'>

Sunday, January 22, 2012

சுபர் அசுபர் - 6 வித்யாசங்கள்


அண்ணே வணக்கம்ணே !

வாழ்க்கையில நாம பார்க்கிற மன்சங்கள்ள எப்டி பாவி அப்பாவி இருக்காய்ங்களோ அப்படியே சோசியத்துலயும் பாவி - அப்பாவில்லாம் உண்டு. இந்த மேட்டர்லாம் ஏற்கெனவே பேசினதுதேன். நைசர்கிகம் -லக்னாத்.

நைசர்கிக பாவி லக்னாத் சுபனாகும்போது என்னவிதமான பலன் ஏற்படும். நைசர்கிக சுபன் லக்னாத் பாவியாகும் போது என்ன விதமான பலன் ஏற்படும்னு இந்த பதிவுல பார்ப்போம். ஐ மீன் பலன்ல வித்யாசத்தை இன்னைக்கு பார்ப்போம்.

நைசர்கிக பாவி லக்னாத் சுபனாகும்போது:

இவர் தரும் நன்மை/ நற்பலன் ஜாதகருக்கும் - அப்பலன் யாரால் ஏற்படுகிறதோ அவர்களுக்கும் துன்பம் தருவதாக இருக்கும். சில சமயம் சட்டவிரோதமானதாக -பல சமயம் நியாயமற்றதாக இருக்கும்.
ஜாதகனுக்கு இந்த நற்பலன்கள் கிட்டும்போது நாடு,மானிலம்,ஊரு சனம்லாம் யுத்தம்,கர்ஃப்யூ,தொற்று நோய்னு அவதிப்பட்டுக்கிட்டிருப்பாய்ங்க. பாபர்கள் தரும் சொத்து தாமதமா கிடைக்கும் -அது ஏலத்துல வர்ர சொத்தாவோ - சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம். இவற்றை ஜாதகர் விரட்டி விரட்டித்தான் "கைப்பற்ற"வேண்டியிருக்கும்.


நைசர்கிக சுபன் லக்னாத் பாபியாகும் போது:

இவர் தரும் தீமைகள் உடனடி லாட்டரி மாதிரி உசுருக்கே உலை வச்சுர்ர ரேஞ்சுல இருக்கும். இவர் நாம அவதி படறதை பார்க்க முடியாத அளவுக்கு நல்ல மனசு கொண்டவர் .அதனால "காரியத்தை" பட்டுன்னு முடிச்சுருவார்.

ஒரே நாள்ள திவாலாறது - என் கவுண்டர்ல போயிர்ரது - தூங்கறச்ச ஹார்ட் ஸ்ட்ரைக் பண்ணிர்ரது மாதிரியான வேலைகள்ளாம் இவரோடதுதேன்.


அதின்னா பாஸு .. நைசர்கிக்கம், லக்னாத்துன்னு புச்சா கீதுன்னு கேட்கிற கேஸுங்களுக்காக கீழ் கண்ட பாராக்கள் (மீள் பதிவு)

நைசர்கிக சுபத்வ பாபத்வம்:

குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக சுபகிரகங்கள்.சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக பாப கிரகங்கள்.


லக்னாத் சுபத்வ பாபத்வம்:
அவிகவிக லக்னத்தை பொருத்து கிரகங்களோட சுபத்வம் -பாபத்வம் டிசைட் ஆகும். இதைத்தேன் லக்னாத் சுபத்வ பாபத்வம்னு சொல்றோம்.

இப்பம் ஒவ்வொரு லக்னத்துக்கும் சுபர் ஆரு ..பாபர் ஆருன்னு பார்ப்போம்.

1.மேஷம்:
சூரியன் ,குரு நன்மை செய்யும் கிரகங்கள்.ஆனால் இவர்களுக்கு சனியோட தொடர்பு ஏற்பட்டால் பல்பு தேன். சூரிய குரு சேர்க்கை யோகத்தை தரும். 5க்கதிபதியான சூரியன் 9 க்கு அதிபதியான குருவோட சேரும்போது குரு மங்கி போயிருவாரு. அதாவது பல மேட்டர்ல அப்பாவை பீட்பண்ணிருவிங்கன்னு அருத்தம். ( நிபந்தனை: சேர்க்கையில ரெண்டு பேருக்கும் ஓரளவுக்காவது பலம் இருக்கனும் - இந்த சேர்க்கை 6,8,12 போன்ற *துஸ்தானங்களில் ஏற்பட்டிருக்கக்கூடாது)

புதன்,சுக்கிரன்,சனி பாபிகள். சனி ,புதன் மாரகர்கள். ரெண்டாம் பாவாதிபதியானாலும் சுக்கிரன் டிக்கெட் போடமாட்டாரு. சனி புதன் போட்டுருவாய்ங்க. இவிக மாரக ஸ்தானங்களான 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கொப்பான கெண்டம்.

2.ரிஷபம்:
சூரியனும்,சனியும் நல்லவர்கள். சனி நெல்லவருன்னா லாஜிக் இருக்கு .( 9-10 க்கு அதிபதிங்கறதால) சூரியன் எப்படி நல்லவருனு கேப்பிக.சொல்றேன். இவரு நாலுக்கு அதிபதி. வித்யாஸ்தானாதிபதி. சூரியன் உதிச்ச பிற்பாடு கயிறா பாம்பாங்கற சந்தேகமே வராதுல்லியா.அதைப்போல இவிகளோட அறிவு சூரியனை போல பிரகாசிக்கும்.அந்த வெளிச்சத்துல நெல்லது -கெட்டதுல்லாம் பக்காவா புரிஞ்சி சாலாக்கா நடந்துப்பாய்ங்க.

சனி யோக காரகன். சந்திரனும் வியாழனும் ,சுக்கிரனும் பாபிகள். இது இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. லக்னாதிபதியே பாபியான்னு கேப்பிக.

சுக்கிரன்னா கில்மா. லக்னம்னா மனம்,உடல் பார்ட்டியோட உடல் ,மனம் பூரா கில்மா மயமா இருந்தா முன்னேற்றம் பாதிக்கப்படுமா இல்லியா?மேலும் சுக்கிரன் 6 க்கு அதிபதி. அதுனாலதேன் சுக்ரன் பாபின்னு சொல்லிப்புட்டாங்கோ.

மேலும் சந்திரன் ஏன் பாபி? சந்திரன் 3 ஆமிடத்துக்கு அதிபதியாறாரு. மூணுங்கறது மாரகஸ்தானமாச்சே .அதனால பாபி. மேலும் சந்திரன் நிலையில்லாத கிரகம். 3ங்கறது தைரியஸ்தானம். தைரியம் பர்மனன்டா இருந்தாலே மவனுங்க பல்பு குடுத்துர்ரானுங்கோ. இதுல சந்திரன் அப்பப்போ லீவு போட்டுட்டா பேதியாயிரும்ல.குரு ஏன் பாவின்னா இவரு அஷ்டமாதிபத்யம் வாங்கிக்கிறாரே.அதனாலதேன்.

சந்திரன் குரு செவ் மாரகர்கள்.புதன் கொல்லார். வியாழன் முதலானோர் கொல்வர். 2,3,7,8,12 பாவங்களில் பாபி/மாரகர்கள் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

குறிப்பு:
மேஷம் ரிஷபம் லக்னங்களுக்கு விளக்கியதை போல மத்த ராசிகளுக்கும் விளக்க ஆசைதான்.ஆனால் பவர் கட் நேரம் நெருங்குதே. அதனால அடக்கி வாசிக்கிறேன்.

3.மிதுனம்:
சூரியன்,செவ்,குரு கொடிய பாபிகள்.குரு செவ் சேர்க்கை நல்லதில்லை.( நோட் திஸ் பாய்ண்ட் . குரு செவ் சேர்க்கையை பொத்தாம் பொதுவா குருமங்கள யோகம்னு ஊத்தி விட்டுருவாய்ங்க. நம்பாதிங்க) சுக்கிரன் யோககாரகர்.. சந்திரன் தனபாவாதிபதியானாலும் மாரகம் கொடுக்கமாட்டார். சூரியன்,செவ்,குரு 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் ஏற்படும்.


4.கடகம்:
குரு,செவ் சுபர்கள், செவ் யோககாரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்தால் யோகம்.சூரியன் கொல்லான்.சுக்கிரன்,புதன் பாபிகள்.புத சுக்கிரன் சனி மாரகர்கள். இவர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

5.சிம்மம்:
சூரியன் செவ் சுபர்கள்.புதன்,சுக்கிரன் பாபிகள்.செவ் சுக்கிரன் யோககாரகர்கள். ஆனால் செவ் சுக்கிரன் கூடியிருந்தால் தீயபலன். சனி சுக்கிரன் மாரகர்கள்.புதன் கொல்லான். மாரகர்கள் மாரகஸ்தானமாகிய 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

6.கன்னி:
சுக்கிர,சனி சுபர்கள், சந்திரன் செவ் குரு பாபிகள்.புத சுக்கிரர்கள் யோககாரகர். இவர்கள் கூடினால் யோகம். சந்திரன்,செவ்,குரு மாரகர்கள்.சுக்கிரன் தனபாவாதிபதியானுலும் கொல்லார். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

7.துலா:
சனி,புத,சுக்கிரன் சுபர்கள்.சூரி,செவ்,குரு பாபி.சந்திர,புதர்கள் யோககாரகர்கள் இவர்கள் கூடினால் யோகம்.சூரியன்,குரு மாரகர்கள். செவ் சப்தமாதிபதியானாலும் கொல்லான். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் தருவார்.

8.விருச்சிகம்:
சூரியன்,சந்திரன்,குரு சுபர்கள்,செவ் ,புத ,சுக்கிரன் பாபிகள்.( செவ் லக்னாதிபதியானாலும் பாவிங்கறாய்ங்க.ஏன்னு கேப்பிக. செவ் யுத்த காரகர். வாழ்க்கையில எப்பயோ ஒரு தாட்டி ஃபைட் பண்ணா பரவால்லை. வாழ்க்கை முச்சூடும் போராடினா நாஸ்திதானே)

சூரி,சந்திரர்கள் யோககாரகர்கள். இவர்கள் கூடினால் யோகம். ( சந்திரனால் வரும் யோகம் என்பதால் நிலைத்த ,நீடித்த பலன் கிடைக்காது.) புதன்,செவ்,சுக்கிரன் மாரகர்கள். குரு சனி கொல்லார்.புதன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

9.தனுசு:
சூரிய,செவ் சுபர். சுக்கிரன் ஒருவனே பாபி. சூரியனும் புதனும் கூடினால் யோகம். (இது எப்டி ஒர்க் அவுட் ஆகும்? சூரியன் 9 க்கு அதிபதி. புதன் 7 ,10 க்கு அதிபதி - 9+10 அதிபதிகள் சேரும்போது தர்ம கர்மாதிபதி யோகம் வரும் போல..ஆனால் இந்த யோகம் ஒர்க் அவுட் ஆகிற விஷயத்துல நமக்கு சில சம்சயங்கள் உண்டு) சுக்கிரன் புதன் மாரகர்கள். சந்திரன் ,சனி கொல்லார்.சுக்கிரன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

10.மகரம்:
செவ் புதன் சுக்கிரன் சுபர்கள்.சந்திரன் குரு பாபிகள்.சுக்கிரன் ஒருவனே யோககாரகன்.சுக்கிரனும் புதனும் கூடினால் ராஜயோகம். சூரி,சனி கொல்லார்.சந்திரன் வியாழன் மாரகர்கள்.2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

11.கும்பம்:
சுக்கிரன் புதன் சனி சுபர்கள். சந்திரன் செவ் குரு பாபிகள்.சுக்கிரன் யோககாரகன். சுக்கிரன் செவ் கூடினால் யோகம்.( சுக்கிர செவ் சேர்க்கைய பற்றி தனி சாப்டரே இருக்குங்கோ - அதையும் ஒரு மூச்சு படிச்சுருங்க -கும்ப லக்னத்துக்கு மட்டும் ஓரளவு நன்மைய தந்தாலும் அவிகளுக்கும் சேர்த்து ஆப்படிக்க கூடிய கிரக ஸ்திதி இது ) குரு தனபாவாதிபதியானாலும் கொல்லான்.சந்திரன் செவ் கூடினால் யோகம்.சந்திரன் செவ் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

12.மீனம்:
சந்திரன் செவ் சுபர். சூரியன் புதன் சுக்கிரன் புதன் சனி பாவிகள்.செவ் குரு யோககாரகர்கள்.செவ்வாய் குரு கூடினால் யோகம் சூரியன் புதன் சுக்கிரன் சனி மாரகர்கள்.செவ் கொல்லார்.சூரியன் முதலானவர்கள் கொல்வார்கள் .மாரகர்கள் (செவ் தவிர) 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

குறிப்பு:

மாரகர்கள் 2,3,7,8,12 ஆம் பாவங்களில் இருந்தால் மரணம்னு சொல்லப்பட்டிருக்கு.உங்களில் சிலர் " என்ன முருகேசன் ! ரெண்டுங்கறது வாக்குஸ்தானம் தானே இது எப்படி மரணத்தை கொடுக்கும்னு கேப்பிக.சொல்றேன்.

2.தனஸ்தானம்:
சத்யம் ராமலிங்கராஜூவை உள்ளே அனுப்பினது இந்த கொடுக்கல் வாங்கல் மேட்டருதேன். வராத லாபத்தை வந்ததா காட்டி தில்லாலங்கடி பண்ணாரு ஞா இருக்குல்ல.

2 : வாக்குஸ்தானம்:
வை.கோ ,சீமான்லாம் சகட்டு மேனிக்கு பேசித்தானே உள்ளாற போனாய்ங்க

2.குடும்பஸ்தானம்:
கனிமொழியை செயிலுக்கு அனுப்பினது குடும்பம்தானே

3.சகோதர ஸ்தானம்:
நிறைய அரசியல்வாதிங்க தாங்கள் நேரிடையா செய்யமுடியாத மேட்டரையெல்லாம் சகோதரர்களை வச்சு செய்றது ஃபேஷன். அப்பாறம் ஆப்படிச்சுக்கறதும் ரொட்டீன். உ.ம் ஆற்காடு வீராசாமி , ஆந்திராபக்கம் வந்தா எங்க சி.எம் கிரண்

3.தைரிய ஸ்தானம்:
அஞ்சுவதஞ்சுதல் அறிவுடைமைங்கற பஞ்சை மறந்துட்டு "வேணம்னா இந்திராகாந்திக்கு விதவை பென்ஷன் தரோம் வரச்சொல்லுங்க"ன்னுட்டு எமர்ஜென்ஸி காலத்துல பல்பு வாங்கினவுகளை கேளுங்க.விவரமா சொல்வாய்ங்க.

7.களத்ர ஸ்தானம்: (ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்)
ராஜீவ் கெட்டது நண்பர்களாலே,ஜெ கெடப்போறது நண்பியாலே, என்.டி.ஆர் கெட்டது காதலாலே, கலைஞர் கெட்டது பார்ட்னராலே (கலைஞரும் -எம்.ஜி.ஆரும் எதை எதையோ ஷேர் பண்ணிக்குவாய்ங்களாமே -அப்பம் பார்ட்னர்ஸ்தானே)

8.ஆயுள் பாவம்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம் இதை எல்லாம் காட்டும் இடம் ஆயுள்பாவம். இதுகளால கெட்டவுக மஸ்தா பேரு கீறாய்ங்க. வேணம்னா ஒரு லிஸ்டை நீங்களே ப்ரிப்பேர் பண்ணுங்க.

12.விரயபாவம்:
ஆனமுதலில் அதிகம் செலவானால் பாட்டு தெரியுமா? வரவு எட்டணா செலவு பத்தணா பழமொழி தெரியுமா? ஸ்ரீ தேவி திவாலாகி /கணவரையும் திவாலாக்கின கதை தெரியுமா? ப்யூட்டி பார்லருக்கே கோடிகளை செலவழிச்சாய்ங்களாம். லேட்டஸ்ட் உதாரணம் விஜய் மால்யா.

No comments: