'>

Friday, January 6, 2012

சுக்கிரன் - ஒரு திகில் ரிப்போர்ட்

வணக்கம் நண்பர்களே!

நான் தினமும் பிரம்ம முஹுர்த்தத்தில் தியானம் செய்வது வழக்கம். அப்படி
தியானத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில் வழக்கமாக உள்மனம்தான் என்னுடன்
பேசும். ஒரு மாற்றத்திற்காக கிரகங்கள் பேசினால் எப்படி இருக்கும் என்பதை
எண்ணிப் பார்த்தேன். அதன் விளைவுதான் இந்த படைப்பு. ?

கிரகங்கள் உங்களுடன் பேசக் காத்திருக்கின்றன. அவைகள் தங்கள் மனதில்
உள்ளவற்றை மனிதர்களிடத்தே கொண்டு சேர்ப்பதற்காக என்னை ஒரு மீடியமாக
பயன்படுத்தி பல விஷயங்களை உங்களுக்காக கூறியிருக்கிறது. தொடர்ந்து
படியுங்கள்.


ஹலோ ஐ யம் சுக்கிரன் ஸ்பீக்கிங்.

என்னை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். சுபக் கிரகமான நான்
இயற்கையிலேயே மென்மையானவள். என் குணத்திற்கேற்ப பூமியில் வாழ்ந்து
கொண்டிருக்கும் அனைவரையும் மிகவும் சந்தோசமாக வாழ வைப்பதற்காக பல
வடிவங்களில் வருவேன். உங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் பொழுது
என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் எனக்கு இயற்கையிலேயே
அதாவது ராசிச்சக்கரத்தின் படி மேஷத்திலிருந்து இரண்டாம் வீடான ரிஷபம்
மற்றும் ஏழாம் வீடான துலாம் ராசியை எனக்கு சொந்தமாக வழங்கி
இருக்கிறார்கள்.

நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் திருமணப் பேச்சு வார்த்தையின்
போது பெண்ணான என்னையும் நீங்கள் பார்க்க வேண்டும். மேலும் எனக்கு
இயற்கையிலேயே களத்திர காரகி என்ற பெயரும் உண்டு. அப்புறம் ஒரு விஷயம்
சொல்ல வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன் என்னை செக்ஸ்
விஷயத்துக்கும் சம்பந்தப் படுத்தி பேசுவார்கள்.

உங்கள் ஜாதகத்தில் நான் எனது தோழியான சந்திரனுடன் சேர்ந்து இருந்தால்
உங்கள் மனதில் காம எண்ணங்களை அடிக்கடி தோன்ற வைத்துக் கொண்டே இருப்பேன்.
மனத்தைக் குறிக்கும் என் தோழியுடன் இணைந்திருக்கும் பொழுது காம எண்ணங்களை
பற்றி நாங்கள் தோன்ற செய்தாலும் ஜாதகரை ஓவராக சீரழித்துவிடாமல்
மனசாட்சியுடன் நடக்க செய்வோம்.

எனக்கு மட்டும் டியூரேசன் ஜாஸ்தி. என் தோழியான சந்திரனுக்கு பத்து
வருடத்தை கொடுத்தவர்கள் நான் கவர்ச்சியாக இருப்பதால் எனக்கு மட்டும்
இருபது வருடத்தை வழங்கி இருக்கிறார்கள். ஒருவர் திடீர் பணக்காராக
மாறினால் "அவனுக்கென்னப்பா சுக்கிர தசை அடிக்குது" என்று என்னைப் பற்றி
அந்த நேரத்தில் கூறுவார்கள். உங்கள் ஜாதகத்தில் நான் யோகாதிபதியாக
இருந்தால் நிச்சயம் நான் உங்களுக்கு யோகத்தை குடுப்பேன்.

நீங்கள் மகரம், கும்பம், துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி போன்ற
லக்னங்களில் பிறந்திருந்தால் நிச்சயம் நான் உங்களுக்கு இன்பங்களை
என்னுடைய நேரம் வரும் பொழுது வாரி வழங்குவேன். நான் இவ்வாறு வாரி
வழங்கினாலும் எனக்கு சில சமயங்களில் திருஷ்டி ஏற்பட்டு விடுகிறது.

நீங்களே கேளுங்கள் இந்த நியாயத்தை. நான் மட்டும் லக்ன கேந்திரங்களில்
ஒத்தைல இருந்தால் என் பார்வை நேராக ஏழாம் வீட்டில்தானே விழும். நான்
இக்கட்டான சூழ்நிலையில் அப்படி பார்க்க நேரும் பொழுது, பல ஜோதிடர்கள்
"ஐயோ போச்சே, களத்திர ஸ்தானத்தை, சப்தமத்தை, களத்திர காரகி, யோகக்காரி
பாத்துட்டாளே" என்று அங்கலாய்த்தது மட்டுமல்லாது, அந்த ஜாதகருடைய திருமண
வாழ்வை நான் பாதித்து விடுவது போல் அவர்களாகவே முடிவு செய்து ஜாதகரை
கவலையடைய செய்து விடுகிறார்கள்.

சுக்கிரனின் திகில் ரிப்போர்ட் அடுத்த படைப்பில் ஆதாரத்துடன் வர விருக்கிறது.

No comments: