'>
Showing posts with label பிரபலங்கள். Show all posts
Showing posts with label பிரபலங்கள். Show all posts

Saturday, January 7, 2012

சோனியா முதல் சிம்பு வரை 2012

அண்ணே வணக்கம்ணே !

புத்தாண்டில் பிரபலங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு திராட்ல விட்டுட்டம். நம்ம வேகத்துக்கு - நமக்கிருக்கிற டைட் ஷெட்யூலுக்கு விடாப்பிடியா டெக்ஸ்டா தொடர்ந்தா இன்னொரு புத்தாண்டு வந்துரும். அதனால சோனியா,ராகுல்,ஜெயலலிதா முதல் சிம்பு ,சூர்யா வரை பிரபலங்களோட எதிர்காலம் 2012ல எப்படி இருக்கும்னு ஆடியோவா தந்திருக்கேன்.

கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.





நம்ம புதிய விருந்தினர் சுந்தரேசன் அவர்களுடைய விபத்து பதிவையும் தந்திருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க.

அதுக்கு மிந்தி ச்சொம்மா டைம் பாஸுக்கு ரெண்டு உபகதை.

ஷீர்டி சாயிபாபா ஷீர்டில செட்டிலான புதுசுல திடீர்னு ஒரு ஆசாமி வந்தான்.பாபாவை அவர் உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு எந்திரிக்க சொன்னான். பாபா எந்திரிச்சாரு. வந்தவன் பாபா சீட்ல உட்கார்ந்துக்கிட்டான். இப்படி ஒரு 3 நாள் ஓடிருச்சு. சனம் பொங்கி எழுந்து வந்தவனை கிளிச்சுரப்பார்க்க பாபா "ஃப்ரீயா உடுங்க"ன்னாரு.

நாலாவது நாள் அந்த ஆசாமி எந்திரிச்சு பாபாவை வணங்கி "வந்து உங்க சீட்ல உட்காருங்க"ன்னான். பாபாவும் உட்கார்ந்தாரு. வந்தவர் பாபாவுக்கு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட்டாரு.

இந்த உபகதைக்கும் நம்ம சுந்தரேசன் சாரோட வரவுக்கும் அலம்பலுக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தமிருக்குன்னு நினைச்சாலும் நஷ்டமில்லை. நிற்க.

மெர்ஜென்சிக்கு மிந்தி தமிழ் நாட்டு வந்துரு விதவை பென்சன் தரோம்னு இந்திரா காந்தியை திமுக காரவுக சகட்டு மேனிக்கு பேசினாய்ங்க. எமெர்ஜன்சி சமயம் செமர்த்தியா பொங்கல் வாங்கினாய்ங்க.

அதே எமெர்ஜென்சி பீரியட்ல டி.கே.பரூவான்னு ஒரு பார்ட்டி இந்தியாதான் இந்திரா இந்திராதான் இந்தியான்னு ஊத்தி விட்டாரு. அப்பாறம் நடந்த எலக்சன்ல இந்திராவை சனம் ஊத்தி மூடிட்டாய்ங்க.

நாகர் கோவில்ல படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு காமராசர் சொன்னாரு எந்திரிக்கவே இல்லை.இதையெல்லாம் ஹிட்ஸ் கணக்கு சொல்லி தாண்டி குதிக்கிற சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை.

நம்ம ஜாதகத்துல ஆறுக்கு எட்டாவது இடம் கடகம் . இங்கனதான் குரு உச்சமா உட்கார்ந்திருக்காரு. குரு சுப கிரகம். நம்ம எதிரிகளுக்கு ரெம்ப டார்ச்சரெல்லாம் கொடுக்க மாட்டாரு.

வில்லன் கெட்டவன்னு வைங்க. அணு அணுவா சித்திரவதை பண்ணுவான்.அப்பாறம்தேன் கொல்லுவான்.

இதுவே வில்லன் ரெம்ப நல்லவன்னு வைங்க.. " டே ..டேய்.. என் கண்ணுக்கு மறைவா கொண்டு போயி ரெம்ப இம்சை -ரத்த சேதம் இல்லாம் பட்டுன்னு முடிச்சுருங்கடான்னு தேன் ஆணை கொடுப்பான்.

அப்படி ஆறுக்கு எட்டுல நின்ன குரு நம்ம எதிரிங்க கதையை முடிச்சுருவாரு. அதுக்காவ நாம நேரத்தை செலவழிக்கிறதா இல்லை.

அதே சமயம் நாம பூனை கணக்கா எலியை ஓடவிட்டு அடிப்பம். அதை பார்த்து அந்த எலி இது சோப்ளாங்கி பூனைன்னு நினைச்சு அசால்ட்டா இருந்தா இந்த பூனைக்கு தேன் லாபம்.

இதையெல்லாம் சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை. அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.

கூகுல்ல தேடு கொட்டும்னாரு. இந்தியாவுல லட்சம் சுந்தரேசன் இருப்பான். அல்லா சுந்தரேசனும் ஆஜர். இதுல இந்த வந்தரேசனை எப்படி கேட்ச் பண்றது? வில் யு கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ்?

Sunday, June 26, 2011

பிரபலங்களையும் தாக்கும் சமூக சீரழிவுகள்

காலங்காலமா இருந்த வர்ணாசிரம (அ)தர்மத்தால இந்திய சமூகமே ரெண்டா பிளந்து கிடக்கு. மெஜாரிட்டி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதே  இந்த நிலைக்கான  ஆரம்ப புள்ளி.  ராஜாக்களை  யாகம் அது இதுனு கவர் பண்ணியும், படையெடுத்து வந்த முஸ்லீம் அரசர்களை துபாஷிகள் என்ற நிலையிலும் , பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை தமது விசுவாசம்+ கூர்மையான புத்தியாலும் கவர்ந்து தம் இனத்தை மட்டும் வளப்படுத்திக்கொண்டது ஒரு இனம்.

பிறர் உழைப்பில் -பிறர் சிரிக்க வாழ்ந்த அந்த இனம்  தம்மை செக்யூர்டா வச்சுக்க மத்த இனங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பிச்சு  நீ உயர்ந்தவன்னு ஒரு கூட்டத்தை ரெகக்னைஸ் பண்ணி  எனக்கு நீ எப்படியோ அவிக உனக்கு அப்படின்னு ஒர்க் அவுட் பண்ணி என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணாய்ங்க.

இதன் விளைவாத்தான் ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் தோன்றியது. ரூல்ட் க்ளாஸ் ,ரூலிங் க்ளாஸ் என்று இந்திய சமூகமே இரு கூறாகிவிட்டது. தொழில் மயத்தின் காரணமா மத்தியமர் எனும் ஒரு புது பிரிவும் தோன்றியது.

ஏழை பணக்காரன் வித்யாசம் அதிகரிச்சுக்கிட்டே போக தரம் தாழ்ந்த  அரசியல் ,ஊழல் , தனியார் மயம் ,தாராள மயம் உலகமயம் என்று ஸ்தூலமான காரணங்கள் பல இருந்தாலும் எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி வர்ணாசிரம தர்மம்தான்.

இன்னைக்கும் பிராமணர்கள் ஆளும் வர்கத்தின் அதிகாரத்தை - அதற்கான எவ்வித ரிஸ்கும் இழப்பும் இன்றி அனுபவிப்பது  நிஜம் தான் ( செகரட்டரி -ஆடிட்டர் -ஃபேமிலி டாக்டர் -ஷேர்ஸ் கன்சல்டன்ட் -சாஃப்ட் வேர் கன்சல்டன்ட் -ட்ரான்ஸ்லேட்டர் -ட்ராஃப்ட் மேன் -ஸ்டெனோ)

ஆனால் பிராமணர்களுடனான கூட்டுறவாலயோ என்ன இழவோ தெரியலை சூத்திரனெல்லாம் பிராமணனை விட க்ளாஸா, நாசூக்கா,  தாங்கள் என்னமோ நெல்லதையே பண்றாப்ல பம்மாத்து காட்டிக்கிட்டு கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இன்னைய தேதிக்கு பிராமணர்களை  சாடுவது எவ்ள முக்கியமோ பிராமணர்களா மாறிட்ட சூத்திரர்களை சாடுவது கூட  அவ்வளவு முக்கியம் தான்.


ஆளும் வர்கம்னா அதுல வெளிப்படையா தெரியற சூத்திரர்களும் - பின்னணியில் -திரைக்கு பின்னே செயல்படற பிராமணர்களும் சேர்த்துத்தான்ங்கறதை  ஞா வச்சுக்கிட்டு தொடர்ந்து படிங்க.

இந்த விசித்திரமான கூட்டணி தங்களை வளப்படுத்தி கொள்ள கடைபிடிக்காத வழியே இல்லை.
ஒரு காலத்துல அய்யர் மாரு எந்தெந்த ஃபீல்டுலல்லாம் மோனொப்பலியா இருந்தாய்ங்களோ அந்த ஃபீல்டுல எல்லாம் சூத்திர பசங்க தூள் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க. அது இசையாகட்டும் -சாஃப்ட் வேராகட்டும், சார்ட்டட் அக்கவுண்டன்ஸி ஆகட்டும்.,மீடியா ஆகட்டும்

இன்னைக்கு அவாள் கிட்டேருந்து ஏறக்குறைய பறிக்கப்பட்டுவிட்ட துறைகளில்  ஊழல் வாதிகளா ஃபோக்கஸ் ஆன   சூத்திரர்கள் எல்லாருக்கும் நேர் குருவா இல்லாட்டாலும் குருவுக்கு குருவோ அந்த குருவுக்கு குருவோ ஒரு அய்யராதான் இருப்பாரு.

என்ன அவிக அளவா, நாசூக்கா , ப்ளாண்டா, பிடிபடாம செய்தாய்ங்க (இதுக்கு பயம் கூட ஒரு காரணம்) ஆனால் நம்மாளுங்க காஞ்சமாடு கம்பங்கொல்லையில விழுந்த மாதிரி தூள் பண்ணி மாட்டிக்கிட்டாய்ங்க.

கல்கிக்கும் ராஜாஜிக்கும் உள்ள தொடர்பு காவியம்னு இன்னைக்கும் கல்கி பீத்திக்குது . ஆனால் நக்கீரனுக்கும்  கலைஞருக்குமான தொடர்பு மட்டும் சந்தி சிரிக்குது. இங்கதான் அவாள் நிக்கிறாய்ங்க. நம்மாளுங்க நாறிர்ராய்ங்க.

ஆக இந்த ஆளும் வர்கம் (ஞா இருக்குல்ல இதுல சூத்திராளும் அடக்கம்) ஏழைமக்களை சுரண்ட என்னெல்லாம் செய்தாய்ங்களோ இவிகளால என்னெல்லாம் சமூக சீரழிவுகள் ஏற்பட்டதோ அதெல்லாம் இன்னைக்கு ஆளும் வர்கத்தையும் பாதிக்க துவங்கியிருக்குது. ஆளும் வர்கம் தன்னை வளப்படுத்தி கொள்ள செய்த சதிகள் அரங்கேற்றிய சமூக சீரழிவுகள் பற்றி  சொல்லனும்னா அதுக்கு தனி தொடர்பதிவு போடனும்.

 எளியவனை வலியவன் அடித்தால் வலியவனை தெய்வம் அடிக்கும்னு சொல்வாங்க. அது நெஜமாக துவங்கியிருக்கு.   தன் வினை தன்னைச்சுடும் என்பது போல ஆளும் வர்கத்தால் விதைக்கப்பட்ட  ஊக்குவிக்கப்பட்ட  சமூக சீரழிவுகள்  அந்த ஆளும் வர்கத்தையே தாக்க ஆரம்பித்திருக்கிறது.

முக முத்து கதை ? ( ஆல்க்கஹாலிக்) ப்ரமோத் மகாஜன் கதை ஞா இருக்கா? ( போதை மருந்துக்கு அடிமையான தம்பி டிக்கெட் கொடுத்துட்டாரு)

இந்த வரிசையில லேட்டஸ்டா மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி  ஜெய்பால் ரெட்டியின் தங்கை மகள் கணவனால் கொல்லப்பட்டார்.

அதுவும் எப்படி? பார்ட்டியில் ரெண்டு பேரும் குடிச்சிருக்காய்ங்க -வாக்கு வாதம் நடந்திருக்கு -போதையிலயே டிக்கெட் கொடுத்துட்டாரு ஆத்துக்காரரு.

இன்னைக்கு செய்தி ஒரு எம்பியோட அண்ணன் மகள் தீக்குளித்து தற்கொலை (திருமணமானவர்) இந்த நொடி ஞா வந்தது இவ்ளதான் ஒரு எஸ்.ஐயோட மகன் பழைய பேப்பர் பொறுக்குறான். ஒரு எம்.எல்.ஏவோட மகன் (55)  ஓட்டை சைக்கிள்ல ஊன்று கோலோட சுத்திக்கிட்டிருக்கான்.

"பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா"

தங்களது கோட்டைசுவரனைய காம்பவுண்ட் சுவர்களை தாண்டி தங்கள் குடும்ப பெண்களையே பலி வாங்கத்துவங்கிவிட்ட பிறகும் ஆளும் வர்கம் கண்விழிக்கலின்னா நீங்க உருவாக்கிவிட்ட சீரழிவுகள்  உங்க வீட்டு  பெட் ரூமுக்கெல்லாம் வந்துரும்யா !

அப்பாறம் ஒங்க இஷ்டம்.