'>
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Friday, July 29, 2016

வெட்டி ........... நித்திரைக்கு கேடு

அண்ணே வணக்கம்ணே !
வெட்டி .............. நித்திரைக்கு கேடுன்னு ஒரு சொலவடை உண்டு . இதுக்கு என்ன அருத்தம்னு அவ்வப்போது ரோசிக்கிறதுண்டு.

கர்பத்துக்கு வாய்ப்பில்லாத உடலுறவா? அல்லது பெண்ணுக்கு உச்சம் கிடைக்காத உடலுறவா? ஒரு வேளை எதையேனும் விரும்பி உறவுக்கு இடம் தர விரும்பியது கிடைக்காத உடலுறவா? ஒரு வேளை இதை சொன்னவள் பாலியல் தொழிலாளியா? கடங்காரன் எவனாச்சும் கடனை கழிச்சுட்டு போயிட்டானா? அல்லது கடன் சொல்லிட்டு போயிட்டானா?

மேற்படி உடலுறவு மட்டுமில்லை. ஒவ்வொரு வாழ்க்கையுமே வெ.ஓ தானோன்னு தோனுது .பெரியார் அவாளோட ஆதிக்கத்தை ஒழிச்சு கட்ட ஒரு அமைப்பை துவக்கறாரு .அவரோட ஸ்கூல்ல பால பாடமே கடவுள் இல்லேங்கறது.ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன்ங்கற அண்ணா துரை அந்த அமைப்பை ஹைஜாக் பண்ணி கொண்டு போறாரு.

அண்ணா தன் அரசியல் வாழ்வில் எந்த கட்டத்திலும் தன் குடும்பத்தாரை முன்னிலை படுத்தினதில்ல.ஆனால் அந்த கட்சி கலைஞர் கைக்கு போகுது . கலைஞரை வாழும் பெரியார்னு சொம்படிக்கிறவிக அடிக்கட்டும்.ஆனால் மஞ்சள் துண்டை மீறியும் பெரியாரின் கூறுகள் அவரில் உண்டு.அது வேற சப்ஜெக்ட்.

அப்படியா கொத்த கலைஞர் தலைமையில இருக்கிற கட்சியில ஒரு பெரும்பாகத்தை எம்.ஜி.ஆர் ஹைஜாக் பண்ணிக்கிட்டு போறாரு . மூகாம்பிகை தரிசனம் ,மணியன் இத்யாதி அவா கைப்பாவையா மாறிர்ராரு.

இதை எல்லாம் மீறியும் எம்.ஜி.ஆரிடம் ஒரு வித ராபின் ஹுட் தனம் உண்டு . ஆனால் கட்சி ஆரு கைக்கு போச்சு? அக்கிரகாரத்து அம்மையார் கைக்கு போயிருச்சு.

ஆக பெரியார்,அண்ணா,கலைஞர்,எம்.ஜி.ஆரோட உழைப்பெல்லாமே வெட்டியாதானே போச்சு மத்தவிகளாச்சும் போய் சேர்ந்துட்டாய்ங்க.கலைஞரை பாருங்க.

இன்னைக்கும் செவிடர் ராஜாங்கத்து அரசவை புலவர் கணக்கா தினசரி அறிக்கை பாட்டு பாடிக்கிட்டே இருக்காரு .

தனிப்பட்ட வாழ்க்கையே வெட்டி. லட்சிய வாழ்க்கை அதை விட வெட்டி . லட்சியத்தோட அரசு அதிகாரம் சேரும்போது அது அதைவிட வெட்டி .ஆனாலும் வாழ்ந்துக்கிட்டு தானே இருக்கம்.

சுபவீ வேணம்னா கலைஞருக்கு எதுவும் சலிக்கிறதுல்ல -சலிப்பு ஏற்படாததால கலைஞருக்கு மூப்பு கிடையாதுனு அடிச்சு விடலாம்.ஆனால் கலைஞரே எத்தனையோ முறை பலான பலானவர்களோடெல்லாம் அரசியல் செய்த எனக்கு இன்று யார் யாருடனோ அரசியல் செய்யவேண்டியிருக்குன்னு புலம்பியிருக்காரு .

கழகத்தின் கதையே இதுன்னா சுதந்திர போராட்டம் பத்தில்லாம் எடுத்துக்கிட்டா மேற்படி தலைவர்களோட ஆவிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும்.

இதை எல்லாம் மீறி எல்லாரும் வாழ்ந்துக்கிட்டு தானே இருக்காய்ங்க. ப்ரோக்ராம் பண்ணப்பட்ட ரோபோக்கள் மாதிரி .ஸ்மசான வைராக்கியம் -பிரசவ வைராக்கியம் எல்லாத்தையும் ஊதித்தள்ளி வாழ்க்கை எல்லாரையும் தள்ளிக்கிட்டே போகுதே .எதை நோக்கி ? மரணத்தை நோக்கியா?

இன்னம் 7 நாள் போனா நமக்கு 49 வயசு முடிஞ்சு அம்பதுல என்டர் ஆகிறம். "ஏ சரித்ர சூசினா ஏமுன்னதி கர்வ காரணம்"ங்கறாப்ல எல்லா இதயமும் ரணமாத்தான் கிடக்கு. அதை ஆளுக்கொரு குச்சி வச்சு குத்தி குடைஞ்சுக்கிட்டே தான் கிடக்கம்.

பீத்திக்கறான்யானு நீங்க சலிச்சுக்கிட்டாலும் செரி .சொல்ல வந்ததை சொல்லிர்ரன். சுய புத்தியில நம்ம ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பம் 1986.அங்கே இருந்து என்னென்னமோ அனுபவங்கள் . அந்த நேரத்துக்கு கச்சா முச்சானு தோனினாலும்  ஒரு கட்டத்துல ராஜேஷ்குமார் நாவல் கணக்கா வெவ்வேறு எப்பிசோட்ல வந்த வெவ்வேறு கேரக்டர்ஸ்  பச்சக்குனு சந்திச்சுக்கிட கதை நூல் பிடிச்சாப்ல போயிருக்கிறதை உணர முடிஞ்சது .

ஆன்மீகம்ங்கறதை லௌகீக வாழ்க்கைக்கு இன்சென்டிவ் /ப்ரமோஷன்/போனஸ் வாங்கற குறுக்கு வழியா நினைக்கிற சனம் தான் நூத்துக்கு 99 சதவீதம். இவிக வேண்டுதலைனு பார்த்தா அவற்றின் மூலம் அரசுகளின் மொள்ளமாரித்தனம் தான்.

அரசுகள் மட்டும் சீரான நிர்வாகத்தை வழங்கினா மேற்படி 99 சதவீதம் பேரும் ஒழுங்கா "பொளப்பை" பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. மிச்சம் மீதி உள்ள 1% பேரு சாதனையை (ஆன்மீக முயற்சிகள்) தொடர்வாங்க.

இது என்னடா கருமம் ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்டே அஞ்சு பத்து கை மாத்து கேட்டமாதிரி சனம் கடவுளை இன்சல்ட் பண்ணுதே .இதுக்கெல்லாம் ஒரு அல்ட்டிமேட் சொல்யூஷன் கிடைச்சா நல்லாருக்குமேனு ரோசிச்சதுல கிடைச்சதுதான் தேச கனவுகள்,மானில கனவுகள், "என் தேசம் என் கனவு" இத்யாதி எல்லாம்.

இன்னைக்கு ஜாய்ன்ட் பார்லிமென்டரி கூட்டம் கூட்டி ஒரு 30 நிமிட் நமக்கு பேச வாய்ப்பு கொடுத்து 31 ஆவது நிமிட் செத்துபோறதா இருந்தாலும் பீடையே போச்சுனு விட்டுரலாம்.

மேற்படி கனவுகள்ளாம் நனவாயிட்டா மட்டும் ஆன்மீகம் தழைச்சுருமான்னா நிச்சயமா இல்லை பிறவு ஏன் இந்த மெனக்கெடல்னா.. என்னத்த சொல்ல?
நானும் ப்ரோக்ராம் பண்ண ரோபோதானா? ஷிட் .. நெவர்..எல்லா சித்தாந்தங்களும் நாலு காலையும் தூக்கிட்டா நமக்கு கை கொடுக்கிற ஒரே சித்தாந்தம் "என்னமா பொழுது போச்சு"ங்கறதுதான்.

ஜஸ்ட் 2 மணி நேர சினிமா "இழுவை"யா இருந்தாலே எப்படி கடுப்பாகுது . இந்த மாதிரி வெட்டி சாகசங்கள்ளாம் இருந்தாதானே பாஸ் ..டெம்போ வரும்.
செரிப்பா ..நீ என்னதான் சொல்லவரேன்னு கேப்பிக. சொல்றேன். இங்கே எல்லாமே வெட்டி .அதுக்காவ வெட்டியா உட்கார்ந்திருந்தா போரடிக்கும். லைஃப்ல டெம்போ இருக்காது. எல்லாம் வெட்டின்னு தெரிஞ்சே வெட்டியா எதையாச்சும் செய்யனும்.

நீங்க செய்ற வேலை  பொது  நலத்துடன் கூடியதா இருந்தாலே கூட கர்மம் தொடரத்தான் செய்யும். பிறவி சக்கரத்துல ஃபிக்ஸ் பண்ணியே தீரும்.ஆனால் சீட் பெல்ட் இருக்காது .

ஆனால் உங்க வேலை  சுய நலத்துடன் கூடியதா இருந்தா மட்டும் ஹெல்மெட்,சீட் பெல்ட் எல்லாம் கியாரண்டி .

Sunday, October 2, 2011

எங்கே தப்பு பண்றோம்?

வாழ்க்கையில "எங்கயோ தப்பு பண்ணிட்டம்"னு நினைக்காத ஆளில்லை. நினைக்காத நாளில்லை. அது இன்னா தப்புன்னு கொஞ்சம் முக்கி ரோசிச்சிருக்கன். ஸ்கான் பண்ணப்பட்ட கை.எ. பிரதியா படிக்கிற பொறுமை உள்ளவுக இப்பமே படிக்கலாம்.ஆடியோ பிரியர்கள் / டெக்ஸ்ட் பிரியர்களுக்கும் விருந்து நிச்சயம் . என்ன கொஞ்சம் முன்ன பின்னே பரிமாறப்படும்.





எங்கே தப்பு பண்றோம் பதிவை ஆடியோல கேட்க கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேளுங்க.





இப்போ டெக்ஸ்டா ...

இந்த பதிவுல நான் குறிப்பிடப்போற பட்டியல்ல உள்ள தப்பையெல்லாம் நானும் செய்தவன்தேன். இன்னிக்கும்
அறிவு அரைக்கணம் கண்ணை மூடிக்கிட்டா படக்குன்னு செய்துரவும் வாய்ப்பிருக்கு ( தப்பை சொல்றேங்க)
அதனாலதேன் யாவாரிங்க வருசத்துக்கொருதரம், மல்டி நேஷனல் கம்பெனிங்க 3
மாசத்துக்கொருதரம் செய்யறதை தினசரி செய்துர்ரம். (அதாங்க பேலன்ஸ்ஷீட்)
இல்லாட்டி நமக்கும் ................க்கும் வித்யாசமில்லாம போயிரும். மன்சங்க
எங்கே தப்பு பண்றாய்ங்கன்னு இந்த பதிவுல பார்த்துருவம்.

1. இந்த வாழ்க்கை நிரந்தரமானதுனு நினைச்சுர்ரான். தான் கல்ப்ப கோடி
காலம் வாழப் போறதா நினைச்சுர்ரான் அதான் எல்லா தப்புக்கும் மூலம். அசலான
மேட்டர் இன்னாடான்னா நாம பிறந்த கணம் முதலே சாக ஆரம்பிச்சுர்ரம். (ஓஷோ)

இந்த உலகத்தோட ஆயுளோட நம்ம ஆயுளை கம்பேர் பண்ணிக்கிட்டாலே போதும் நாம ஊட்டி சீசனுக்கு வந்த டூரிஸ்டுங்கறது புத்திக்கு உறைக்கும். சனத்தோட சிந்திக்கும் போக்கே மாறிரும்.

எதையுமே டெம்ப்ரவரினு நினைச்சா அதை Full Swing-ல Exploit பண்ணிக்கற எண்ணம் வரும்.

ஒரு குட்டிய ஒரு நைட்டுக்கு புக் பண்ணிட்டு எவனாச்சும் உதவாக்கரை நண்பனோட பார்ல உட்கார்ந்து
தண்ணி போடுவானா? ஊஹும். வாழ்க்கைய நைட்டுக்கு புக் பண்ணின குட்டியா
நினைச்சுப்பாருங்க.

புனரபி மரணம், புனரபி ஜனனம், பிறவிகள், கடலைப்பிண்ணாக்கு இதெல்லாம் ஒரு
பக்கம் இருக்கட்டும்.

ஒரு காலத்தில 3 வருஷம் ஒன்னா படிச்சோம். ஒரு குட்டியை ஒரு தலையா
காதலிச்சோம். ஃபேர்வெல் ஃபங்சன் நடக்குது. உங்க காதலை இன்னிக்கு
சொல்லலைன்னா என்னிக்கும் சொல்ல முடியாது.

இந்த கட்டத்துல நீங்க மேடைல போட வேண்டிய நாடகம் (அ) பாட வேண்டிய பாட்டு,
அணிய வேண்டிய உடை எல்லாமே ஞா. இருக்கும். ஆனால் அதையெல்லாம் உங்க காதலை
சொல்ல எப்படியெல்லாம் உபயோகிக்கலாம்ங்கற விஷயம்தான் உங்க ப்ரெய்ன்ல
இருக்கும். இருக்கனும்.

இந்த உலக வாழ்க்கைங்கறது நீங்க போட வேண்டிய நாடகம் . காதலை
சொல்றதுங்கறது உங்க லட்சியம்.

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே!
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!

நீங்க ரிலேக்ஸ் பண்ணாலும் டென்ஷன் ஆனாலும், சிரிச்சாலும், அழுதாலும்
அதுக்கும் உங்க லட்சியத்துக்கும் லிங்க் இருக்கனும் அதான் வாழ்க்கை.

உங்க லட்சியம் எதுவானா இருந்து ஒழியட்டும். லட்சியத்தை அப்பப்போ டீல்ல
விட்டுட்டா உங்க மேல உங்களுக்கு இருக்கிற மரியாதையே குறைஞ்சுரும்

உலகமே கல்லால அடிச்சாலும் கு.ப. என் மனசாட்சி ”முருகேசா! நீ கரீட். இந்த
முட்டாக்கூ உலகம் கல்லால அடிக்குதுன்னா நீ உண்மைய டச் பண்ணிட்னு
அர்த்தம். ஃப்ரீயா உடு ஃப்யூச்சர்ல இந்த உலகம் தான் வருத்தப்படப்
போகுது”ன்னு சொன்னா அது தான் வாழ்க்கை.

.இந்த உலகம் ஆகா முருகேசனை போல ஒரு உத்தமனை பார்க்க முடியுமான்னு தலையால
வச்சு கொண்டாடுது. ஆனால் என் மனசாட்சி மட்டும் ”பட்டா டேய்! நீ இன்னா மாதிரி
ஜொள்ளு பார்ட்டி – டகால்ட்டி – டுபாகூர் உலகம் இன்னடான்னா உன்னைப் போய்
உத்தமன்னு சொல்லுது”னு வைங்க. இதுவா வாழ்க்கை


1. வாழ்க்கைங்கறது காங்கிரசல்லாத கூட்டணி அரசு மாதிரி எப்ப வேணா
கவுந்துரும். வி.பி.சிங் கணக்கா படக்குனு மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டை
அமலாக்க ட்ரை பண்ணனும்.

அட்வானி (இந்தி சானல் உச்சரிப்பு) ரத யாத்திரை கிளம்பினா படக்குனு தூக்கி உள்ளே
போட்டுரனும்.

அதை விட்டுட்டு அட்வானிய கண்டுக்காம விட்டிருந்தாலும் சிலநாள் அ சில வாரத்துல
ஆட்சி ஃபணால் தான். மண்டல் மேட்டரை டீல்ல விட்டிருந்தாலும் ஃபணால்தான்.

ஆக வாழ்க்கையில நீங்க லட்சியத்துக்காக Workout பண்ணாலும் சாகத்தான்
போகறீங்க. அதை டீல்ல விட்டாலும் சாகத்தான் போறீங்க.

லட்சியத்தை டீல்ல விட்டு – வாழ்வாங்கு வாழ்ந்தாலும் அது மரணத்தை விட
மோசமான – கேவலமான வாழ்க்கையா இருக்கும்.

லட்சியத்துக்காவ சிங்கிள் டீக்கு சிங்கியடிச்சாலும் மரணம் கொண்டாட்டமா இருக்கும்.

நான் ரெண்டு விதமாகவும் வாழ்ந்த கிராக்கி. இது என் சொந்த அனுபவம்.

ஆப்பரேஷன் இந்தியா 2000க்காக போராடினப்போ ஊரு சனம்லாம்
திமிரு-கொழுப்பு-பொழப்ப பாருன்னு கிழிச்சாலும்

நம்ம தீட்சண்யத்துக்கு ஆத்தாவே நடுங்கினாள். ஆத்தாளுக்கு
அல்டிமேட்டம்லாம் கொடுக்கிற ரேஞ்சுல இருந்தம்.

போலீஸ், ரெவின்யூ, ஜுடிஷியரி, அரசியல் கட்சி அலுவலகங்கள் ஏன் சீஃப்
செக்ரட்ரியே பம்மிக்கிட்டிருந்தாய்ங்க.

லட்சியத்தை திராட்டுல விட்டு அதோ இதோன்னு 7 வருசம் ஆயிருச்சு. வடிவேலு
சொல்றாப்ல கன்னம்லாம் பன்னு மாதிரி ஆகி ஒரு மாதிரி தேஜஸா இருக்கு.

ஆனா ராத்திரியில தூக்கம் வரமாட்டேங்குது. குறுக்கால போற பூனைக்கெல்லாம்
ரோசிக்க வேண்டியதாருச்சு.

லட்சியம் – லட்சியம்னு சொல்லிக்கிட்டு கிடக்கேன். லட்சியம்னா ஆ.இ. 2000
மட்டுமில்லே. வீடு கட்டறது – தபால்ல மேல்படிப்பு, வெளிநாடு போறது இப்படி
எந்த இழவானா இருக்கட்டும். அதை விட்டுக் கொடுக்காம வாழ்ந்தா – அதை
அடையாமயே போயிட்டாலும் உங்க வாழ்க்கை சக்ஸஸ்.

நமக்கு முந்தி கோடானு கோடி சனம் பிறந்து – வாழ்ந்து செத்திருக்காய்ங்க.
அகாலமா செத்திருக்காய்ங்க. அவலமா அத்வானமா வாழந்திருக்காய்ங்க. மரணமே
போல வாழ்ந்து முடிஞ்சிருக்காய்ங்க.

என்ன மசுருக்கு நம்மை இயற்கை படைச்சது? எதையோ புதுசா செய்வம்னுதேன் படைச்சிருக்கு.

ஆனால் நாம என்ன பண்றோம்? இதுவரை வாழ்ந்து செத்தவுகளோட எண்ண அலைகளுக்கு
அடிமையா – அவிக ஆட்டி வைக்கிற பொம்மையா வாழ்ந்துகிட்டிருக்கம். கேவலம் நம்ம அப்பா அம்மாவோட ஜிராக்ஸ் காப்பியா இருக்கம்.

இதுவரைக்கும் எவனும் செய்யாததை நாம செய்ய வேணாமா? நம்மை படைச்ச
இயற்கைக்கும் – பெத்து வளர்த்த அப்பா அம்மாவுக்கும் பெருமையை தேடி தர
வேண்டாமா?

குறைஞ்சபட்சம் அவிகளுக்கு கெட்ட பேரையாவது வாங்கித்தராம இருக்கலாமே!

இந்த நல்ல எண்ணம் வர்ரதுக்குள்ளே அப்பா அம்மா ரெண்டு பேரும் போய்
சேர்ந்துட்டாய்ங்க. அரசு ஊழியர் செத்தா – பிணத்தை தூக்க அந்த குடும்பம்
படற அவதியை பார்த்து அந்த செலவுக்கு இன்ஸ்டன்டா கஜானாவுலருந்து காசு கொடுக்கறாப்ல ஒரு
G.O. கொண்டு வரச்செய்தாரு எங்க அப்பா.

அவர் ஒன்றும் நிதிமந்திரியா இருந்தவரில்லே. ஜஸ்ட் ஒரு மாவட்ட கருவூல
அதிகாரி தான். வண்ணடி வண்டியா லெட்டர் அனுப்பி ஃபைனான்ஸ் செக்ரட்ரியை
தாலியறுத்து இதை சாதிச்சாரு.

இன்னிக்கு அப்பா இல்லை ஆனால் அந்த G.O. இருக்கு. இதன் மூலம் பயனைடையறவுகளுக்கு அப்பாவை தெரியாம இருக்கலாம்.

தப்பித்தவறி இந்த பார்ப்பானுங்க சொல்றதெல்லாம் நெஜமாயிருந்தா எங்கப்பன் ஆத்ம ரூபமா காலாவதியான சேட்டிலைட் கணக்கா வெத்தா சுத்திக்கிட்டிருந்தா அந்தாளுக்கு இன்னா மாதிரி குஜிலியாயிருக்கும் ரோசிங்க.

வாழ்வது ஒரு முறைதான். தினசரி ஆயிரக்கணக்கான செல்கள் செல்லாக்காசா போயி
புது செல் உருவாகுதாம். வயசாக வயசாக சாவு சாஸதியாகி புதுசா உருவாகிறது
குறைஞ்சருதாம்.

அட பிறவிகள் இருக்ன்னே வச்சுக்குவம், மனப்பாடம பண்ணி வாந்தி எடுக்கிற
பையனுக்கு ஒரே வார்த்தையில திக்கறாப்ல எந்த பிறவியலயும் லட்சியமா?
இன்னொரு லட்டாங்கற ஜங்சன் பாய்ண்ட்லல்லாம் இந்த பிறவியில ஜகா வாங்கினா - இந்த ஜகா வாங்கற மேட்டர் எந்த பிறவியிலயும் ரிப்பீட்டாகும்.

மரணம் நம்மை - நம்ம வாழ்க்கைய கனவை ஆட்டைய போட காத்திருக்கு. அலார்ட்டா இருங்க. எதையும் நாளைக்கு பார்க்கலாம் - இன்னொரு சந்தர்ப்பம் வரட்டும்னு பம்மாதிங்க.

லட்சியத்தை திராட்டுல விட்டு இன்னொரு லட்டுக்கு ஜொள் விடாதிங்க.

லட்சியத்துக்காவ இங்கே இப்போ எதை செய்யமுடியுமோ அதை செய்துருங்க. இல்லாட்டி ஒன்னுமே செய்யமுடியாத நிலை நாளைக்கே வந்துரலாம். உடுங்க ஜூட்.

எஸ். முருகேசன்.

Monday, September 26, 2011

வாழ்க்கை குறித்த சின்ன புரிதல்

ஒஷோவின் உதாரணத்தோட இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்.எலக்ட்ரிக் பல்பை கண்டுபிடிச்சவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒரு தாட்டி கிராமத்துலருந்து அவரோட சொந்தக்காரரு இவரை பார்க்க வந்தார். ரா தங்க வேண்டியதாயிருச்சு.

எடிசன் தன் உறவுக்காரரை இரவு சாப்பாட்டுக்கு பிறகு மாடி அறைக்கு கூட்டிக்கிட்டு போனாரு. ஸ்விட்ச் போர்டை நோக்கி நாலடி வச்சாரு. ஸ்விட்சை போட்டாரு பல்பு எரிஞ்சது. ஓகே நீங்க படுத்துக்கங்கனு சொன்னாரு .இறங்கி போயிட்டாரு.

உறவுக்காரர் படுக்கையில படுத்துக்கிட்டாரு. ஆனால் தூக்கம் வரலை .அவருக்கு பல்புல்லாம் பார்த்து பழக்கமில்லை. வெளிச்சம் உறுத்துது. தூக்கமே வரலை. கஷ்டப்பட்டு அந்த பல்பை ஊதி ஊதிப் பார்க்கிறாரு அணைக்க முடியலை. அரண்டு போயிட்டாரு. அன்னைய ராத்திரி சிவராத்திரி ஆயிருச்சு.

மறு நாள் எடிசன் வந்தாரு. உறவுக்காரர் புகார் பட்டியல் வாசிக்க அவரு அசால்ட்டா ஸ்விட்ச் போர்டு கிட்டே போய் ஸ்விட்சை அணைச்சாரு . பல்பு அணைஞ்சு போச்சு.

வாழ்க்கைய பற்றிய பார்வையில் நாமும் எடிசனோட உறவுக்காரர் பொசிஷன்ல இருக்கமோன்னு தோனுது.
இங்கே நம்ம வாழ்க்கை ஆரம்பத்துல இத்தனை சிக்கலா இல்லை. இன்னைக்கிருக்கிற சிக்கலையெல்லாம் நாம தேன் உருவாக்கியிருக்கோம்.

காரணம் வாழ்க்கைய பற்றிய புரிதல் இல்லை. இதனோட அவுட் லைன் தெரியாது. இது காட்டும் ஈஸ்ட்மென் கலர் களேபரங்கள்ள மூழ்கி நம்மையும் நம்ம வாழ்க்கையையும் பிரிச்சுக்கூட பார்க்க முடியாத நிலைக்கு வந்துட்டம்.

ஒன்னு லைஃப் ஈஸ் ஷார்ட் எஞ்ஜாய் இட் என்ற மன நிலை . அல்லது இன்னம் கல்ப்பகோடி ஆண்டுகள் வாழப்போறோம்ங்கற மாதிரி ஒரு தாத்ஸாரம்.

ரெண்டுமே தப்பு. பின்னே வாழ்க்கைய எப்படித்தான் புரிஞ்சுக்கறது ? ஆடியோ பதிவுல இதத்தான் ட்ரை பண்ணியிருக்கேன். கேட்டுப்பாருங்க..

வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ஸ்ல ( ரெண்டு ஆடியோ ஃபைல்ஸ் இருக்குங்ணோ)ப்ளே பட்டனை அழுத்துங்க.



வாழ்க்கை ஒரு சின்ன புரிதல் : பகுதி2

Thursday, June 16, 2011

பெண் உடலும் - வாழ்க்கையும்

மேடு பள்ளங்கள் – ஏற்ற இறக்கங்கள்ங்கற இந்த தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ கில்மா ஐட்டம்னு வந்திருந்தா சாரி. விலகிருங்க.
வாழ்க்கையும் பெண்ணின் உடல் போன்றதுதான். இதுலயும் மேடு பள்ளங்கள் – ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சகஜம்.

சைன்ஸுல பௌதீக மாற்றம் , இரசாயன மாற்றம்னு படிச்சிருப்பிக. பௌ.மா. நிலையானதல்ல. ரிவர்ட் ஆகும். இ.மாற்றம் நிலையானது. ரிவர்ட் ஆகாது.
ஒரு மேட்டர்ல வளர்ச்சி ஏற்படுதுன்னா அதனோட அடுத்த ஸ்டெப் தளர்ச்சிதான்.

நீங்க இப்பம் சந்தோசமா இருக்கிங்கன்னா இதனோட அடுத்த ஸ்டெப் துக்கம் தேன். உங்களுக்கு தளர்ச்சி ஏற்படக்கூடாதுன்னா வளர்ச்சிக்கும் இடம் தரக் கூடாது. (ஐ மீன் உங்க மைண்ட்ல) Read More