'>

Friday, June 24, 2011

வீடு மாறும் ரஜினி : வாஸ்து குறித்த பகீர் உண்மை


வாஸ்துவும் ஜாதகம் மாதிரிதான். 100% வாஸ்து உள்ள வீடு அசாத்தியம் .எந்த வீடும் நன்மை தீமை இரண்டையும் கலந்து தான் தரும்.

உ.ம்: கிழக்கு,வடக்கு பகுதியில தெரு , காலி இடம் இருந்தா ஆண்கள் கோழைகளாவும் - பெண்களை அடிமைகளா ட்ரீட் பண்றவுகளாவும் மாறிருவாய்ங்க

தீமைய தவிர்க்க வீடு மாறினா ...

அ) அடுத்த 1.5 வருடத்துக்கு பழைய வீட்டோட வாஸ்துதான் வேலை செய்யும்.
ஆ) பத்துவட்டிக்காரனுக்கு செட்டில் பண்ணிட்டு வங்கிக்கடனுக்கு போக நினைச்ச கதைதான்.
இ) ப.வ.காரன் விடமாட்டான். அப்படியே மீறிப்போனா வங்கி மேனேஜருக்கும் வத்தி வ்ச்சுருவான்
ஈ) பழை வீட்ல இன்னம் என்னெல்லாம் தீமை நடக்கனும்னு இருக்கோ அந்த தீமை எல்லாம் குறுகிய காலத்துலயே நடந்துர வாய்ப்பிருக்கு
உ) முக்கியமா பழைய வீட்டிலிருந்தபோது பெற்ற நன்மையை உடனே இழக்க நேரிடும்.

செய்தி: சூப்பர்ஸ்டார் வீடு மாறுகிறார்


பிட்டா (ப)பிடிங்க !

1.ஒரு நிறுவனத்தில் 6 மாதத்துக்கு மிஞ்சி பிரச்சினை இல்லாமல் பணியில் தொடர்ந்தால் உங்கள் சென்சிட்டிவிட்டி ரேட் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.

அதே நிறுவனத்தில் ரெண்டரை வருடத்துக்கு மிஞ்சி தொடர்ந்தால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது அல்லது அந்த நிறுவனம் பெட்டர் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து விட்டால் உங்களில் எதுவோ செத்துவிட்டது அல்லது அந்த நிறுவனம் பெஸ்ட் சாய்ஸ் என்று அர்த்தம்

அதே நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வும் பெற்றுவிட்டால் அந்த நிறுவனமோ அ நீங்களோ பாஸ்டை ரெவ்யு பண்ணிக்கவே இல்லை வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவே இல்லை என்று அர்த்தம்

ஓய்வு பெற்ற பிறகும் அதே நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றால் உங்களை போன்ற ஜால்ரா உலகத்திலேயே இல்லைன்னு அர்த்தம். அல்லது அந்த நிறுவனம் மிக மிக உன்னதமான நிர்வாகத்தை கொண்டுள்ளது என்று அர்த்தம்


2.கடவுளுக்கு இஸ்லாம்ல சதிகாரன் (மாக்கிர்) என்று ஒரு பெயர் உண்டு.கெட்டவுகளை வச்சு நெல்லவுகளுக்கு எதிராவும் சதி பண்றாரு. ஆனால் இந்த ப்ராசஸ்ல நெல்லவுகளுக்கு கிடைக்கிறது கர்ம நாசம், ஜன்ம ராஹித்யம் ( மறு பிறவி இருக்காது) - ஞானம். கெட்டவுகளுக்கு கிடைக்கிறது பாவம்.

அதுக்காவ கெட்டவனுக்கு விருது ,பட்டம்லாம் கிடைக்காது. எவனெல்லாம் கூட்டு சேர்ந்து ஆப்படிச்சானோ அவனுகளுக்குள்ளயே விவகாரம் வரும். ஒருத்தன் அடுத்தவனை ஒழிச்சு கட்ட பார்ப்பான். அவனுக்கு வச்ச வெடி இவன் பேண்டுக்குள்ளயே வெடிக்கும். உ.ம் : ராஜ பக்சே - பொன்சேகா , ராசா -தயா நிதிமாறன், பிரணப்-சிதம்பரம் ( பிரதமர் பதவிக்கான ரேஸ்ல முந்தத்தான் சிதம்பரம் சாரு ..பிரணப் சாம்பர்ல உளவு பார்த்ததா குற்றச்சாட்டு)

No comments: