'>

Tuesday, March 19, 2013

ராகு-கேது : ஒரு ஆழமான பார்வை

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டிங்கற சீரிஸ்ல செவ் - செவ் தோஷம் -ஆண்பெண் வித்யாசம் - பரிகாரங்கள் இப்படி சுத்தி அலைஞ்சு நேத்திக்கு செவ் சாப்டர் க்ளோஸ். இன்னைக்கு ராகு -கேதுவை பத்தி பார்த்தாகனும்.இவிகளை பிரிச்சே பார்க்க முடியாதுங்கோ?
ஏன்னா  ரெண்டுமே  நிழல் கிரகங்கள் . ஆன்டிக்ளாக் வைஸ் சஞ்சரிக்கும் கிரகங்கள். ஒன்றை ஒன்று 180 டிகிரில பார்க்கும். ( ரெண்டு  பேரும் ஒருத்தருக்கொருத்தர் 7 ஆம் வீட்டில் இருப்பாய்ங்க)எந்த கிரகத்தோடு சேர்ந்தாலும் அந்த கிரகத்தின் பலத்தை எல்லாம் உறிஞ்சிருவாய்ங்க.
செவ்வாய்க்கு பின்னாடி  நிக்கிற கிரகம்லாம் கிரகயுத்தத்துல தோத்துட்டதா சொல்வாய்ங்க. அந்த செவ்வாயோட சூரியன் சேர்ந்தா செவ் காலி. அந்த சூரியனோட புதன் சேர்ந்தா சூரியனோட பலம் குறையும். அந்த சூரியனுக்கே ஆப்படிக்கிற கிரகம் ராகு.
ஜாதகங்கள்ல ராகு கேதுக்கள் கீழ் கண்ட காம்பினேஷன்ல இருப்பாய்ங்க.
1-7
2-8
3-9
4-10
5-11
6-12
பொதுவிதிப்படி ராகு கேதுக்கள் 3,4,6,10,11,12  ல இருந்தா தோஷமில்லைன்னு சொல்றாய்ங்க.ஆனால் ஒரு ஜாதகத்துல ராகு 3 ல இருந்தா கேது 9 ல இருப்பாரு. ( அப்பாவுக்கு ஆப்பு)
ராகு 4 ல இருந்தா தோஷமில்லேங்கறாய்ங்க.ஆனால் தாய்க்கு நலிவை தரும். வீட்டு வாசப்படிக்கு ,உத்தரத்துக்கு எல்லாம் செதில் பிடிக்கும், வாகனம் திருடு போகவும் வாய்ப்பிருக்கு,படிப்பு காலி.
ராகு 6 ல இருந்தா தோஷமில்லேங்கறாய்ங்க. ஆனால் கேது 12ல இருப்பாரே.ஆரம்பத்துல இருந்து எதிரிகளோட மோதி மோதி கடேசி காலத்துல விரக்தி ஏற்பட்டுரும்
கேதுவாச்சும் பரவாயில்லை உலக வாழ்க்கையிலான பற்றை விட்டுட்டு சன்யாசம் வாங்கிக்கிட்டா ஒழிஞ்சு போன்னு விட்டுருவாரு .சன்னியாசத்துல பக்காவா இருக்கிற வரை நாம சேஃப்.(உ.ம் நித்யானந்தா)சன்னியாசத்துக்கு பங்கம் வந்தா அசிங்கப்படுத்திருவாரு (உ.ம் நித்யானந்தா)
ஆனால் ராகு?  ஊஹூம். ஏன்? ஏன்?ஏன் இந்த கொலைவெறின்னு கேப்பிக. பதில் சீக்கிரமே வருது .ப்ளீஸ் வெய்ட்!
ராகு -கேது ரெண்டு பேர்ல ஒருத்தரு பிரதிகூலமா இருந்தாலே லொள்ளு. இதுல ரெண்டு பேரும் பிரதிகூலமா இருந்தா செமை நாஸ்தி தான். 
இந்த ரெண்டு பேர்ல ஒருத்தரு ஜன்மத்துல இருக்காய்ங்கன்னு  வைங்க. இது தங்களை ரகசியங்களுக்குள் புதைத்துவிடும். ஒரு காலத்துல அரசாங்க ரகசியங்கள் வெளி நாட்டுக்கு லீக் செய்யப்பட்டதாய் பரபரப்பு ஏற்பட்டது ஞா இருக்கலாம்.

