'>

Monday, January 24, 2011

வாங்க சனியை புரிஞ்சிக்கலாம்

சனி பிடிச்சா நல்லதுங்கோ !
அரசியல் கட்சி கூட்டங்களில் தலைவர் வருவதற்கு முன் குட்டித்தலைவர்கள் "அலப்பறை"செய்வார்களே அப்படி நம்ம சுகுமார்ஜி சனி பற்றிய தொடரை தொடரும் வரை "அப்படி இப்படி" கதை பண்ணலாம்னு ஒரு உத்தேசம்.

நம்ம (சிம்ம)  ராசிக்கு எப்படியும் வாக்கு ஸ்தானத்துல சனி. கண்டதை பேசி /எழுதி வாங்கிக்கட்டிக்கிறத விட பகவானை பத்தியே பேசிர்ரது பெட்டரில்லையா?

இந்த தொடர் இப்படி திராட்ல நிக்க கூட சனி தான் காரணம். ஆமாங்கண்ணே தாமதத்துக்கு காரகர் அவர். ஜன்மத்துல நின்னா ஆசாமியே மந்தம். ரெண்டுல நின்னா வாக்கு மந்தம்/ நிஷ்டூர வாக்கு இப்படிபலன் போகுது.

அல்லாருக்கும் சனின்னா உதறல்தேன். ஏன்னா ரயில் தாமதத்தை பத்தி பேசறச்ச சொல்வாய்ங்க "லைஃப் டைம் டிலே"ன்னு  அப்படி கூட ஆயிரும்.சனின்னா கிழவாடிங்க/கிழட்டுத்தன்மை எய்திவிட்ட பசங்க. எங்க ஒய்.எஸ்.ஆர் கூட எட்டாம் நெம்பர்தான். தாளி 55 வயசுலதான் சி.எம் ஆகமுடிஞ்சது.  அதுவரை நாயடி.

சரிய்யா 2004 எலக்சனுக்கு மிந்தி அவருக்கு கால் ஃப்ராக்சர் ஆச்சு. ஒடனே சொன்னேன். பார்ட்டிதான்யா சி.எம். அது எப்படின்னா சனி பிடிக்கிறச்ச தலைல அடிபடும். சனி விட்டுப்போறச்ச கால்ல அடிபடும். உங்க வீட்டு எங்க வீட்டு அடில்லாம் கணகில்லிங்கண்ணா.

கடவுள் பிரதமர். ஒரு பிரதமர் எப்படி தன் மந்திரிகளுக்கு துறைகளை பிரிச்சுக்கொடுக்கிறாரோ அப்படி கடவுள் பிரிச்சு கொடுத்த சனியோட போர்ட் ஃபோலியோவ பாருங்க. அவர் கேரக்டரை ஈசியா புரிஞ்சிக்கலாம்.

அவரே சொல்றாரு பாருங்க:

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.


*சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

*மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.

* 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி தசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். சனி குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யாது. ஒரு வேளை சனி குறிப்பிட்ட ஜாதகத்துக்கு பாவியாகவோ,மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையை தந்து பின் பாதியில் தீமையை தருவான்.

*கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனை தந்தால் மறுபாதி அந்த அளவுக்கு கெடுபலன் களை தராது.

* சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.

* சனி உங்க ராசிக்கு 3,6,10,11 ல சஞ்சரிச்சா நல்லது. துலா,மகர,கும்ப ராசிக்காரவுகளுக்கு ஜன்ம சனி பெருசா பாதிப்பை தராது (ஏன்னா இங்கன அவர் உச்சம்/ஆட்சி/மூலதிரிகோணம். இருந்தாலும் கில்மாவுல மனச விட்டா கையேந்தி பவன்ல எல்லாம் கை நீட்டி நாறிருவிங்க சாக்கிரதை.


தற்சமயம் சனி கடகத்துக்கு 3 ல்,மேஷத்துக்கு 6ல், தனுசுக்கு 10 ல் விருச்சிகத்துக்கு 11ல் சஞ்சரிக்கிறார். சனி மட்டும் அனுகூலமா இருந்தா வேலை ஆகும்.ஆனா இன்டைம் ஆகாது. குருவும் அனுகூலமா இருந்தா இன் டைம் ஆகலாம்.

இந்த யோகம் கடகம்,விருச்சிகத்துக்கு இருக்கு. மேஷராசிக்காரவுக கொஞ்சம் போல செலவழிச்சு காரியத்தை சாதிக்கலாம். மத்தவுகளுக்கு சனி பிரதிகூலமாத்தான் இருக்காரு. அவிக சில பரிகாரங்கள் செய்தா சமாளிக்கலாம்.

சனிக்குரிய பரிகாரங்கள்:

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

விஞ்ஞான விளக்கம்:

சனியை ஆசன துவாரத்துக்கு காரகர்னு சொல்றாய்ங்க. இது டூவீலருக்கு சைலன்சர் மாதிரி. தமிழ் சினிமாவுல பார்த்திருப்பிங்க. ஒரு வண்டி ஸ்டார்ட் ஆகக்கூடாதுன்னா சைலன்சரை ஒரு எலுமிச்சை/ஆரஞ்சு பழத்தை வச்சு சீல் பண்ணிட்டா போதும். இதே இழவைத்தான் சனி பகவான் செய்றார். அதனாலதான் சனி பிடிச்சப்ப மலச்சிக்கல், அகால போஜனம்,அகால நித்திரைல்லாம் சாத்தியமாகுது.

இது ஏன் நடக்குதுன்னா சனி அனுகூலமா இருந்தா நீங்க சுதந்திர பறவை ( நீங்க ஒரு க்ளர்க்காவே இருந்தாலும் உங்க டிப்பார்ட்மென்ட் ஹெட் உங்க பாக்கெட்ல இருப்பாரு) சனி பிடிச்சா அடிமை. "அடிமையோட நேரம் அடியை கையில இருக்காதுங்கோ. முதலாளி சொல்ற /விடற நேரத்துல தான் சாப்பிட முடியும், அவர் அவிழ்த்துவிட்டாத்தான் தூங்கமுடியும்.

எத்தனை கேடு கெட்ட மனிதனா இருந்தாலும் அவன் உள்மனது சுதந்திரத்தைத்தான் விரும்புது. இந்த சனியோ அவனை அடிமையாக்கிருது. இந்த மென்டல் ஒர்ரி அவனோட ஃபீடிங்க் டைமை மாத்தி,குழப்பி, டைஜஸ்டிங் சிஸ்டத்தையே  நாஸ்தி பண்ணிருது.

ஜெனட்டிகலா நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு உள்ளவுகளுக்கு ஏழரை சனில அது அதிகமாயிர்ரதை பார்க்கமுடியுது.

ஆணுக்கு சனி விட்டா கண்ணாலம்:
ஏன்னா இவன் அடிமையா இருக்ககூடாதே. இவனுக்கு ஒரு அடிமை வரனும்.அதான் பொஞ்சாதி

பெண்ணுக்கு சனி பிடிச்சா கண்ணாலம்:
பெண்ணுக்கு சனி பிடிச்சாத்தான் கண்ணாலமாகுது.ஏன்னா முதலிரவுல மானபங்கம் நடக்கனும், அவள் அடிமையாகனும்.கிழட்டுத்தன்மைய அடையனுமே.இதெல்லாம் ஆஃப்டர் மேரேஜ்தானே சாத்தியம்.

சனிய பத்தி முழுக்க  சொல்லனும்னா 80  பதிவாச்சும் போடனும். நான் ரெடி நீங்க ரெடியா?

2 comments:

Kalyan said...

நான் ரெடி, பதிவுகளை தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்

Unknown said...

ஆம நானும் ரெடி தான்.