'>

Sunday, December 4, 2011

சுக்கிரனும் -லட்சுமியும்

அண்ணே வணக்கம்ணே .. நம்ம வினோத்ஜீ வீடுங்கற பேர்ல ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு "ஊடு" கட்டி விளையாடிக்கிட்டிருக்காரு. நம்மை ஆத்தரா வேற இன்வைட் பண்ணிட்டாரு. நம்முது கடகலக்னம்ங்கறதாலயோ என்னமோ அந்த தலைப்பு நமீதா கணக்கா நம்மை இழுத்துருச்சு.வாரத்துக்கு ஒரு போஸ்டாச்சும் போடலின்னா நல்லாருக்காது.

அதே சமயம் நாம ஆரம்பிச்ச மினி தொடரையும் தொடர்ந்தாக வேண்டியிருக்கு. ஆக்சுவலா இன்னைக்கு குருவை பற்றி எழுதனும். குருவுக்குரிய தெய்வமா தட்சிணா மூர்த்தி சொல்லப்படுகிறார். குருவுக்கும் -த.மூர்த்திக்கும் என்ன தொடர்புன்னு எழுதியாகனும். அதே நேரத்துல வீட்டை பற்றியும் எழுதனும். ஊரை சுத்தின மாதிரியும் இருக்கனும் அண்ணனுக்கு பொண்ணை பார்த்த மாதிரியும் இருக்கனும்ங்கற மாதிரி எழுதனும்னா இன்னைக்கு குரு -சனி -புத-கேது எல்லாரையும் ஓவர் லுக் பண்ணி சுக்கிரனுக்கு ஜம்ப் ஆயிரனும்.
ஏன்னா அவர் தானே கிருக காரகர் ( கிரகம் - வீடு). கில்மாவுக்கும் அவர்தான் காரகம்னு தனியே சொல்லத்தேவையில்லை.

மன்சன் வீடு கட்ட ஆரம்பிச்சதே கில்மாவுக்காகத்தான்னு "வீடும்-வீடு பேறும்" பதிவுல சொன்னது ஞா இருக்கலாம்.அது மனோதத்துவ அலசல். இது ஜோதிட அலசல்.மனோதத்துவம்னா குறுந்தாடி வச்ச கிழவாடிகள் அடிக்கிற ஜல்லின்னு நினைச்சுராதிங்க. மனோதத்துவம் சொல்ற ஆசனப்பருவம் மூலாதாரத்தையும்-அதையடுத்து வரும் பருவம் ஸ்வாதிஷ்டானத்தையும் குறிப்பிடுது.

மனோதத்துவத்துக்கும் யோக சாஸ்திரத்துக்குமே லிங்க் இருக்கும்போது ஜோதிடத்துக்கும் மனோதத்துவத்துக்கும் லிங்க் இருக்காதா என்ன? கீது நைனா..

ஜோதிஷத்துல யோ.சா, ம.தத்துவம் எல்லாம் அடங்கி இருக்கு. ஒரு கிரகம் வீசும் கிரணம் ,அதிர்வு அவை தரும் தூண்டுதல் மனித உடல்/மனதை என்ன செய்யும்ங்கறது அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்.

ஆனால் அந்த தூண்டுதல் -அதன் விளைவு என்னவா முடியும்ங்கறதெல்லாம் மருத்துவம் -மனோதத்துவம். இது அன்றைய ரிஷிகள் மகரிஷிகளின் "பட்டறிவுக்கு" சாட்சி.

உதாரணமா கடகத்துக்கு அதிபதி சந்திரன்.அவர் அடிக்கடி கட்சி மாறும் அரசியல் வாதி மாதிரி ராசி மாறிக்கிட்டே இருப்பாரு. இதனால ஜாதகனோட மன நிலை -உடல் நிலையில் ஒரு வித திடீர் தன்மை,எதிர்பாரா தன்மை ,நிலையற்ற தன்மை இருக்கும் அனுகூல,பிரதி கூல நிலை மாறி மாறி வரும். இது ஸ்பார்க்.

இதை வச்சு மனித உடல் /மனம் என்ன பாடுபடும்னு கணிக்கிறச்ச மருத்துவம் சைக்காலஜி எல்லாம் வந்துருது. பெரியவுக கோடிட்டு காட்டியிருக்காய்ங்க. நாம கோடிட்ட இடத்தை நிரப்பறோம். தட்ஸால்.

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டாருய்யான்னு அலுத்துக்காதிங்க.பாய்ண்டுக்கு வரேன். சுக்கிரன் கில்மாவுக்கு காரகன் என்பது ஸ்பார்க் .ஞானோதயம். அடுத்து அவர் கிருக காரகன் ,வாகன காரகன்னு சொல்லியிருக்காய்ங்களே அதெல்லாம் மருத்துவம் சைக்காலஜி தொடர்பான உண்மைகள்.

சுக்கிரன் நல்லாருந்தா பார்ட்டி கில்மா மேட்டர்ல படு கிட்டனாயிருப்பாரு. பெண் வீக்கர் செக்ஸ். சதா இன்செக்யூரிட்டியில இருக்கிறவள்.அவளுக்கு செக்யூரிட்டி எது வீடு..கில்மாவுக்குன்னா கட்டிலறை -அதுக்கு கதவு. இதெல்லாம் இருந்தா தேன் கில்மா படு கில்மாவா இருக்கும்.

அடுத்து வருவது வாகன காரகம் வேலை முடிஞ்சு சிட்டி பஸ்ல நசுங்கி நாறி வீடு போய் சேர்ந்தா பாலகுமாரன் சொன்னாப்ல பனிக்குட வாசனைதேன் வரும். அதனால வாகனத்து மேல மனசு தாவும்.

இப்படியா கொத்த சுக்கிரன் சரியில்லேனு வைங்க எந்த சாமிய கும்பிடனும்னு கேட்டா லட்சுமியை கும்பிடுன்னு ஜோதிடம் சொல்லுது ஏன்?

லட்சுமி எங்கன இருக்கா? கடல் மேல - ஆதிசேஷன் -படம் எடுத்து கொத்த தயாரா இருக்க அசால்ட்டா ஆத்துக்காரரோட பாதங்களை பிடித்து விட்டபடி இருக்கா.லட்சுமியோட ஆ.காரரான விஷ்ணு லேசுப்பட்ட ஆளா?

ஊஹூம்..ஒவ்வொரு அவதாரத்துல ஒவ்வொரு ஆட்டம். சில அவதாரத்துல ஒன்னு ,சிலதுல ரெண்டு ,கிருஷ்ணாவதாரத்துலன்னா கணக்கே இல்லை. இது சிவனாரோட ஹோமோ செக்ஸ் வேற . இத்தீனி லொள்ளு இருந்தாலும் கணவனை பிரியலை.

கழுத்துல துண்டு போட்டு இழுத்தா எவனும் ஓடிப்போகத்தேன் பார்ப்பான். பாதத்துல என்ன விசேஷம்னா உச்சந்தலைக்கு டைரக்ட் லிங்க் இருக்குது த்லை ! அதுலயும் கால் கட்டை விரல் இருக்கே. மூளைக்கு ஹாட் லைன் மாதிரி.

உடலுறவின் போது ரெண்டு கால் கட்டை விரலையும் ஒன்னோட ஒன்னா பின்னிக்கிட்டா வீரியம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் (ஆனால் இது பெண் மேல் முறையில் தான் ஆணுக்கு சாத்தியம்)

லட்சுமிக்கு அக்கு பஞ்சர்ல இருந்து வர்மக்கலைலருந்து பலதுலயும் டச் இருந்திருக்கு. இல்லாட்டி அந்த மாதிரி ஒரு லொக்கேஷன்ல (கடல்) , அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல ( பாம்பு) அந்த மாதிரி ஒரு கணவனோட (ஹோமோ) சகஜமான வாழ்க்கைய நடத்த முடியுமா என்ன?

சுக்கிரன் மலர்களுக்கு காரகன் .அவள் பிறந்ததும் மலரில் - உறைவதும் மலரில். சுக்கிரன் அழகு அலங்காரம், வாசனாதி திரவியங்களுக்கு காரகன். ஆத்தா மேல சுடுகாட்டு சாம்பல் வாசனைதேன் வரும். ஆனால் விஷ்ணு அலங்கார பிரியர். அதனால லட்சுமியும் மேட்சிங்கா அதே ரூட்ல மெயின்டெய்ன் பண்றாய்ங்க.

எந்த பெண்ணாவது பார்க்க லட்சணமா இருந்தா ஆத்தா மாதிரி இருக்கு, சரஸ்வதி மாதிரி இருக்குன்னு சொல்றதில்லை. லட்சுமி கரமா இருக்குன்னு தேன் சொல்றோம்.

இந்த லைன் அப்ல ரோசிச்சா இன்னும் நிறைய்ய மேட்டர் வெளிய வரும். இதையெல்லாம் மனசுல வச்சு 5 வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு பூஜை செய்து ,6 ஆவது வெள்ளிக்கிழமை லட்சுமிகரமா வாழும் 6 சுமங்கலிகளை அழைத்து தாம்பூலத்தில் வெள்ளிக்காசோ ஃபேர் அண்ட் லவ்லியோ ஏதோ ஒரு சுக்கிர காரக பொருளை கொடுத்து அவிகளையே லட்சுமியா பாவிச்சு அவிக கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினா சுக்கிர தோஷத்துலருந்து ரிலீஃப் கிடைக்கும். காதலில் வெற்றி,கண்ணாலம்,சுமுகமான தாம்பத்யம் அமையும்.வீடு,வாகனம்னு மனசு தாவ அவையும் அமையலாம். டார்கெட் /அச்சீவ் மெண்டுக்கு எந்த ரேஞ்சுல பூஜை பண்ணனும்.ஸ்தூலமான ஆடம்பரத்தை விட உங்க உணர்வுகள் முக்கியம். மனம் குவித்த ஆராதனை முக்கியம்.

உடுங்க ஜூட் !

குறிப்பு:
நேத்துதேன் சிஸ்டம் மொத்தத்தையும் வைரஸ் ஸ்கான் பண்ணி முடிச்சம். படக்குனு கீ போர்டு பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. ராமா கனவேமிரா ரகுராம கனவேமிரான்னுட்டு அடிச்சு பார்த்தா இந்த வரிகள் மட்டும் கச்சிதமா டைப் ஆச்சு. இதுக்கு டெக்னிக்கலா என்ன காரணம்னு ஆருனா சொல்லலாம்.

No comments: