'>

Friday, July 29, 2011

ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்


அண்ணே !
வணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.

வழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.

சில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.

ஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.

ஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா? தொட்டதை எழுதினேனா? படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.
Read More

No comments: