'>

Saturday, October 8, 2011

யோனி பொருத்தமும் - டார்வின் சித்தாந்தமும்


யோனி என்றதும் ஆண்களின் மனதில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். காரணம் இவன் அதன் வழியாகத்தான் உள் செலுத்தப்பட்டான். காரணம் இவன் அதன் வழியே உள் சென்றுதான் வளர்ந்தான். காரணம் அதன் வழியேதான் வெளி வந்தான். இந்த உலகத்துலயே அவனுக்கு பாதுகாப்பான இடம் கருப்பைதான். அதற்கான வழிதான் யோனி. அவனது அடிமனபிம்பங்கள் மீண்டும் கருப்பைக்கு விரட்ட அதற்கான முயற்சிக்கு பாதையும் அந்த யோனிதான். எனவே தான் யோனி என்றதும் ஆண் மனதில் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

பெண்ணை பொருத்தவரை யோனி என்றதும் அவள் மனதில் எதுவோ சுருங்குகிறது. இதற்கு காரணம் அவளது அடிமனப்பிம்பங்கள் இந்த மேல் சேவனிஸ்ட் சமுதாயத்தால் கலைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் யோனியும், கருப்பையும் அவளுக்குள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி இன்செக்யூரிட்டி உணர்வை தருகின்றன என்றாலும் அவள் பாதுகாப்பை தேடும் ஆணுக்கு பாதுகாப்பு தரும் வல்லமையை பெற்றிருக்கிறாள். ஆனால் அந்த வல்லமையை இந்த சமுதாயம் அவளுக்கான சாபக்கேடாக போதித்து வந்திருக்கிறது.

ஒரே வயது சிறுவர் ,சிறுமிகள் அம்மா அப்பா விளையாட்டு விளையாடும்போது அப்பா ரோலை ப்ளே பண்ற பையன் அண்டர் ப்ளே பண்றதையும் - அம்மா ரோலை ப்ளே பண்ற சிறுமி அந்த பாத்திரத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.

காரணம் சிறுவன் வளர்ந்து குழந்தை ஒன்றை பெற்ற பின்பே தந்தையாகிறான். ஆனால் சிறுமி பை பர்த் அம்மாவாகவே பிறக்கிறாள்.

மீண்டும் அப்பா அம்மா விளையாட்டுக்கே வருவோம். குழந்தை ரோலை ப்ளே பண்ணும் சிறுவனை அவள் தன் மடியில் வைத்து "ஜோ ஜோ" என்று தூங்கப்பண்ணும்போது அவள் முகத்தில் ஜகத்ஜனனியின் ஒளிக்கீற்றை காணமுடியும்.

ஒரு சிறுவன் தன் இன உறுப்பை அவமான சின்னமாக கருதுவதில்லை. ஆனால் சிறுமி அப்படி கருதும்படி பணிக்கப்படுகிறாள். சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கும் மேகலை அணிவித்து அவளில் வெட்கத்தை விதைக்கிறது சமூகம்.

சரி பதிவை இலக்கண தமிழ்ல ஆரம்பிச்சதால ரெம்ப அடர்த்தியாயிருச்சு நம்ம ஸ்டைலுக்கே வந்துருவம்.

யோனி என்பது பொதுச்சொல். ஐ மீன் பெண்ணுறுப்பை மட்டும் சுட்டும் சொல்லல்ல. யோனி என்ற வார்த்தைக்கு இன உறுப்பு என்பதே பொருள். ஆண் யோனி ,பெண் யோனி என்ற வார்த்தைகளை கவனிக்கவும்.

திருமணப்பொருத்தத்தில் யோனிப்பொருத்தம்னுட்டு ஒரு பொருத்தம் இருக்கு. சகட்டு மேனிக்கு மிருகங்களை குறிப்பிட்டிருக்காய்ங்க. குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு குறிப்பிட்ட மிருக யோனின்னு சொல்லப்பட்டிருக்கு.

இது இன உறுப்பின் ஸ்தூல வடிவத்தை சொல்லுதான்னு கேப்பிக. இல்லைன்னு ஒரேயடியா மறுக்க முடியலை. ஆனால் குறிப்பிட்ட மிருகத்தின் குண நலனை அதிலும் செக்ஸ் பழக்க வழக்கங்களை அந்த நட்சத்திரக்காரர் பெற்றிருப்பார்ங்கறதை மட்டும் ஒத்துக்கிட வேண்டியது தான். ஏன்னா நம்ம முன்னோர்கள் அந்தளவுக்கு சூட்சும புத்தி உள்ளவுக. அந்தளவுக்கு அப்சர்வேஷன் உள்ளவுக.

உ.ம் : முதலிரவுக்கு கண்ணால பொண்ணு வெள்ளைப்புடவையையே ஏன் கட்டனும்னு வச்சாய்ங்கனு ரோசிங்க - பதில் தெரிஞ்சவுக கமெண்ட்ல சொல்லலாம்.

சமீபத்துல ஒரு வாரப்பத்திரிக்கையில பிரபல ஜோதிடர் ஒருவர் இது தொடர்பாக தொடர் கட்டுரையே அடிச்சு விட்டிருக்காரு. நம்ம நிர்வாண உண்மைகள்ள ஆதிகாலத்துலயே இதை டச் பண்ணியிருக்கம். ஆனால் ஆரும் பெருசா கண்டுக்கிடலைங்கறதை இங்கன குறிப்பிட்டே ஆகனும்.

மனிதனில் மிருக குணமான்னு கேப்பிக. சொல்றேன். இங்கனதான் டார்வினோட பரிணாம சித்தாந்தம் வருது. ஆனால் டார்வினுக்கு மிந்தியே நம்ம மாணிக்க வாசகர் "புல்லாகி,பூண்டாகி,புழுவாகி"ன்னு பாடி வச்சிருக்கிறதையும் கவனிச்சே ஆகனும்.

முதல் உயிர் தோன்றியது கடலில்னு உயிரியல் சொல்லுது. அது அமீபாவா இருக்க அதிக வாய்ப்பிருக்கு. ஒரு செல் கொழுத்து - தன்னை தானே பிரதியெடுத்து ரெண்டா பிரிஞ்சதன் மூலமாதான் இனப்பெருக்கம் நடந்திருக்கு.

மேற்படி பிரதியெடுத்தலில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே புதிய உயிர்கள் வந்திருக்கு. உ.ம் அமீபாலருந்து மீன் (மச்சாவதாரம்) - ஆமை (கூர்மாவதாரம்) இப்படி பல உயிர்கள் . நமக்கு மிந்தி குரங்கு.குரங்குலருந்து நாம.

இது மட்டும் உண்மையா இருந்தா இந்த பூவிலகில் இருந்த,இருக்கிற எல்லா உயிர்களோட குண நலன் களும் , உடலுறவு பழக்க வழக்கங்களும் மனித ஜீன்களில் இருக்க வாய்ப்பிருக்கா இல்லையா?

( பிரதியெடுத்தலில் ஏற்பட்ட தவறுகள் காரணமா ஒரு சில உயிர்களின் டீட்டெய்ல் மிஸ் ஆகியிருக்கலாம். இல்லேங்கலை)

மிருகங்களில் குரங்கினத்தில் இருந்துதான் சுய இன்பப்பழக்கம் வந்திருக்கனும்னு சொல்றாய்ங்க. இதை மறுக்க முடியுமா?

உடலுறவின் போது இன உறுப்பை முகர்வது,சுவைப்பது இதெல்லாம் கூட தொன்ம நினைவுகளின் எச்சம்னு நான் சொல்றேன். மறுக்க முடியுமா? அட பின்னிருந்து புணரும் முறையில பெண்ணுக்கு "அந்த" பகுதியில் இறுக்கம் ஏற்படுது. ரத்த ஓட்டம் தடுக்கப்படுது. அவள் உச்சம் பெறுவது தடுக்கப்படுகிறதுன்னு தெரிஞ்சும் அந்த முறையை பலர் விரும்ப காரணம் தொன்ம நினைவுகள் தான்னு நான் சொல்றேன் மறுக்க முடியுமா?

இந்த ரீதியில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தரப்பட்டுள்ள மிருக யோனியை பொருத்து அவர்களின் குண நலன் மற்றும் உடலுறவு பழக்கங்கள் இருக்க வாய்ப்பிருக்கா இல்லையா?

எச்சரிக்கை:

வெறுமனே நட்சத்திரத்தை மட்டும் வச்சுக்கிட்டு பொருத்தம் பார்க்கிறது - நட்சத்திரத்தை மட்டும் வச்சுக்கிட்டு குண நலனை கெஸ் பண்றதெல்லாம் தப்போ தப்பு. ஜாதகம் தான் ஃபைனல். ஜாதகம் இதற்கு முரணா இருந்தா எல்லா கணிப்பும் ஃபணால்ங்கறதை ஞா வச்சுக்கங்க.

3 comments:

hamaragana said...

அன்புடன் வணக்கம் .
*** முதலிரவுக்கு கண்ணால பொண்ணு வெள்ளைப்புடவையையே ஏன் கட்டனும்னு வச்சாய்ங்கனு ரோசிங்க - பதில் தெரிஞ்சவுக கமெண்ட்ல சொல்லலாம்.**

வெண்மை நிறம் சுகிரனுக்கு உறியது!!சுக்கிரன் களஸ்திர காரகன்!! "நல்ல "உறவுக்கு அவனே அதிபதி.!!.சுக்கிர ஹோரைதான் பெரும்பாலும் சாந்தி மூஹுர்தர்திற்கு சரியான நேரம் !!ஒளி கடத்தும்போது அணிவது வெண்மை நிறமாக இருக்கும் பட்சத்தில்
சுக்கிரனுடைய கதிர்கள் எளிதில் உடம்பில் படும் ...இது அறிவியல் ரீதியானது ! இதற்காகவேதான் நமது முன்னோர்கள் இந்த வெண் புடவை கட்ட வைத்தார்கள் ஆனால் பழக்க வழக்கம்" மணப்பெண் கன்னி தன்மையோடு இருக்கிராள என பார்க்க புடவைய்ல் கரை பார்ப்பார்கள்.!! சரியா?? தவற?? என்று கூறுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் !!! (s.n.ganapathi)

hamaragana said...

அன்புடன் வணக்கம் .
*** முதலிரவுக்கு கண்ணால பொண்ணு வெள்ளைப்புடவையையே ஏன் கட்டனும்னு வச்சாய்ங்கனு ரோசிங்க - பதில் தெரிஞ்சவுக கமெண்ட்ல சொல்லலாம்.**

வெண்மை நிறம் சுகிரனுக்கு உறியது!!சுக்கிரன் களஸ்திர காரகன்!! "நல்ல "உறவுக்கு அவனே அதிபதி.!!.சுக்கிர ஹோரைதான் பெரும்பாலும் சாந்தி மூஹுர்தர்திற்கு சரியான நேரம் !!ஒளி கடத்தும்போது அணிவது வெண்மை நிறமாக இருக்கும் பட்சத்தில்
சுக்கிரனுடைய கதிர்கள் எளிதில் உடம்பில் படும் ...இது அறிவியல் ரீதியானது ! இதற்காகவேதான் நமது முன்னோர்கள் இந்த வெண் புடவை கட்ட வைத்தார்கள் ஆனால் பழக்க வழக்கம்" மணப்பெண் கன்னி தன்மையோடு இருக்கிராள என பார்க்க புடவைய்ல் கரை பார்ப்பார்கள்.!! சரியா?? தவற?? என்று கூறுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் !!! (s.n.ganapathi)

Chittoor Murugesan said...

ஐயா ..hamaragana அவர்களே !
வருகைக்கு நன்றி. எல்லாத்தையும் தா அழகா தொகுத்து சொல்லிட்டிங்களே.

மிக்க நன்றி.