அண்ணே வணக்கம்ணே ! நமக்குள்ள நம்ம நாடு எப்படி இருக்கனுங்கற மேட்டர்ல கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர இப்படி மட்டும் இருக்கக்கூடாதுங்கற விஷயத்துல கருத்து வேறுபாடே இல்லை.சின்ன வயசுல நான் பிரதமரானால்னுட்டு ஒரு தலைப்பை கொடுத்து பத்து வரி எளுதச்சொல்வாய்ங்கன்னு தான் இந்த பதிவை ஆரம்பிக்க இருந்தேன் ஆனால் சனம் ஏற்கெனவே இந்த தலைப்பை பிரிச்சு மேஞ்சுட்டாய்ங்க போல. சிலதை ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணியிருக்கேன் பாருங்க.
சுஜாதா சொல்வாரு பசங்க ஏதோ ஒரு கணத்துல தங்கள் அறியாமையை இழந்துர்ராய்ங்க. வாழ்க்கையின் குரூரத்தை தரிச்சுர்ராய்ங்க.பெரியவுகளாயிர்ராய்ங்கன்னு.
நம்மை பொருத்தவரை வாழ்க்கையின் குரூரத்தை என்னதான் டைட் க்ளோசப்ல பார்த்திருந்தாலும் இன்னமும் அந்த "அறியாமை" ஒழியலை. பெரியவனா ஆகவே இல்லை. விடலைக்கனவுகள் இன்னமும் இருக்கு. ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த விடலைத்தன்மை ரெம்ப முக்கியம். இல்லின்னா அவன் தன் படைப்புத்தன்மைய இழந்துருவான்.
ஒரு ரேஷன் கடை க்யூவை கற்பனை பண்ணுங்க. ராமசாமி முனிசாமிய நெருக்கி தள்ளுவான். ஏன்னா ராமசாமியை இன்னொரு சாமி நெருக்கி தள்ளிக்கிட்டிருப்பான். இப்படி க்யூல உள்ள ஒவ்வொருத்தரும் எவரோ முட்டித்தள்ள முன்னாடி உள்ளவுகளை முட்டித்தள்ளுவாய்ங்க.
ஆனால் ரேஷன் கடை டீலர் மட்டும் பில்லு போடாம சின்ன வீட்டோட ஃபோன் பேசிக்கிட்டிருப்பான். சரக்கு போடறவன் சுவாரஸ்யமா கம்கட்ல சொறிஞ்சிக்கிட்டிருப்பான்.
இதே நிலை தான் நம்ம நாட்டு நிர்வாகத்துலயும் நடந்துக்கிட்டிருக்கு. அரசாங்கம்னா அது எங்கயோ தங்க நாற்கர சாலையில போற சமாசாரம் இல்லை. உங்க பெட்ரூம் ,ஏன் கக்கூஸுல கூட வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ண கூடிய மேட்டரு.
உதாரணத்துக்கு நம்ம நிலைய பாருங்க. இந்த விலைமகள் மகன்கள் கொடுத்த படிப்பு (பிகாம்) புவ்வாவுக்கு வழி செய்யலை. நாமளா ஒரு ஆர்வத்துல இறங்கின சோசியம் சோறு போடுது. நம்ம வேலைய நாம ஒளுங்கா செய்யனும்னா கம்ப்யூட்டர் வேலை செய்யனும். அதுக்கு பவர் வேணம்.
ஆனால் நிலைமை என்ன? காலையில 8.30 டு 10.30 பவர் கட், மதியம் 12.30 டு 2.30 பவர் கட். இந்த மாரி பிட்டு பிட்டா வேலை பார்த்தா அது "பலான வீட்டுக்கு போயி ஹவர் கணக்குல இருந்தாப்ல" இருக்கே தவிர திருப்தியாவே இல்லை.
இதனால என்ன பண்றோம் பகல் எல்லாம் ச்சொம்மா கதை பண்ணிட்டு ராத்திரியில கோதாவுல இறங்கிர்ரம். இயற்கை தூங்கப்போகும்போது விழிச்சிருக்கம். காலை 10.30 வரை தூங்கறோம். ரத்தம் கொதிக்குது. பாடியோட பயோ கெமிஸ்ட்ரியே மாறிப்போகுது -அஜீரணம் -வாயு கோளாறு -அசிடிட்டி-கான்சிட்டிபேஷன் -மூளை தன்னோட செயல் திறனை படிப்படியா குறைச்சுக்கிட்டே வருது.
பகல் 10.30 வரை தூங்கி தொலைச்சாலும் பரவால்லை. நமக்கு சந்திராஷ்டமம் அது இதுன்னு இருந்து மறுபடி அதிகாலையில முழிப்பு வந்து -வேலையும் பார்த்துட்டம்னு வைங்க. வெயில் ஏற ஏற ஒரு விதமான உதறல் -டென்ஸ் -கண் எரிச்சல் ஆரம்பமாகும். அந்த சமயம் பார்த்து எவனாச்சும் மணி கேட்டா கூட கெட்ட கெட்ட வார்த்தையா வரும்.
புதுசா கண்ணாலமானவுகளா இருந்தா புருசன் பொஞ்சாதிக்கு முட்டிக்கிட்டு மஹிளா ஸ்டேஷன் வரை கூட கேஸு போயிரும். அவள் கோவிச்சுக்கிட்டு அம்மா ஊட்டுக்கு போக- இவன் கூட வேலை பார்க்கிறவளோட பப்புக்கு போயி மப்பாக அவள் கொஞ்சம் சேப்பா இருக்க -சேஃபா வீட்டுக்கு கூட்டி வந்து கெட்டகாரியம் பண்ணிட்டான்னா அது வேற தனி ட்ராக் ஆரம்பமாயிரும்.
இத்தனைக்கும் காரணம் ஆரு கெவுர்மென்டு. நாம ஒரே பொருளை -ஒரே நேரத்த்ல ஒருத்தங்கிட்டருந்து ரெண்டு ரூபாய்க்கும் -இன்னொருத்தன் கிட்டருந்து 12 ரூவாய்க்கும் வாங்குவமா? ஊஹூம்..ஆனா கெவுர்மென்டு வாங்குது.
ஏன்? மந்திரிக்கு சில்லறை புரளுது. அவர் ஏன் புரட்டறாரு? கட்சி டிக்கெட்டுக்கு செலவழிச்சாரு தேர்தல்ல செலவழிச்சாரு, போட்டதை எடுக்கவேணாமா?
இந்த செயின்ல ஒன்னு ரெண்டு அதிகாரி ஹானஸ்டா இருக்கலாம்.ஆனால் அந்த மன்சனும் ஒத்து ஊதித்தான் ஆகனும். இல்லின்னா அந்தாளு பொளப்பு நாறிரும். தண்ணியில்லாத காடோ? முவத்துல ஆசிட் அடிக்கிறதோ நடக்கலாம்.
சனம் பணம் பணம்னு அலையுது.ஏன் பணமிருந்தா எதை வேணம்னா வாங்கிரலாம். ஜஸ்ட் பணம் மட்டும் இருந்தா போதும்.. காதலியை -சி.எம் ட்ராவல் பண்ற ஹெலிகாப்டர்லயே கூட்டிக்கிட்டு சிட்டி மேல ஒரு ரவுண்டு வரலாம் ( இது நெஜமாலுமே நடந்துதுங்கோ -சி.எம் கிரண்)
நான் என்ன சொல்றேன்னா நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அமலாக்கிட்டு - எக்கானமி பாக்கேஜை இம்ப்லிமென்ட் பண்ணிட்டு நாதார் கார்டுக்கு .. அடச்சே ஆதார் கார்டுக்கு விவரம் சேகரிச்சாப்ல ஒரு டேட்டா பேஸை உருவாக்கனும்.
ஒரு மன்சன் (குடிமகன்) என்ன வேலை பார்க்கிறான்? ஃப்ரீ ஹவர்ஸ்ல என்ன பண்றான். இந்த சமுதாயத்துக்கு/ நாட்டுக்கு அவனால அவன் செய்ற வேலையால என்ன லாபம் , அவனோட தேவைகள் என்னன்னு ஆக்யுரேட்டா கால்குலேட் பண்ணி டெபிட் கார்டு மாதிரி ஒன்னை கொடுத்துரனும். அவன் எதுக்கு செலவழிச்சாலும் இதுலருந்து தான் செலவழிக்கனும்.கரன்சிங்கறதை கண்ல காட்டக்கூடாது.
ஊழலுக்கு ஊற்றுக்கண்ணே தேர்தல்தான். இதை தாளி 1 மாசத்துக்கு நடத்தனும். 100 % போலிங் நடந்தா தவிர ரிசல்ட்டே அனவுன்ஸ் பண்ணக்கூடாது. புல்லட் ப்ரூஃப் க்ளாஸோட எஸ்.டி.டி பூத் மாதிரி வச்சுரனும். கட்டைவிரல் ரேகை தான் அடையாள அட்டை .
அதே போல கட்சிங்களோட சமாசாரம் உட் கட்சி தேர்தல் கட்டாயம் - ஒவ்வொரு உறுப்பினனும் ஒரு தகுதி தேர்வுல பாஸ் ஆகனும். கம்ப்யூட்டரைஸ் செய்யப்பட்ட ஆடியோ கேள்விகளுக்கு பதில். கம்ப்யூட்டர் பாஸா ஃபெயிலா சொல்லி ஒரு காயிதத்தை துப்பிரனும்.
கட்சிகள் நன் கொடை வசூலிக்கவும் - தொழில்களில் முதலீடு செய்யவும் வழி செய்யனும். தேர்தல் செலவுக்கான தொகையை பத்து மடங்காக்கனும். அவிக கட்சிக்கு வந்த ஓட்டு சதவீதத்தை பொருத்து அவிக செலவழிச்ச காசை திருப்பித்தரனும்.
சரிங்ணா இன்னைக்கு இது போதும்.பவர் கட் நேரம் வேற நெருங்குது. சீ யு..
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts
Monday, July 9, 2012
Sunday, March 18, 2012
ஜூலை 12க்கு மேல் இடைத்தேர்தல்
அண்ணே வணக்கம்ணே !
இனி ஒரு விதி செய்வோம்னுட்டு வாரத்துல 3 நாள் ஜோதிடம் - 3 நாள் நாட்டு நடப்புன்னு சொல்லியிருந்தேன். அதை கொஞ்ச நாளைக்காச்சும் பின்பற்ற ஆசை.
நம்ம கணிப்பு நிஜமாகி ஜூலை 12 க்கு மேல் மத்தியில / இலவச இணைப்பு மாதிரி எங்க ஸ்டேட்ல பை எலக்சன் வந்து அடுத்த சர்க்காராச்சும் பெட்டரான சர்க்காரா வருதான்னு பார்த்துக்கிட்டு இந்த விதியை தொடர்வதும் தொடராததும் பத்தி முடிவு பண்ணலாம்.
நம்ம நாட்டு நடப்பே இந்த அரசியல்வாதிகள் கையிலதான் இருக்கு. இவிகளை நினைச்சா ரெம்ப கவலையா இருக்கு. இவிக அல்லாம் தெரிஞ்சுத்தான் செய்றாய்ங்களா? இல்லை எதுனா குட்டிசைத்தான் இவிகளை ஆட்டி வைக்குதா புரியலை.
இவிக முடிவெடுக்கிறதை தள்ளி போடற விதம் - தப்பி தவறி எடுத்தா இவிக எடுக்கிற முடிவு - அதை செயல் படுத்தும் விதம் எல்லாமே பயங்கர கடுப்பா இருக்கு. ரெம்ப கவலையா இருக்கு.
விமானத்துக்கு போடற ஃப்யூயலுக்கு சப்சிடியாம் -ஆனால் மானில அரசு போக்குவரத்து கழக பஸ்ஸுக்கு போடற டீசலுக்கு சப்சிடி கடியாதாம்? விமானத்துல போறவன் மட்டும் தான் இந்தியன். பஸ்ஸுல போறவன்லாம் பாக்கிஸ்தானியனா? Read More
Sunday, September 25, 2011
யு.பி.ஏ கோவிந்தா: விரைவில் இடைத்தேர்தல்
அண்ணே வணக்கம்ணே !
ஜோதிஷம் பிறந்ததே இந்தியாவுல. ஆனால் நம்மாளுங்க சுதந்திரம் வாங்கின லக்னம் இருக்கே..கொய்யால 45 வருஷம் இருட்டில தவிக்க வைக்கிற லக்னம் . ஓஞ்சு போவட்டும். கதம் கதம்.
எதிர்காலம் எப்டி இருக்கும்னு பார்ப்போம். நாளைக்கு ( செப்,27,2011) சூரிய தசையில ராகு புக்தி முடியுது. 2012 ஜூலை 12 வரைக்கும் சூரிய தசையில குரு புக்தி நடக்க போவுது. இதுக்கான பலனை ஆடியோல விவரமா சொல்லியிருக்கேன்.
2012 ஜூலை 12 முதல் 2013 ஜூன் 27 வரைக்கு சூரிய தசையில சனி புக்தி நடக்கப்போவுது . இந்த பீரியட்ல நாட்டோட ஜாதகத்துல சனி சந்திர சேர்க்கை காரணமா இடைதேர்தல் வரலாம். ஹங் ஏற்படலாம். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத ஆட்சி வரலாம். ப்ளாக் மெயிலர்ஸுக்கு கொண்டாட்டம். ஃப்ளைட் ஹைஜாக் இத்யாதி கூட நடக்கலாம்.
2013 ஜூன் 27 முதல் 2014,மே 3 வரைக்கும் சூரியதசையில புத புக்தி நடக்கப்போவுது. நான் காங்கிரஸ் மற்றும் நான் பி.ஜெ.பி அரசாங்கம் நித்ய கண்டம் பூர்ணாயுசா தொடரலாம்.
அதுக்கப்பாறம் 2014,மே 3 முதல் கேது புக்தி நடக்கும். அப்பம் மேற்படி ஆட்சிக்கு மோட்சம் கியாரண்டி. இதெல்லாம் ஹெட் லைன்ஸ் மாதிரி . அனலிசிஸ் ஆடியோவுல இருக்கு. வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.
இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் என்ற பதிவை படிக்க இங்கே அழுத்துங்க
ஜோதிஷம் பிறந்ததே இந்தியாவுல. ஆனால் நம்மாளுங்க சுதந்திரம் வாங்கின லக்னம் இருக்கே..கொய்யால 45 வருஷம் இருட்டில தவிக்க வைக்கிற லக்னம் . ஓஞ்சு போவட்டும். கதம் கதம்.
எதிர்காலம் எப்டி இருக்கும்னு பார்ப்போம். நாளைக்கு ( செப்,27,2011) சூரிய தசையில ராகு புக்தி முடியுது. 2012 ஜூலை 12 வரைக்கும் சூரிய தசையில குரு புக்தி நடக்க போவுது. இதுக்கான பலனை ஆடியோல விவரமா சொல்லியிருக்கேன்.
2012 ஜூலை 12 முதல் 2013 ஜூன் 27 வரைக்கு சூரிய தசையில சனி புக்தி நடக்கப்போவுது . இந்த பீரியட்ல நாட்டோட ஜாதகத்துல சனி சந்திர சேர்க்கை காரணமா இடைதேர்தல் வரலாம். ஹங் ஏற்படலாம். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத ஆட்சி வரலாம். ப்ளாக் மெயிலர்ஸுக்கு கொண்டாட்டம். ஃப்ளைட் ஹைஜாக் இத்யாதி கூட நடக்கலாம்.
2013 ஜூன் 27 முதல் 2014,மே 3 வரைக்கும் சூரியதசையில புத புக்தி நடக்கப்போவுது. நான் காங்கிரஸ் மற்றும் நான் பி.ஜெ.பி அரசாங்கம் நித்ய கண்டம் பூர்ணாயுசா தொடரலாம்.
அதுக்கப்பாறம் 2014,மே 3 முதல் கேது புக்தி நடக்கும். அப்பம் மேற்படி ஆட்சிக்கு மோட்சம் கியாரண்டி. இதெல்லாம் ஹெட் லைன்ஸ் மாதிரி . அனலிசிஸ் ஆடியோவுல இருக்கு. வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.
இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் என்ற பதிவை படிக்க இங்கே அழுத்துங்க
Labels:
ஆடியோ,
இடைத்தேர்தல்,
இந்தியா,
யுபிஏ,
ஜோதிடம்
Tuesday, March 8, 2011
விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் !

அண்ணே வணக்கம்ணே,
2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற திகீர் கணிப்பை தரத்தான் இந்த பதிவை போடறேன்.ஏன் எதுக்கு எப்படினு நான் பண்ணப்போற ஆராய்ச்சில உங்கள்ள பாதி பேர் சோசியர்களாகவே மாறிடப்போறிங்க. விஷ் யு ஆல் தி பெஸ்ட்.
நேற்றைய சந்திராஷ்டமம் பற்றிய பதிவை 945 பேர் படிச்சிருக்கிங்க. நன்றி. ஜோதிஷ சாஸ்திரத்துல சந்திராஷ்டமம்லாம் ஜுஜுபி. பலான பலான மேட்டர் எல்லாம் எடுத்து விட்டா கஸ்டடில எடுத்து விஜாரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.
நமக்கு புகைப்பழக்கம் வேற இருக்கா..தூக்கி உள்ளாற வச்சுட்டு கை.எ போட்டா தான் சிகரட்டுன்னா படக்குனு கை.எ போட்டுத்தொலைச்சுருவமோன்னு தான் அடக்கி வாசிக்கிறேன். ஆனாலும் அதுக்காக நம்ம மம்மிய ஐ மீன் பாரத மாதாவை டீல்ல விட்டுர முடியாதே.
அதனாலதான் இந்த திகீர் பதிவு. தூக்கி உள்ள போட்டுட்டா ஏட்டுக்கு கையூட்டு கொடுத்து ஒரு கட்டு பூபால் பீடி மட்டும் அனுப்பி வச்சுட்டா போதும். (எத்தீனி பேரு ரெடி ..கைய தூக்குங்குண்ணா)
இதுக்கு ரெடியா இல்லாதவுகளும் சேர்த்து பதிவை தொடர்ந்து படிக்க இங்கன அழுத்துங்கண்ணா
Tuesday, February 15, 2011
2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு கவிழும்?
2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு ஆட்டம் காணும்
மொதல்ல இந்த பதிவுக்கு இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகம்னுதான் தலைப்பு வச்சேன். அப்பாறம் ஆதித்தனார் எழுத்தாளர் கையேடு மாதிரி கடைசில உள்ளதை தூக்கி டாப்ல கொண்டு வந்தேன்.
நான் வைக்க நினைச்ச தலைப்பு 100% கரீட். இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகமா இருக்கு. இதுக்கும் அவாளோட சதிதான் காரணம். விஐபிங்களுக்கு சின்ன வீட்டை கர்பப்படுத்தறதுக்கு கூட பக்காவா டைம் வச்சு கொடுக்கிற அவாள் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க குறிச்சுக்கொடுத்த டைம் இருக்கே . வயிறு எரியுதுங்க.
லக்னம் ரிஷபம்:
ரிஷப லக்னம் ராசி சக்கரத்துல ரெண்டாவது ராசி. இதனோட குணம் என்னன்னா சுருக்கமா சொன்னா செக்கு மாடு. நம்ம தலைவருங்க நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு போகாம இருக்க காரணம் இதான். நம்ம நாடு செக்கு மாடாட்டம் ஒரே வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வரவும் , அசலான பிரச்சினையை விட்டுட்டு ஜல்லியடிக்கவும் இதான் காரணம். மேலும் தங்களோட செல்வம்,செல்வாக்கு,சொல்வாக்கு,
பணம், குடும்பம்னு அவிக இருக்கவும் இதான் காரணம்.நம்ம தலைவருங்க உசரு போற நேரத்துல கூட "விகட வினோத பரிகாச பிரசங்க பிரியர்களா" இருக்க காரணம் இதான்.
இது ஸ்திர ராசி. தாளி இஞ்சி முரபா விக்கறதுக்கு கூட சரலக்னமா பார்த்து வையின்னு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் இவ்ளோ பெரிய எஸ்டாப்ளிஷ்மெண்டுக்கு ஸ்திர லக்னத்தை வச்சிருக்கானுவ.
ராசிய பாருங்ககடகம். இதனோட அதிபதி யாரு சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறுவாரு. 24 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திரம் மாறுவாரு. 6 மணிக்கொருதரம் பாதம் மாறுவாரு. 15 நாள் வளர்பிறை, 15 நாள் தேய் பிறை. இந்த ராசிக்காரவுகளுக்குனு ஒரு "சுயம்" இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளைகள்னா அது இந்த ராசிக்கரவுகதான்.
ரஷ்யா இருந்தவரை அவிக அழிச்சாட்டியத்துக்கெல்லாம் சால்ரா போட்டுக்கிட்டிருந்தம். இப்ப அமெரிக்கா.
சரி இதுவாச்சும் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். சனத்தொகை படபடனு எகிறுது (ரிசபத்துக்கு அதிபதி சுக்கிரன் - கில்மாவுக்கு இவர் தான் அதிபதி) உலகம் போற போக்குல இன்னைக்கும் ஒரு சமயம் இல்லாட்டியும் ஒரு சமயம் சென்டிமென்ட் பார்க்கிற சனம் இந்தியாவுலதான் இருக்காய்ங்கனு ஆறுதல் பட்டுக்கலாம்.
லக்னத்தை பாருங்க ராகு -ஏழைப்பாருங்க கேது. ராகு கேதுக்களிடையில எல்லா கிரகமும் சிக்கி பிதுங்கிக்கிட்டிருக்கு. இதனோட பலன் என்னடான்னா 45 வருசம் வரை சொல்லிக்கிறா மாதிரி டெவலப் மென்டே இருக்காது. மேலும் ஊழல்வாதிகள் + சாமியார்களிடையில நாடாள்வோரும், நாடும், நாட்டு மக்களும் சிக்கி சீரழியனும்.( ஞா இருக்கா திரேந்திர பிரம்மச்சாரி, சந்திராசாமி)
ஜோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவன் கூட இந்த மாதிரி ஒரு நேரத்தை ரெக்கமெண்ட் பண்ணமாட்டான். நேரு மாமாவுக்கு நாள் குறிச்சு கொடுத்த பன்னாடை பரதேசி ஆருனு விசாரிக்கனும்ணே.
சரி லக்னமும் - (சொந்த பலம்) ஏழாமிடமும் ( நட்பு நாடுகள்) தான் நாறிப்போச்சு . ரஷ்யா சிதறிப்போகவும் அமெரிக்கா இப்படி அல்லாடவும் நம்ம சங்காத்தமும் ஒரு காரணமுங்கோ.
லக்ன,சப்தமாதிபதிகளாவது பலம் பெற்று உருப்பட வைக்கிற நிலைல இருக்காய்ங்களானு பார்த்தா லக்னாதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்து( சத்ரு ரோகம் ருணம்) ஆதிபத்யமும் பெற்று 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தாரு.ஆறுன்னா கடன் ..தீராக்கடன். எதிரி (பாக்,சீனா, அட நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்த வங்காளம் கூட தாலியறுக்குதே)
3ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம். (இங்கன சுக்கிரன் நின்னதாலதான் நாடு பத்தி எரியறச்ச கூட மன்மோகன் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் லக்சரியா உலகம் சுத்தபோறாருபோல) இங்கன லக்னாதிபதி நின்னா என்னாகும்? மேலும் அது சுக்கிரங்கறதால சாப்பிடற சோறு, கட்டற துணி,இருக்கிற ஊட்டுக்கும் கூட சனம் அல்லாடவேண்டியதுதேன்.
காலம் காலமா நிலை கொண்ட ஏழ்மை, உணவு தானிய பற்றாக்குறைக்கும், சமீப காலமா பெருகி வரும் ஆண்மையின்மை,செக்ஸ் குற்றங்கள்,பெண்கள் மீதான வன்கொடுமை ,பெண் சிசுக்கொலை இத்யாதிக்கும் இதான் காரணம்.
லக்னாதிபதியான சுக்கிரனோட ஆரெல்லாம் சேர்ந்தாய்ங்கனு பாருங்க. கண்ல ரத்தம் வரும்:
சந்திரன்:
நம்ம நாடு சுதந்திரம் வந்து 63 வருஷம் முடிஞ்சும் அன்னாடங்காய்ச்சியாவே இருக்கவும் எழுவதும்,விழுவதுமா இருக்கவும் இந்த கிரகசேர்க்கை தான் காரணம். ஆறுதல் என்னன்னா ஒரு 15 வருஷம் ஸ்டெபிலிட்டி, நல்ல வளர்ச்சி இருக்கும், அடுத்த 15 வருஷம் இன்ஸ்டெபிலிட்டி, தேக்கம் இருக்கும்.நம்ம தலைவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இருக்கவும் இதான் காரணம். கடல் வழியா வந்து மும்பை தாஜ் ஹோட்டலை தாக்கற அளவுக்கு கொண்டு போனது இந்த கிரக நிலைதான்.
சூரியன்:
இவர் வீர , தீரத்தை தந்தாலும் இவர் நான்காமிடத்துக்கு அதிபதியாக உள்ளதால நம்ம தலைவருங்க நாட்டை பார்த்துக்கறதை விட தங்களோட வீட்டைத்தான் பார்க்கிறாய்ங்க. (4- வீடு) லக்சரியா பயணம் போகவும், ஏற்கெனவே பளபளக்கும் தங்கள் வீட்டை அரசு நிதி கொண்டு "மராமத்து"பண்ணிக்கிறதுலயும் , விமானபயணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாகன வசதிகளை ஏற்படுத்திக்கிறதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு கடமைய கோட்டை விட்டுர்ராய்ங்க. நம்ம நாடு வீரத்தை காட்டினா ஏழை இந்தியனோட ஓட்டைக்கூரையும் பொத்தலாயிருமுங்கோ. அரைப்பட்டினி முழுப்பட்டினி ஆயிரும்.
புதன்:
இவர் 2/5க்கு அதிபதி 3ல் மாட்டினாரு. ரெண்டுன்னா ரெவின்யூ இன் கம், அஞ்சுன்னா இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி. 3ன்னா பயணம் போறது. பாருங்க நம்ம காசு பணம்லாம் பயணம் போயிருச்சு. நம்ம இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டியெல்லாம் கடல் கடந்து போயி அவிகளுக்கு பொருளீட்டி கொடுக்குது.
புதன்னா கல்வி,மருத்துவம், தொலைதொடர்பு (இதையும் விளக்கனுமா என்ன?)
அடுத்து ரெண்டாவது இடத்தை பாருங்க சப்தமாதிபதி ( நட்பு நாடுகள்) விரயாதிபத்யம் பெற்று ( வேறென்ன ஆப்புதேன்) இங்கு உட்கார்ந்தாரு. அதுவும் ஆரு? செவ்வாய். பாக்கிஸ்தான் பங்காளி நாடு (செவ் -சகோதரகாரகன்) ஆப்பு வைக்கவும் சீனாக்காரன் "இந்தோ சீனா பாய் பாய்னிக்கிட்டேதானே ஆப்பு வச்சதுக்கும் இதான் காரணம்.
உள்ளார்ந்த ஒற்றுமை குலையவும், ஒரு மொழி காரன் இன்னொரு மொழிகாரனோட - இந்த ஸ்டேட்டு
அடுத்த ஸ்டேட்டோட வெட்டி மடிய இதான் காரணம்.
இன்னம் இங்கன ஆரிருக்கானு பார்த்தா சனி. ரிஷபலக்னத்துக்கு யோககாரகனான சனி மாரகஸ்தானங்கற 3ஆவது இடத்துல மாட்டினாரு.இத்தீனி ஓட்டையிருந்தும் இந்தியா சிதறாம இருக்க காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.
அஷ்டமாதிபதியான குரு சத்ரு ரோகஸ்தானத்துல உட்கார்ந்தாரு. இவர் மட்டும் இங்கே இல்லேன்னா துண்டு துண்டா பீஸ் பீஸா சிதறிப்போயிருக்கும்.
நம்ம நாட்டை இன்னைக்கு ஒரு விதேசி ஆளவு 1-7ல இருக்கிற ராகு கேது தான் காரணம்.அதுவும் ராகுன்னா விடோயருனு அர்த்தம்.
நம்ம நாட்டை அதிக காலம் ஆண்டவுக எல்லாம் ஒன்னு வெஸ்டர்ன் ஸ்டைல் (நேரு,ராஜீவ்), அல்லது விடோயர்ஸ்/ பேச்சிலர் தான் .இதுக்கு காரணம் கூட 1-7ல இருக்கிற ராகு கேது தான்.
ஆன கண்ணாலத்துக்கு ஆர்கெஸ்ட்ரா எதுக்கு? எதிர்காலம் எப்படி இருக்கும்னு கேப்பிக. சொல்றேன்.
இப்ப 03/Nov/2010 => முதல் 27/Sep/2011 வரை சூரிய தசை ராகு புக்தி நடக்குது. ஆட்சியாளர்களுக்கு கெண்டம்தேன். அரசாங்கம்னு ஒன்னிருக்கானு நினைக்கிறாப்ல ஊழல்வாதிகளும், விதேசிகளும் தூள் கிளப்புவாய்ங்க.
அடுத்து வரப்போற குரு புக்திதான் ஒரு நல்ல அரசை அமைக்கனும். அது 27/Sep/2011 => முதல் 15/Jul/2012 வரைதான் நடக்கும். அப்பாறம் மறுபடி சனிபுக்தி மாட்டிக்குது. அரசு திண்டாட வேண்டியதுதான். இந்த சந்தடில தலித் அமைப்புகள், தொழிலாளர் யூனியன்கள், கம்யூனிஸ்டுகளோட பிராபல்யம் அதிகமாகலாம்.
சூரியதசை முழுக்க (09/Sep/2009 முதல் 09/Sep/2015 )அல்லாட்டமாதான் இருக்கும் அடுத்து வர்ர சந்திர தசையும் (09/Sep/2015 முதல் 08/Sep/2025) ஒன்னும் கழட்டற மாதிரி தோனலை.
2011, மே 8 ஆம் தேதி ராசிக்கு பத்துல குரு வர்ராரு. இப்ப ஆள்றவுகளுக்கு பதவி பறிபோகலாம்.
எச்சரிக்கை:
ஆமாம் முருகேசன் பரிகாரம் அதுஇதுன்னு அவுத்துவிடறிங்களே நம்ம நாட்டை காப்பாத்த எதுனா பரிகாரம் வச்சிருக்கிங்களானு கேப்பிக. சொல்றேன்.அடுத்த பதிவுல.
மொதல்ல இந்த பதிவுக்கு இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகம்னுதான் தலைப்பு வச்சேன். அப்பாறம் ஆதித்தனார் எழுத்தாளர் கையேடு மாதிரி கடைசில உள்ளதை தூக்கி டாப்ல கொண்டு வந்தேன்.
நான் வைக்க நினைச்ச தலைப்பு 100% கரீட். இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகமா இருக்கு. இதுக்கும் அவாளோட சதிதான் காரணம். விஐபிங்களுக்கு சின்ன வீட்டை கர்பப்படுத்தறதுக்கு கூட பக்காவா டைம் வச்சு கொடுக்கிற அவாள் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க குறிச்சுக்கொடுத்த டைம் இருக்கே . வயிறு எரியுதுங்க.
லக்னம் ரிஷபம்:
ரிஷப லக்னம் ராசி சக்கரத்துல ரெண்டாவது ராசி. இதனோட குணம் என்னன்னா சுருக்கமா சொன்னா செக்கு மாடு. நம்ம தலைவருங்க நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு போகாம இருக்க காரணம் இதான். நம்ம நாடு செக்கு மாடாட்டம் ஒரே வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வரவும் , அசலான பிரச்சினையை விட்டுட்டு ஜல்லியடிக்கவும் இதான் காரணம். மேலும் தங்களோட செல்வம்,செல்வாக்கு,சொல்வாக்கு,
பணம், குடும்பம்னு அவிக இருக்கவும் இதான் காரணம்.நம்ம தலைவருங்க உசரு போற நேரத்துல கூட "விகட வினோத பரிகாச பிரசங்க பிரியர்களா" இருக்க காரணம் இதான்.
இது ஸ்திர ராசி. தாளி இஞ்சி முரபா விக்கறதுக்கு கூட சரலக்னமா பார்த்து வையின்னு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் இவ்ளோ பெரிய எஸ்டாப்ளிஷ்மெண்டுக்கு ஸ்திர லக்னத்தை வச்சிருக்கானுவ.
ராசிய பாருங்ககடகம். இதனோட அதிபதி யாரு சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறுவாரு. 24 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திரம் மாறுவாரு. 6 மணிக்கொருதரம் பாதம் மாறுவாரு. 15 நாள் வளர்பிறை, 15 நாள் தேய் பிறை. இந்த ராசிக்காரவுகளுக்குனு ஒரு "சுயம்" இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளைகள்னா அது இந்த ராசிக்கரவுகதான்.
ரஷ்யா இருந்தவரை அவிக அழிச்சாட்டியத்துக்கெல்லாம் சால்ரா போட்டுக்கிட்டிருந்தம். இப்ப அமெரிக்கா.
சரி இதுவாச்சும் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். சனத்தொகை படபடனு எகிறுது (ரிசபத்துக்கு அதிபதி சுக்கிரன் - கில்மாவுக்கு இவர் தான் அதிபதி) உலகம் போற போக்குல இன்னைக்கும் ஒரு சமயம் இல்லாட்டியும் ஒரு சமயம் சென்டிமென்ட் பார்க்கிற சனம் இந்தியாவுலதான் இருக்காய்ங்கனு ஆறுதல் பட்டுக்கலாம்.
லக்னத்தை பாருங்க ராகு -ஏழைப்பாருங்க கேது. ராகு கேதுக்களிடையில எல்லா கிரகமும் சிக்கி பிதுங்கிக்கிட்டிருக்கு. இதனோட பலன் என்னடான்னா 45 வருசம் வரை சொல்லிக்கிறா மாதிரி டெவலப் மென்டே இருக்காது. மேலும் ஊழல்வாதிகள் + சாமியார்களிடையில நாடாள்வோரும், நாடும், நாட்டு மக்களும் சிக்கி சீரழியனும்.( ஞா இருக்கா திரேந்திர பிரம்மச்சாரி, சந்திராசாமி)
ஜோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவன் கூட இந்த மாதிரி ஒரு நேரத்தை ரெக்கமெண்ட் பண்ணமாட்டான். நேரு மாமாவுக்கு நாள் குறிச்சு கொடுத்த பன்னாடை பரதேசி ஆருனு விசாரிக்கனும்ணே.
சரி லக்னமும் - (சொந்த பலம்) ஏழாமிடமும் ( நட்பு நாடுகள்) தான் நாறிப்போச்சு . ரஷ்யா சிதறிப்போகவும் அமெரிக்கா இப்படி அல்லாடவும் நம்ம சங்காத்தமும் ஒரு காரணமுங்கோ.
லக்ன,சப்தமாதிபதிகளாவது பலம் பெற்று உருப்பட வைக்கிற நிலைல இருக்காய்ங்களானு பார்த்தா லக்னாதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்து( சத்ரு ரோகம் ருணம்) ஆதிபத்யமும் பெற்று 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தாரு.ஆறுன்னா கடன் ..தீராக்கடன். எதிரி (பாக்,சீனா, அட நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்த வங்காளம் கூட தாலியறுக்குதே)
3ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம். (இங்கன சுக்கிரன் நின்னதாலதான் நாடு பத்தி எரியறச்ச கூட மன்மோகன் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் லக்சரியா உலகம் சுத்தபோறாருபோல) இங்கன லக்னாதிபதி நின்னா என்னாகும்? மேலும் அது சுக்கிரங்கறதால சாப்பிடற சோறு, கட்டற துணி,இருக்கிற ஊட்டுக்கும் கூட சனம் அல்லாடவேண்டியதுதேன்.
காலம் காலமா நிலை கொண்ட ஏழ்மை, உணவு தானிய பற்றாக்குறைக்கும், சமீப காலமா பெருகி வரும் ஆண்மையின்மை,செக்ஸ் குற்றங்கள்,பெண்கள் மீதான வன்கொடுமை ,பெண் சிசுக்கொலை இத்யாதிக்கும் இதான் காரணம்.
லக்னாதிபதியான சுக்கிரனோட ஆரெல்லாம் சேர்ந்தாய்ங்கனு பாருங்க. கண்ல ரத்தம் வரும்:
சந்திரன்:
நம்ம நாடு சுதந்திரம் வந்து 63 வருஷம் முடிஞ்சும் அன்னாடங்காய்ச்சியாவே இருக்கவும் எழுவதும்,விழுவதுமா இருக்கவும் இந்த கிரகசேர்க்கை தான் காரணம். ஆறுதல் என்னன்னா ஒரு 15 வருஷம் ஸ்டெபிலிட்டி, நல்ல வளர்ச்சி இருக்கும், அடுத்த 15 வருஷம் இன்ஸ்டெபிலிட்டி, தேக்கம் இருக்கும்.நம்ம தலைவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இருக்கவும் இதான் காரணம். கடல் வழியா வந்து மும்பை தாஜ் ஹோட்டலை தாக்கற அளவுக்கு கொண்டு போனது இந்த கிரக நிலைதான்.
சூரியன்:
இவர் வீர , தீரத்தை தந்தாலும் இவர் நான்காமிடத்துக்கு அதிபதியாக உள்ளதால நம்ம தலைவருங்க நாட்டை பார்த்துக்கறதை விட தங்களோட வீட்டைத்தான் பார்க்கிறாய்ங்க. (4- வீடு) லக்சரியா பயணம் போகவும், ஏற்கெனவே பளபளக்கும் தங்கள் வீட்டை அரசு நிதி கொண்டு "மராமத்து"பண்ணிக்கிறதுலயும் , விமானபயணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாகன வசதிகளை ஏற்படுத்திக்கிறதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு கடமைய கோட்டை விட்டுர்ராய்ங்க. நம்ம நாடு வீரத்தை காட்டினா ஏழை இந்தியனோட ஓட்டைக்கூரையும் பொத்தலாயிருமுங்கோ. அரைப்பட்டினி முழுப்பட்டினி ஆயிரும்.
புதன்:
இவர் 2/5க்கு அதிபதி 3ல் மாட்டினாரு. ரெண்டுன்னா ரெவின்யூ இன் கம், அஞ்சுன்னா இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி. 3ன்னா பயணம் போறது. பாருங்க நம்ம காசு பணம்லாம் பயணம் போயிருச்சு. நம்ம இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டியெல்லாம் கடல் கடந்து போயி அவிகளுக்கு பொருளீட்டி கொடுக்குது.
புதன்னா கல்வி,மருத்துவம், தொலைதொடர்பு (இதையும் விளக்கனுமா என்ன?)
அடுத்து ரெண்டாவது இடத்தை பாருங்க சப்தமாதிபதி ( நட்பு நாடுகள்) விரயாதிபத்யம் பெற்று ( வேறென்ன ஆப்புதேன்) இங்கு உட்கார்ந்தாரு. அதுவும் ஆரு? செவ்வாய். பாக்கிஸ்தான் பங்காளி நாடு (செவ் -சகோதரகாரகன்) ஆப்பு வைக்கவும் சீனாக்காரன் "இந்தோ சீனா பாய் பாய்னிக்கிட்டேதானே ஆப்பு வச்சதுக்கும் இதான் காரணம்.
உள்ளார்ந்த ஒற்றுமை குலையவும், ஒரு மொழி காரன் இன்னொரு மொழிகாரனோட - இந்த ஸ்டேட்டு
அடுத்த ஸ்டேட்டோட வெட்டி மடிய இதான் காரணம்.
இன்னம் இங்கன ஆரிருக்கானு பார்த்தா சனி. ரிஷபலக்னத்துக்கு யோககாரகனான சனி மாரகஸ்தானங்கற 3ஆவது இடத்துல மாட்டினாரு.இத்தீனி ஓட்டையிருந்தும் இந்தியா சிதறாம இருக்க காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.
அஷ்டமாதிபதியான குரு சத்ரு ரோகஸ்தானத்துல உட்கார்ந்தாரு. இவர் மட்டும் இங்கே இல்லேன்னா துண்டு துண்டா பீஸ் பீஸா சிதறிப்போயிருக்கும்.
நம்ம நாட்டை இன்னைக்கு ஒரு விதேசி ஆளவு 1-7ல இருக்கிற ராகு கேது தான் காரணம்.அதுவும் ராகுன்னா விடோயருனு அர்த்தம்.
நம்ம நாட்டை அதிக காலம் ஆண்டவுக எல்லாம் ஒன்னு வெஸ்டர்ன் ஸ்டைல் (நேரு,ராஜீவ்), அல்லது விடோயர்ஸ்/ பேச்சிலர் தான் .இதுக்கு காரணம் கூட 1-7ல இருக்கிற ராகு கேது தான்.
ஆன கண்ணாலத்துக்கு ஆர்கெஸ்ட்ரா எதுக்கு? எதிர்காலம் எப்படி இருக்கும்னு கேப்பிக. சொல்றேன்.
இப்ப 03/Nov/2010 => முதல் 27/Sep/2011 வரை சூரிய தசை ராகு புக்தி நடக்குது. ஆட்சியாளர்களுக்கு கெண்டம்தேன். அரசாங்கம்னு ஒன்னிருக்கானு நினைக்கிறாப்ல ஊழல்வாதிகளும், விதேசிகளும் தூள் கிளப்புவாய்ங்க.
அடுத்து வரப்போற குரு புக்திதான் ஒரு நல்ல அரசை அமைக்கனும். அது 27/Sep/2011 => முதல் 15/Jul/2012 வரைதான் நடக்கும். அப்பாறம் மறுபடி சனிபுக்தி மாட்டிக்குது. அரசு திண்டாட வேண்டியதுதான். இந்த சந்தடில தலித் அமைப்புகள், தொழிலாளர் யூனியன்கள், கம்யூனிஸ்டுகளோட பிராபல்யம் அதிகமாகலாம்.
சூரியதசை முழுக்க (09/Sep/2009 முதல் 09/Sep/2015 )அல்லாட்டமாதான் இருக்கும் அடுத்து வர்ர சந்திர தசையும் (09/Sep/2015 முதல் 08/Sep/2025) ஒன்னும் கழட்டற மாதிரி தோனலை.
2011, மே 8 ஆம் தேதி ராசிக்கு பத்துல குரு வர்ராரு. இப்ப ஆள்றவுகளுக்கு பதவி பறிபோகலாம்.
எச்சரிக்கை:
ஆமாம் முருகேசன் பரிகாரம் அதுஇதுன்னு அவுத்துவிடறிங்களே நம்ம நாட்டை காப்பாத்த எதுனா பரிகாரம் வச்சிருக்கிங்களானு கேப்பிக. சொல்றேன்.அடுத்த பதிவுல.
Labels:
astrology,
central government,
falls,
Horoscope,
இந்தியா,
கவிழும்,
மத்திய அரசு,
ஜாதகம்
Saturday, February 12, 2011
இந்தியா - ஒரு எண் கணித பார்வை
நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தேதி 15/08/1947. இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 6 வரும். இதன் அதிபதி சுக்கிரன்.(பிறப்பு எண்) தேதி,மாதம்,ஆண்டுகளில் உள்ள இலக்கங்கள் எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 8 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சனி.
நம் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது 26/01/1950 . இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 8 வரும்.(பிறப்பு எண்) இதற்கு அதிபதி சனி.தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 6 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சுக்கிரன்.
ஆக எண்கணிதப்படி நம் நாடு சுக்கிரன்,சனி ஆதிக்கத்தில் உள்ளது.
ஜோதிட விதிப்படி சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்களே. ஆனல் சற்றே ஆழமாக யோசித்தால் இதுவே இந்தியாவின் முன்னேற்றத்தை முடக்கியுள்ளது என்று ஆணித்தரமாக கூறலாம். காரணம், சனி ஏழ்மை,பசி,பட்டினி,தாமதம்,கூலிக்கு மாரடித்தல்,ஏழை மக்களை இம்சித்து பொருளீட்டுதல்,முதியவர்கள் அங்கஹீனமுள்ள்வர்களை காட்டும் கிரகமாகும்.
முட்டிவலியால் அவஸ்தைப் பட்ட வாஜ்பாயி,தொண்டு கிழமான பி.வி.நரசிம்ம ராவ்,ஒட்டிய முகம் கொண்ட சோனியா ,எல்லோருமே சனியின் தூதுவர்கள்தான். இவர்களின் தாமஸ புத்தியாலும்,கூலிக்கு மாரடிக்கும் எண்ணத்தாலும் ஏழ்மை அதிகரித்தது.
கலை உள்ளம் கொண்ட நேரு, இளமை தோற்றம் கொண்ட இந்திரா,ஓவியரான வி.பி.சிங் எல்லாம் சுக்கிரனின் தூதுவர்கள் . இவர்களின் ஆட்சி சனியின் தடைகளையும் மிறி ஓரளவேனும் ஏழை மக்களின் உணவு,உடை,இருப்பிடம் (சுக்கிரனின் ஆதிபத்யம் உள்ள) ஆகிய விஷயங்களில் அக்கறையுடன் நடந்தது.
சுக்கிரன் காதல், சிற்றின்பங்களின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதால் தான் நேருவுக்கும், லேடி மவுண்ட் பேட்டன் இடையில் காதல், இந்திராவின், ராஜீவின் காதல் திருமணம் ஆகியன நடந்ததோடு , ராகுல் கதையும் அதே ட்ராக்கில் போகிறது.
மக்கள் தொகையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசாங்க முடிவுகளில் பெண்ணான சோனியாவின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.
சுக்கிரன் என்றால் கூட்டுறவு. சனி என்றால் விவசாயம். கூட்டுறவு பண்ணை விவசாயம் அமல் செய்யப்பட வேண்டும்.அதிலும் விவசாய கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு சமமான இடம் தரப்பட வேண்டும்.மேலும் பூக்கள்,பழங்கள் தொடர்பான உற்பத்தியில் கவனம் செலுத்தினால் சனி,சுக்கிர தொடர்பினால் ஏற்பட்ட முன்னேற்ற தடைகள் விலகி சுக்கிரனின் ஆதிக்கத்திற்குட்பட்ட உணவு,உடை,இருப்பிடம் ஆகியன எல்லோருக்கும் கிடைக்கும். அதோடு மக்கள் தொகை பெருக்கமும் கட்டுப் படுத்தப்படும்.இது ஜோதிட ரீதியில் மட்டும் அல்ல விஞ்ஞான முறைப்படியும் சாத்தியமே.
இதை .. இந்த கனவை நனவாக்க ஒரு திட்டம் தீட்டி அதன் அமலுக்கும் பிரச்சாரத்துக்கும் உழைத்துவருகிறேன். அது குறித்த முழு விவரங்களை அறிய இங்கே அழுத்துங்கள்
நம் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது 26/01/1950 . இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 8 வரும்.(பிறப்பு எண்) இதற்கு அதிபதி சனி.தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 6 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சுக்கிரன்.
ஆக எண்கணிதப்படி நம் நாடு சுக்கிரன்,சனி ஆதிக்கத்தில் உள்ளது.
ஜோதிட விதிப்படி சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்களே. ஆனல் சற்றே ஆழமாக யோசித்தால் இதுவே இந்தியாவின் முன்னேற்றத்தை முடக்கியுள்ளது என்று ஆணித்தரமாக கூறலாம். காரணம், சனி ஏழ்மை,பசி,பட்டினி,தாமதம்,கூலிக்கு மாரடித்தல்,ஏழை மக்களை இம்சித்து பொருளீட்டுதல்,முதியவர்கள் அங்கஹீனமுள்ள்வர்களை காட்டும் கிரகமாகும்.
முட்டிவலியால் அவஸ்தைப் பட்ட வாஜ்பாயி,தொண்டு கிழமான பி.வி.நரசிம்ம ராவ்,ஒட்டிய முகம் கொண்ட சோனியா ,எல்லோருமே சனியின் தூதுவர்கள்தான். இவர்களின் தாமஸ புத்தியாலும்,கூலிக்கு மாரடிக்கும் எண்ணத்தாலும் ஏழ்மை அதிகரித்தது.
கலை உள்ளம் கொண்ட நேரு, இளமை தோற்றம் கொண்ட இந்திரா,ஓவியரான வி.பி.சிங் எல்லாம் சுக்கிரனின் தூதுவர்கள் . இவர்களின் ஆட்சி சனியின் தடைகளையும் மிறி ஓரளவேனும் ஏழை மக்களின் உணவு,உடை,இருப்பிடம் (சுக்கிரனின் ஆதிபத்யம் உள்ள) ஆகிய விஷயங்களில் அக்கறையுடன் நடந்தது.
சுக்கிரன் காதல், சிற்றின்பங்களின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதால் தான் நேருவுக்கும், லேடி மவுண்ட் பேட்டன் இடையில் காதல், இந்திராவின், ராஜீவின் காதல் திருமணம் ஆகியன நடந்ததோடு , ராகுல் கதையும் அதே ட்ராக்கில் போகிறது.
மக்கள் தொகையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசாங்க முடிவுகளில் பெண்ணான சோனியாவின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.
சுக்கிரன் என்றால் கூட்டுறவு. சனி என்றால் விவசாயம். கூட்டுறவு பண்ணை விவசாயம் அமல் செய்யப்பட வேண்டும்.அதிலும் விவசாய கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு சமமான இடம் தரப்பட வேண்டும்.மேலும் பூக்கள்,பழங்கள் தொடர்பான உற்பத்தியில் கவனம் செலுத்தினால் சனி,சுக்கிர தொடர்பினால் ஏற்பட்ட முன்னேற்ற தடைகள் விலகி சுக்கிரனின் ஆதிக்கத்திற்குட்பட்ட உணவு,உடை,இருப்பிடம் ஆகியன எல்லோருக்கும் கிடைக்கும். அதோடு மக்கள் தொகை பெருக்கமும் கட்டுப் படுத்தப்படும்.இது ஜோதிட ரீதியில் மட்டும் அல்ல விஞ்ஞான முறைப்படியும் சாத்தியமே.
இதை .. இந்த கனவை நனவாக்க ஒரு திட்டம் தீட்டி அதன் அமலுக்கும் பிரச்சாரத்துக்கும் உழைத்துவருகிறேன். அது குறித்த முழு விவரங்களை அறிய இங்கே அழுத்துங்கள்
Labels:
future,
Horoscope,
india,
இந்தியா,
எதிர்காலம்,
நியூமராலஜி
Subscribe to:
Posts (Atom)