'>

Monday, January 23, 2012

அம்மனின் வாகனம் ஆடு


அண்ணே வணக்கம்ணே !

பக்த சனங்க சைக்காலஜி என்னன்னா இவியளுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் சாமிய கண்ணில்லையா, கையில்லயா காலில்லியான்னு ஏகத்துக்கும் கிராஸ் பண்ணுவாய்ங்க.ஆனால் இவிகளுக்கு நல்லது நடக்கும் போது டீல்ல விட்டுருவாய்ங்க.

அது என்னமோ நாம தேன் விசித்திரமான கேரக்டராச்சே. பிரச்சினைன்னு வரும்போது "மட்டும்" ஜேஜிக்கு சோப்பு போடறது நமக்கு பிடிக்காது. சனங்களையும் இப்படித்தேன் டீல் பண்றோம். சோத்துக்கில்லாத நாள்ளயே ஆறு மாசத்துக்கு ஒருக்கா வசதி வந்தாலும் மொதல்ல ஃபுல் டாக் டைம் போட்டுக்கிட்டு "ஒன்னுமில்லை பாஸ்.. ச்சொம்மாதேன்.. டச்ல இருக்கனுமில்லையா"ன்னு பேசற கேஸு நாம.ஜேஜிகிட்டயா வேற மாதிரி நடப்போம்.

நம்ம அம்பறாத்துணியில கச்சாமுச்சான்னு அம்புகள் இருக்கு.பிரச்சினைன்னு வரும்போது அல்லாத்தையும் ஒன்னு பின்னாடி ஒன்னு விட்டுட்டு ..அம்புகள் தீர்ந்த பின்னாடி அம்பறாத்துணியை வீசி ,வில்லை எடுத்து வாத்யார் கணக்கா சுழற்றி அப்பயும் வேலைக்காகலின்னாதான் ஆத்தாளை கூப்டுவம். என்னதான் கேடு கெட்ட மன்ச ஜன்மம்னாலும் பெரியார் ,என்.டி.ஆர் ஊட்டிவிட்ட செல்ஃப் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கில்லை.

அப்பம்..ஆத்தாளும்.. சே பாவம் என்னைக்கும் கூப்டாத புள்ளை கூப்டுது. நெஜமாலுமே கிரிட்டிக்கல் போலன்னு பட்டுன்னு புலிமேலயோ ,சிங்கத்து மேலயோ ஏறி ஆஜராயிருவா. இந்த தாட்டி ஆட்டுமேல ஏறி வந்திருக்கா.read more

No comments: