'>
Showing posts with label கனிமொழி. Show all posts
Showing posts with label கனிமொழி. Show all posts

Thursday, December 22, 2011

"சுதேசி" யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை

அண்ணே வணக்கம்ணே !
ஒரு ஆசாமி ஊருக்கு புதுசா வந்த சாமி(யார்) கிட்டே லைஃப்ல நிம்மதியே இல்லை. என்ன பண்ணலாம்னு கேட்டாரு. சாமி விவரமான ஆளு. ஒரு நா கோழி வளர்க்க /இன்னொரு நாள் நாய் வளர்க்க / இன்னொரு நாள் கிளி வளர்க்கன்னு உபதேசங்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டே இருந்தாரு.

என்ட்ரி கொடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு விதமா டார்ச்சர் பண்ண - ஒன்னு இன்னொன்னை விரட்ட ஆசாமிக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சிருச்சு. மறு நாள் டக்கர் குட்டி ப்ரதர்னிட்ட கணக்கா பயங்கர விரக்தியோட சாமியை பார்க்க போனாரு.

சாமி நீ வளர்க்க ஆரம்பிச்ச எல்லா ஜீவராசியையும் ஜெ சசி அண்ட் கோவை விரட்டின மாதிரி விரட்டிருன்னாரு. ஷாட் கட்.

மறு நாள் ஆசாமி வந்தான். அக்மார்க் இழந்த சக்தி வைத்தியரை பார்த்து லேகியம் சாப்ட கணக்கா சுஸ்தா வந்தான். சாமி கேட்டாரு.

எப்படிப்பா இருக்கேன்னாரு அதுக்கு ஆசாமி தினத்தந்தி ஹெட் லைன்ஸ் கணக்கா " நிம்மதியா இருக்கேன் சாமி"ன்னான்.

இந்த கதையை ஏன் இப்பம் சொல்றேன்னு கேப்பிக.சொல்றேன். தெய்வம் என்னெல்லாம் கொடுத்திருக்கோ அதனோட மகிமை அதுக நம்மாண்ட இருக்கிற வரை தெரியாது, எதுனா கிரகம் சைடு வாங்கி உள்ளடி கொடுத்து "உள்ளது போச்சுரா நொள்ளை கண்ணா"னு ஆயிட்டா அப்பத்தேன் தெய்வம் நம்மை "எம்மாம்"
கருணையோட ஆசீர்வதிச்சிருந்தாருன்னு புரியும்.

நம்ம கதையும் அப்படித்தேன் ஆயிருச்சு. இந்த 40+ வயதுங்கறது ஒரு ஆணோட லைஃப்ல முக்கியமான காலகட்டம். மேலும் மேலும் தீவிரமா உழைச்சு மேலும் மேலும் சொத்து சுகம்னு சேர்க்க வேண்டிய வயசு.

நாம பைபிள் சொல்றாப்ல ( பறவைகள் விதைப்பதுமில்லை -அறுப்பதுமில்லை) வாழ்ந்துட்ட பார்ட்டி. பழக்கத்தை மாத்திக்க முடியலை. ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப் மாதிரி ஓடிக்கிட்டிருந்தது. எங்க பாட்டி "அவுத்து வுட்ட மாடு மாதிரி"ன்னு சொல்வாள்.அப்படி ஒரு லைஃப்.

மொதல் ஆப்பு மின்வாரியம் வச்சுருச்சு. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் பவர் கட். இதுக்கு மிந்தி தீப்பெட்டி கணக்கான போர்ஷன்ல பவர் கட் நேரத்துலயும் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தம். ( அதாங்க பலன்களை பதிவு பண்ணி வச்சுக்கறது) .

வாழ்க்கையில உயரனும்ங்கறதை நெஜமாக்க மேல் மாடிக்கு வந்துட்டமா சுத்து வட்டாரத்துல வியாபர தலங்கள் , லாட்ஜுகள்ள ஓடும் ஜெனரேட்டர்கள் சத்தம் மண்டைய பிளக்குது.இதுல என்னத்தை பதிவு பண்றது.

இடையில இந்த காலண்டர் சமாசாரம் ஒன்னு .( இன்னைக்கு பாரத்தை சென்னை ஆஃப்செட் ப்ரிண்டர்ஸ் தலை மேல இறக்கியாச்சுன்னு வைங்க) . ஜோதிடம் 360 நூல் வெளியீடு ஒன்னு. ( பொங்கல் வெளியீடு)

எல்லாம் சேர்ந்து ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல பயங்கர எஃபெக்ட் வந்துருச்சு. இந்த இழவுல ஒரு சாட்சி சொல்லும் கடமை வேற .

அல்லாத்துக்கும் க்ளைமாக்ஸ் மாதிரி காலண்டர் ப்ரிண்டிங் வேலையா சென்னைக்கு போன நம்ம பாப்பாவோட உட்பி + அவள் வேலை பார்க்கும் ஸ்டுடியோ ஓனர் அவளுக்கு செக்யூரிட்டியா போறதால தன்னோட வளர்ப்பு நாயை நம்ம ஆத்துல விட்டுட்டு போயிட்டான். ஏற்கெனவே நம்ம ஆத்துல ஒரு டிக்கெட் இருக்கு.

ஆனால் அது ஸ்னேகா டைப். புதுசா வந்த டிக்கெட் இருக்கே கொய்யால சஞ்சய் காந்தி டைப். நம்ம நரம்பை கழட்டிருச்சு போங்க. இப்பத்தேன் உறைக்குது ஆத்தா நம்மை எந்த அளவுக்கு காபந்து பண்ணி வச்சிருந்தான்னு.

நாளையிலருந்தாச்சும் கொஞ்சம் நிம்மதியா விட்டா "பொளப்ப" பார்க்கலாம். ஆத்தா என்ன பண்றாளோ ஆருக்கு தெரியும்?

எச்சரிக்கை:

கனிமொழியின் எதிர்காலம் குறித்த நம்ம கணிப்பு சுதேசி இதழ்ல வெளியாகியிருக்கு. கடைசி பாராவுல மட்டும் தங்கள் சரக்கை சேர்த்து பப்ளிஷ் பண்ணியிருக்காய்ங்க. ஆன்லைனில் பார்க்க விரும்பறவுக கீழே உள்ள சுட்டிகளை க்ளிக்கி பார்க்கலாம்.

http://sudesi.com/tamil/viewpage?order=21
http://sudesi.com/tamil/viewpage?order=22

(என்னண்ணே சோதிட கேள்விபதில் பகுதிக்கு மொத நாள் வந்த கேள்விகளோட சரி ..கேள்விகளே வரலை.. ஆளுக்கு ஒன்னா தூக்கி தட்டுங்க. இல்லாட்டி ஜா.ரா மாதிரி போலி பெயர்ல கேள்வி கேட்டு பதில் கொடுக்க வேண்டி வந்துரப்போவுது)

Sunday, December 11, 2011

கனி மொழி ஜாதகம் : ஒரு பார்வை

கனிமொழியோட ஜாதகத்தை கணிச்சு பார்த்ததும் மனசுல ஸ்பார்க் ஆன மொதல் விஷயம் "கனியை சனி ஒரு கை பார்க்காம விடமாட்டாரு"ங்கறதுதேன். 1968 ஆம் வருடம், ஜனவரி 5 ஆம் தேதி சூரியன் உச்சியில் இருக்கும் போது பிறந்த கனியோட ஜாதகப்படி அவருடைய லக்னம் மீனம்,ராசி கும்பம். மீனம் ராசி சக்கரத்துல கடேசி ராசிங்கறதால இவிக லைஃப்ல எல்லாமே கடேசியாதான் நடக்கும். மத்தவுக வேணாம்னு கழிச்சதுதேன் கிடைக்கும். கும்பம் ராசிச்சக்கரத்துல 11 ஆவது ராசிங்கறதால லாபம் பார்க்காம எதையும் செய்யமாட்டாய்ங்க.

கடந்த சனி பெயர்ச்சியில சனி அஷ்டமத்துல வந்து உட்கார்ந்து ஆட்டிவச்சதுல இவிக லாபம் பார்த்து இறங்கின காரியம்லாம் இவிக தலைக்கு தீம்பாவே முடிஞ்சுது. இந்த சனிப்பெயர்ச்சிக்கு சனி 9 ல வந்தாலும் அது அப்பாவை காட்டுமிடம்.அப்பா "ஒரு வழி" ஆனபிறகு அல்லது அப்பா கைவிட்ட பிறகு இந்த ஜாதகர் மேற்கு பக்கமா தூரதேசம் போயிரவும் வாய்ப்பிருக்கு.

ஜாதகத்தில் கிரக நிலை:

லக்னத்துல லாப -விரயாதிபதியான சனி , 2 -8 ல் நின்று கடுமையான மாங்கல்ய தோஷத்தை தரும் ராகு கேது ,6 ல் லக்னாதிபதியான குரு , அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன், ( இவருக்குரிய எண் 6 - ஜாதகருக்கு திகார்ல ஒதுக்கப்பட்ட
சி(அ)றை எண் கூட 6 தான்) தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் மற்றும் தாய் & கணவரை காட்டும் புதன் இருக்காய்ங்க. புத்திஸ்தானாதிபதியான சந்திரனும் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதி & அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாபதியான செவ்வாயும் சேர்ந்திருக்காய்ங்க. டெக்னிக்கல் டீட்டெய்ல்ஸ் ஓவர். இப்பம் பலனை பார்ப்போம்.

ஜாதக பலன்:

லக்னாதிபதியான குருவே ஆறுல மாட்டினாரு. கனிக்கு எதிரி ஆருன்னா கனிதான். குரு கங்கண காரகன் (திருமணம்) என்பதால் முதல் திருமணம் தோல்வி. குரு புத்திர காரகன் -அம்மாவின் இந்த சிறை வாசம் மகன் ஆதித்யாவோட மனதை எந்தளவுக்கு பாதித்ததோ -அதன் விளைவாக அம்மா -பிள்ளை உறவு எந்த அளவுக்கு மெலியுமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ராகு கேதுக்கள்:

2 என்பது வாக்கு ஸ்தானம். எட்டு என்பது ஆயுள் ஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருப்பதால் கனியோட வாக்கு அவர் கழுத்துக்கு தூக்கு.( நீரா ராடியா டேப்பு கேட்டிங்களா?) ஒவ்வொரு பிடி சோறும் விசமாத்தான் இறங்கும். தனிமை -இருட்டு-நிராகரிப்பு இதான் வாழ் நாள் முழுக்க தொடரும்.

"விவகாரங்களை" காட்டும் ஆறாமிடத்தில் நின்ற லக்னாதிபதியான குரு ஜீவனாதிபதியாவும் இருக்கிறதால இவரோட முழு நேரத் தொழிலே "விவகாரமா"த்தான் இருக்கும்.

லக்ன சனி:

கனி சொம்மா இருந்துரலாம்னு நினைச்சாலும் லக்னத்துல நின்ன சனி விடமாட்டாரு. மூன்றாமிடத்தை பார்த்து சகோதரர்களுக்கும் , ஏழாமிடத்தை பார்த்து கணவருக்கும், பத்தாமிடத்தை பார்த்து "பிழைப்புக்கும்" ஆப்பு வைச்சுக்கிட்டே இருப்பாரு.

கனி பிறந்த பிறவுதேன் கலைஞருக்கு "கூடி"வந்ததுன்னு பேசிக்கிறாய்ங்க.அசலான மேட்டர் இன்னான்னா அப்பாவை காட்டும் 9 ஆமிடத்தில் மாரகஸ்தானாதிபதி & மரணத்தை காட்டும் அஷ்டமஸ்தானாதிபதியான சுக்கிரன் நின்னதாலதான் கலைஞரு பிழைப்பு நாறிப்போச்சு. சுக்கிரன் என்றால் பெண். இப்படி தமிழ் நாட்டுல ஒரு அம்மாவும் -அப்படி தில்லி "மாதாஜீக்களும் " ( இந்திரா -சோனியா) தாத்தாவுக்கு ஆப்படிக்க இது முக்கிய காரணம்.

தொழில் உத்யோகத்தை காட்டும் பத்தாமிடத்தில் கடன்,எதிரி ,வழக்கு விவகாரங்களை காட்டும் ஆறாமிடத்து அதிபதியான சூரியன் நின்னாரு . இதனால இவிக கேரியர் முழுக்க எதிரிகள் நிறைஞ்சிருப்பாய்ங்க. அப்படி யாரும் இல்லைன்னாலும் கனி அம்மாவே ஒரு நலம் விரும்பியை தன் எதிரியா மாத்திக்குவாய்ங்க,

இந்த சூரியனோடு தாய் & கணவரை காட்டும் புதன் இருக்கிறதால இவிகளுக்கு அசலான எதிரி இவிக அம்மாதான். கணவரை கனி எதிரியாத்தான் பாவிப்பாரு.

புத்திஸ்தானாதிபத்தியம் சந்திரனுக்கு கிடைச்சிருக்கு. சந்திரன்னாலே சஞ்சலம், ஆகாய கோட்டைகள்தான். இதுல இவரு விரயத்துல வேற மாட்டினாரு.

இதனால இவரோட "கனவு". எதுவும் நிறைவேறாது. கீழே தள்ளின குதிரை குழியும் பறிச்சாப்ல இந்த சந்திரன் செவ்வாயோட வேற சேர்ந்து "உன்மத்த" நிலைய தருவாரு. செவ்வாய் ,தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானாதிபத்யம் மற்றும் அப்பா ,அப்பா சொத்தை காட்டும் பாக்கியாதிபத்தியம் பெற்று விரயத்தில் நின்றதால இவரோட "வருமானம்லாம்" பறிபோயிரும். இவர் பேச்சுக்கு மதிப்பிருக்காது. குடும்பமும் இவருக்கு ஆதரவா இருக்காது. அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான். அப்பா சொத்துலயும் (திமுக?) இவருக்கு உரிய பங்கு கிடைக்காது. சுத்தமா கழட்டி விட்டுருவாய்ங்க.

இதுவரை பார்த்த அம்சமெல்லாம் ஜூஜுபி. சனியோட 7 ஆம் பார்வை மற்றும் செவ்வாயோட எட்டாம் பார்வை கூட்டாக 7 ஆம் இடத்தின் மீது விழுவது என்ன மாதிரி எஃபெக்டை தரும்னு சொன்னா நாஸ்திதான். ஒரு நண்பரும் - ஒரு எதிரியும் கூட்டு சேர்ந்து இவர் உயிருக்கே உலை வைக்கவும் வாய்ப்பிருக்கு..

தற்சமயம் புத மகாதசையில் சனி புக்தி நடக்குது .(13/6/2011 முதல் 23/2/2014 வரை) இவிக லக்னம் மீனம்ங்கறதால புதன் - சனி ரெண்டு பேருமே எதிரிங்கதேன்.தசா நாதனும் -புக்தி நாதனும் ஆளுக்கொரு ஆப்பு வைக்க காத்திருக்காய்ங்க.( வச்சுட்டாய்ங்க)

சனி தலித் இனத்தை காட்டும் கிரகம். தலை மேல உட்கார்ந்த சனி கிரகம். ராசா ரூபத்துல ஆப்படிச்சுருச்சு. புதன் என்றால் ஏஜெண்ட். நீரா ராடியா ஏஜெண்டுதானே.

சனிக்கு லாபம் -விரயம்னு ரெண்டு வித ஆதிபத்யம் இருக்கு. இதனால மேற்சொன்ன காலகட்டத்தில் முதல் பாதி விரயமாவும் - அடுத்த பாதி ஓரளவு லாபமாவும் நடக்க வாய்ப்பிருக்கு. ஆக இதோ பட்டம் -அதோ பதவின்னு என்னதான் அல்லாடினாலும் தப்பித்தவறி அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கணக்கா பதவியே கிடைச்சாலும் 2012 , அக்டோபர் 17 வரைக்கும் செயில்ல தப்ப "உஸ் .. அப்பாடா"ன்னு உட்கார முடியாது,

2012 , அக்டோபர் 17க்கு மேல் நடக்கும் லாபம் கூட மரணம் தொடர்பான "ஆதாயமாக"த்தான் இருக்கும். அந்த ஆதாயம் கூட 23/2/2014 க்கு பிறகு "விரக்தி"யை கொடுத்துரும்.

அடுத்து வரக்கூடியும் 7 வருட கேது தசை முதல் கணவரை போலவே கனிமொழியையும் "சன்யாசி"போல ஆக்கி "பரதேசம்" அனுப்பி வைத்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன்.

,

Monday, December 5, 2011

போங்கடா நீங்களும் உங்க அறிவு ஜீவித்தனமும்

அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் கடவுளும்னு மினி தொடர் தொடர்ந்தே தீரும் கவலை வேண்டாம்.சோதிடபதிவு போட்டா பத்து ரூவா சம்பாரிச்சுக்கலாம் இல்லேங்கலை. நம்மை " நிக்க" வச்சதே சோ.பதிவுகள் தான் இல்லேங்கலை.
அதுக்காவ நாட்டு நடப்பை கண்டுக்காம இருந்தா அது துரோகம். அதனால இன்னிக்கு மட்டுமாச்சும் ஒரு சில விஷயங்களை பற்றி தலா ஒரு பாராவாச்சும் எழுதியே தீர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். கிரகமும் கடவுளும் தொடர் நாளையிலிருந்து தொடரும்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு:
பலான இடத்துக்கு போனா கதை பேச /கேட்க நேரம் இருக்காது. இதுவே தள்ளிக்கிட்டு வந்துட்டா ரெண்டு ஷோவுக்கு இடையில் நிறைய நேரம் இருக்கும். அப்பம் டைம் பாஸுக்கு கதை கேட்பதுண்டு. சொல்லிவச்ச மாதிரி அல்லாரும் ஒரே கதைதேன்.

மொதல்ல குடும்பம் சொந்தம் பந்தத்துல எவனா எச்சில் பண்ணியிருப்பான். அப்பாறம் இவள் மனசுக்கு புடிச்சதா ஒரு டிக்கெட். அப்பாறம் ஏரியா பெரிய மன்சங்க வரைக்கும் ஒரு நெட் ஒர்க். அப்பாறம் அது நேஷ்னல் பர்மிட் ஆயிரும்.

மொதல்ல லோக்கல் பெரிய மன்சங்களுக்கு சில்லறை வர்த்தகத்துல அனுமதி கொடுத்தாய்ங்க. இதுவே ஜன நாயகத்தை அதுவும் "வெல்ஃபேர் ஸ்டேட்"ங்கற கான்செப்டை தொழிலுக்கு அனுப்பின மாதிரிதேன்.

இப்பம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதிங்கறாய்ங்க இதை (இன்டர்) நேஷ்னல் பர்மிட்டுன்னுதேன் சொல்லனும்.

இதெல்லாம் எப்படி இருக்குதுன்னா கட்டின பொஞ்சாதிக்கு சோறு போட முடியாத புருசன்ங்காரன் பாவம் பொஞ்சாதி சாப்பிடாம இருக்காளேன்னு ஊட்டுக்கே பார்ட்டிய பிக் அப் பண்ணி அனுப்பி வச்ச மாதிரி இருக்கு.

அப்பூடி பொஞ்சாதி மேல பாசம் இருந்தா - சோறு போட்டே தீரனும்னு துடிப்பு இருந்தா கோவா பீச்சுக்கு போயி குப்புற படுத்து சம்பாதிக்கவேண்டியதுதானே..

பொஞ்சாதிக்கிட்டே ஃபைல் கொடுத்து கை.எழுத்துக்கு அனுப்பறதெல்லாம் இந்த அறிவு ஜீவிகளின் வேலை. பொஞ்சாதிய அனுப்பறாப்ல பாரதமாதாவை அனுப்பினா என்னன்னு எவனோ அறிவு ஜீவிக்கு ஸ்பார்க் ஆயிருக்கு. அவனோட மூளையின் குழந்தைதேன் இந்த அன்னிய முதலீடு சமாசாரம்.
ஜன் லோக் பால் மசோதா:

இந்த மசோதாவுக்கு ஏற்பட்டு ஏகத்துக்கு எகிறிப்போன மவுசை இறக்கவே இந்த அன்னிய முதலீடு பிரச்சினைய தூக்கி பிடிக்கிறாய்ங்களோன்னு ஒரு சம்சயம். மொதல் இன்னிங்ஸ்ல எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில இருந்த அன்னா டீம் மற்றும் அன்னா ஹசாரே ரெண்டாவது இன்னிங்ஸ்ல தேசலா , கொஞ்சமா சாயம் வெளுத்து தெரியறாய்ங்க. தாத்தா என்ன பண்றாருன்னு லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ..



ஜெ.அரசின் விலையேற்ற அதிரடி:

இந்த விலையேற்ற யோசனையை அம்மா சொந்தமா அமல் படுத்திட்டதா நினைக்காதிங்க. எல்லாம் இந்த தலைமை செயலக அறிவு ஜீவிகளின் மூளையில் பிறந்த கேன்சர் கட்டிகள். அம்மா என்னமா வீங்கி ,என்னமா சிவந்து வேலன்டைன் டே ரோசா மொக்கு மாதிரி இருக்குன்னு மயங்கிட்டாய்ங்க அதான் அம்மா பண்ண தவறு.

அம்மா ச்சொம்மா ஆளனுப்பி விட்டிருந்தா பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம்லாம் உயர்த்தாமயே நிலைமையை சமாளிக்க அயனான ஐடியா கொடுத்திருப்பம்.அனுப்பலியே. இருந்தாலும் என்ன அடையாள ஆலோசனை கட்டணமா ரூ.1 ஐ ஃபிக்ஸ் பண்ணி ஐடியா கொடுத்துருவம்ல.

1.ஆவின் - போக்குவரத்து வாரியம் - மின்வாரியம் மூன்றையும் மூன்று தனி தனி பப்ளிக் லிமிட்டட் கம்பெனியாக்கிர்ரது

2. மேற்படி நிறுவன ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஷேர் வாங்கிக்க முன்னுரிமை தந்துர்ரது - பால் அட்டை தாரர்கள் , பாஸ் ஹோல்டர்ஸ், மின் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கும் முன்னுரிமை.

3.மேற்படி நிறுவனங்களுக்கு தலையால தண்ணி குடிச்சாச்சும் 3 வருசத்துக்கு ஒரு பாக்கேஜ் கொடுத்துட்டு "ச்சூ" காட்டி விட்டுர்ரது . ஐ மீன் ( பைசா+ செயல் திறனை மேம்படுத்த -ஊழலை கட்டுப்படுத்த செயல் திட்டம் -அதன் அமலுக்கு உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப உதவி) 3 வருசத்துக்கப்பால லாபம் வந்தாலும் உங்களுக்கே - நஷ்டம் வந்தாலும் உங்களுக்கே ஆளை விடுன்னு அரசாங்கம் கழண்டுக்கனும்.

கனிமொழிக்கு வரவேற்பு:
ஒரு தெலுங்கு சினிமாவுல ராஜேந்திர பிரசாத் சதா சர்வ காலம் பான் பராக் குதப்பும் ட்ரஸ் டிசைனர். எம்.டி வந்து " லேட்டஸ்டா ஒரு டிசைன் போடச்சொன்னா நீ என்ன பண்ணிட்டிருக்கே" அது இதுன்னு காச்சுவாரு. அப்பம் ரா.பிரசாதோட அசிஸ்டன்ட் ஏதோ லொள்ளு பண்ண ரா.பிரசாத் அவனை துப்புவாரு. அசிஸ்டன் அணிஞ்சிருந்த வெள்ளை டீஷர்ட் மேல பான் பராக் எச்சில் சகட்டுமேனிக்கு எகிறும்.

ஒடனே எம்.டி "டிசைன்னா இதான்யா டிசைனுன்னு"குதிப்பாரு . இதுல துப்பினது சிபிஐ மற்றும் கோர்ட். எச்சில் விழுந்தது கனிமொழி ஆடையில் .டிசைனுன்னா டிசைன் இதான் டிசைனுன்னு குதிக்கிறது ?

சொல்லவும் வேணுமா என்ன? தூத்தேறிக்க.. இந்த கனிமொழி அம்மாவையும் இலக்கிய உலகம் அறிவு ஜீவின்னு ஒரு காலத்துல கொண்டாடிக்கிட்டிருந்தது

ஆந்திர அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:

சந்திரபாபு என்டிஆர் உபயத்துல ஒரு நாலரை வருசம் , பா.ஜ.க உபயத்துல ஒரு நாலரை வருசம்னு 9 வருசம் சி.எம்மா குப்பை கொட்டியாச்சு.

2004 ல காலி. 2009 எலக்சன்ல ஊர்ல இருக்கிற குப்பையையெல்லாம் தலைமேல கொட்டிக்கிட்டு மெகா அல்லையன்ஸ் வச்சுப்பார்த்தாரு.(அதுலயும் தெ.ரா.சமிதி குப்பை செமை நாற்றம்) பப்பு வேகலை.

இப்பம் ஜகன் வேற செமை துள்ளு துள்ளிக்கிட்டிருந்தாரா. தேர்தல் வந்தா அவருதான் அடுத்த முதல்வர்னு ஒரு ஃபோபியா சந்திரபாபுவுக்கு வந்துருச்சு.

வயசான காலத்துல லொள்ளு எதுக்கு. ஜகன் துள்ளி துவளட்டும். இதெல்லாம் 6 மாசம் 1 வருசத்துக்கு மேல தாங்காது. இந்த அரசாங்கம் இஸ்பேட் மாளிகை மாதிரி உஃபுன்னு ஊதினா கொட்டிக்கும். நமக்கு வசதியான நேரத்துல ஊதலாம்னு சூதானமா அரசியல் பண்ணிக்கிட்டிருந்தாரு.

ஜகன் நீ அரசாங்கத்தோட கொலைட் ஆயிட்ட. நீ எதிர்கட்சிங்கற கடமையிலருந்து தவறிட்டே அது இதுன்னு ரேக்கி விட்டுக்கிட்டே இருந்தாரு.

கொய்யால உனக்கு வைக்கிறேன் இருடா வேட்டுன்னு கிரண் - கிரண் டு சோனியா -சோனியா டு சங்கர் ராவ் (மந்திரி) சங்கர் ராவ் டு ஹை கோர்ட்-ஹை கோர்ட்லருந்து ஆர்டர்.

ஜகன் மேல சி.பி.ஐ ரெய்டுல்லாம் விட்டு பார்த்தாய்ங்க ஜகன் அசரலை. சந்திர பாபு காங்கிரஸோட "சோரம்"போயிட்டாருன்னு ஜகன் அடிச்சு விட பாபுவுக்கு தன் கற்பை நிரூபிச்சுக்கவேண்டி வந்துருச்சு. அதான் இந்த தீர்மானத்தோட பின்னணி.

இதுக்கு ஆதரவா :122 பேர் வாக்களிக்க , எதிர்த்து : 162 பேர் வாக்களிக்க கிரணுக்கு தலை தப்பியது.ஜகன் ஆளுங்க 19 பேர் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆளுங்க 17 பேர் எதிர்த்து வாக்களிக்க மேட்டர் பேலன்ஸ் ஆயிருச்சு.

சிரஞ்சீவியும் இதான்டா சான்ஸுன்னு ரேங்கிக்கிட்டு கைகேயி வேலைல்லாம் செய்து சைக்கிள் கேப்ல காரியம் சாதிச்சுக்கிட்டுத்தேன் ஓட்டுப்போட்டாரு அது வேற விஷயம்.

இதுல சோகம் என்னடான்னா அறிவு ஜீவி -லோக் சத்தா தலைவர் - டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜெயபிரகாஷ் இந்த பிரச்சினையில நடு நிலை வகித்தார்.

அறிவு சாஸ்தியாயிட்டா இப்படித்தான் நடந்துப்பாய்ங்க போல. கொய்யால இந்த அரசு இருக்கனுமா போகனுமாங்கற மேட்டர்லயே ஒரு முடிவை எடுக்க முடியாத இவிக தான் அறிவு ஜீவிகள். போங்கடா உங்க அறிவுல..............................


Monday, November 21, 2011

கனிமொழிக்கு ஜாமீன் - பத்திரிக்கைகள் வக்காலத்து

அண்ணே வணக்கம்ணே !

2 ஜி மேட்டர் லீக் ஆனப்ப அல்லா பத்திரிக்கையும் வீராவேசமா கிளிச்சிட்டிருந்தாய்ங்க.ஆனால் சமீப காலமா கனிமொழி மேட்டர்ல ப்ளேட்டை திருப்பி போட்டு எளுத ஆரம்பிச்சிருக்காய்ங்க. வெறுமனே கனிமொழிக்கு வக்காலத்து வாங்கினா "அசலான" விஷயம் வெளிய வந்துரும்னு மதுகோடா ,சத்யம் ராஜூன்னு சுத்தி வளைக்கிறாய்ங்க.

ஏறக்குறைய கலைஞர் ரேஞ்சுல கண்ணீர் விடறாய்ங்க. ஜாமீனுங்கறதென்னவோ அடிப்படை உரிமை மாதிரி எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. ஜாமீன்ல விடாத ஜட்ஜு மீடியாவுக்கு பயப்படறாரு -ஓவர் ஆக்சன் பண்றாருங்கற மாதிரி எளுதறாய்ங்க.

நம்ம அப்பாவி வாசகர்கள் இதையெல்லாம் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டா பாவம்யா..பொம்பள புள்ளை மாசக்கணக்கா செயில்ல போட்டா இன்னா பண்ணும்..கொடுத்துரவேண்டியதுதானேன்னு நினைக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

இந்த மாதிரி மேட்டர்லாம் பேப்பர்ல வர்ரதால இவிக மனித உரிமைகளுக்காவ கமிட்மென்டோட எளுதறாய்ங்கனு நினைச்சுட்டிங்கனா உங்களை மாதிரி முட்டாள் வேற யாருமில்லை. கனிமொழிக்கு ஜாமீன் வர்ரதுல நம்ம பத்திரிக்கைகளுக்கு என்ன அக்கறைன்னு கேப்பிக. மனித உரிமைகளை நிலை நாட்டறாய்ங்கனு சொன்னா அது ஜல்லி.

இவிகளை பொருத்தவரை .மனித உரிமைகள் மண்ணா போனாலும் நஷ்டமில்லை.தாளி இவிக வேலைக்கு வச்சிருக்கிற சப் எடிட்டர்,ரிப்போர்ட்டர் பொளப்பே நாறிக்கிடக்கு . ஜூ.விலருந்து வெளியே வந்த பார்ட்டிங்க கூட வாயை திறக்கலை.ஏன்னா எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதான்.

இவிக ஜூவியை பத்தி வாய் திறந்தா எந்த பத்திரிக்கையும் இவிகளை சேர்த்துக்காது. இதெல்லாம் ஒரு "புரிதல்". செரி செரி கனி மேட்டருக்கு வரேன்.

ஒரு காலத்துல மக்கள் கருத்தை பிரதிபலிக்கறதுதேன் பத்திரிக்கைகளோட வேலையா இருந்தது.ஆனால் இப்பம் மக்கள் கருத்தை உருவாக்கறதே நாங்கதேங்கற நினைப்பு அவிகளுக்கு வந்துருச்சு. ( நினைப்புத்தான் பொளப்பை கெடுக்குது)

இதுக்கு பிரதிபலனா என்ன கிடைச்சுரப்போகுதுன்னு கேப்பிக.வெய்ட் அண்ட் சீ.. கனி அம்மா வெளிய வந்தப்பாறம் விளம்பர வருமானம் குவியலாம். சங்கமம் அது இதுன்னு ப்ரோக்ராம் பண்ணுவாய்ங்க. விளம்பரங்களை அள்ளி விடுவாய்ங்க. இதெல்லாம் " ஜென்டில்மென் (?) அக்ரிமெண்டுங்கோ"

ராசா திகார்ல இருக்கிறப்பயே தான் அவரோட நண்பர் சந்தேக சாவு செத்தாரு. ராசாவுக்கு பெயில் கொடுத்து வெளிய விட்டிருந்தா இன்னம் ஆரெல்லாம் "தற்கொலை" செய்திருப்பாய்ங்களோ?

ஐ.பி.சில ஆயிரம் விதி -உபவிதி இருந்தாலும் கடேசியில ஜட்ஜூ தன் ஆறாவது அறிவை பயன்படுத்தித்தேன் தீர்ப்பு தரனும். அந்த ஆறாவது அறிவை இந்த நாலாவது தூண்கள் குழப்ப பார்க்கிறதுதேன் கேவலத்திலும் கேவலமா இருக்கு.

2ஜியை ஊதி பெருசாக்கினதும் இவிகளே. அதை ஊதி அணைக்க பார்க்கிறதும் இவிகளே. இதெல்லாம் எதுக்குன்னு கேப்பிக.வேற எதுக்கு? வசூல் ராஜா எம்பிபிஎஸ் தேன்.

வேலையோட வேலையா ஒரு காலத்துல பத்திரிக்கைகளை நாம கேட்ட பத்து கேள்விகளை இங்கன மீண்டும் தந்திருக்கம். அவிக பதிலே தரமாட்டாய்ங்கனு தெரியும். நீங்க ரோசிச்சு பாருங்களேன் இந்த கேள்விகளுக்கு அவிக கிட்டே பதில் உண்டா இல்லையான்னு ரோசிச்சு பாருங்க. இவிக (அவ)லட்சணம் என்னன்னு கொஞ்சமாச்சும் புரியும்.

பத்திரிக்கைகளுக்கு 10 கேள்விகள்:

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?


2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரிண்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன? ப்ளாக்ல வித்துர்ராய்ங்களா? இது குற்றமிலலியா? அல்லது அது தேவையில்லைன்னு எழுதிக்கொடுத்துட்டாய்ங்களா?


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு வெட்டியா,தண்டமா செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?

6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த ரொட்டீன் வேலைய கூட ஒழுங்கு மரியாதையா செய்யமுடியாத நீங்க பிரம்மாண்டமான அரசு இயந்திரத்தை குறை சொல்லலாமா?


7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?


10.உங்கள் வலை தளத்தில் contact என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி அதை கண்டுபிடிச்சு மெயில் அனுப்புபவர்களுக்கும் உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?



எச்சரிக்கை:

ஜோதிடம் 360 டிகிரி நூலுக்கான வேலைகள் மும்முரமா நடந்துக்கிட்டிருக்கு. நீங்க இந்தாளு ப்ளாக்/சைட்ல எழுதின அதே சமாசாரத்தை புஸ்தவமா போட்டு காசாக்கிர போறான்னு நினைச்சிருந்தா சாரி.. பொஞ்சாதி கிட்டே கூட கட் அண்ட் ரைட்டா பாய்ண்ட் டு பாய்ண்ட் பேசிரலாம். மிஞ்சிப்போனா கட்டிலை பிரிச்சு போடவேண்டி வரும் .அம்புட்டுதேன்.

ஆனால் ப்ளாக்/சைட்ல பாய்ண்ட் டு பாய்ண்ட் எழுதித்தொலைச்சுட்டா ஊத்தி மூடிர வேண்டியதுதேன்.அதனால துக்கினியூண்டு ரஸ்னா பவுடரை வச்சு 22 கிளாஸ் ஜூஸ் கலக்குறாப்ல மேட்டரை அடக்கி வாசிச்சு மஸ்தா பூச்சி காட்டோனம். இதனால பாய்ண்ட் சோனியாயிரும்.

புஸ்தவ விஷயத்துல மேற்படி மேட்டரை ரீ ப்ரொட்யூஸ் பண்ணா மேட்டர் டைல்யூட் ஆயிரும்.அதனால புஸ்தவத்துக்கான மேட்டரை ஏறக்குறைய புதுசாவே எழுதிக்கிட்டிருக்கம்.

Thursday, May 5, 2011

கனி மொழி : ஆரூட ஆய்வு

அண்ணே வணக்கம்ணே,

கனிமொழி அம்மா மே,4 ஆம் தேதி , காலை 6.30 ஃப்ளைட்ல தில்லி புறப்பட்டாங்களாம். அந்த  நேரத்துக்கு ஆரூட சக்கரம்  போட்டு பார்த்தா என்னனு ரோசனை. போட்டு தொலைச்சுட்டன்.

அவன் அவள் அது தொடரை தொடராம இந்த வில்லங்கத்துலல்லாம் மனசு போகுதுன்னா இதுக்கும் ஆத்தா தான் பொறுப்பு . நான் அம்பேல்.

லக்னம் மேஷம். மேஷத்துல சூரியன் செவ் சேர்ந்திருக்காய்ங்க. லக்ன+பஞ்சமாதிபதிகள்ங்கற வகையில இந்த சேர்க்கை நல்லதுதேன். ஆனால் சூரியன்+செவ்வாய்னு பார்த்தா?  Read More