'>
Showing posts with label ஆந்திரம். Show all posts
Showing posts with label ஆந்திரம். Show all posts

Thursday, May 24, 2012

ஆந்திரத்தில் கலவரசூழல் 144


அண்ணே வணக்கம்ணே !

ஆந்திர முன்னாள் முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜகன் இன்னம் கொஞ்ச நேரத்துல சி.பி.ஐ மின்ன ஆஜராவ போறாரு. விசாரணைக்கு வர்ர ஜகனை அப்படியே புடிச்சு போட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு க்ரூப் ஆஃப் மீடியா கூவிக்கிட்டிருக்கு. ஹைதராபாத்ல மட்டுமில்லாம , எல்லா மாவட்ட மையங்கள்ளயும் ஹை அலர்ட் அறிவிச்சிருக்காய்ங்க.

ஆந்திராவுல இருந்துக்கிட்டு ஆந்திர அரசியலை டச் பண்ண மாட்டேங்கிறியே நைனான்னுட்டு பலர் பேஜார் படறாய்ங்க. அவிகளை திருப்தி படுத்தவாச்சும் இன்னைக்கு ஒரு பதிவு போட்டே ஆகவேண்டிய நிலை. சோதிட பிரியர்கள் மன்னிக்கனும். ஆனால் இதுலயும் சோசியம் வருதுங்கோ..

மொதல்ல ஜகன் மோகன் ரெட்டி ( சொத்துக்குவிப்பு வழக்காம்) மே 28 ஆம் தேதி நேர்ல ஆஜராகனும்னு சி.பி.ஐ கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது.

சி.பி.ஐக்கு சஸ்பென்ஸ் தாங்கலியோ என்னமோ மே 25 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகனும்னு நோட்டீஸ் அனுப்பிட்டாய்ங்க. அதுவும் எப்படி இடைத்தேர்தல் பிரச்சாரத்துல இருந்த ஜகன் கையிலயே கொடுத்திருக்காய்ங்க.

இன்னைக்கு தேன் மே 25. ஜகனை தூக்கி உள்ளே வைக்கனும். அப்பத்தேன் நடக்கப்போற இடைத்தேர்தல்ல சிங்கிள் டிஜிட்லயாச்சும் காங்கிரஸுக்கு டிப்பாசிட் நிலைக்கும்ங்கற நிலைமை . இதுக்காவ நேத்து தங்கள் மந்திரி ஒருத்தரையே தூக்கிட்டாய்ங்க. (அரெஸ்ட் பண்ணிட்டாய்ங்க).

இதுல எல்லா மந்திரியும் பேதியாகி கிடக்கிறாய்ங்க. ஃபோன் அடிச்சாலே சி.பி.ஐயான்னுட்டு பி.பி எகிறுதாம்.

பாருப்பா எங்களுக்கு நீதி, நியாயம் , நேர்மை தான் முக்கியம் ஆரு தப்பு பண்ணாலும் தூக்கிருவம்னு ஃபிலிம் காட்டறது காங்கிரசோட நோக்கம் (இடைத்தேர்தல்ல ஜகனுக்கு அனுதாப அலை கை கொடுத்துரக்கூடாதுன்னு அலார்ட்டா இருக்காய்ங்க)

இந்த வழக்கு எப்படி வந்தது .. என்ன வழக்குன்னு தெரிஞ்சா ரெம்ப தமாசா இருக்கும் சங்கர்ராவ்னு ஒரு மந்திரி. இவர் பாவம் கோர்ட்டு கேஸுன்னு போகவோ - லாயருக்கு ஃபீசு கொடுக்கவோ துப்பில்லாத அன்னாடங்காய்ச்சி( ?) .

ஒய்.எஸ்.ஆர் தனியாருக்கு நிலம் ஒதுக்கி 20 அரசு ஆணைகள் வெளியிட்டதாகவும் - அதனால் பலன் பெற்ற நிறுவனங்கள் ஜகனோட கம்பெனிகள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்ததாவும் அதையெல்லாம் லஞ்சப்பணமா கருதி நடவடிக்கை எடுக்கனும்னு ஹை கோர்ட்டுக்கு ஒரு லெட்டர் போட்டார்.

உடனே ஹை கோர்ட் அந்த கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று குறைஞ்ச பட்ச ஆதாரங்கள் இருக்கான்னு பார்க்க சொல்லி சிபிஐக்கு உத்தரவு போட்டது.

சி.பி.ஐ கு.ப ஆதாரங்கள் இருப்பதா அறிக்கை கொடுத்தது. டீட்டெய்ல்ட் என்கொய்ரி நடத்தும்படி ஹைகோர்ட் உத்தரவிட்டது. விசாரணை நடந்துக்கிட்டே இருக்கு. சுஜாதாவோட தொடர்கதை கணக்கா சார்ஜ் ஷீட்டுகளை தாக்கல் பண்ணிக்கிட்டே இருக்காய்ங்க.

மேற்படி சங்கர்ராவோட பவிசு என்னனு தெரிஞ்சுக்கனும். ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மன்சனை கடிச்ச கதையா சொந்த கட்சி மந்திரிகள் மேலயே புகார் சொல்லி மறுபடி ஹைகோர்ட்டுக்கு ஒரு லெட்டர் தட்டிவிட்டார். சங்கர் ராவ் ஆயி பையன் அவர் பேச்சை நம்ப முடியாதுன்னு கோர்ட்டு அதை தள்ளுபடி பண்ணிருச்சு.

இந்த கடுப்புல காங்கிரஸ் சட்டமன்ற கட்சி அலுவலகத்துலயே ப்ரஸ் மீட் நடத்தி சி.எம் உட்பட பல மந்திரிகளை கழுவி கழுவி ஊத்திக்கினு கடந்தாரா.. மந்திரி பதவியையும் புடுங்கிட்டாய்ங்க. மேற்படி ஆஃபீஸ்க்குள்ள நோ அட்மிஷன்னு போர்டு போட்டுட்டாய்ங்க. இந்த பெரீ மன்சன் போட்ட கடிதாசுதான் இந்த வழக்குக்கு அடிப்படை.

இந்த வழக்குல ஜகன் தான் முதல் எதிரி. ஆனால் 7 மாசமா நாளிதுவரை அவரை விசாரணைக்கும் கூப்டாம சம்மன் கொடுக்காம சீன் போட்டுக்கிட்டிருந்தாய்ங்க. இப்போ இடைத்தேர்தல்ல ஜகன் ஆட்களை பேதியாக்க ஜகனோட சாட்சி மீடியா நிறுவனத்தோட வங்கி கணக்குகளை முடக்கறதும் -அரசு விளம்பரங்களை நிறுத்தரதுமா டோசேஜ் அதிகரிச்சுக்கிட்டிருந்தாய்ங்க.இதுல மேற்படி ரெண்டு மேட்டர்லயும் கோர்ட்ல ரெமிடி கிடைச்சுருச்சு.

இந்த வரிசையிலதான் இன்னைக்கு சிபிஐ முன்னாடி ஆஜராக சொல்லி நோட்டீஸ். இந்த வழக்கின் ஆணி வேர் தனியாருக்கு நிலம் ஒதுக்கிய அரசு ஆணைகள். அதுக்கு டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஒருத்தரை மட்டும் பொறுப்பாக்க கூடாது அந்த சமயம் மந்திரிகளா இருந்தவுகளை , ஐ.ஏ.எஸ்களையும் விசாரிக்கனும்னு ஒரு பார்ட்டி ரிட் போட கோர்ட் அவிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி விஜாரிக்க சொல்லி உத்தரவிட்டாச்சு.

சிபி ஐ காரவுக மந்திரிகளுக்கு ஃபோன் போட்டு "அப்பாய்ன்ட்மென்ட்"கேட்டுக்கிட்டிருக்காய்ங்களாம். ஒரே ஒரு பெண் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் கைதுபண்ணியிருக்காய்ங்க. ஆனால் ஜகன் மேட்டர்ல மட்டும் படு ஸ்பீட். ஊழல் நடந்தது நெஜம்தான்னா மொதல்ல அரசாங்கம் என்ன செய்யனும்? மேற்படி 20 அரசு ஆணைகளையும் ரத்து பண்ணனும். ஒதுக்கின நிலங்களை கையகப்படுத்திக்கனும். அன்னைக்கு மந்திரிகளா இருந்தவுகளை கூண்டோட ராஜினாமா பண்ணச்சொல்லனும். அன்னைக்கு இருந்த அதிகாரிகளை சஸ்பெண்ட் பண்ணனும். விசாரணை கமிஷன் போடனும். அதெல்லாம் பண்ண மாட்டோம் ஜகன் கோவணத்தை மட்டும் உருவி வாசம் பார்ப்போம்னா ஜனங்க மத்தியில சிம்பதிதான் வ்ரும்.வந்துக்கிட்டிருக்கு.

ஒரு வேளை கோர்ட்ல ஆஜராக போற ஜகனை அரெஸ்ட் பண்ணா இந்த சிம்பதி இன்னம் சாஸ்தியாகுமே தவிர குறையாது. மேலும் இந்த ராயல சீமா அதுலயும் கடப்பா மாவட்ட புள்ளைக படு கோவக்கார புள்ளைங்க.

ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதின்னு எல்லா பயபுள்ளைகளும் ஒன்னா சேர்ந்துருவாய்ங்க. காங்கிரஸ்ல கன்டின்யூ பண்ணி ஒய்.எஸ்.மனைவியையே எதிர்த்து போட்டியிட்ட ஜகனோட சித்தப்பு விவேகானந்த ரெட்டி நேத்து ஜாய்ன் பண்ணிக்கினாரு. இன்னைக்கு தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி ( கடப்பால தெ.தேசத்துக்கு கேர் ஆஃப் அட் ரசே இவருதேன்) மைசூரா ரெட்டி ஜாய்ன் பண்ணிக்கினாரு.

மேலும் ஜகன் கைது விஷயம் நடந்தா என்ன நடக்கும்னு சொல்லமுடியாது. நேத்து ஒரு ஆளுங்கட்சி மந்திரி -காங்கிரஸ் மந்திரி அரெஸ்ட் ஆனதுக்கே அவிக தொகுதியில ஏக களேபரம். ஜகன் ஸ்டேட் ஃபிகர். நேட்டிவ் ஆஃப் கடப்பா..

ஜூன் 17 க்குள்ற இன்னம் என்னெல்லாம் நடக்கப்போகுதோ ? அதுக்கப்பாறம் மட்டும் ஜகன் கட்சி 18+1 பார்லிமென்ட் தொகுதிகள்ள ஒன்னு ரெண்டு தவறினாலும் மத்ததுலல்லாம் அடிச்சு தூள் பண்ணி காங்கிரஸை துவைச்சு காயப்போட போறது கியாரண்டி. காங்கிரஸ் கூடாரம் காலியாகப்போறது கியாரண்டி. இந்தவருசமே தேர்தல்.ஜகன் சி.எம்.எளுதி வச்சுக்கங்க.

Wednesday, May 16, 2012

மே 28 அன்று ஜகன்மோகன்ரெட்டி கைது?


அண்ணே வணக்கம்ணே !

ஆந்திர முன்னாள் முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜகன் மேல சிபிஐ வழக்கு தொடர்ந்திருக்கிறதுங்கறது வரையாவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்த வழக்குல மே 28 ஆம் தேதி நேர்ல ஆஜராக சொல்லி சம்மன் கொடுத்திருக்காய்ங்க.அதுவும் எப்படி இடைத்தேர்தல் பிரச்சாரத்துல இருந்த ஜகன் கையிலயே கொடுத்திருக்காய்ங்க.

