'>

Sunday, February 5, 2012

வறுமை ஒழிய பெரியாரை ப(பு)டிங்க !


அண்ணே வணக்கம்ணே ! என்னடா இது சோசிய புஸ்தவ அட்டையில பெரியாரை போட்டிருக்குன்னு கன்ஃப்யூஸ் ஆனவுகளுக்கு காம்ப்ளான் கொடுத்து ஒரு பதிவை போட்டிருந்தேன். நம்ம ஜோதிடம் 360 அட்டையில பெரியார் படத்தை போட்டதுக்கு கான்க்ரீட் காரணம் இருக்கு வாத்யாரே..

வறுமை நிலைக்கு குரு சனி /குரு ராகு /குரு கேது சேர்க்கை முக்கிய காரணம். (குரு தனகாரகராச்சே) இதுமட்டுமில்லிங்ணா மேற்படி கிரக சேர்க்கை உள்ள ஜாதகர்களுக்கு இதயம்,வயிறு பாதிக்கலாம். திருமணம் தாமதமாகலாம். விவாகரத்துல முடியலாம். குழந்தை பிறப்புல கூட பிரச்சினைகள் வரலாம்.

ஒரு ஜோதிடனாக குருஸ்தானத்தில் உள்ள நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனாலும் தங்கள் நலம் நாடி கூறுகிறேன் இன்று முதல் கோவில் குளம், தெய்வம், தெய்வ நம்பிக்கை இத்யாதியை மறந்துவிடுங்கள் . உங்கள் ஜாதகப்படி அந்த கடவுள் தங்களுக்கு கொடுத்துள்ள சாய்ஸ் 2
அதில் ஒன்று தெய்வ நம்பிக்கையுடன் பணரீதியில் நிறைய கஷ்டப்படுவது. திருமணம், கணவர் ,வாரிசுகள் விசயத்தில் நிராசைப்படுவது
இரண்டாவது சாய்ஸ்: நாத்திக வாதியாக ஓரளவேனும் நிம்மதியாக வாழ்வது. இதில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்யவும்.
பழக்கத்தை விடமுடியாதுன்னா பெரியாரையே தெய்வமா வணங்குங்க. அவரோட கடவுள்மறுப்பு கொள்கைகளை வேதமா நினைச்சுப்படிங்க.

ப்ராக்டிக்கலா ரோசிச்சாலும் ஆஸ்திகரா இருந்தா பூசை,புனஸ்காரம், கோவில், குளம் , அபிசேகம் அர்ச்சனைன்னு ஏகப்பட்ட செலவிருக்கு. அதுலயும் இந்துக்களுக்கு வருசம் பூரா பண்டிகை. தண்ணி வராதுன்னு தெரிஞ்ச பிற்காடும் கிணறு தோண்டுவானேன்? மாத்தி யோசிங்ணா..

ஜோதிடம் 360 அனுபவங்கள்:

நம்ம ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கான மேட்டரை நம்ம சைட்ல இருந்து எடுத்து எடிட் பண்ணும் போதுதேன் பதிவு எழுதும்போது இன்னம் கொஞ்சம் பொறுப்பா எழுதனும்னு உறைச்சதுண்ணே. அதுகளை கழிக்கிறது ஒரு வேலைன்னா சேகரிச்சதை Sort Out பண்றது மலையாயிருச்சு. Sort Out பண்ணதை கோர்க்க ஒரு சரடை முடிவு பண்றது மாமலையாயிருச்சு.

எப்படியோ பெரிய்ய கண்டத்துலருந்து தப்பிச்சுட்டதாதான் நினைக்கிறேன். காசு போட்ட வாங்கினவுக என்ன சொல்றாய்ங்கன்னு பார்க்கோனம். உங்கள்ள ஆருக்காச்சும் எதிர்காலத்துல புஸ்தவம் போடற எண்ணமிருந்தா கீழ் காணும் எளிய விதியை ஃபாலோ பண்ணுங்க. தப்பிக்கலாம்.

நம்ம பதிவுகளில் ஒன்னை அது எழுதப்பட்ட காலத்துக்கு அப்பாறம் படிச்சா அது ஒரு நெடுந்தொடரோட அத்யாயமா இருக்கனுமே தவிர தினசரி செய்தி பத்திரிக்கை காரியாலயத்து ஃபைல்ல இருந்து பிடுங்கப்பட்ட நியூஸ் பேப்பரோட பக்கமா இருக்கப்படாது.

எப்படியோ நமக்குன்னு ஒரு லைன் அப் - லட்சியம் இருந்ததாலயும் - இந்த 45 வயசுக்கு எதை சொன்னாலும் பன்னா பன்னான்னு மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டிருக்கிறதாலயும் தப்பிச்சம். மத்தவுக நிலை எப்படியோ?

ஜோதிடம் 360 க்கு ஃபினிஷிங் டச் கொடுத்தது பெரிய கூத்துங்ணா. அது கெடக்கு களுதை.புஸ்தவம் எங்க கைக்கு வரட்டும். கிளிச்சிர்ரம். இப்பம் மேட்டருக்கு வாப்பான்னு அலுத்துக்கறிங்க .புரியுது..புரியுது.

இன்னைக்கு எழுதியிருக்க வேண்டிய பதிவோட தலைப்பு " கில்மா கனவுகள்:கன்னி துலாம் " இது நாளைக்கு வெளிவரும்.. ப்ளீஸ் வெய்ட் !

No comments: