'>
Showing posts with label Asstrology. Show all posts
Showing posts with label Asstrology. Show all posts

Friday, May 17, 2019

ஆறில் இருந்து அறுபது வரை :தேவதைகளுக்கு யாகங்கள்


அண்ணே வணக்கம்ணே !

பழைய நன்னி விசுவாசத்துல இந்த ப்ளாக் வழியா  நம்மை அறிந்த சனத்தை திராட்டுல விட்டுரக் கூடாதுங்கற அக்கறையில ஆறில் இருந்து அறுபது வரை நூலின் அத்யாயங்கள் பலவற்றை இங்கே கொடுத்தன்.

அடுத்தடுத்த அத்யாயங்கள் நம்ம அனுபவஜோதிடம் வெப்சைட்ல பிரசுரமாகும்.

சிரமத்துக்கு வருந்துகிறேன்.

தேவதைகளுக்கு யாகங்கள் :
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும். (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ - அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். உ.ம் பட்டாடைகளுக்குச் சுக்கிரன் அதிபதி.
லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். உ.ம் செவ்வாய் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்திஸ்தானம் - செவ்வாய்க்குரிய கடவுள் சுப்ரமணியர் - சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப் பாருங்கள்!
செவ்வாய் 2டிலோ - 8டிலோ - 12டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம் - தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம். காரணம் 2 என்பது தனபாவம் - செவ்வாய் நெருப்புக்கு அதிபதி - ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன். 8 என்பது ஆயுள்பாவம்பெரு நஷ்டங்களைக் காட்டும் இடம் – 12 என்பது விரயபாவம் - நஷ்டங்களைக் காட்டும் இடம் - இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன். யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன் வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித் தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குரு கிரகத்தின் தோஷம் குறையும்.



ஆறில் இருந்து அறுபது வரை :மரணத்தை தள்ளிப்போட


மரணத்தை தள்ளிப்போட :
ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட் / நூஸ்ஃபியர் (மனிதர்களின் எண்ணங்களால் ஏற்படும் அமானுஷ சூழல்) மாறிப்போவுது. அவன் மேல உண்மையான பாசம் / அட்டாச்மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன் பாடில பயோ-கெமிஸ்ட்ரி மாறிப் போவுது. அவனுடைய சப்-கான்ஷியஸ்லயோ, அன்-கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது. அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.
அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப் போன உங்க சொந்தக்காரவுக, அப்பா, அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப் போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம்.
பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அல்லது உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம் பிடிச்சு போய் பார்த்திருப்பாங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க. (ரொம்ப உணர்வு பூர்வமா) ஓஷோ "சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள்நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது" ங்கறார்.
பழைய கடன்காரன் / கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரை வழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன் என்னவோ நல்ல வசதியா தான் இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன். "என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான். யோசிச்சுப் பாருப்பா"ன்னேன். "அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான். இது ஏறக்குறைய ஃபைனான்சியல் முடியும் போது அரக்க பரக்க செட்டில் செய்வது போன்றதே.
இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான நான் அவருக்கு. நான் ஒரு சட்டை, ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்.ரத்தினம்பொடி, பஸ் டிரைவருங்க உபயோகிக்கிற சிகப்பு டவல் வாங்கி கொடுத்தேன். அவரோட ஃபேவரட் ஐட்டம்ஸ் இதெல்லாம். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணாம போய் அரைமணி நேரத்துல கிடைச்சா. எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன். இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும் போதே பெண்டாட்டி பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன். (இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது. ஆனாலும் புது பொஞ்சாதியோட ஒரு மாசம் போல தங்கி இருந்தேன்). பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச்மென்ட் கூட இருக்காது) பார்க்கும் போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.
இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே. ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும், ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ / ஆடு, மாடு, கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி நாற்காலில இருந்து தவறி விழும். யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல / வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.
1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச்-க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை லாஜிக்கே இல்லாம விழுந்து செம சில்லறை. அந்த காலகட்டத்துல ரெண்டு கையையும் விட்டுட்டு சர்க்கஸ் பண்ற ரேஞ்சு நம்முது. எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோகநாதம் நாயக்கர் மறுநாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க்டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை டெஸ்க்டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு. மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாம தான் T.A, DA, HRA கணக்குகள், டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.
மரணம் இவனை ஹலோ சொல்லப் போற தினம் வீட்ல இருந்து புறப்படும் போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும். சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ, சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்னச் சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளிப் போட முடியும். ஒரு தடவை தள்ளிப் போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.

ஆறில் இருந்து அறுபது வரை : வாயும் இன உறுப்பும்


வாயும் இன உறுப்பும் :
வாயும் ஆசனமும் ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவுமா இருக்கு. ஆசனத்தை ஒட்டித்தான் இன உறுப்பும் அமைஞ்சிருக்கு. வாய்ல ஏற்பட்ட அசைவு குளத்தில் எறிந்த கல் குளமெங்கும் அலைகளை ஏற்படுத்துவது போல் ஆசனத்தையும், ஆசனத்தை ஒட்டி இருக்கிற இன உறுப்பையும் போய் தொடுது. இங்கிலீஷ்ல மவுத்துன்னா வாய். உருதுல மௌத்துன்னா சாவு. மவுத்தால (வாய்) மவுத் வர (மரணம்) வாய்ப்பிருக்குங்கோ. வாய்ப்பு என்ன மரணம் வந்தே உடும்.
வாயை கட்டணும். வாயை கட்டினா வவுத்தையும் கட்டலாம். இல்லைன்னா தமிழ்நாடு போலீஸ் மாதிரி நித்ய கர்பம், ஆண்மையின்மை, முழங்கால் வலி, மேசிவ் ஹார்ட் அட்டாக் எல்லாம் வந்துரும்.
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காமசக்தி என்பதால் அவன் படைத்தே ஆக வேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ். தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்லது செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காமசக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை. போதுமான சக்தியற்றவன் பேசுபவன் / எழுதுபவன் ஆகிறான். ஒய்.எஸ்.ஆர் அணைகளை கட்டினார். எங்க தந்திரபாபு கிராஃபிக்ஸ் வச்சு சினிமா காட்டறாரு (3 வருசமா). கோக்கு மாக்காக எழுதி / பேசித் தொலைத்தால் வாயில் வெட்டி விடுகிறார்கள். தின்னி பண்டாரங்கள் கூட இதே கேஸ் தான்.
ஓரல் செக்ஸ் / குத புணர்ச்சி எல்லாம் சுற்றுவழி. இன உறுப்பில் அதிர்வுகள் வேண்டும் என்றால் காரியத்தில் இறங்க வேண்டியது தானே. அதுவும் நேர் வழியில். பாஜக தமிழகத்தில் செய்வது போல் குத புணர்ச்சி ஏன்? பிஸ் பிஸ் ரகங்கள் செய்வது போல் ஹேவிளம்புவது ஏன்?
வள்ளுவர் நா காக்க என்றது பேச்சு தீனி இரண்டையும் மனதில் வைத்துதானே? இதை பின்பற்றினால் ஆயுள் கூடும். குறைந்த பட்சம் அல்ப்பாயுசுல போயிர மாட்டம்.


Thursday, May 16, 2019

ஆறில் இருந்து அறுபது வரை : ராகு - கேதுக்கள்


ராகு - கேதுக்கள்

ஆறில் இருந்து அறுபது வரை என்பது ஒரு வசதிக்காக எளிமைப்படுத்தலுக்காக வைக்கப்பட்ட தலைப்பு தான். உண்மையில் தந்தையிடமிருந்து உயிரணு விடுபட்டு - தாயின் முட்டை கருவை துளைத்த கணம் முதலே கிரகங்கள் தம் பாதிப்பை துவக்கி விடுகின்றன. தந்தையின் உயிரணுவின் மீதும் தாயின் முட்டைக்கரு மீதும் அவரவர் ஜாதகங்களிலான கிரகங்கள் ஏற்கனவே தம் தாக்கத்தை செலுத்தியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
கிரகங்களை பட்டியலிட சொன்னால் ஒரு ஜோதிடர் சூரியன் – சந்திரன் – செவ் – ராகு – குரு – சனி – புதன் – கேது -சுக்கிரன் என்று தான் பட்டியலிடுவார். காரணம் தசைகள் இந்த வரிசையில் தான் வருகின்றன. ஆனால் நான் ராகு - கேதுவில் இருந்து இந்த நூலை துவங்குகிறேன். ஏன் இப்படி என்று போகப் போக புரிந்து கொள்வீர்கள்.
ராகு - கேதுக்களின் இருப்பை வைத்து நாகதோஷம் / சர்ப்பதோஷம் உள்ளதா என்று தானே கணிக்க முடியும். இதெல்லாம் திருமண சமயத்தில் தானே பார்ப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறதல்லவா?
ராகுவின் பிரதான காரகம் பிதாமஹ காரகன். கேதுவின் பிரதான காரகம் மாதாமஹ காரகன்”. அதாவது, ராகு - தந்தைவழி தாத்தா / பாட்டியையும்; கேது - தாய்வழி தாத்தா / பாட்டியையும் குறிப்பவர்களாவர்.
மேற்படி தாத்தா / பாட்டிகளின் நல்ல அம்சங்கள் (மரபியல் கூறுகள்) குழந்தைக்கு வர வேண்டும் என்றால் அதன் ஜாதகத்தில் ராகு - கேதுக்கள் நல்ல இடத்தில் அமைந்திருக்க வேண்டும். கருவிலே திரு என்றால் இது தானே? விஞ்ஞான பூர்வமாய் சொன்னால் பாசிட்டிவ் ஜெனட்டிக் ஃபீச்சர்ஸ் குழந்தைக்கு வர ராகு - கேது பலம் அவசியம்.
குழந்தையின் பெற்றோர்கள் என்னமோ 32 லட்சணங்களும் பொருந்தியவர்களாய் இருந்தாலும் விதையும் நிலமும் அமோகமாய் இருந்தாலும் குழந்தை உருப்படாமல் போக அதன் ஜாதகத்தில் ராகு கேது கெட்டிருந்தால் போதும்.
பொது விதிப்படி ராகு கேதுக்கள் 3-4-6-10-11-12 பாவங்களில் நின்றால் தோஷமில்லை. நல்லது. ராகு கேதுக்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சம சப்தகத்தில் இருப்பார்கள். அதாவது ஒருவருக்கொருவர் 7ஆம் இடத்தில் இருப்பார்கள். இதன்படி ராகு 3ல் இருந்தால் கேது ஒன்பதில் இருப்பார். மூன்றில் உள்ள ராகு மனோ தைரியத்தை தருவார். இது நல்லதே. ஆனால் ஒன்பதில் உள்ள கேது அப்பாவை சாமியாராக / பிச்சைக்காரராக்கி விடுவாரே?
ஆறில் உள்ள ராகு சத்ரு ஜெயம் - ரோக நிவர்த்தி - ருண விமுக்தி போன்ற நல்ல பலனை தந்தாலும் 12ல் உள்ள கேது தூக்கம் - தாம்பத்யம் இத்யாதியில் வில்லங்கம் செய்வாரே?
10ல் உள்ள ராகு புதுமை பித்தனாக்கி - தொழிலில் கொடிகட்டி பறக்க விட்டாலும் நாலில் உள்ள கேது தாய்க்கு நலிவை தருவாரே.
11ல் உள்ள ராகு சினிமா லாட்டரி - வைன்ஸ் போன்ற தன் காரகங்களில் ஹிட் அடிக்க வைத்தாலும் ஐந்தில் உள்ள கேது அவமானம் – மறதி - புத்தி குழப்பம் போன்ற தீய பலனை தந்து விடுவாரே?
ராகு - கேதுக்கள் எங்கெல்லாம் இருந்தால் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளதோ அங்கு அவை இருந்தால் இத்தனை பிரச்சினை வரும் எனும் போது இங்கே ராகு - கேதுக்கள் இருந்தால் நல்லது என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது?
ராகு - கேதுக்கள் மேற்படி பாவங்களில் நிற்பதால் உலகியல் ரீதியாக மேற்சொன்ன தீய பலன் விளைந்தாலும் தாய் / தந்தைவழி - தாத்தா / பாட்டிகளின் நல்ல அம்சங்கள் குழந்தைக்கு வருவதை அவர்கள் அனுபவத்தில் கண்டிருக்க வேண்டும்.
ராகு - கேதுக்களை தாய் / தந்தைவழி – தாத்தா / பாட்டிகளின் நல்ல அம்சங்களை கொண்டு வரும் தூதர்கள் என்ற கோணத்தில் இப்போது பார்ப்போம்.


Tuesday, March 15, 2011

கேள்வியை தேடும் பதில்கள்

கேள்வியை தேடும் பதில்கள்

அண்ணே ,வணக்கம்ணே.
பதிவோட தலைப்பை பார்த்துட்டு நம்ம எதிர்கால முதல்வர் ஜெயலலிதா அம்மா சினி ஃபீல்டுல  வாய்தா போயி கெடந்த  நாள்ள எடுத்த " நதியை தேடி வந்த கடல் " மாதிரி  டிஃபரண்டா கீதுபான்னு நினைக்கிறிங்கோ . அப்டித்தானே.

சமுத்திரம் மாதிரி ஸ்தூலமான மேட்டர்லாம் ரூட் மார்ரது கஸ்டம். ஆனால் கேள்வி பதில் எல்லாம் சூட்சுமமான மேட்டரு  டிஃபரண்டா சொன்னா அரசியல் வாதி மாதிரி அதனோட நேச்சர், ரூட்டுல்லாம் எப்டி வேணா மாறும்.
மேலும் படிக்க