'>

Tuesday, October 4, 2011

சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ்


அண்ணே வணக்கம்ணே !
இதே பதிவில் சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ் கொடுத்ததோட சோசியம் கேட்கிறவுகளுக்கும் பல டிப்ஸ் தந்திருக்கேன். நம்ம உத்தேசம் சோதிடர்கள்+ சோதிட ஆர்வலர்கள் ஜோதிடத்தின் பெருமைய உயர்த்தனும்ங்கறதுதேன். மொதல்ல கை.எ. பிரதியோட ஸ்கானை போட்டு ஒப்பேத்தறேன்.

அப்பாறம் ஆடியோ அப்பாறம் டெக்ஸ்ட் . உடுங்க ஜூட் ( வாழ்க ! பவர் கட் .. வாழ்க.. தனித்தெலுங்கானா போராட்டம் -வயிற்றெறிச்சலுடன்)





இப்போ டெக்ஸ்ட் ..கொஞ்ச நாழியில ஆடியோ

சோசியம் கேட்க....டிப்ஸ்

சோசியம் சொல்ல சோசியர்கள் பின்பற்ற ஏராளமான விதிகள் இருக்கு அதுல ஆளுக்கு ஒரு அம்பதை மிஞ்சிப்போற முறை வச்சுக்கிட்டு காலம்
தள்ளிக்கிட்டிருக்கோம். (சோதிடப்புலிகள் மன்னிக்க) சோசியம் கேட்கவும் சில விதிகள் இருந்தா நல்லது.

மாத சோதிடம் காரவுக தர்மசாஸ்திரம்னு ஒரு புஸ்தவம் போடாய்ங்க. இதுல சோசியம் கேட்கப்போறவுக எப்படி நடந்துக்கனும்னு சில பாய்ண்ட்டெல்லாம் தந்திருந்தாய்ங்க.

ஆனால் அந்த தர்ம சாஸ்திரத்தை கொடுத்தது ஒரு கிராஸ்பெல்ட்டு - அந்தாளு
மைண்டல சோசியர்னா ஒரு ஐயருங்கற கான்செப்ட் தான் இருந்திருக்கு. எனவே அது சோசியருக்கு மரியாதை என்பதை விட ஐயருக்கு மரியாதையாகிவிட்டது ஆனா நாம் இந்த பதிவுல சொல்லப்போற விதிகள் எந்த சோசியர்கிட்டே (ஐ மீன் அவர் ஒரு தலித்தாக இருந்தாலும்) போறவுகளும் பின்பற்ற வேண்டிய விதிகள்.

1. நீங்க சந்திக்க நினைக்கிற சோசியரை பற்றி தீர விசாரிங்க. முக்கியமா
ஏற்கெனவே அவர்கிட்டே போய் வந்தவுகளை விசாரிங்க.

2. உங்களுக்கு அவசியமிருந்தா மட்டுமே சோசியரை சந்திக்க போங்க (உ.ம்)
பிரச்சினை, குழப்பம், புது முயற்ச்சி, தசாவில் மாற்றம்.

3. நீங்க போனது உங்க எதிர்காலத்தை தெரிஞ்சுக்க – சோசியரோட புலமையை பரீட்சிக்க அல்ல.- இதை நன்னா ஞா வச்சுக்கங்க.

4. இடம், பொருள், ஏவல், எல்லாத்தையும் பார்த்து முடிவு பண்ணுங்க.

(அ) சோசியர்கிட்டே கூட்டம் கம்முதுன்னா அங்கே போய் கேட்கிறதைவிட அவரை உங்க இடத்துக்கு அமுக்கறது பெஸ்ட். அதுக்குனு தாதா, குண்டர்கள் மூலம் ப்ரஷர் கூடாது.

(ஆ) சோசியர் ஈ ஓட்டின்னா முன்கூட்டியே அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக்கிட்டு
அவரோட இடத்துக்கே போகலாம்.

(இ) பல சோசியர்கள் சலூன் மாதிரி கட்டண பட்டியலை தொங்க விட்டிருப்பாய்ங்க. வெகுசிலர் இப்படி செய்யறதில்லை. அறிமுகம் செய்தவுக கிட்டயே கட்டண விவரங்களை தெரிஞ்சுக்கிடறது நல்லது. சில்லைரையா முன்கூட்டியே மாத்தி வச்சுருங்க.- அவருக்கு+ உங்களுக்கு தேவையில்லாத கன்ஃப்யுஷன் இருக்காது.

(ஈ) சோசியரோட அலுவலகத்துக்கு போறதா முடிவு பண்ணிட்டா ஜாதகங்களை மறக்காம கொண்டு போங்க – கம்யூட்டர் ஜாதகம் பெஸ்ட்.

(உ) On the way போறது – அடுத்தடுத்து Schedule போட்டுக்கிட்டு போறது நல்லதில்லை.

(ஊ) உங்க வாகனத்தை சரியான இடத்துல பார்க் பண்ணுங்க – ஒழுங்கா பூட்டுங்க.

(எ) தனியா போங்க / தம்பதி சமேதரா போங்க – குழந்தைகள், மச்சான்,
வேலைக்காரன், அல்லக்கை, பெரியாரிஸ்டுனு கூட கூட்டிப்போகாதீங்க.

(ஏ) சிலர் மேற்சொன்ன வகையறா பார்ட்டிகளை அனுப்பி சோசியர் ஃப்ரீயா
இருக்காரான்னு பார்த்துட்டு வான்னு அனுப்புவாங்க. (நம்மை இப்படி
விசாரிக்க ஆள் அனுப்பினா மதுரை பக்கம் போய்க்கிட்டிருக்கேன் – வர 10
நாளாகும்னு சொல்லிர்ரது)

(ஐ) சிலர் சோசியருக்கே ஃபோன் போட்டுருவாங்க ”வரலாமா”னு மட்டும் கேட்டா
போதும். சோசியரும் ”வாங்க”ன்னுட்டு கட் பண்ணிரனும். அதைவிட்டுட்டு
ஜல்லியடிக்கக்கூடாது.

நீங்க போட்ட காலை சோசியர் Cut பண்னா அவர் Office-ல இருக்காரு. சோசியம் சொல்லிக்கிட்டிருந்காருன்னு அருத்தம். மறுபடி மறுபடி போட்டு லொள்ளு பண்ணக் கூடாது.

(நம்மை இப்படி கடுப்படிச்சா – ரோமிங்ல இருக்கேன் நாளைக்கு கூப்டுங்கன்னிர்ரது)

(ஒ) சோசியர்கிட்டே என்ன கேட்கிறதுன்னு முதல்லயே முடிவு பண்ணிரனும்.

(ஓ) உங்க டர்ன் வரும் வரை உங்க செல் ஃபோன் சைலன்ட்ல போட்ருங்க. உங்க
டர்ன் வந்த பிறகு பாக்கெட்ல போட்டுருங்க.

(ஔ) நீங்க பார்க்கப் போனது சரியான சோசியரைன்னு வைங்க. நீங்க எதையுமே
சொல்லத் தேவையில்லை. உங்க ஜாதகமே சொல்லிரும். அதனால ஜாதகத்தை
அவர்கிட்டே வச்சுட்டு வளவளன்னு பேசாதீங்க.

(5) ஜாதகத்தை சோசியர்கிட்டே கொடுக்கும் போதே உங்க மைண்டை ப்ளஸன்டா வச்சுக்கங்க.

(6) உங்க இஷ்ட தெய்வத்தை மனசுல நினைச்சு ”இந்த சோசியர் மூலமா என்
எதிர்காலத்தை எனக்கு தெரிவிக்கனும் – எனக்கு ஒரு நல்ல வழியை காட்டனும்னு வேண்டிக்கங்க”.

இதுவரைக்கும் சொன்ன Tips எல்லாம் கொடுக்கப்பட்டதுக்கு முக்கியமான காரணம் உண்டு.

நீங்க சோசியம் கேட்க போகும் போது உங்க மைண்ட்லயோ – சோசியர்
மைண்ட்லயோ ஈகோ தலை தூக்கக்கூடாது.

உங்களுக்கிடையில் மிஸ்கம்யூனிகேஷன் வந்துரக்கூடாது. முக்கியமா உங்க மைண்ட்ல உங்க பிரச்சினை + எதிர்காலம் குறித்த கேள்வி தவிர வேற எந்தவித இன்டரப்ஷனும் இருக்கக்கூடாது.

(உம்) உங்க டூவீலரை No Parking ல நிறுத்திட்டீங்கனு வைங்க. உங்க மைண்ட்
டூவீலர் மேல இருக்குமே தவிர உங்க எதிர்காலத்தின் மேல இருக்காது.

நீங்க இந்த டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணினா நீங்க பார்க்கப்போனது சுமாரான ஜோசியரா இருந் தாலும் உங்களுக்கு பெட்டர் ரிசல்ட் கிடைக்க வாய்ப்பிருக்கு.

சோசியம் சொல்ல டிப்ஸ்:

1. எதிர்காலம்ங்கறது தேவரகசியம். அது தானா தன்னை வெளிப்படுத்தி
க்கிட்டாலே தவிர எந்த கொம்பனாலையும் அதை அறிய முடியாது.

2. சோசியராக கண்டதையும் படிக்கனும். மனப்பாடம் பண்ணனும். ஆனா
எதிர்காலத்தை கணிக்க இதெல்லாம் உதவாதுங்கறதை காலப்போக்குல உணர்வீங்க அப்படி உணர்ந்த நாள் தான் நீங்க முழுமையான சோதிடர்னு அருத்தம்.

3. ஜோதிடத்தை Mode of Living ஆக வச்சுக்க கூடாது. குறைந்த பட்சம்
ஜோதிடமல்லாது ரெண்டு மூணு Source of Income வச்சுக்கனும். தெய்வம் ஒரு
சிலருக்கு – அவிக எதிர்காலத்தை அறிவிக்க நினைச்சு என்னை ஒரு “மீடியமா”
சூஸ் பண்ணியிருக்குனு நினைக்கனும்.

4. ஜாதகம் என்பது ஒரு சாக்கு மட்டுமே கிரக பலங்களை பல்வேறு விதிகளை கொண்டு நான் கணக்கிடறதும் ஒரு சாக்கு மட்டுமே. பலன் சொல்றது நானா இருந்தாலும் – சொல்ல வைக்கிறது தெய்வம் – அந்த பலனை தரப்போறதும் தெய்வம் தான்னு நினைக்கனும்.

5. ஜாதகத்தை கையில் வாங்கும் போதே ”தெய்வமே! எனக்கு ஒரு இழவும் தெரியாது இந்தாளு எனக்கு ஏதோ தெரியும்னு வந்துட்டாரு... இவரை ஏமாத்தாதே”னுட்டு நினைச்சு வாங்கனும்.

6. ஜாதகத்துல உள்ள கிரகங்களை பார்த்து பலாபலங்களை நிர்ணயிக்கும் போதே.... ”யப்பா.... நீங்கலாம் தெய்வத்தோட படைப்பு – நான் சாதாரண மன்சன் இந்தாளு என்னை நம்பி வந்துட்டான். இவனை என்னத்தான் செய்யப் போறீங்க கொஞ்சம் சொல்லுங்கப்பு“ன்னு கிரகங்களோட பேசனும்.

7. உங்களை நீங்க ஒரு தாயா உணரனும், ஒரு பசுவா உணரனும், குருவா, தந்தையா உணரனும். யத்பாவம் தத்பவதி. நீங்க எப்படியா கொத்த டகால்ட்டியா
இருந்தாலும் காலப்போக்குல தாயா, தந்தையா, குருவா, பசுவா மாறுவீங்க....

அதாவது எக்ஸ்பார்ட்டி உங்களை insult பண்ணாலும் – Exploit பண்ணப் பார்த்தாலும் அந்த கசப்பு உங்க மனசுக்குள்ள இறங்கவே இறங்காத நிலை வந்துரும்.

8. வாக்பலிதம் ஏற்பட:

A. உண்மையையே பேசுங்க.
B. குறைவா பேசுங்க
C. இதம்மா பேசுங்க
D. காசுபணம வந்தா வச்சுக்கங்க, But உபரி காசு பணத்துக்கு Plan பண்ணாதீங்க
- முடிஞ்சா செலவழிக்கவும் ஒரு ஆள் இருந்தா நல்லது.( ஐ மீன் காசு பணத்தை நீங்க தொடவேண்டிய அவசியமே இருக்கக்கூடாது)

E. ஜோதிடம் சொல்லி காசு வந்துட்டா கருமம் வந்திருக்குன்னு பயப்படுங்க.
அதை தொலைக்க வழி தேடுங்க.

(உம்) உங்க ஜாதகத்துல புதன், வாக்கு ஸ்தானாதிபதி, ரோகாதிபதி இந்த 3 பேரில் யார் பலகீனப்பட்டிருக்காய்ங்களோ அந்த கிரக காரகம் கொண்ட மனிதர்களுக்கு முடிஞ்ச வரை உதவி செய்ங்க.

F. கணபதி, குல தெய்வம், இஷ்ட தெய்வம், கலைவாணி அருள் இருந்தா வாக்பலிதம் நிச்சயம்.

எஸ். முருகேசன்.

3 comments:

Sugumarje said...

Great Terms and Conditions... It is really east to follow...
Nice Article...

Sugumarje said...

Not east - Easy

Chittoor Murugesan said...

வாங்க ஜீ,
வரவுக்கும் , கருத்துரைக்கும் நன்றி. ஆமாம் பதிவு கிதிவு போடறதா இல்லையா ஜீ.. நான் உட்பட மஸ்தா பேரு வெய்ட்டிங்