இந்த வழக்கு எப்படி வந்தது .. என்ன வழக்குன்னு ஒரு அவுட் லைன் தெரிஞ்சுக்கிட்டா காங்கிரஸுக்கு ஆந்திராவுல சமாதி கடப்பா கல்லுல கட்டப்படுமா? கிரானைட்ல கட்டப்படுமான்னு உறுதிப்படுத்திக்கலாம்.

சங்கர்ராவ்னு ஒரு மந்திரி. இவர் பாவம் கோர்ட்டு கேஸுன்னு போகவோ - லாயருக்கு ஃபீசு கொடுக்கவோ துப்பில்லாத அன்னாடங்காய்ச்சி.

ஒய்.எஸ்.ஆர் தனியாருக்கு நிலம் ஒதுக்கி 60 அரசு ஆணைகள் வெளியிட்டதாகவும் - அதனால் பலன் பெற்ற நிறுவனங்கள் ஜகனோட கம்பெனிகள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்ததாவும் அதையெல்லாம் லஞ்சப்பணமா கருதி நடவடிக்கை எடுக்கனும்னு ஹை கோர்ட்டுக்கு ஒரு லெட்டர் போட்டார்.

உடனே ஹை கோர்ட் அந்த கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று குறைஞ்ச பட்ச ஆதாரங்கள் இருக்கான்னு பார்க்க சொல்லி சிபிஐக்கு உத்தரவு போட்டது.

சி.பி.ஐ கு.ப ஆதாரங்கள் இருப்பதா அறிக்கை கொடுத்தது. டீட்டெய்ல்ட் என்கொய்ரி நடத்தும்படி ஹைகோர்ட் உத்தரவிட்டது.

இந்த வழக்குல ஜகன் தான் முதல் எதிரி. ஆனால் நாளிதுவரை அவருக்கு சம்மன் கூட கொடுக்காம சீன் போட்டுக்கிட்டிருந்தாய்ங்க. இப்போ இடைத்தேர்தல்ல ஜகன் ஆட்களை பேதியாக்க ஜகனோட சாட்சி மீடியா நிறுவனத்தோட வங்கி கணக்குகளை முடக்கறதும் -அரசு விளம்பரங்களை நிறுத்தரதுமா டோசேஜ் அதிகரிச்சுக்கிட்டிருக்காய்ங்க.

இந்த வரிசையிலதான் மே 28 ஆம் தேதி சிபிஐ கோர்ட்ல ஆஜராக சொல்லி சம்மன். இந்த வழக்கின் ஆணி வேர் தனியாருக்கு நிலம் ஒதுக்கிய அரசு ஆணைகள். அதுக்கு டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஒருத்தரை மட்டும் பொறுப்பாக்க கூடாது அந்த சமயம் மந்திரிகளா இருந்தவுகளை , ஐ.ஏ.எஸ்களையும் விசாரிக்கனும்னு ஒரு பார்ட்டி ரிட் போட கோர்ட் அவிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி விஜாரிக்க சொல்லி உத்தரவிட்டாச்சு.

சிபி ஐ காரவுக மந்திரிகளுக்கு ஃபோன் போட்டு "அப்பாய்ன்ட்மென்ட்"கேட்டுக்கிட்டிருக்காய்ங்களாம். ஒரே ஒரு பெண் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் கைதுபண்ணியிருக்காய்ங்க. ஆனால் ஜகன் மேட்டர்ல மட்டும் படு ஸ்பீட்.
ஊழல் நடந்தது நெஜம்தான்னா மொதல்ல அரசாங்கம் என்ன செய்யனும்? மேற்படி 60 அரசு ஆணைகளையும் ரத்து பண்ணனும்.

அன்னைக்கு மந்திரிகளா இருந்தவுகளை ராஜினாமா பண்ணச்சொல்லனும். அன்னைக்கு இருந்த அதிகாரிகளை சஸ்பெண்ட் பண்ணனும். விசாரணை கமிஷன் போடனும். அதெல்லாம் பண்ண மாட்டோம் ஜகன் கோவணத்தை மட்டும் உருவி வாசம் பார்ப்போம்னா ஜனங்க மத்தியில சிம்பதிதான் வ்ரும்.வந்துக்கிட்டிருக்கு.

ஒரு வேளை கோர்ட்ல ஆஜராக போற ஜகனை அரெஸ்ட் பண்ணா இந்த சிம்பதி இன்னம் சாஸ்தியாகுமே தவிர குறையாது.

இதுவரைக்கும் ஜகன் மேட்டரை மேக்ரோ லெவல்ல பார்த்தோம். இப்பம் மைக்ரோ லெவல்ல பார்ப்போம்.


அரசியல்ல எதிர்கட்சித்தலைவருங்களை விமர்சிக்க "முரண்பாடுகளின் மொத்த உருவம்"னு சொல்வாய்ங்க. அந்த வார்த்தை நமக்கும் ஏகமா பொருந்துதோன்னு ஒரு சம்சயம்.

நவ பாரத நிர்மானமே லட்சியமா ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டின நான் - அதுக்காவ 7 வருசம் வரைக்கும் சொந்த வாழ்க்கையையே திராட்ல விட்ட நான் - 12 நாள் உண்ணாவிரதம் இருந்த நான் எப்படி இந்தளவுக்கு ப்ராக்டிக்கலா ரோசிக்க ஆரம்பிச்சுட்டேன்னு புரியவே மாட்டேங்குது. எனக்குள்ள இருந்த உத்வேகம் எப்படி குறைஞ்சதுன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

அஃதாவது நம்ம ஆப்பரேசன் இந்தியா திட்டத்தை லோபட்ஜெட் படம் கணக்கா டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அமல்படுத்த ஆரம்பிச்சாரு. (2004) . தான் ஆண்ட காலத்துல விவசாயமே தண்டம். விவசாயிகளோட வாரிசுகள் வேறு துறைகளுக்கு மாறனும்னு "தத்துவம்" விட்ட பாபு ஒய்.எஸ்.ஆர் அரசை சகட்டுமேனிக்கு விமர்சிக்க காங்கிரசை எந்த நாளும் விடாது உடன் பிறந்தே கொல்லும் வியாதியான கோஷ்டி பூசல் காரணமா எல்லா தலைவர்களும் எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு இருக்க நமக்கு பொத்துக்கிச்சு.

லட்சம் கோடி ரூபாய் செலவில் ஒய்.எஸ்.ஆரம்பிச்ச ஜலயக்னம் ( அணைகள் கட்டுதல்) தொடரனும்னா அதுக்கு அவரோட ஆட்சி தொடரனும். அதுக்காவ மோரல் சப்போர்ட் ரெண்டர் பண்ண ஆரம்பிச்சோம். அந்த காலகட்டத்துல நம்ம லோக்கல் மேகசின் கருப்பு வெள்ளையில தான் வரும் . ப்ரொடக்சன் காஸ்ட் குறைவா.. கட்டுரைகளா தாளிக்க ஆரம்பிச்சம்.

2009 தேர்தல்கள் வர்ரதுக்குள்ள ஒய்.எஸ். நிலை ரெம்ப மோசம் ஆயிருச்சு. பாபு என்னடான்னா மெகா கூட்டணி வச்சுட்டாரு. இடையில சிரஞ்சீவி வேற பிரஜாராஜ்ஜியம். பாபுவோ ,சிரஞ்சீவியோ ஜலயக்னம் தொடரும்னு சாஸ்திரத்துக்கு கூட சொல்லலை.

ஜலயக்னம் தொடரனும் -ஒய்.எஸ். மறுபடி முதல்வராகனும்ங்கற ஒன் பாய்ண்ட் ப்ரோக்ராமோட ஃபீல்டுலயே இறங்கி கலக்க ஆரம்பிச்சுட்டம். மே -செப்டம்பர் இடையில மூணே மாசம். கனவு கலைஞ்ச கணக்கா ஒய்.எஸ்.ஆர் போய் சேர்ந்துட்டாரு.

இப்பம் ஜகன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தா அப்பாவோட எல்லா திட்டங்களும் தொடரும்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிட்டே இருக்காரு.அதனால கடைசி சான்ஸா நினைச்சு ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுத்துக்கிட்டிருக்கம்.


ஜகன் மேல ஏராளமான புகார்கள் .வெறுமனே ஊழல் புகார் மட்டுமில்லே பரிட்டால ரவீந்திரா கொலையிலருந்து -லேட்டஸ்டா மத்தல செருவு சூரி கொலை வரை ஆயுத சப்ளை செய்த மங்கல கிருஷ்ணா ஜகனோட ஃபாலோயர்னு பாபுவும் - காங்கிரஸ் காரவுகளும் தொண்டை. வறள கத்திக்கிட்டிருக்காய்ங்க.ஆனால் நாம என்னமோ ஜகனுக்குத்தான் ஆதரவு.

லோக்கல் பாலிட்டிக்ஸ்ல 1983லருந்து 1999 வரை கூட நாம தெலுங்கு தேச ஆதரவாளர்தேன். 2003 ல சந்திரபாபு லோக்கல் காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கச்சா முச்சான்னு டார்ச்சர் பண்ண ( நம்மையும் பாபு விட்டு வைக்கல்லை.அதை எல்லாம் சொன்னாலும் சனம் நம்ப மாட்டாய்ங்க அதுவேற கதை) இயல்பாவே போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான நம்ம மனசு எம்.எல்.ஏ பக்கம் சாய்ஞ்சுருச்சு. இந்த ஸ்டாண்ட்லயே இன்னை வரைக்கும் நாம இருக்கம்.

அவரு ஒய்.எஸ்.ஆருக்கு தத்துப்பிள்ளை மாதிரி. அவரும் 2014 தேர்தல் அ இடைத்தேர்தல்ல ஜகனுக்கு ஆதரவு தர நிறைய வாய்ப்பிருக்கு.

லோக்கல் பாலிட்டிக்ஸ்ல அவசரப்பட்டு அவரு இன்னைக்கோ நாளைக்கோ ஜகன் பக்கம் சாய்ஞ்சா காங்கிரஸ்ல இருந்துக்கிட்டே இன்னைக்கு வரைக்கும் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக்கிட்டிருக்கிற சவுண்டு பார்ட்டிங்கல்லாம் ஆக்டிவ் ஆயிருவாய்ங்க. காங்கிரஸ் பவர் ஃபுல்லாயிரும். 5 தேர்தல்களை எதிர்கொண்ட அவருக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்ல முடியாது. அதனால கூட அவர் டிலே பண்ணிக்கிட்டிருக்கலாம்.

இடையில ஒரு தரம் மாணவர்கள் ஃபீஸ் ரீ எம்பர்ஸ் மென்டுக்காக ஜகன் உண்ணாவிரதம் இருந்தப்போ நேர்ல போயி ஆதரவெல்லாம் தெரிவிச்சுட்டு வந்தாரு ( கட்சிக்கு அப்பாற்பட்ட ஆதரவு அது)

நம்ம சிக்ஸ்த் சென்ஸ் சொல்றது நெஜமா இருந்தா இப்பம் நடக்கப்போற இடைத்தேர்தலுக்கு அப்புறமாவோ அ ஜகன் கைது செய்யப்பட்ட உடனேயோ அவரும் ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுப்பாரு.

மே 28 ஆம் தேதி சிபிஐ கோர்ட்ல ஆஜராக சொல்லி ஜகனுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்காய்ங்க. அன்னைக்கு அப்படியே அரெஸ்ட் பண்ணி கஸ்டடில எடுக்கவும் வாய்ப்பிருக்கு. ( அப்படியாவது நடக்கப்போற இடைத்தேர்தல்கள்ல நாலஞ்சு இடத்தை பிடிச்சுரலாம்னு காங்கிரசோட நப்பாசை. இந்த பப்பெல்லாம் வேகாது. ஜகனை கைது பண்ணா வாக்கு வித்யாசம் கூடுமே தவிர குறையாது.

ஒரு வேளை அவர் ஜகனுக்கு ஆதரவு தெரிவிக்காம காங்கிரஸ் டிக்கெட்லயே கன்டெஸ்ட் பண்ணாலும் அவரை ஆதரிக்க வேண்டியதுதான். பிரச்சாரத்துலயும் கலந்துக்கவேண்டியதுதான். ஏன்னா லோக்கல் பாலிட்டிக்ஸ்ல அடிக்கடி ஸ்டாண்ட் மாத்திக்க முடியாது.அவரோட ஆதரவாளர்கள் எல்லாம் இந்த 8 வருசத்துல நமக்கு கொஞ்சம் போல நெருக்கமாவே ஆயிட்டாய்ங்க.

அவிகளை எல்லாம் பகைச்சுக்கிட்டு ஜகன் கட்சிக்கு லோக்கல்ல பிரச்சாரம் பண்றதெல்லாம் தர்மசங்கடமா இருக்கும். அதுலயும் தற்சமயத்துக்கு ஜகன் கட்சியில உள்ள தெலுங்கு தேசம் முன்னாள் எம்.எல்.ஏ மேல நமக்கு நம்பிக்கை இல்லே.

நமக்கு இருக்கிற சொந்த பிரச்சினைகள்ள இந்த பிரச்சினை வேற நம்மை அண்டர் கரண்ட்ல குழப்பிக்கிட்டே இருக்கு. ஜஸ்ட் தர்ம சந்தேகம் தான். பார்ப்போம் ..

Monday, December 5, 2011

போங்கடா நீங்களும் உங்க அறிவு ஜீவித்தனமும்

அண்ணே வணக்கம்ணே !
கிரகமும் கடவுளும்னு மினி தொடர் தொடர்ந்தே தீரும் கவலை வேண்டாம்.சோதிடபதிவு போட்டா பத்து ரூவா சம்பாரிச்சுக்கலாம் இல்லேங்கலை. நம்மை " நிக்க" வச்சதே சோ.பதிவுகள் தான் இல்லேங்கலை.
அதுக்காவ நாட்டு நடப்பை கண்டுக்காம இருந்தா அது துரோகம். அதனால இன்னிக்கு மட்டுமாச்சும் ஒரு சில விஷயங்களை பற்றி தலா ஒரு பாராவாச்சும் எழுதியே தீர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். கிரகமும் கடவுளும் தொடர் நாளையிலிருந்து தொடரும்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு:
பலான இடத்துக்கு போனா கதை பேச /கேட்க நேரம் இருக்காது. இதுவே தள்ளிக்கிட்டு வந்துட்டா ரெண்டு ஷோவுக்கு இடையில் நிறைய நேரம் இருக்கும். அப்பம் டைம் பாஸுக்கு கதை கேட்பதுண்டு. சொல்லிவச்ச மாதிரி அல்லாரும் ஒரே கதைதேன்.

மொதல்ல குடும்பம் சொந்தம் பந்தத்துல எவனா எச்சில் பண்ணியிருப்பான். அப்பாறம் இவள் மனசுக்கு புடிச்சதா ஒரு டிக்கெட். அப்பாறம் ஏரியா பெரிய மன்சங்க வரைக்கும் ஒரு நெட் ஒர்க். அப்பாறம் அது நேஷ்னல் பர்மிட் ஆயிரும்.

மொதல்ல லோக்கல் பெரிய மன்சங்களுக்கு சில்லறை வர்த்தகத்துல அனுமதி கொடுத்தாய்ங்க. இதுவே ஜன நாயகத்தை அதுவும் "வெல்ஃபேர் ஸ்டேட்"ங்கற கான்செப்டை தொழிலுக்கு அனுப்பின மாதிரிதேன்.

இப்பம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதிங்கறாய்ங்க இதை (இன்டர்) நேஷ்னல் பர்மிட்டுன்னுதேன் சொல்லனும்.

இதெல்லாம் எப்படி இருக்குதுன்னா கட்டின பொஞ்சாதிக்கு சோறு போட முடியாத புருசன்ங்காரன் பாவம் பொஞ்சாதி சாப்பிடாம இருக்காளேன்னு ஊட்டுக்கே பார்ட்டிய பிக் அப் பண்ணி அனுப்பி வச்ச மாதிரி இருக்கு.

அப்பூடி பொஞ்சாதி மேல பாசம் இருந்தா - சோறு போட்டே தீரனும்னு துடிப்பு இருந்தா கோவா பீச்சுக்கு போயி குப்புற படுத்து சம்பாதிக்கவேண்டியதுதானே..

பொஞ்சாதிக்கிட்டே ஃபைல் கொடுத்து கை.எழுத்துக்கு அனுப்பறதெல்லாம் இந்த அறிவு ஜீவிகளின் வேலை. பொஞ்சாதிய அனுப்பறாப்ல பாரதமாதாவை அனுப்பினா என்னன்னு எவனோ அறிவு ஜீவிக்கு ஸ்பார்க் ஆயிருக்கு. அவனோட மூளையின் குழந்தைதேன் இந்த அன்னிய முதலீடு சமாசாரம்.
ஜன் லோக் பால் மசோதா:

இந்த மசோதாவுக்கு ஏற்பட்டு ஏகத்துக்கு எகிறிப்போன மவுசை இறக்கவே இந்த அன்னிய முதலீடு பிரச்சினைய தூக்கி பிடிக்கிறாய்ங்களோன்னு ஒரு சம்சயம். மொதல் இன்னிங்ஸ்ல எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில இருந்த அன்னா டீம் மற்றும் அன்னா ஹசாரே ரெண்டாவது இன்னிங்ஸ்ல தேசலா , கொஞ்சமா சாயம் வெளுத்து தெரியறாய்ங்க. தாத்தா என்ன பண்றாருன்னு லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ..



ஜெ.அரசின் விலையேற்ற அதிரடி:

இந்த விலையேற்ற யோசனையை அம்மா சொந்தமா அமல் படுத்திட்டதா நினைக்காதிங்க. எல்லாம் இந்த தலைமை செயலக அறிவு ஜீவிகளின் மூளையில் பிறந்த கேன்சர் கட்டிகள். அம்மா என்னமா வீங்கி ,என்னமா சிவந்து வேலன்டைன் டே ரோசா மொக்கு மாதிரி இருக்குன்னு மயங்கிட்டாய்ங்க அதான் அம்மா பண்ண தவறு.

அம்மா ச்சொம்மா ஆளனுப்பி விட்டிருந்தா பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம்லாம் உயர்த்தாமயே நிலைமையை சமாளிக்க அயனான ஐடியா கொடுத்திருப்பம்.அனுப்பலியே. இருந்தாலும் என்ன அடையாள ஆலோசனை கட்டணமா ரூ.1 ஐ ஃபிக்ஸ் பண்ணி ஐடியா கொடுத்துருவம்ல.

1.ஆவின் - போக்குவரத்து வாரியம் - மின்வாரியம் மூன்றையும் மூன்று தனி தனி பப்ளிக் லிமிட்டட் கம்பெனியாக்கிர்ரது

2. மேற்படி நிறுவன ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஷேர் வாங்கிக்க முன்னுரிமை தந்துர்ரது - பால் அட்டை தாரர்கள் , பாஸ் ஹோல்டர்ஸ், மின் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கும் முன்னுரிமை.

3.மேற்படி நிறுவனங்களுக்கு தலையால தண்ணி குடிச்சாச்சும் 3 வருசத்துக்கு ஒரு பாக்கேஜ் கொடுத்துட்டு "ச்சூ" காட்டி விட்டுர்ரது . ஐ மீன் ( பைசா+ செயல் திறனை மேம்படுத்த -ஊழலை கட்டுப்படுத்த செயல் திட்டம் -அதன் அமலுக்கு உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப உதவி) 3 வருசத்துக்கப்பால லாபம் வந்தாலும் உங்களுக்கே - நஷ்டம் வந்தாலும் உங்களுக்கே ஆளை விடுன்னு அரசாங்கம் கழண்டுக்கனும்.

கனிமொழிக்கு வரவேற்பு:
ஒரு தெலுங்கு சினிமாவுல ராஜேந்திர பிரசாத் சதா சர்வ காலம் பான் பராக் குதப்பும் ட்ரஸ் டிசைனர். எம்.டி வந்து " லேட்டஸ்டா ஒரு டிசைன் போடச்சொன்னா நீ என்ன பண்ணிட்டிருக்கே" அது இதுன்னு காச்சுவாரு. அப்பம் ரா.பிரசாதோட அசிஸ்டன்ட் ஏதோ லொள்ளு பண்ண ரா.பிரசாத் அவனை துப்புவாரு. அசிஸ்டன் அணிஞ்சிருந்த வெள்ளை டீஷர்ட் மேல பான் பராக் எச்சில் சகட்டுமேனிக்கு எகிறும்.

ஒடனே எம்.டி "டிசைன்னா இதான்யா டிசைனுன்னு"குதிப்பாரு . இதுல துப்பினது சிபிஐ மற்றும் கோர்ட். எச்சில் விழுந்தது கனிமொழி ஆடையில் .டிசைனுன்னா டிசைன் இதான் டிசைனுன்னு குதிக்கிறது ?

சொல்லவும் வேணுமா என்ன? தூத்தேறிக்க.. இந்த கனிமொழி அம்மாவையும் இலக்கிய உலகம் அறிவு ஜீவின்னு ஒரு காலத்துல கொண்டாடிக்கிட்டிருந்தது

ஆந்திர அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:

சந்திரபாபு என்டிஆர் உபயத்துல ஒரு நாலரை வருசம் , பா.ஜ.க உபயத்துல ஒரு நாலரை வருசம்னு 9 வருசம் சி.எம்மா குப்பை கொட்டியாச்சு.

2004 ல காலி. 2009 எலக்சன்ல ஊர்ல இருக்கிற குப்பையையெல்லாம் தலைமேல கொட்டிக்கிட்டு மெகா அல்லையன்ஸ் வச்சுப்பார்த்தாரு.(அதுலயும் தெ.ரா.சமிதி குப்பை செமை நாற்றம்) பப்பு வேகலை.

இப்பம் ஜகன் வேற செமை துள்ளு துள்ளிக்கிட்டிருந்தாரா. தேர்தல் வந்தா அவருதான் அடுத்த முதல்வர்னு ஒரு ஃபோபியா சந்திரபாபுவுக்கு வந்துருச்சு.

வயசான காலத்துல லொள்ளு எதுக்கு. ஜகன் துள்ளி துவளட்டும். இதெல்லாம் 6 மாசம் 1 வருசத்துக்கு மேல தாங்காது. இந்த அரசாங்கம் இஸ்பேட் மாளிகை மாதிரி உஃபுன்னு ஊதினா கொட்டிக்கும். நமக்கு வசதியான நேரத்துல ஊதலாம்னு சூதானமா அரசியல் பண்ணிக்கிட்டிருந்தாரு.

ஜகன் நீ அரசாங்கத்தோட கொலைட் ஆயிட்ட. நீ எதிர்கட்சிங்கற கடமையிலருந்து தவறிட்டே அது இதுன்னு ரேக்கி விட்டுக்கிட்டே இருந்தாரு.

கொய்யால உனக்கு வைக்கிறேன் இருடா வேட்டுன்னு கிரண் - கிரண் டு சோனியா -சோனியா டு சங்கர் ராவ் (மந்திரி) சங்கர் ராவ் டு ஹை கோர்ட்-ஹை கோர்ட்லருந்து ஆர்டர்.

ஜகன் மேல சி.பி.ஐ ரெய்டுல்லாம் விட்டு பார்த்தாய்ங்க ஜகன் அசரலை. சந்திர பாபு காங்கிரஸோட "சோரம்"போயிட்டாருன்னு ஜகன் அடிச்சு விட பாபுவுக்கு தன் கற்பை நிரூபிச்சுக்கவேண்டி வந்துருச்சு. அதான் இந்த தீர்மானத்தோட பின்னணி.

இதுக்கு ஆதரவா :122 பேர் வாக்களிக்க , எதிர்த்து : 162 பேர் வாக்களிக்க கிரணுக்கு தலை தப்பியது.ஜகன் ஆளுங்க 19 பேர் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆளுங்க 17 பேர் எதிர்த்து வாக்களிக்க மேட்டர் பேலன்ஸ் ஆயிருச்சு.

சிரஞ்சீவியும் இதான்டா சான்ஸுன்னு ரேங்கிக்கிட்டு கைகேயி வேலைல்லாம் செய்து சைக்கிள் கேப்ல காரியம் சாதிச்சுக்கிட்டுத்தேன் ஓட்டுப்போட்டாரு அது வேற விஷயம்.

இதுல சோகம் என்னடான்னா அறிவு ஜீவி -லோக் சத்தா தலைவர் - டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜெயபிரகாஷ் இந்த பிரச்சினையில நடு நிலை வகித்தார்.

அறிவு சாஸ்தியாயிட்டா இப்படித்தான் நடந்துப்பாய்ங்க போல. கொய்யால இந்த அரசு இருக்கனுமா போகனுமாங்கற மேட்டர்லயே ஒரு முடிவை எடுக்க முடியாத இவிக தான் அறிவு ஜீவிகள். போங்கடா உங்க அறிவுல..............................


Tuesday, October 11, 2011

கலைஞர் ஐயா போதும் விட்டுருங்க!

பால்ய சினேகிதன் ஒருத்தன் (சித்தூருதேன்) குடும்பம் திருச்சில செட்டில் ஆனதால திருச்சி வாசியாயிட்டான்.சம்மருக்கு சித்தூர் வந்தா நம்ம மாடியறையிலதான் கேம்ப். ரெம்ப ஜாலி டைப்பு. சுய இன்பத்தை பற்றி நமக்கிருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கின புண்ணியவான். ஒரு நாள் தன் இயல்புக்கு மாறா தன் சோகத்தை பகிர்ந்துக்கிட்டான்.

"வெள்ளை ! ( நம்ம நிக் நேம்) திருச்சி போனா ஆந்திராகொல்ட்டிங்கறான்.ஆந்திராபக்கம் போனா அரவா நா கொடுக்குங்கறான் நான் யார்ரா?"

ஏ.கு இதே உணர்வை ரஜினி கூட வெளிப்படுத்தினதா ஞா. தெலுங்கு ப்ளாக்ல ஒரு தாட்டி நாம போட்ட அரசியல் பதிவுக்கு கமெண்ட் போட்ட அனானி அலக்கை " டேய் சாம்பார் ! ( தமிழாளுங்களுக்கு இந்தப்பக்கம் அதான் பேரு) ஆந்திர அரசியலை பத்தி பேசாதே"ன்னூருச்சு.

அதை நம்ம விரோதிகள்ளாம் கப்புனு பிடிச்சுக்கிட்டு சாம்பாருன்னு விளிச்சே கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டானுவ. இந்த வார்த்தையோட ரெப்புடேஷனை எக்ஸ்ப்ளாய்ட் பண்றது்க்கு சாம்பார்காடுன்னுட்டு ஒரு புதிய ப்ளாகையே ஆரம்பிச்சுட்டம் அது வேற கதை.

ஆமாம் எதுக்கு இத்தனாம் பெரிய மொக்கைனு கேப்பிக சொல்றேன். இன்னைக்கு மௌனிசார் - மற்றும் கலைஞரை பத்தி நாம போடப்போற பதிவு இப்படி ஒரு கமென்டை வரவச்சுருமோன்னு சம்ஸயம்.

கலைஞர் டிவில அவரோட பேச்சு,கல்கியில மௌனியோட ஓ பக்கம் படிச்ச எஃபெக்ட்ல இந்த பதிவை போடறேன்.

திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்துல சவால் விடுகிறேன்னு ஆரம்பிச்ச கலைஞர் படக்குனு பம்மி சவால்ங்கறது ஆணுக்கு ஆண் விடறதுன்னு சைடு வாங்கிட்டாரு. பாவம் நெஜமாலுமே கலைஞர் இந்தி படிக்கலைபோலும். சவால்னா கேள்வின்னு அருத்தம். வயசான காலத்துல ஜெயில் வாசல்ல எல்லாம் எங்கனுருந்து தர்ணா பண்றதுன்னு பதுங்கிட்டாரு போல.

கலைஞர் சென்னை அறிவாலயத்துக்கான நிலத்தை வாங்கினப்ப 10 உரிமையாளர்கள்ள ஒருத்தரை மட்டும் சென்னைக்கு அழைத்து மிரட்டி எழுதி வாங்கிட்டதா அம்மா குற்றம் சாட்டினாய்ங்களாம். அதுக்கு தாத்தா கவுண்டர் கொடுத்தாரு (சாதியில்லிங்கணா) .

பத்து பேரும் கை.எ போட்டிருக்காய்ங்கனு பத்திரத்தை காட்டினாரு ( ஜிராக்ஸுதேன்) . நிலம் திமுக அறக்கட்டளை பேர்ல வாங்கப்பட்டது. கட்டளையில எம்.ஜி.ஆரும் ஒரு உறுப்பினர்னு எடுத்து விட்டாரு.

உரிமையாளர்கள்ள எத்தீனி பேர் கை.எ போட்டாய்ங்கங்கறது தாத்தாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான பிரச்சினை. ஒருத்தரை மிரட்ட முடிஞ்சவுகளுக்கு பாக்கி 9 பேரை தூக்கிட்டு போயி மிரட்ட எத்தீனி தேசாலம் ஆகும்?

அறக்கட்டளையில எம்.ஜி.ஆர் உறுப்பினரா இருந்தா என்ன அவரோட தாத்தா இருந்தா என்ன? மேலும் பொருளாளரா இருந்த வாத்யாரு "கணக்கு "கேட்டுத்தானே வெளிய வந்தாரு.

இதெல்லாம் ஒரு பக்கம். அசலான மேட்டருக்கு வரேன். மேடைப்பேச்சில் இங்கனயும் போலித்தனம் இருக்கு. காங்கிரஸ் காரவுக (அதிலயும் சொந்த செல்வாக்கில்லாதவுக) இந்திரா ,ராஜீவ்,சோனியா பேரை சொல்லும் போது உ.வ படுவாய்ங்க.சந்திரபாபு தேர்தல் நேரத்துல மட்டும் என்.டிஆர் பேரை சொல்வாரு (ஆனால் அவர் குரல்ல உணர்ச்சியே இருக்காது) . ஜகன் பிளாட்பாரத்துல லேகியம் விக்கிறவன் மாடுலேஷன்ல ஒய்.எஸ்.ஆர் பேரை சொல்வாரு. அம்புட்டுதேன்.

ஆனால் திருச்சி கலைஞர் பேச்சுல பேச்சு நெடுக தியாகம்,இனம்,மொழி,தமிழர்,திராவிடர், பம்பாடு ,கலாச்சாரம்னு ஏகப்பட்ட ஜல்லி.

கலைஞர் கைக்கு அதிகாரம் வர்ரதுக்கு மிந்தி அவர் பேச்சுல ஓரளவு உணமை இருந்திருக்கலாம். ஆனால் இத்தீனி தபா சி.எம்மா இருந்துட்டு கம்பெனி வாசல்ல கூட்டம் போட்ட தொழிற்சங்க தலைவரு கணக்கா பேசறதை புரிஞ்சிக்கிட முடியலிங்கண்ணா.

தாளி .. அவர் பேச்சுல ஒவ்வொரு வார்த்தையும் பொய் -ஒவ்வொரு எழுத்தும் பொய். பொய்யை தவிர வேறில்லை.

இந்த போலியான, நாடகத்தனமான பேச்சுக்கு அப்பப்போ கூட்டத்துல இருந்து ஆரவாரம் வேற. தமிழர்களோட மூளை பொய்க்கு இந்த அளவுக்கு பழகிப்போச்சு போல.

இன்னைக்கும் இந்த கையறு நிலையிலயும் பொய்யும்,போலித்தனமும் தொடருதுன்னா ஆரவாரம் செய்தவுகளை போலவே கலைஞருக்கும் பொய் பழகிப்போச்சு போல.

இப்பத்துக்கும் ஒன்னம் குடிமுழுகிப்போகலை. உடனடியா பொதுக்குழுவை கூட்டி ரகசிய வாக்குப்பதிவு நடத்தி ஸ்டாலினா அழகிரியான்னு முடிவு பண்ணிரலாம். ( என் கவலை என்னன்னா ஸ்டாலின் கூட ஏறக்குறைய கலைஞர் மாதிரியேதான் பேசினாரு - எனவே பொதுக்குழுவுல ஸ்டாலின் மகனா (மருமகன்?) அழகிரி மகனான்னு முடிவு பண்ணிட்டாலும் பெட்டர்)

தாத்தா பேசாம ( அண்டர்லைன்) வீட்டோட இருந்துக்கறது நல்லது. கட்சி இப்பயாச்சும் யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டு - உண்மைய உணர்ந்து உண்மைய பேச ஆரம்பிக்கனும். யார் மேல எல்லாம் வழக்குகள் பாஞ்சிருக்கோ அவிகளையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணிட்டு ( வழக்கறிஞர் அணி சட்ட உதவி தரட்டும் அது வேற கதை) இனிமேலாச்சும் உண்மையான மக்கள் பிரச்சினையை கையில் எடுக்கனும்.

இல்லாட்டி திமுகவை யாராலும் அழிக்க முடியாது கலைஞரை தவிரங்கற விமர்சனம் நெஜமாயிரும். மேற்படி கூட்டத்துல ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்க கலைஞரும் -அவர் வாயும் -உதடுகளும் பட்ட பாடிருக்கே. எனக்கே வலிச்சது. அவற்றின் போக்கு மலச்சிக்கல் காரன் கழிவறையில முக்கற மாதிரியே பட்டது. தாத்தா போதும்.ரெஸ்ட் எடுங்க. அதான் பெஸ்ட். கு.ப உங்க கடந்த கால சாதனைகளை நினைச்சுபார்த்து ஆறுதல் அடையறோம்.

( நம்ம மௌனி சாரு சின்னதா புதுசா ஒரு அரசியலமைப்பு சட்டத்தையே கல்கியில எழுத முயற்சி பண்ணியிருக்காரு. அதுல உள்ள ஓட்டைகளை -அதன் பின் ஒளிந்திருக்கும் ஹிடன் அஜெண்டாவை நாளைக்கு கிழிக்கிறேன்)

ஆருப்பா " ஆந்திரா கொட்டிக்கு தமிழக அரசியலை பற்றி பேச என்ன தகுதி" ன்னு கமெண்ட் போட்டுருங்க. ஒரு குறை தீந்துரும்.