1940 ல திருலோகசீதாராம் ( சுஜாதாவோட மொத கதைய தன் சிவாஜி பத்திரிக்கையில வெளியிட்டவர் கூட இவர் தான்னு ஞா) ஆசிரியத்துல வெளிவந்த கிராம ஊழியன் பத்திரிக்கையில அதனோட பேருக்கு பொருத்தமே இல்லாத உன்னத படைப்புகள் எல்லாம் வெளி வந்ததை போல 2000,ஜூலை,31 ஆம் தேதி துவங்கின என் கவிதை07 வலைப்பூவில் கவிதை தவிர "சகலமும்"வெளிவந்தது.
ஒரு பதிவுல வாக்குஸ்தானத்து சுக்கிரனை பத்தியும் என் கவிதா மோகத்தையும் விவரிச்சதா ஞா . கவிதையை விட்டபிறவுதான் ப்ரெட் ஹன்டிங்கே ஒரு முடிவுக்கு வந்தது .( நம்ம கடக லக்னத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதியாச்சே.)
இருந்தாலும் கவிதைன்னா ஒரு குன்ஸ் அப்படியே மைண்ட்ல நின்னுருச்சுங்ணா. கடந்த சில நாட்களா எழுதிக்கிட்டிருந்த காதலித்தால் செக்ஸ் பவர் ஃபணால் தொடர்ல காதல் Vs காமம்னு ஒரு உப தலைப்பை அடிச்சு கூட வச்சிருக்கேன்.
இருந்தாலும் 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்த தேவகுமாரன் மாதிரி மைண்டுக்குள்ள என்னைக்கோ ஏரைக்கட்டி வச்சிருந்த பாட்டெல்லாம் கியாபகம் வர ஆரம்பிச்சுருச்சு.
இன்னாங்கடா இது .." அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் " சானல் மாறி சொரியுதுன்னு நினைச்சேன். அப்பாறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு.
காதல்ங்கறது கவிதை மாதிரி. காமம்ங்கறது உரை நடை மாதிரி Read More
No comments:
Post a Comment