'>

Saturday, January 7, 2012

சோனியா முதல் சிம்பு வரை 2012

அண்ணே வணக்கம்ணே !

புத்தாண்டில் பிரபலங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு திராட்ல விட்டுட்டம். நம்ம வேகத்துக்கு - நமக்கிருக்கிற டைட் ஷெட்யூலுக்கு விடாப்பிடியா டெக்ஸ்டா தொடர்ந்தா இன்னொரு புத்தாண்டு வந்துரும். அதனால சோனியா,ராகுல்,ஜெயலலிதா முதல் சிம்பு ,சூர்யா வரை பிரபலங்களோட எதிர்காலம் 2012ல எப்படி இருக்கும்னு ஆடியோவா தந்திருக்கேன்.

கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.





நம்ம புதிய விருந்தினர் சுந்தரேசன் அவர்களுடைய விபத்து பதிவையும் தந்திருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க.

அதுக்கு மிந்தி ச்சொம்மா டைம் பாஸுக்கு ரெண்டு உபகதை.

ஷீர்டி சாயிபாபா ஷீர்டில செட்டிலான புதுசுல திடீர்னு ஒரு ஆசாமி வந்தான்.பாபாவை அவர் உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு எந்திரிக்க சொன்னான். பாபா எந்திரிச்சாரு. வந்தவன் பாபா சீட்ல உட்கார்ந்துக்கிட்டான். இப்படி ஒரு 3 நாள் ஓடிருச்சு. சனம் பொங்கி எழுந்து வந்தவனை கிளிச்சுரப்பார்க்க பாபா "ஃப்ரீயா உடுங்க"ன்னாரு.

நாலாவது நாள் அந்த ஆசாமி எந்திரிச்சு பாபாவை வணங்கி "வந்து உங்க சீட்ல உட்காருங்க"ன்னான். பாபாவும் உட்கார்ந்தாரு. வந்தவர் பாபாவுக்கு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட்டாரு.

இந்த உபகதைக்கும் நம்ம சுந்தரேசன் சாரோட வரவுக்கும் அலம்பலுக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தமிருக்குன்னு நினைச்சாலும் நஷ்டமில்லை. நிற்க.

மெர்ஜென்சிக்கு மிந்தி தமிழ் நாட்டு வந்துரு விதவை பென்சன் தரோம்னு இந்திரா காந்தியை திமுக காரவுக சகட்டு மேனிக்கு பேசினாய்ங்க. எமெர்ஜன்சி சமயம் செமர்த்தியா பொங்கல் வாங்கினாய்ங்க.

அதே எமெர்ஜென்சி பீரியட்ல டி.கே.பரூவான்னு ஒரு பார்ட்டி இந்தியாதான் இந்திரா இந்திராதான் இந்தியான்னு ஊத்தி விட்டாரு. அப்பாறம் நடந்த எலக்சன்ல இந்திராவை சனம் ஊத்தி மூடிட்டாய்ங்க.

நாகர் கோவில்ல படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு காமராசர் சொன்னாரு எந்திரிக்கவே இல்லை.இதையெல்லாம் ஹிட்ஸ் கணக்கு சொல்லி தாண்டி குதிக்கிற சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை.

நம்ம ஜாதகத்துல ஆறுக்கு எட்டாவது இடம் கடகம் . இங்கனதான் குரு உச்சமா உட்கார்ந்திருக்காரு. குரு சுப கிரகம். நம்ம எதிரிகளுக்கு ரெம்ப டார்ச்சரெல்லாம் கொடுக்க மாட்டாரு.

வில்லன் கெட்டவன்னு வைங்க. அணு அணுவா சித்திரவதை பண்ணுவான்.அப்பாறம்தேன் கொல்லுவான்.

இதுவே வில்லன் ரெம்ப நல்லவன்னு வைங்க.. " டே ..டேய்.. என் கண்ணுக்கு மறைவா கொண்டு போயி ரெம்ப இம்சை -ரத்த சேதம் இல்லாம் பட்டுன்னு முடிச்சுருங்கடான்னு தேன் ஆணை கொடுப்பான்.

அப்படி ஆறுக்கு எட்டுல நின்ன குரு நம்ம எதிரிங்க கதையை முடிச்சுருவாரு. அதுக்காவ நாம நேரத்தை செலவழிக்கிறதா இல்லை.

அதே சமயம் நாம பூனை கணக்கா எலியை ஓடவிட்டு அடிப்பம். அதை பார்த்து அந்த எலி இது சோப்ளாங்கி பூனைன்னு நினைச்சு அசால்ட்டா இருந்தா இந்த பூனைக்கு தேன் லாபம்.

இதையெல்லாம் சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை. அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.

கூகுல்ல தேடு கொட்டும்னாரு. இந்தியாவுல லட்சம் சுந்தரேசன் இருப்பான். அல்லா சுந்தரேசனும் ஆஜர். இதுல இந்த வந்தரேசனை எப்படி கேட்ச் பண்றது? வில் யு கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ்?

No comments: