'>

Saturday, December 11, 2010

அகால மரணம்,துர்மரணம் தொடர்கிறதா?

உங்க ஃபேமிலலயோ அ உங்களுக்கு தெரிஞ்சவுக ஃபேமிலிலயோ அகால மரணம்,துர்மரணம் தொடர்கிறதா? அப்ப பிதுர் சாபம் உங்களை தொடருதுன்னு அர்த்தம். சனிதான் பிதுர் காரகன். (பிதுர் என்ற வார்த்தைக்கு உங்க வம்சத்துல பிறந்து வாழ்ந்து முடிஞ்சவுகனு அர்த்தம்)  சூரியன் பித்ரு காரகன் அதாவது தந்தைக்கு காரகத்வம் வகிக்கிறார் -அதுவும் பகல்ல பிறந்தவங்களுக்கு மட்டும். ரெண்டையும் போட்டு குழப்பிக்கிடாதிங்க.

இதுக்கு என்ன பரிகாரம்னு கேப்பிக. சொல்றேன். பிதுர்களுக்கு அவர்கள் நினைவாக  செய்யவேண்டிய  காரியங்களை சரிவர செய்யாம விட்டுட்டா அவிக சபிப்பாய்ங்கன்னும்,  இதைத்தான் பிதுர் தோஷம்னும் சொல்றாய்ங்க.

காரியம்னவுடனே அய்யரை கூப்டு தாட் பூட் தஞ்சாவூர்னு கலக்கனுமே கையில காசில்லையே வசதியில்லையேன்னு பேஜார் படாதிங்க. சனி தான் ஆயுள் காரகன். சனி கெட்டிருந்தாதான் ஆயுள் பங்கம் ஏற்படும்.

சனிக்குரிய பறவை காகம். காகத்துக்கு சோறு வச்சாலே தோஷம் குறையும். காகத்துக்கும், எப்பயோ செத்துப்போன மன்சனுக்கும் இன்னாபா சம்பந்தம்னு கேப்பிக.

மன்சன் இன்னா பண்றான்? கண்ட இடத்தையும் கலீஜு பண்றான். இஷ்டத்துக்கு துப்பறான், வாந்தி எடுக்கிறான்.எலிய அடிச்சு குப்பைத்தொட்டில வீசிர்ரான்.

காக்கா என்ன பண்ணுது எல்லாத்தையும் சுத்தப்படுத்துது. மன்சனா இருந்தப்ப கலீஜு பண்ணதுக்கு பரிகாரமாத்தான் காக்காயா பொறந்து பரிகாரம் தேடறானோ என்னவோ ஆருக்கு தெரியும்?

அவள் விகடன்ல மேனகாகாந்தி காக்காயை பத்தி ஒரு மேட்டர் சொல்லியிருந்தாய்ங்க. ட்ராஃபிக் சிக்னலாண்டை வெய்ட் பண்ணிட்டிருக்கிற காகங்கள் ரெட் சிக்னலுக்கு வாகனங்கள் நின்னதுமே கொட்டைகளை கொண்டு வந்து சக்கரங்களாண்டை வச்சுருமாம். பச்சை கிடைச்சு , கொட்டைய உடைச்சுக்கிட்டு வாகனங்கள் போன பொறவு  இன்னொரு ரெட் விழுந்த பிறவு அசால்டா வந்து கொட்டைகளை கொத்திக்கிட்டு போவுமாம்.

இந்த மாதிரி அறிவெல்லாம்  நம்ம பேட்டண்ட் ரைட்டாச்சே. சரிங்க பாஸ் ! காகத்துக்கு சோறு வைக்கறதில உங்களுக்கு சம்மதமில்லையா? உங்க ஏரியாவுல கால் தொடர்பான ஊனம் உள்ளவுகளை அழைச்சு ஒரு வேளை சாப்பாடு போடுங்க ஓக்கேவா

எச்சரிக்கை:
பதிவுல சொல்ற சொல்யூஷன் எல்லாம் கல்லை மூட்டையில கட்டி மாங்கா அடிக்கிற மாதிரி.. உண்மையிலயே இந்த பதிவுல சொன்ன மேட்டர் உங்க ஃபேமிலல நடந்திருந்தா டீட்டெய்ல்டா மெயில் பண்ணுங்க. ஸ்பெஷல் பரிகாரம்லாம் உங்க இன்பாக்ஸுக்கு தேடிவரும் (காசு பணம்லாம் தேவையில்லிங்கண்ணா ஆல் டைம் ஃப்ரீ)

2 comments:

Swami said...

en mandhil irundha kelvikku vidai kidaithadhu. nandri.vazhga valamudan.

Chittoor Murugesan said...

1.யோக ஆஞ்சனேயர் படம் ஒன்று வையுங்கள்.
2.சான்ட் பாக்ஸில் ராம நாமம் நித்தியம் ஒலிக்கும்படி செய்க
3. முதலில் 9 நாட்கள் தொடர்ந்து காக்கைக்கு சோறு பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்து பிறகு இதை பிரதி சனிக்கிழமை செய்யவும்
4.வீட்டில் உள்ள துருப்பிடித்த,வளைந்து போன,உபயோகத்தில் இல்லாத இரும்பு பொருட்களை யாருக்கேனும் கொடுத்துவிடவும்
5.பத்தாவது தினம் எனக்கு ஃபோன் செய்து முன்னேற்றம் -விவரம் கூறினால் மேற்கொண்டு சில பரிகாரம் சொல்கிறேன்