கண்டதையும் ரகசியம் என்று குறிப்பிட்டு தொலைத்ததால் - ரகசிய காப்பு இயலாத ஒன்றாய் போனதால்  இது இப்படி  நிகழ்ந்தது

தாங்கள் கண்டதுக்கும் ரகசியம் மெயின்டெய்ன் செய்பவராக இருக்கலாம். ரகசியம்னா "எல்லாத்துலயும்"

நீங்க சுவாசிக்கும் காத்து,குடிக்கும் நீர்,உண்ணும் உணவு எல்லாத்தையும் விசமாக்கிருவாய்ங்க.
சந்தேக புத்தி,போதை பொருட்களில் ஆர்வம், சட்ட விரோத செயல்களில் ஈர்ப்பு வந்திரும். கண்டதுக்கும் சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ண ஆரம்பிச்சுருவிங்க.  உங்களை சுத்தி ஒரு திரை படிஞ்சுரும். சனம் சிண்டை பிச்சுக்குவாய்ங்க. (உங்களை எப்படி புரிஞ்சுக்கறதுன்னுதான்)
ஒன்னு ஒல்லியோ ஒல்லி.இல்லின்னா நீர் உடம்பா இருக்கும்.மேலும் மலைப்பாம்பு மாதிரி   பாடி டாப் டு பாட்டம் ஒரே சைஸா இருக்கலாம். வளைவுகளே இருக்காது.
தின்னதும் உட்கார கூட முடியாது.ஒடனே தூங்கனும். அன்வாரன்டட் மோஷன்ஸ்,வாமிட்டிங் சென்சேஷன்லாம் வரும். ஃபுட் பாய்சன் நடக்கலாம். உங்களை சுத்தி சதிகள் அரங்கேறும். அல்லது நீங்களே அதுல ஒரு ரோல் ப்ளே பண்ணலாம்.
ஜன்மத்துல ஒருத்தர் இருந்தா 7 ல அடுத்தவரு இருப்பாரே. இதனால ஃப்ரெண்ட் ,லவர், பார்ட்னர் ,வைஃப் ஆரா இருந்தாலும் ஒன்னு அவிக உங்களுக்கு ஆப்படிப்பாய்ங்க. அல்லது நீங்க அவிகளுக்கு துரோகம் பண்ணுவிங்க.
உங்களுக்கும் -உங்க மனைவி -உங்க கொலிக்ஸ் எல்லாருக்கும் பாம்போட குணங்கள் வந்துரும். சொசைட்டியோட இன்டராக்சனே இருக்காது.
ரெண்டுல இருந்தா?
ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும்  எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். எவருக்கேனும்ங்கற இடத்துல இதர மதத்தவர்,இதர மொழி பேசுவோர்னு புரிஞ்சுக்கங்க.
3ல் இருந்தால்:
 நீங்க பிறந்த பிறகு உங்கள் தாயாருக்கு அபார்ஷன்,மிஸ்கேரி மாதிரி எதுனா நடக்கலாம். அல்லது உங்களுக்கு பிறகு பிறக்கிறவுக (தங்கை தம்பி) முன்னேற்றம் பாதிக்கப்படும். அதீத மனோதைரியத்தை தரும்.பயணத்துக்கு அஞ்ச மாட்டீங்க. சவுண்ட் பாக்ஸ்ல பிரச்சினை வரலாம்.

எச்சரிக்கை:
சாதாரணமா பதிவு போட ஆரம்பிச்சா அண்ணே வணக்கம்ணேன்னு ஆரம்பிச்சு பட்டுன்னு உடுங்கஜூட்டுல முடிச்சுருவம்.
என்ன ஆச்சுன்னு புரியலை. இந்த பதிவை தவணையில அடிச்சு ஒப்பேத்த வேண்டியதா போயிருச்சு. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா ராகுவை பத்தி தெரிஞ்சுக்க பலருக்கு ஆர்வமில்லை.
அவிக மட்டும் ராகுவை பத்தி என்ன எழுதிரப்போறானோ இந்த மன்சன்னு அப்பப்போ நினைச்சிட்டிருந்தா கூட இந்த நிலை வந்திருக்காது.
நம்ம பதிவுகள் நேயர் விருப்பம் மாதிரி. நீங்க கார்டு கூட போட தேவையில்லை. ச்சொம்மா நினைச்சா போதும்.அது பதிவா வரும்.
என்ன .. இதை படிச்ச நிமிசத்துல இருந்து அப்பப்போ நம்மை நினைச்சுக்குவிங்கல்ல. அப்போ சரி உடுங்க ஜூட்டு.

6 comments:

சுந்தரேசன் said...

ஐயா,

என்ன ஆச்சர்யம். முந்தா நேத்து நான் நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தியுள்ளீர்கள். உண்மைலேயே உங்களுக்கு ஒரு சூக்சும சக்தி இருக்கிறது. என்னுடைய வியப்பை வார்த்தையில் செதுக்க முடியவில்லை.

Unknown said...

நாங்க ஆர்வமா தான் இருக்கம்

well-wisher said...

12-10-1975, 8.55 pm, male
are you able to say something. I will check your ability.

Chittoor Murugesan said...

Dear well wisher !
Mic testing over. Sorry.

Unknown said...

அருமை அருமை பாஸ்....எல்லாம் புட்டு புட்டு வைக்கறீங்களே...

Chittoor Murugesan said...

வாங்க கவிதாமணி!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி