'>

Sunday, November 6, 2011

எனது டைரி ( ப்யூர்லி பர்சனல்)


அண்ணே வணக்கம்ணே !

அந்த காலத்துல பள்ளிக்கூடம் போற குழந்தைகளுக்கு திங்கள் கிழமையானா ஜுரம் வந்திரும். ரீஜன் இன்னடான்னா சனி ,ஞாயிறு லீவை நெல்லா எஞ்ஜாய் பண்ணியிருப்பாய்ங்க. ஊட்ல தாத்தா பாட்டி, அத்தை, சித்தப்பா,பெரியப்பா, ஊட்டாண்ட பசங்க இப்படி டைம் பாஸுக்கு குறைவே இருக்காது.

படக்குனு லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போவனும்னா ரெம்ப கஷ்டமா இருக்கும். அவிக சப்கான்ஷியஸ் மைண்ட்ல "கொய்யால ஜுரம் வந்துட்டா நெல்லா இருக்குமே ஸ்கூலுக்கு போகாம தப்பிச்சுக்கலாம்னு" ஒரு தாட் பலம்மா இருக்கும்.

ஹ்யூமன் பாடி ரெம்ப நொய்மையானது . ஆனால் மனசு ரெம்ப பலமானது. மனசு அதிலயும் உள் மனசு போடற உத்தரவுக்கு உடல் உடனே அடி பணியும் .

இந்த மேட்டரை சொல்றப்ப அந்த காலத்துலன்னு ஒரு வார்த்தையோட ஆரம்பிச்சேன். அப்பம் இந்த காலத்துல லீவு முடிஞ்சு வர்ர ஒர்க்கிங் டேவுல பிள்ளைகளுக்கு ஜுரம் வர்ரதில்லையான்னு கேப்பிக .Read More

No comments: