'>
Showing posts with label தீர்வு. Show all posts
Showing posts with label தீர்வு. Show all posts

Sunday, May 20, 2012

காவிரி பிரச்சினைக்கு அதிரடி தீர்வு : " ஜெ" பார்வைக்கு

அண்ணே வணக்கம்ணே !

காவிரி பிரச்சினைங்கறது தமிழக அரசியல்வாதிகளுக்கு அல்வா மாதிரி. அதுலயும் சம்மர் வந்தா சவுண்டு ஓவராயிரும். சம்மர் முடிஞ்சுருச்சுன்னா எவனும் சீந்த கூட மாட்டான்.

ஒரு நதி உருவாகிற பகுதி மக்களுக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கோ அந்த அளவு உரிமை மேற்படி நதி ஓடிவர்ர - கடல்ல கலக்கிற பகுதியில் உள்ள மக்களுக்கும் அதே அளவு உரிமை இருக்கனும்ங்கறது உலக அளவுல முடிவான மேட்டரு.

இன்னம் சொல்லப்போனா வால் பகுதியில உள்ள மக்களுக்கு வெள்ள அபாயம் இருக்கிறதால இன்னம் கொஞ்சம் போட்டு கொடுக்கனும்.

காவிரி கர்னாடகத்துல உருவாகுது. வால் பகுதியில தமிழகம் இருக்கு. கர்னாடகம் தன் பகுதியில 4 அணைகளை கட்டி தண்ணீரை தேக்கி வச்சுக்குது .

இதனால அவிகளா பார்த்து திறந்து விட்டாத்தான் தமிழகத்துக்கு தண்ணீர்ங்கற நிலைமை. இந்த மேட்டர்ல என்னென்னமோ பஞ்சாயத்து பண்ணி செட்டில்மென்ட் பண்ணாலும் கர்னாடகம் ஆன தந்திரம்லாம் செய்து அழிச்சாட்டியம் பண்ணுது.

அஃதாவது கோடை கால நீர் பகிர்வுக்கு நடுவ்ர் மன்ற இடைக்கால தீர்ப்புப்படியோ அல்லது மத்திய் நீர்வள ஆணையம் வகுத்த ஃபார்முலா படியோ கர்னாடகம் விவசாயத்தை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுப்படுத்தக்கூடாது.

ஆனால் அவிக சகட்டுமேனிக்கு விரிவுப்படுத்திக்கிட்டே போறதால தண்ணீர் தேவை அதிகரிச்சுக்கிட்டே போகுது. இதனால தான் பிரச்சினையே வருது. மழைகாலத்துல காவிரி நீர் பிடிப்புபகுதிகள்ள செமை மழை வெளுத்துவாங்கும். அணைகள் நிரம்பி வழியும். திறந்து விடாட்டா அணைகள் காலிங்கற கட்டத்துல மட்டும் தன் அணைகளை காப்பாத்திக்க உபரி நீரை கச்சா முச்சான்னு திறந்து விட்டுருது.. அதாவது தமிழகத்தை ஒரு வடிகால் பகுதியா உபயோகிச்சுக்குது.

இப்படி திறந்து விட்ட தண்ணீரை யெல்லாம் கணக்கு பண்ணி உங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை விட அதிகமாவே திறந்து விட்டாச்சுன்னு கணக்கு சொல்லிட்டு கோடைகாலத்துல ஆப்படிச்சுருது.

பிப்ரவரி முதல் மே மாதம் வரைக்கும் ,பிறகு ஜூன் முதல் செப்டம்பர் மாசம் வரைக்கும் தமிழகத்துக்கு தண்ணிரை திறந்து விடாம 4 அணைகளில் உள்ள தண்ணீரையும் கர்னாடகமே உபயோகிச்சுக்கும். மத்த மாசங்கள்ள அணை அடிச்சுக்கிட்டு போயிருங்கறதால தண்ணீரை திறந்து விட்டுரும். இதான் கர்னாடகத்தோட தந்திரம்.

ஓவராலா பார்த்தா தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தந்தாச்சு போலதான் தோனும்.ஆனால் மாச வாரியா பார்த்தாதான் கர்னாடகத்தோட தந்திரம் புரியும்.


2012,பிப், 1 ஆம் தேதி நிலவரம்:

கர்னாடகாவில் 4 அணைகளில் இருந்த தண்ணீர் 58.50 டி எம் சி

2012,மே 14 ஆம் தேதிப்படி 4 அணைகளில் இருந்த தண்ணீர் 28.176 டி.எம்.சி ( ஆக ரெண்டரை மாசத்துல 30 டி.எம்.சி ஸ்வாஹா)

இதுவல்லாது 4 அணைகளுக்கும் 11 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்கு ( கோடை மழை) இதையும் சேர்த்தா
பிப் 1 முதல் மே 14 க்குள்ளாகவே 41 டி.எம்.சி டி.எம்.சி தண்ணீரை ஸ்வாஹா செய்திருக்கிறது


தமிழ் நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை மட்டும் திறந்து விடவே இல்லை .மேட்டூர் அணைக்கு தண்ணிரை திறந்து விடாம பட்டை நாமம் சாத்தியிருக்கு . இதனால தமிழகத்துல
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுருச்சு -சம்பா சாகுபடியும் தாமதம் ஆகுது..

இதுக்கு என்னதான் தீர்வு?

காவிரி ஆயக்கட்டுல கர்னாடகம் 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல விவசாயத்தை விரிவு படுத்தக்கூடாதுன்னு கட்டாயப்படுத்தலாம். சேட்டிலைட் உதவியோட இதை கண்காணிக்கவும் முடியும். மத்திய அரசு முதுகெலும்பை கடன் வாங்கியாவது கர்னாடக அரசுக்கு மூக்கணாங்கயிறு போடலாம்.

ஆனால் பெருகி வரும் மக்கள் தொகை -உணவு தேவைய வச்சு பார்க்கும் போது - அந்த மானிலத்து விவசாயிகளோட வாழ்வாதாரங்களை இந்த முடிவு ஒழிச்சு கட்டிருங்கற கோணத்துல பார்க்கும் போது இது சுத்த பைத்தியக்காரத்தனம்.

பின்னே என்னதான் தீர்வு?

சம்பிரதாய நீர்பாசன முறைகளின் படி 11.20 லட்சம் ஏக்கருக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை மட்டும் கர்னாட அணைகளில் தேக்கிவச்சு, நியாயமா தமிழகத்துக்கு திறந்தி விட வேண்டிய தண்ணீரை திறந்துவிடலாம்.

இதுக்கு மன்சங்களை நம்பி புண்ணியமில்லை. அணைகளோட கேட்ஸை திறந்து மூடறதை ஆட்டோமேஷன் பண்ணியாகனும்.

அது சரி கர்னாடகத்துல 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்கும் நிலங்களுக்கு பாசனம் எப்படின்னு கேப்பிக. சொல்றேன்.

காவிரி ஆயக்கட்டுல சாகுபடி செய்யற விவசாயிகளுக்கு கர்னாடக அரசு பிவிசி பைப் லைன் மூலமாக மட்டுமே தண்ணீர் தரனும். விட்டா சொட்டு நீர் பாசனம் இருக்கவே இருக்கு. இதுக்கு ஆகக்கூடிய செலவை யார் ஏற்பதுன்னு ஒரு கேள்வி வரலாம்.

இந்த காவிரி பிரச்சினைய தீர்க்க போடப்பட்ட ட்ரிப்யூனல்,கமிட்டி ,மண்ணாங்கட்டியை எல்லாம் கடாசிட்டு அதுக்கு வருசா வருசம் ஆகக்கூடிய செலவை கர்னாடக அரசுக்கு ஒதுக்கலாம்.

பாராளுமன்றத்துல /தமிழக /கர்னாடக சட்டமன்றங்கள், மேலவைகள்ள வருசா வருசம் இந்த மேட்டர்ல நடந்த விவாதங்கள்,களேபரங்களுக்கு ஆன செலவை வெட்டி உபயோகிக்கலாம்.

இதே பிரச்சினையில தமிழக ,கர்னாடக காவல்துறை வருசா வருசம் செலவழிக்கிற தொகைகளை, மத்திய அரசு இந்த பிரச்சினையில சி.ஆர்.பி.எஃப் பி.எஸ்.எஃப் -ஐ ஈடுபடுத்திய போது ஆன ஆண்டு செலவுகளையும் இந்த வேலைக்கு திருப்பி விடலாம்.

காவிரி நதி நீர் ஆணையம் கடைசியா கூடினது 2003,பிப்ரவரி 10 லயாம் . கடந்த 9 ஆண்டுகளில் கூடவும் இல்லை ..பேசவும் இல்லையாம் . இது கூடினாலும் கலைஞ்சாலும் வெட்டிச்செலவு தான். தப்பித்தவறி இந்த தாட்டி கூடினா நாம தந்திருக்கிற இந்த ப்ரப்போசலை வச்சு டிபேட் பண்ணா காவிரி பிரச்சினையே ஃபணால். செய்வாய்ங்களா?

Sunday, December 11, 2011

முல்லை பெரியார் அணை - தீர்வு

அண்ணே வணக்கம்ணே !
முல்லை பெரியார் அணை பற்றிய விவாதங்களும் வன்முறையும் - பற்றி எரியுது.அம்மா பாவம் கொட நாடு கூட போகாம சட்டமன்ற சிறப்பு கூட்டம் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க.இன்னைக்கு மன்சங்க முடிவெடுக்க மிஷினுங்க வேலை செய்யுது. மிஷினுங்க முடிவெடுக்க மன்சங்க வேலை செய்யற காலம் வந்தாதான் இந்த நிலைமை மாறும் போல.

ஆருனா சாஃப்ட் வேர் நிபுணர் ஒருத்தரு இந்த மாதிரி பிரச்சினைகளை அக்கு வேறு ஆணி வேறா அனலைஸ் பண்ணி சால்வ் பண்ற சாஃப்ட்வேர் ஒன்னை கண்டுபிடிச்சா நெல்லா இருக்கும். நாம இந்தியா பாக்கிஸ்தான் பற்றி எழுதும் போது ஒரு பாய்ண்ட் சொல்றது வழக்கம்.

கொய்யால ரெண்டு நாட்லயும் பட்டினி இருக்கு ,தீவிரவாதம் இருக்கு,விபசாரம் இருக்கு. இந்த இழவுல என்னாத்த யுத்த முஸ்தீபு -என்னாத்த வீர வசனம். மொதல்ல ரெண்டு நாட்லயும் பட்டினி -தீவிரவாதம்-விபசாரம் ஒழியனும். இதுக்கு மூல காரணம் தேசீய வருமானத்தையும் தங்கள் தலைவருமானத்தையும் உசத்திக்க மக்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகள்ள சமமான பங்கில்லை. அதுல பங்கில்லைங்கறதால தேசீய வருமானம் உசந்தாலும் தலைவருமானம் உசரலை. ஏழ்மை தொடருது.பட்டினி -தீவிரவாதம்-விபசாரத்துக்கெல்லாம் மூல காரணம் ஏழ்மை.

வீரவசனம், யுத்த முஸ்தீபெல்லாம் இந்த பட்டினி -தீவிரவாதம்-விபசாரத்தை அதிகரிக்குமே தவிர ஒரு ம..ரு உபயோகமும் கிடையாது.

இந்தியா பாக் மேட்டர்லயே இதான் நம்ம ஸ்டாண்ட். இந்த பெரியார் அணை வித் இன் இண்டியா பத்தி எரியுது. கேரளா காரவுக உபரியா மின்சாரம் தயாரிக்கத்தேன் புது அணைக்கு அடி போடறாய்ங்கனு கேள்வி.
அடங்கொய்யால ..

இந்த உலக மய ,தாராள மய யுகத்துல மின் தேவைய பூர்த்தி செய்ய எந்த கொம்பனாலயும் முடியாது. நீங்க 10 மெகாவாட்டுக்கு திட்டம் போட்டு அது செயல்பட ஆரம்பிக்கிறதுக்குள்ளாற 1000 மெகாவாட்டுக்கு தேவை ஏற்பட்டு போயிருக்கும்.

மெகா அணைகளை கட்டறதெல்லாம் இந்திர லோகத்துல இருந்து வெள்ளை ஆனைய கொண்டு வந்து கட்டி வச்சு தீனி போட்ட கதைதேன். மேலும் அன்னைக்கிருந்த இஞ்சினியருங்க வேற இன்னைக்கு இருக்கிற "சில்லறை"ங்க வேற.

தப்பித்தவறி ஒழுங்கா கட்ட ஆரம்பிச்சாலும் வனத்துறை அனுமதி - சுற்று சூழல் அனுமதி லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வில்லங்கமிருக்கு.

இதையும் மீறி கட்ட ஆரம்பிச்சாலும் ஊழல்னு ஒரு பூதம் இருக்கு. ஆந்திராவுல ஜலயக்னம் இப்படித்தேன் நாறிக்கிடக்கு.

ஊழலையும் மீறி அணை கட்ட துவங்கினாலும் அது முடியறதுக்குள்ள கட்டுமான செலவு பல ஆயிரம் மடக்கு எகிறிக்கும்.

இதெல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கற கதை. அணை என்ன பட்டா பட்டி அண்டர்வேர் நாடாவா ஒடனே கட்டிக்கிறதுக்கு. இது எப்படியா கொத்த பை.தனம்னு கேரளா காரவுக ரோசிக்கனும்.

நதி நீர் அணைக்கு வந்த பிற்காடு மின்சாரம் தயாரிக்கிறது மாட்டோட வாலை பிடிச்சிக்கிட்டு ஓடற மாதிரி. அந்த நதி நீர் அணைக்கு வந்து சேர்ரதுக்கு மிந்தியே மூக்கணாங்கயிறை பிடிச்சு எங்கெல்லாம் வசதி வாய்ப்பிருக்கோ அங்கெல்லாம் சின்ன சின்ன ஹைட்ரோ பவர் ப்ராஜெக்ட்ஸ் ப்ளான் பண்ணி மின்சாரம் தயாரிக்கலாமே.

இந்த அணை பிசினஸெல்லாம் விட்டுட்டு நதி நீர் இணைப்பின் மீது கவனம் செலுத்தினா அஞ்சு பத்து வருசம் கஷ்டப்பட்டாலும் நீடித்த பலன் இருக்கும்.

ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட்டுங்கறதே மன நோயின் அறிகுறி. நல்லதோ கெட்டதோ ஒப்பந்தம்னு ஒன்னு போட்ட பிறகு அதனோட காலம் முடியற வரை அதுக்கு கட்டுப்பட்டு இருக்கிறதுதான் ஆரோக்கியமான மனதின் அறிகுறி.

இன்னொரு முக்கியமான மேட்டர் எதிர்காலத்துல உலக யுத்தம்னு வந்தா அது தண்ணீக்காகத்தான் வரும்னு சொல்லிவச்சிருக்காய்ங்க. உபரி நீருக்காக -உபரி மின் உற்பத்திக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆப்படிச்சு ஆப்பசைச்ச குரங்கா மாட்டி தவிக்கிறதை விட நீர் வினியோகத்தை ,மின் வினியோகத்தை குறைக்கறதுல கவனம் செலுத்தனும்.

இதை கேரள அரசுக்கு மட்டும் சொல்லலை. தமிழக அரசுக்கும் சேர்த்துதேன் சொல்றேன். 99 வருட ஒப்பந்தம்னா அது என்னைக்கோ ஒரு நாள் காலாவதியாகும். ஆகித்தீரும்.அதுவரை காத்திருக்காம ஆல்ட்டர்னேட்டிவ்ஸை பார்த்துக்கனும்.


இன்னொரு மிக முக்கியமான மேட்டர் இந்த பஞ்சாயத்தை இந்திய கோர்ட்டுகள் ,பாராளுமன்றம்லாம் விசாரிக்கிறதை விட உலக அளவில் பெயர் பெற்ற களங்கமற்ற நிபுணர்கள் குழு தீர்க்கறது பெட்டர் சாய்ஸ்.

Monday, April 11, 2011

காஷ்மீர் -பாப்ரி மஸ்ஜித் பிரச்சினைக்கு என் தீர்வு

இந்தியாவோட பிரச்சினைகள்னாஆயிரத்து எட்டு இருக்கு. ஆனால் சனம்  தலையாய பிரச்சினைனு நினைக்கிறது ரெணடைத்தேன். ஒன்னுகாஷ்மீர், இன்னொன்னு ராமஜென்மபூமி.

இந்த ரெண்டு பிரச்சினைக்கும் நம்ம ஸ்டைல்ல சொல்யூஷன் கொடுத்திருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தைசொல்ல இங்கே அழுத்துங்க.