'>

Thursday, December 1, 2011

ஸ்டாலின் இன்று விடியலில் கைது!



அண்ணே வணக்கம்ணே
நீங்க இந்த பதிவை படிக்கிறதுக்குள்ள ஸ்டாலின் அண்ட் கோ கைது செய்யப்பட்டிருக்கலாம். சென்னை சித்தரஞ்சன் தாஸ் சாலையில் (தேனாம்பேட்டை) உள்ள இடத்தை உரிமையாளர்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியதாக ஸ்டாலின் ,உதய நிதி மற்றும் நால்வர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்காம்.
அந்த நால்வர் வேணு கோபால் ரெட்டி ராஜா சங்கர் சுப்பாரெட்டி ஸ்ரீனிவாஸ் .

ஐ.பி.சி 506,120 இன்னபிற செக்ஷன்ஸ்ல கேஸ் ஃபைல் ஆயிருக்கு. என்.எஸ்.குமார் என்பவர் தந்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கு. இந்த தகவலையெல்லாம் சென்ட்ரல் கிரைம் ப்ராஞ்ச் அதிகாரிகளை மேற்கோள் காட்டி சாட்சி தினசரி செய்தி வெளியிட்டிருக்கு.

பி.கு:.இந்த பக்கம் நமக்கும் .சோதனை மேல் சோதனை . சிஸ்டம் கோமாவுக்கு போயி திரும்பி சகட்டுமேனிக்கு அலம்பல் பண்ண ஆரம்பிச்சிருச்சு. அதனால கிரகமும் கடவுளும் வரிசையில் சந்திரனை பற்றிய பதிவை மதியத்துக்குள்ள போட்டுர்ரன்.

எச்சரிக்கை: கமெண்ட் சைஸ்ல நாங்களும் ஒரு பதிவு போட்டாச்சுங்கோவ்..

No comments: