Tuesday, February 21, 2012
மாற்றம் திடீர்னு நடக்குதா?
நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலயும் ஒரு வித நிலையற்ற தன்மை இருக்கு. சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை இருக்கு. அவ்வப்போது மூட் அவுட்டாயிர்ரம். எளிதில் எரிச்சல்,கோபம் வருது..சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வேதனை படறோம். ( காதல்?) நம்ம பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கு.
சில நேரம் காசு பணத்தை வீணாக்கறோம். சில நேரம் கால் காசுக்கு லாட்டரி அடிக்கிறோம். சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருக்கிறோம். சில நேரம் குடும்பம்னா அது என் குடும்பம் தான்னு காலரை தூக்கிவிட்டுக்கறோம். சில சமயம் ” நான் எங்கயாவது ஒழியறேன்னு” தெருமுனை பெட்டிக்கடையில சிகரட் குடிக்கிறோம்.
சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்குது. திடீர் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வருது.
இப்படி இன்னும் நிறைய பதில் தெரியாத கேள்விகள். இதற்கெல்லாம் பதில் ....
Read More
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment