'>
Showing posts with label இந்தியாவின் எதிர்காலம். Show all posts
Showing posts with label இந்தியாவின் எதிர்காலம். Show all posts

Thursday, November 22, 2012

இந்தியாவின் சமீப எதிர்காலம்

சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது , ரெண்டுல செவ்( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) 3ஆம் பாவத்துல சுக்கிரன் சூரியன் , சனி ,புதன்,சந்திரன், (அதாவது கடக ராசிங்கோ) 6ல குரு,

9-10 க்கு அதிபதியான சனி  6 ல இருக்காரு.டிசம்பர் 23 முதல் சனி ராகு சேர்க்கை வேற ஏற்படப்போகுது.

நடப்பு:  15/Jul/2012 முதல் 2013,ஜூன் 27 வரை சூரிய தசை சனி புக்தி.

சூரிய தசை:
லக்னாதிபதியான சுக்கிரனோடு சூரியன் சேருவதால் சூரியதசை முழுக்க மக்கள் உணவு,உடை,இருப்பிடத்துக்கு கூட ஆப்பு வந்து  நாறனும்.ஆட்சியாளர்கள் அகங்காரத்தில் ஆட்டம் போடுவார்கள்.

ஆனால் சூரியதசை புத புக்தி வரும்போது அதாவது 2013,ஜூன் 27 க்கு பிறகு உண்மையிலயே ஒரு பொது வேலை திட்டத்துடனான உண்மையான கூட்டணி அரசு அமையவும் வாய்ப்பிருக்கு. ( புதன் சூரியனோட பலத்தை குறைப்பாரு)

சூரிய தசை சனி புக்தி: ( 15/Jul/2012 முதல் 2013,ஜூன் 27 வரை )
இது ஆட்சியாளர்களுக்கு நல்லதில்லை. ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரம் இழக்க நிறைய வாய்ப்பிருக்கு. கருப்பான ஆள், தலித் அ தலித் வாதம் பேசுபவர் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வாய்ப்பிருக்கு.

கோசாரம்:

சனி ( 9/10 = 6) (டிசம்பர் 23 வரை)

வெளி நாட்டு உறவுல சிக்கல் வந்து நிலைமை  ஏடாகூடமாகி  சந்திரசேகர் காலம் போல தங்கத்தை மட்டுமில்லாம இரும்பையும் கூட அடகு வைக்க வேண்டி வரலாம். அதே போல ஆட்சியின் மேலிடத்துக்கு நோய் பாதிப்பு அதிகரிக்கலாம்.

அரசின் ஒவ்வொரு செயலும் நீதிமன்றத்தால் தடை செய்யப்படுதல் - அதிக பட்ச எதிர்ப்பு வருதல் நடக்கலாம்.

கருப்பான ஆள், தலித் அ தலித் வாதம் பேசுபவர் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வாய்ப்பிருக்கு. என்ற பலன் இந்த காலகட்டத்துக்குள்ள நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்கு.


சனி ராகு சேர்க்கை:( டிசம்பர் 23 க்கு பிறகு)

9/10+ராகு காரணமா நாட்டின் சொத்தை வெளி நாட்டுக்காரன் உறிஞ்சி எடுத்துருவான். அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலும் வெளி நாட்டு சக்திகளால் கட்டுப்படுத்தப்படும்.

கருப்பான ஆள், தலித் அ தலித் வாதம் பேசுபவர் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வாய்ப்பிருக்குன்னு சொன்ன பலன்ல சின்ன திருத்தம் இவர் விதவையாக (விடோயர்) அல்லது திருமணமாகாதவராக அல்லது வெளி நாட்டினராக வேறு மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம்..