதிபதியோட தொடர்பு ஏற்படறதால பேச்சு திறமை கை கொடுக்கும்.அப்பப்போ வேலையும் காட்டிரும். கொடுக்கல் வாங்கல் சூடு பிடிச்சாப்ல பிடிச்சு உட்கார்ந்துக்கும். அப்பாவோட உறவு மேம்பட்டாப்லயே இருந்து படக்குனு அத்வானமாயிரும்.


செவ்வாய் காரகத்வம் வகிக்கும் விசயங்கள்: ( செவ்வாயே உங்க கிட்ட பேசற மாதிரி எழுதியிருக்கேன்.)
(செவ்.அனுகூலமா இருந்தா இந்த விசயங்கள்ள லாபம் ஏற்படும். பிரதிகூலமா இருந்தா நஷ்டம் ஏற்படும்)

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

எச்சரிக்கை: 2
விருச்சிக செவ்வாயை கன்னியில் உள்ள சனி பார்வையிடுவதால் தங்களுக்கான பலனில் சனி அனுகூலமாக உள்ளார்  என்று குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் நன்மை ஏற்படும். ஒரு வேளை சனி உங்கள் ராசிக்கு பிரதி கூலம் என்று  குறிப்பிட்டிருந்தால் கீழ்காணும் சனியின் காரகத்வங்களில் தீமை ஏற்படும். ( தன் காரகத்வங்களை சனியே கூறுவது போல் தன்னிலையில் கூறியுள்ளேன்)

சனியின் காரகத்வம்:
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
இந்த பதிவை மனசுல வச்சிக்கிட்டா அடுத்த ( அக் .17 முதல்) ஒன்னரை மாசம் பெருசா பிரச்சினையில்லாம ஓடிரும் பாஸ். எதுக்குனா நல்லது சனி செவ்வாய் சேர்க்கைங்கற என் பழம்பதிவையும் ஒரு ஓட்டு ஓட்டிட்டிங்கனா பக்கா

பி.கு: அப்பாடா ! இன்னம் ஒன்னரை மாதம் ப்ளஸ் 12 நாளைக்கு இந்த பதிவு சக்கை போடு போடும்