'>

Tuesday, November 1, 2011

பெரும்பணம் ஈட்ட ஜோதிட,வாஸ்து ரகசியங்கள்


அண்ணே வணக்கம்ணே !

நாம இந்த வலையுலகத்துல அடி எடுத்து வச்சது 2000 ,ஜூலை. சூடு பிடிச்சதென்னவோ 2009 மே மாசத்துக்கு அப்பாறம் தேன்.

என்னென்னமோ தொடர்லாம் எழுதினோம். சிலதை முடிச்சோம்.சிலதை டீல்ல விட்டோம். என்னதான் பைத்தாரத்தனமா கிறுக்கி தள்ளினாலும் சனம் விடாம படிச்சுட்டு வர்ரிங்க.

நீங்களா கடுப்பாறதுக்குள்ளாற நமக்கே ஸ்பார்க் ஆகும் லைன் அப்பை மாத்திருவம். இப்படித்தான் ஓடிக்கிட்டிருக்கு.

இப்பம், இந்த நொடி ஒரு மேட்டர் ஸ்பார்க் ஆகுது. இதை வச்சு மறுபடி லைன் அப்பை மாத்த உத்தேசம். உங்கள்ள பலரும் நம்ம எழுத்துக்களை ஆர்வமா படிக்கிறிங்க. கமெண்ட் போடாட்டாலும் ஹிட்ஸ் மட்டும் கூடிக்கிட்டே போகுது. நன்றி.

நீங்க கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்து நம்ம சைட்ட தேடி படிக்கனும்னா உங்க கடமைகளை எல்லாம் நல்ல படியா முடிச்சிருக்கனும். உங்க தொழில்,வியாபாரம் ,உத்யோகம்லாம் சிறப்பா இருக்கனும்.அப்பத்தேன் ஒன்பது இடமும் குளிர்ந்திருக்கும். அப்பத்தேன் நாலு விசயத்தை தெரிஞ்சுக்கலாங்கற எண்ணமே வரும்.

அதுலயும் நம்ம சைட்ல ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத மேட்டர்லாம் படிக்கனும்னா நிறைய பொறுமை தேவை. அதிலயும் நம்ம பாசை கீதே படா பேஜாருப்பா. அதனால இன்னைலருந்து ஃபைனான்ஸ் மேட்டரை கவனிக்கலாம்னு இருக்கேன்.

உத்யோகஸ்தருங்கனா பரவால்லை. ( அதுலயும் என்னத்த வாழுது தினசரி இந்த பாஸுங்க கிட்டே ஏகறது புலி வாய்ல தலைய விட்டு எடுத்த கதையாத்தான் இருக்கு - மேலும் ஜாப் செக்யூரிட்டில்லாம் போன பத்துவருசத்தோட காலி. இப்பம் அல்லாருமே வேலை தேடிக்கினு தான் கீறாங்கோ)

இதுல யாவாரிங்க பாடு ரெம்ப நாஸ்தியா கீது. சனங்க கிட்டே காசில்லை. விலை வாசியா ஏறிப்போச்சு. போட்டியில விலைய குறைச்சு விக்கலாம்னாலும் பயமா கீது. இப்படி பல பிரச்சினை. அதனால மொதல்ல யாவாரிங்களை கவனிச்சுருவம். அப்பாறம் உத்யோகஸ்தருங்களை கெவுன்ச்சிக்குவம்.

1.வாஸ்து:

ஊட்டுக்கு சொல்ற மாரியே கடை ,கண்ணிக்கும் (கன்னிக்கு இல்லிங்கோ) வாஸ்து சொல்லி அலம்பல் பண்றானுங்கோ. நீங்க அதெல்லாம் கண்டுக்கிடாதிங்க. ஊட்டுக்கு இருக்க வேண்டிய வாஸ்து வேற. கடை கண்ணிக்கு இருக்கவேண்டிய வாஸ்து வேற.

மேற்கு ,தெற்கு பள்ளம், கிழக்கு,வடக்கு மேடா இருந்தாலும் பரவால்லை துரை.ஆனால் கடன்னு வாங்கினா பாங்கில மட்டும் வாங்கு. இல்லாட்டி கடன் கழுத்தை நெறிக்கும்.

தெருக்குத்துன்னு கும்மாங்குத்து குத்துவானுங்கோ.அதையும் கண்டுக்காதே வாத்யாரே. தெருக்குத்து இருந்தா யாவாரம் பிச்சிக்கினு பூடும்.

புதுசா கடை போட்டு/ மாத்தி நைருதில கல்லா பெட்டிய வச்சு உட்கார்ந்துக்கிட்டா ஈதான் ஓட்டனும். அக்னி மூலைல உட்கார்ந்து பாரு. ஒரு நிமிசம் நிம்மதியா இருக்க விடாம கஸ்டமருங்க வந்துக்கினே இருப்பாங்கோ.


2.லட்சுமி:

லட்சுமி நின்னா எல்லாம் ஓடிப்பூடும்னு எந்த அலக்கை ஊதிவிட்டுச்சோ தெரிலை. அல்லாரும் லட்சுமிய உட்கார வச்சு உட்கார வச்சு லட்சுமிக்கு பைல்ஸே வந்துருச்சுப்பா. லட்சுமின்னா பணம். பணங்கறது பாடில ப்ளட் மாதிரி .அது ஃப்ரீயா சர்க்குலேட் ஆகோனம். அதனால் தில்லா நிக்க வை நைனா. ஆல்ரெடி உட்கார்ந்துக்கினு இருந்தா அந்த ஃபோட்டோவை ஊட்ல எடுத்துக்கினு போய் வச்சிரு. லட்சுமிக்குரிய பீஜம் ஸ்ரீம். இதை பிரணவத்தோட சேர்த்து சான்ட் பண்ணிக்கினே வா. செமை சில்லறை புரளும்.

ஓம் ஸ்ரீம் ஓம் நமஹா

3.குழலூதும் கண்ணன்:

நம்ம கிட்னர் ஃப்ளூட்டை வாய்ல வச்சு ஊதினாருன்னு வை. புல்லாங்குழல் ஓசை கேட்டு வந்து குமிஞ்ச கோபிகா ஸ்த்ரீங்க மாதிரி கஸ்டமருங்க வந்து குமிவாய்ங்க. தில்லை வை.ஆனால் ஊட்ல வைக்காதே. ஊட்ல இருந்தா படக்குனு கொணார்ந்து கடையில வச்சுக்க. புதன் கிளமை ஒரு முளம் துளசி மாலை போட்டு ஓம் க்லீம் கிருஷ்ண க்லீம்னு ஜெபிச்சுட்டு இரு.

4.சண்டி:
சிங்கத்து மேல அம்மன் இருக்கிற படத்தை வச்சு வெள்ளிகிழமைல ஒரு எலுமிச்சம்பழம், ஒரு தம்ளர் மஞ்ச தண்ணி , பத்து ரூவா பட்டை லவங்கம் வாங்கி நைவேத்தியம் பண்ணு.

மறு நாள் மஞ்ச தண்ணிய கால் படாத இடத்துல தெளிச்சுரு. பட்டை லவுங்கத்தை வீட்டுசமையலுக்கு கொடு. எலுமிச்சம்பழத்தை ஜூஸ் போட்டு குடி. ( இந்த க்ளைமேட்ல மாணா வாத்யாரே - வெய்யில் காலத்துல மட்டும அப்படி செய் . மழை காலத்துல அதை கடை/வீட்டு சன் ஷேட்ல போட்டுரு.

இதை செய்தா கஸ்டமர் உன்கண்ட்ரோல்ல இருப்பான். போட்டிக்காரவுக கோட்டிக்காரவுகளா இருந்தாலும் அவிக முன்னே நீ தலை நிமிர்ந்து நடக்கலாம். அந்த அளவுக்கு செமை பிக் அப் இருக்கும் பாஸ்..

5.இன்னோரு மேட்டரு. நம்ம ஊர்ல ஆருனா பொளைக்க தெரியாத சோசியரு இருந்தா அவர் கிட்டே ஜாதகத்தை காட்டு. அவரு நல்லதா நாலு வார்த்தை சொன்னா ஓகே. இல்லை சகட்டு மேனிக்கு வினோலாக்ஸ் கொடுத்தாருன்னு வை. கல்லாவுல நீ உட்காராத. கல்லாவுக்கு நேர இருக்கிற சேர்ல உட்காராதே. பக்கவாட்ல இன்னொரு சேர் போட்டு உட்காரு. கடவுளே உன் கடைக்கு ஓனருன்னு நினை.

6. எனக்கு ஒரு செட்டியாரு (வயசாளி) கொடுத்த சஜஷனை அப்படியே தரேன். கப்புனு பிடிச்சுக்க. நீ பண்ற வியாபாரத்துல செலவெல்லாம் போக மொதலுக்கு வட்டி, ஒனக்கு கூலி கிடைக்குதான்னு பாரு. கிடைக்கலேன்னா கிடைக்கறாப்ல ப்ளான் பண்ணு. முடியலின்னா இழுத்து மூடிட்டு வேலை ,வெட்டி பார்க்க போயிரு.

கேஷுக்கு வாங்கி கேஷுக்கு வில்லு ( வித்துக்க) - முடியலியா கடனுக்கு வாங்கி கேஷுக்கு வித்துக்க. கடனுக்கு வாங்கி கடனுக்கு வித்தீனா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடியாயிரும்.

இருப்பை பணமா வச்சுக்காதே.சரக்கா வச்சுக்க. அவசரம்னா அசலுக்கு தள்ளி விட்டுரு.


7. கடை வியாவாரம் பண்ற இடம். கடைய கோவிலா மாத்திராதே. கடையில கஸ்டமருதான் கடவுள். கடையில கஸ்டமருங்க மஸ்தா கீனம். சாமி படங்க இல்லை. 3 ,5 ,7 மிஞ்சிப்போனா ஒன்பது படம் வச்சுக்க.
செத்து போனவுகளை சாமி படங்களோட கலக்காதே.

சில அய்யருமாரு வாயு மூலையில சாமி படங்களை வைக்கச்சொல்வாய்ங்க. நீ ஆரத்தி காட்டற நேரம் மட்டும் தான் அங்கே தெய்வ சான்னித்யம் ஏற்படும். நைருதில வை. கிழக்கையோ வடக்கையோ பார்த்த மாதிரி வை.

8.தகடு,யந்திரம்,சக்கரம் இதுக்கெல்லாம் அர்த்தம் இருக்கு. ஷக்தி இருக்கு. அதெல்லாம் சிடி,டிவிடி மாதிரி. அது எம்ப்டியாவே இருந்தாலும் அதுல ரைட்டிங் பண்றதுக்கு ஒரு வித்தை இருக்கு. பூஜை பண்ற சமயம் அந்த படம்/சக்கரங்களை தொட்டு ப்ராணஸ்ய சிவஹ் ப்ராணேச ஸ்வாஹான்னு சொல்லிக்கிட்டே வா. நாளடைவில் சிடி ரைட் ஆயிரும்.

9.கடை யாவாரத்துக்குத்தேன். டிவி பார்க்க, பாட்டு கேட்க, திங்க,தூங்க, ஃபிகர் மடக்க, தண்ணி போட வேற இடம் இருக்கு. பொஞ்சாதியாவே இருந்தாலும் கடைக்கு வந்தா கணக்கு கணக்காவே இருக்கனும்.

10.சனம் மானங்கெட்ட சனம் . நீ எத்தீனி தபா இன்சல்ட் பண்ணாலும் மறுபடி மறுபடி வருவாய்ங்க.ஆனால் பைசா,கடை,ஆஃபீசெல்லாம் மானஸ்தங்க.ஒரு தபா இன்சல்ட் பண்ணிட்டேனு வை. டாட்டா பை பைதான்.

11.பெருமாள் (ஏழுமலையான்) படத்தை வைக்காதே. வட்டி கட்டியே சாகனும். சிவன் தியானத்துல உள்ள படத்தை வை. அண்ணன் தம்பியாவே இருந்தாலும் யாவாரம் பேசற "தில்" வரும்.

12.உன் கடையில ஒவ்வொரு அங்குலமும் உனக்கு பரிச்சயமா இருக்கனும். கண்ணை கட்டிக்கிட்டாலும் எந்த பொருள் எங்க இருக்குன்னு தெரியனும். வெய்ட் எல்லாம் கிழக்கு வடக்குல வை தெற்கு,மேற்கை ஃப்ரீயா உடு (பாசேஜ்)

2 comments:

Sugumarje said...

அற்புதம்... ஆலோசனைக்கு நன்றி :)

Chittoor Murugesan said...

சுகுமார்ஜீ !
தங்கள் வரவுக்கும் -கருத்துரைக்கும் நன்றி.

ஜோதிடம் ஒரு ஏட்டுச்சுரைக்காய் அல்ல என்பதை நிரூபிக்க இதைவிட வேறு வழி இல்லை. எனவே இந்த லைன் அப்பில் தொடர் கட்டுரைகள் படைக்க உத்தேசம்.

தங்கள் ஆலோசனைகள் திருத்தங்ளை வரவேற்கிறேன்.