'>
Showing posts with label உத்யோகம். Show all posts
Showing posts with label உத்யோகம். Show all posts

Wednesday, August 3, 2011

தொழில் உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே,

நேத்து தொழிலை கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம்.அதனால நேற்றைய பதிவு கொஞ்சம் போல சோனியாயிருச்சு. அதை ஈடுகட்ட இன்னைக்கு நோன்டி நுங்கெடுத்துரனும்னுதேன் ஆரம்பிக்கிறேன்.ஆத்தா விட்ட வழி.

ஆணோ பெண்ணோ எந்த உயிரா இருந்தாலும் அதனுடைய சப்கான்ஷியஸ் மைண்ட்ல இயற்கை பொதிஞ்சு வச்சிருக்கிற பேசிக்கல் கமாண்டுகள் ரெண்டு

1.உயிர் வாழ்தல் 2.பரவுதல்

இந்த ரெண்டு கான்செப்டுக்காக செய்யும் போது தொழில் உத்யோகத்துல ஆண் பெண்களிடையில் எந்த வித்யாசமும் வர்ரதில்லை.

உயிர் வாழ்தல் இரண்டு விதம்:

உயிர் வாழ்தல்னா "உசுரை கையில பிடிச்சுக்கிட்டு" வாழறது ஒரு விதம். இது பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

உயிர் வாழ்தல்னா தான் உயிர் வாழ்வதை உலகத்துக்கே கம்யூனிக்கேட் செய்தபடி -தன் சர்வைவலை பன்முறை உறுதி செய்துகொண்டபடி வாழறது இன்னொரு விதம் இது பலம் வாய்ந்தவர்களின் லைஃப் ஸ்டைல்


பரவுதல் ரெண்டு விதம்:

பரவுதல்னா விந்தை கொட்டுதலோ அ கொட்டப்பட்ட விந்தை ஏற்று பெற்றுத்தள்ளுதலோ பலகீனர்களின் லைஃப் ஸ்டைல். Read More

Tuesday, August 2, 2011

தொழில்,உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

ஜாதகத்துல 9 ஆம் பாவத்தை தர்மஸ்தானம் -10 ஆம் பாவத்தை கர்மஸ்தானம்னு சொல்வாய்ங்க. இந்த ரெண்டு பாவாதிபதிகளும் சம்பந்தப்படறதை தர்ம கர்மாதிபதி யோகம்னு சொல்றாய்ங்க. தொழில்ல முழு ஈடுபாட்டை காட்டறவன் செய்யும் தொழிலே தெய்வம்னு இருந்துருவான்.இதனால கோவில் குளம் தானம் தருமம் இத்யாதி மேல எல்லாம் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. ( இந்த நிலை 10 ஆம் பாவம் பலம் பெற்றா கிடைக்கும்) Read More