'>

Wednesday, November 30, 2011

கிரகமும் கடவுளும் : சூரியன்

அண்ணே வணக்கம்ணே..

நேத்து எந்த ப்ளேனட் சரியில்லினா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு லிஸ்டை கொடுத்திருந்தேன்.. இதுக்கான காரண காரியங்களை நாளுக்கு தரேன்னு வாயிதா வாங்கியிருந்தேன். நேற்றைய பதிவை மிஸ் பண்ணவுக வசதிக்காக அந்த பட்டியல் மறுபடியும் இங்கே கொடுத்து கா.கா விளக்க ட்ரை பண்றேன்.

1.சூரியன்:

சூரியன்,சூரிய நாராயணன்,காயத்ரி (நான் படிச்ச புஸ்தவங்கள்ள சிவன்)

விளக்கம்:
ஜாதகத்துல சூரிய பலம் இல்லேன்னா கால்ஷியம் குறை பாட்டால் வரக்கூடிய வியாதிகள் வரும். இதனால பல்,தலை,எலும்பு ,முதுகெலும்பு எல்லாமே பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு.மேலும் ஜாதகர் இன்சோம்னியாவால் அவதி படுவார்(தூக்கமின்மை) .மறு நாள் ஜாய்ண்ட் பெய்ன்ஸ்,கண் எரிச்சல், சிடுசிடுப்பு,கடுகடுப்பு எல்லாம் இருக்கும். அப்பாவோட மிஸ் கம்யூனிகேஷன்ஸ் இருக்கும். ( பத்து மணி வரைக்கும் தூங்கிக்கிட்டு இருந்தா ராத்திரி பாருக்கு போய் சரக்கடிச்சுட்டு வந்து படுத்த அப்பனுக்கு கூட பைல்ஸ் கணக்கா எரியும்ல)

இவிகளை சூரியனை வழிபட சொல்றோம்.சூரிய வழிபாடுன்னா சூரிய நமஸ்காரம். இதை விடியல்ல தான் செய்யனும். ரா முச்சூடும் தூங்கலின்னாலும் காலங்கார்த்தாலை எந்திரிச்சு முறைப்படி சூரிய நமஸ்காரம் செய்தா மறுபடி தூங்க முடியாது. மதியம் கொஞ்சம் கண்ணசர்ந்தா மேட்டர் ஓகே.

இதை இப்படியே கன்டின்யூ பண்ணா மேற்சொன்ன உபாதைகள் நாளடைவில் குறைஞ்சு கிட்டே வரும். மேலும் சூரிய ஒளியில விட்டமின் டி, விட்டமின் ஈ எல்லாம் இருக்காம். (போனஸ்).

சூரியன்னா ஈகோ. வெறுமனே சூ.ந பண்ணிட்டு போறதால பெருசா உபயோகம் இருக்காது. கொஞ்சம் ரோசிக்கனும் -படிக்கனும். சூரியனை பத்தி அதனோட பிரம்மாண்டத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டா ஈகோ குறையவும் வாய்ப்பிருக்கு.

மேலும் சோனிங்கதான் ஈகோவுக்கு விக்டிம்ஸ். படிப்படியா ஹேல் அண்ட் ஹெல்த்தியா மாறிட்டா ஈகோவும் சுருங்கிக்கிட்டே போகும் . இதையெல்லாம் பார்க்கிற நைனாவும் சந்தோசப்படுவாரு. ( டாடி). சூரியனுக்குரிய திசையாக " நடு" என்று சொல்லப்பட்டிருக்கு.

நம்ம பாடில " நடு " தொப்புள் தான். காயத்ரி மந்திரத்தை ஒழுங்கான ஸ்ருதியில சொன்னா தொப்புள் பகுதியில அழுத்தம் ஏற்படும். தொப்புள் தான் நாடி நரம்புகள் கிராஸ் ஆகிப்போற கிராஸ் ரோட் /ஜங்சன் பாய்ண்ட்டுன்னு சொல்றாய்ங்க. காயத்ரி மந்திரத்தை ஜெபிச்சா எல்லா நாடி நரம்புகளும் ஆக்டிவேட் ஆகும். உடல் நலம்,மன நலம் மேம்படும். ஈகோ கரைஞ்சு போகும்..

யத்பாவம் தத்பவதி - நாம எதை நினைக்கிறோமோ அதுவா மாறுவோம். இந்த விதிப்படி சூரியன் எப்படி பங்சுவலா பலன் கருதா கருமம் செய்கிறாரோ அப்படி ஒரு ட்யூட்டி கான்ஷியஸ் வரும். சூரியன் எப்படி இருட்டை துரத்தி ஒளியை தராரோ அப்படியே ஜாதகரும் சமூகத்து இருட்டை துரத்தி பகுத்தறிவை ஓளி வீச செய்வார்.

நாளைக்கு சந்திரனுக்குரிய தெய்வம் - அதன் பின்னாடி உள்ள காரண காரியங்களை பார்ப்போம்.

Tuesday, November 29, 2011

சனி பிடிச்சா ஆரை வணங்கனும்?


அண்ணே வணக்கம்ணே !

இன்ன நோய்க்கு இன்ன வைத்தியம்ங்கறாப்ல இன்ன கிரகம் சரியில்லின்னா இன்ன தெய்வத்தை வணங்குன்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. இதெல்லாம் போது போகாம சொல்லி வச்ச மேட்டரு இல்லிங்ணா.
செம மேட்டரு கீது.

முந்தா நாளு பொஞ்சாதி ஊர்ல இல்லின்னு நம்மூரு முனியாண்டி விலாஸுக்கு போனேன். மழையும் -கிழையுமா இருந்துதா சிலோன் பரோட்டா கொடுப்பாண்ணேன். அதை தின்னு முடிக்கிறதுக்குள்ள ஆண்டவன் தெரிஞ்சாரு.. தின்ன பரோட்டாவும் - சேர்வாவும் பாதி ராத்திரி தொண்டை வரைக்கும் வந்து களுக்குன்னு எட்டிக்கூட பார்த்துருச்சு. இந்த இழவெடுக்கிறதுக்கு ரூ.34 கழுத்துல துண்டை போட்டு வாங்கிட்டானுவ.

( எமெர்ஜென்சி கால கலைஞருக்கும் கனிமொழியை தியாகிங்கற கலைஞருக்கும் வித்யாசம் இருக்கில்லியா.. அப்படி மேற்படி மு.வி நாறிப்போன கால கட்டம் போல - நாம லாலா போடறதும் இல்லை - லாலா பார்ட்டிகளோட போனாலும் வெறுமனே திங்கலாமேன்னுட்டு பொணமும் திங்கறதில்லை -புரோட்டாவும் திங்கறதில்லை.. அதான் மேட்டரு தெரீலை. ஒரு காலத்துல பத்து நாள் ஜூரம் அடிச்சு எத்தனா காராசாரமா தின்னா நல்லாருக்குமேன்னு தோனும் போது மு.வி பரோட்டா ரெண்டு அடிச்சா போதும் ஜூரம் ஓடிப்போயிரும். அப்படி ஒரு காரம் -மணம்-குணம் )

இன்னாபா ஏதோ கெரகம் - சாமின்னு ஆரம்பிச்சு பரோட்டா தின்ன கதைக்கு பூட்டேன்னு பேஜார் படாதிங்ணா. மேட்டருக்கு வரேன்.

பொஞ்சாதி ஊர்ல இருந்திருந்து " ஆமா.. நீ வயசுக்கு வந்த புதுசுல எவனோ கோலத்து மேல லவ் லெட்டர் வச்சுட்டு போவான்னு சொன்னியே அவன் பேரென்ன"ன்னு கலாய்ச்சுக்கிட்டே மேற்படி ரூ.34 + இன்னொரு 34 மூட்டை அவுத்துருந்தா நாலு சுக்கா ரொட்டியும் -சிக்கன் ஃப்ரையும் பண்ண சொல்லிட்டு பெரிய நாயக்கரம்மாவும் (பொஞ்சாதி) ,சின்ன நாயக்கரம்மாவும் சிக்கனை ஒரு பிடி பிடிக்கிறதை பார்த்துக்கிட்டே மசாலாவை மட்டும் தொட்டு தின்னிருந்தா மழை கொடுத்த -மச மச எஃபெக்ட் ஓடியே போயிருக்கும்.

பரோட்டா -சேர்வா , சுக்கா ரொட்டி -சிக்கன் ஃப்ரை. ரெண்டுக்கும் பெரிய வித்யாசம் எதுவுமில்லை. பரோட்டா சேர்வா "ஊருக்காவ பண்ணது" ,சுக்கா ரொட்டி -சிக்கன் ஃப்ரை பேசிக்கல் ஃபார்முலாவை என்ரிச் பண்ணி நமக்காவ ப்ரிப்பேர் பண்ணது. எது சுரத்தா இருக்கும்?

இன்ன கிரகத்துக்கு இன்னா சாமிய கும்பிடனும்ங்கற மேட்டர்ல ஒரிஜினலா என்ன சொல்லி
வச்சாய்ங்களோ நமக்கு தெரியாது. (புள்ளி விரப்புலிகள் மேட்டர் எதுனா இருந்தா அவுத்து விடலாம்) . கீதைய என்ன கதி பண்ணிட்டாய்ங்கன்னு ஒரு தொடர்பதிவே போட்ட ஆசாமி நாம இந்த மேட்டர்ல "அவாளை" அவ்ளோ ஈசியா நம்பிடுவமா என்ன?

ஒரிஜினலில் உள்ள படி சனி பிடிச்சா நீங்க " சாஸ்தா"வை வணங்கனும். சாஸ்தான்னதும் ஐயப்பனுக்கு தாவிராதிங்க..சாஸ்தாங்கறது வேற கேரக்டர். விவரமானவுக அவுத்துவிடுங்கப்பு. மனோகராவுல "ஆண்டவன் கட்டளைக்கே காரணம் கேட்கிறார்கள்"ங்கறா மாதிரி பெரியவுக சொன்னதாவே இருந்தாலும் காரண காரியத்தை பார்க்கனும்ல.

அப்படி பார்த்து "ஏன் "என்ற கேள்வியோடா ஆராய்ச்சி பண்ணினதுல அவிகளோட அடிப்படை லாஜிக்கை கேட்ச் பண்ணி சனி பிடிச்சா ஆரை வணங்கனும்ங்கறதை மட்டுமில்லே அந்த கிரகம் கெட்டால் எந்த தெய்வத்தை வணங்கனும்னு பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்லிர்ரன்.

அதுக்கு மிந்தி சின்ன க்ளேரிஃபிகேஷன். ஒன்றே குலம் ஒருவனே தேவன்ங்கறாய்ங்க -விவேகானந்தரோ உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைச்சா அது வேற எங்கே இருந்தோ வந்தது இல்லே. உனக்குளே இருந்துதான் வந்தது"ங்கறாரு.

அப்பாறம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில இன்னின்ன நாள்ள இன்னின்ன ஸ்பெஷலிஸ்டுக வருவாய்ங்கனு போர்டு போட்டாப்ல இது இன்னாபா லிஸ்டை நீட்டறேன்னு கேப்பிக.சொல்றேன்.

புவனா ஒரு கேள்விக்குறியில நடிச்சதும் ரஜினிதேன் -பைரவி ,சதுரங்கத்துல நடிச்சதும் ரஜினிதேன். பில்லா ரங்காவும் ரஜினிதேன், பாட்சா,அண்ணாமலையில நடிச்சதும் ரஜினிதேன் , சந்திரமுகியில ,நடிச்சதும் ரஜினிதேன் ,சிவாஜி,ரோபோல நடிச்சதும் ரஜினிதேன் .ஆனால் சிலருக்கு சிலது பிடிக்கும்.சிலது அறவே பிடிக்காம இருக்கலாம். ஒவ்வொரு படத்துல ரஜினியோட ஒவ்வொரு கோணம் வெளிப்பட்டிருக்கும். ஒவ்வொரு விதமான வைபரேஷன் கிடைச்சிருக்கும். ரஜினிக்கே இத்தீனி கோணம், இத்தீனி வைபரேஷன் இருக்குன்னா கடவுளுக்கு?

கரண்டு ஒன்னுதேன். டிவிடியில பாய்ஞ்சா பலான படம் பார்க்கலாம், கம்ப்யூட்டர்ல பாய்ஞ்சா ட்ரிபிள் எக்ஸ் வீடியோ பார்க்கலாம், ஏ.சியில பாய்ஞ்சா ஜில்லு , ஹீட்டர்ல பாய்ஞ்சா ஊ.. அந்த மாதிரிதேன் தெய்வீக சக்தியும்.

தற்சமயத்துக்கு இன்ன கிரகம் சரியில்லின்னா இன்ன தெய்வத்தை வணங்கனும் ..ஐ மீன் தெய்வத்தை இன்ன வடிவத்துல வணங்கனும்ங்கற பட்டியலை மட்டும் தந்துர்ரன். நாளைக்கு காரண காரியங்களை விளக்கறேன்.

1.சூரியன்:

சூரியன்,சூரிய நாராயணன்,காயத்ரி (நான் படிச்ச புஸ்தவங்கள்ள சிவன்)

2.சந்திரன்:
ஆயுதம் தரிக்காத அம்மன் சிறப்பாக கன்னியாகுமாரி அம்மன் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள பார்வதி)

3.செவ்வாய்:
சுப்பிரமணியர்

4.ராகு:
துர்கை

5.குரு:
பிரம்மா ,தட்சிணா மூர்த்தி

6.சனி
ஆஞ்சனேயர் , கிராம தேவதைகள், காவல் தேவதைகள், பிதுர்கள் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள சாஸ்தா )

7.புதன்
கிருஷ்ணர் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள விஷ்ணு )

8.கேது

வினாயகர்

9.சுக்கிரன்

லட்சுமி


எதுக்கு பலான சாமிய கும்பிடசொன்னாய்ங்க/சொல்றேன்னு கொஞ்சம் ரோசிச்சு வைங்கண்ணா..தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம். நாளைக்கு காரண காரியங்களை சொல்றேன்.


பி.கு:
ஹி ஹி நேத்து கண்ணால நாளாச்சா .. கானிப்பாக்கம் போயிருந்தம். அங்கன ஃபோட்டோ எடுத்ததுல பரதேசி மாதிரி வந்துருச்சு. இன்னாங்கடா இது கு.ப சின்னத்திரையில சித்தப்பா ,மாமா ரோலுக்கு கூட அன்ஃபிட் ஆயிட்டாப்ல இருக்குன்னு ஒரே ஒர்ரியா போச்சு.

அதனால இன்னிக்கு ஆன தகிடுதத்தம்லாம் பண்ணி யூத்தா மாறி ஃபோட்டோ பிடிச்ச பிற்காடுதேன் மனசு ஆறுதலாச்சு. ஃபோட்டோவுல உள்ள கேரக்டருங்க ரெண்டும் நாமதேன். பயந்துக்காதிங்க..

Sunday, November 27, 2011

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி : தொடர் தொகுப்பு


அண்ணே வணக்கம்ணே !

எப்பயோ 2010 காலக்கட்டத்துல எழுதின தொடர் இது. இதை இன்னைக்கு எடுத்துக்கொடுக்க ஒரு பலமான காரணம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி துக்ளக் படிக்கவேண்டியாதா போச்சு. நமக்கென்னவோ சோவுக்கு மண்டைமேல மசுருதான் இல்லைனு நினைச்சம் மண்டைக்குள்ள மூளை கூட இல்லை போலிருக்குன்னு ஞானோதயம் ஆயிருச்சு.

ஆனாலும் புதுசா பத்திரிக்கை படிக்க ஆரம்பிக்கிற சூத்திர பசங்க அவிகளோட எழுத்தை மட்டும் படிச்சா அடடே சரியா இருக்குமோன்னு குழம்பிர கூடிய வாய்ப்பிருக்கு.அதனாலதேன் என்னைக்கோ எழுதின தொடரோட அத்யாயங்களுக்கான சுட்டிகளை இங்கே தந்திருக்கேன்.

இனம் -குணம் - சரித்திரம் -பூகோளம் எல்லாத்தையும் போட்டு உடைச்சிருக்கேன். நாமதேன் ( 30-40) லேட்டா முழிச்சுக்கிட்டம். அடுத்த தலைமுறையாவது விழிப்போட களம் காணட்டும். பை தி பை துக்ளக்கோட பை.தனமான எழுத்தையும் கிழிச்சு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன். நேரம் இருந்தா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க.


தொடரின் அத்யாயங்களுக்கான தொடுப்புகள் கீழே :

இந்த தொடரை எழுதிக்கிட்டிருந்தப்ப ஹிட்ஸ் 420 ஐ எட்டிப்பிடிச்சா ஒரே குதூகலம்.ஆனால் இன்னைக்கு வித் அவுட் அப்டேட்ஸ் ஆயிரம் பேரு படிக்கிறாய்ங்க. அப்டேட் பண்ணா தடுக்கி தடுக்கி இந்த எண்ணிக்கை ரெட்டிப்பாயிருது. அதனாலதேன் இந்த மீள் பதிவு.

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_10.html

http://kavithai07.blogspot.com/2010/05/2.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_11.html

http://kavithai07.blogspot.com/2010/05/3.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_14.html

http://kavithai07.blogspot.com/2010/05/2_14.html

http://kavithai07.blogspot.com/2010/05/5.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_2475.html

http://kavithai07.blogspot.com/2010/05/6.html

http://kavithai07.blogspot.com/2010/05/6_16.html

http://kavithai07.blogspot.com/2010/05/8.html

http://kavithai07.blogspot.com/2010/05/9_17.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_19.html

http://kavithai07.blogspot.com/2010/05/10_19.html

http://kavithai07.blogspot.com/2010/05/11.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_20.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_09.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_3884.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_22.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_8146.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_6267.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_25.html

http://kavithai07.blogspot.com/2010/08/16.html

சோ ராமசாமி (எ) கோயபல்ஸ்


சர்.ஐசக் நியூட்டனோட லேபுக்கு சின்னதா ஒரு பூனை -பெருசா ஒரு பூனை வந்து போகுமாம். அதுக உள்ளாற இருக்கிறச்ச லேபை பூட்டிட்டு போயிட்டா லேப் நாறிருமே.அதனால நியூட்டன் லேப் சுவற்றில் சின்னதும் பெருசுமா ரெண்டு ஓட்டைய போட்டு வச்சாராம். ( பெரிய ஓட்டை வழியிலயே சின்ன+பெரிய பூனைகள் போயிருமேன்னு ரோச்சிக்கலை அவரு) அறிவு சாஸ்தியாயிட்டா இப்படில்லாம் நடக்கும் போல. இதை எதுக்கு இங்கன சொல்ல வந்தேன்னா மனசு/அறிவு வேற ஒரு பெரிய சமாசாரத்தை வட்டமிட்டுக்கிட்டு இருக்கிறச்ச சின்ன விஷயங்கள்ள எல்லாம் கோட்டை விட்டுரும்னு சொல்லத்தேன். நியூட்டன் போன்றவுகளுக்கு இந்த விதி ஓகே.

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி போன்ற பார்ட்டிகளுக்கு இந்த விதி பொருந்துமா? ஊஹூம். பருந்து ரெம்ப உசரத்துல பறந்துக்கிட்டு இருக்குமாம். பருந்து பாதி ராத்திரி வரை டிவி பார்க்கிறதில்லையா? கம்ப்யூட்டர்ல வேலை செய்யறதில்லையா அதனால அதுக்கு கிட்ட பார்வை தூரப்பார்வை பிரச்சினையெல்லாம் கடியாதாம்.

எவ்ளோ ஒசரத்துல பறந்துக்கிட்டிருந்தாலும் எங்கனா சாக்கடை ஓரமா ஒரு எலி -அதுவும் செத்த எலி இருந்தாலும் பருந்தோட கண்ல படக்குன்னு பட்டுருமாம். உடனே விஷ்க்னு வந்து கொத்திக்கிட்டு போயிரும்.மனசும் புத்தியும் கேவலமான விஷயங்களை வட்டமிட்டுக்கிட்டு இருக்கும்போது சாதாரணமான - யதார்த்தமான விஷயங்கள் கூட புத்திக்கு உறைக்காது. உறைக்காது போனாலும் பரவால்லை கேவலமா தெரியும். கேவலமா தெரிஞ்சாலும் பரவால்லை. கேலியா தெரியும்.

ஞாயிற்றுக்கிழமையா.. மழை வேற நச்சு நச்சுனு ஊத்திக்கிட்டே இருந்துதா ஊட்ல பொஞ்சாதி பொண்ணுல்லாம் ஏதோ கண்ணாலத்துக்கு போனாய்ங்களா.. டிவின்னாலே கடுப்பா , மத்த பத்திரிக்கைகளை எல்லாம் பார்த்து முடிச்சாச்சா என்னமோ புத்தி கெட்டுப்போயி துக்ளக்கை வாங்கி தொலைச்சுட்டன்.
காசு கொடுத்து வாங்கினதாலயே உபயோகிச்சுரனுங்கற மிடில் க்ளாஸ் மென்டாலிட்டி விடுமா.. படிச்சுட்டன்.

பஸ் கட்டண உயர்வுக்கு ஜே ,பால் விலை உயர்வுக்கு ஜே, மின் கட்டண உயர்வுக்கு ஜே , கூடங்குளம் அணு உலைக்கு ஜே. மிஸ்டர் சோ ! ஒங்களுக்கே அச்சாணியமா படலையா இதெல்லாம்? துக்ளக் என்ன ஏர் போர்ட்ல மட்டுமா விக்குது? கொய்யால பஸ் ஸ்டாண்ட் ,பஸ் ஸ்டாப்ல தானே அதிகமா விக்குது. அங்கன வரவனெல்லாம் என்ன டாட்டா,பிர்லா,அம்பானி ,வாடியாவா?

துக்ளக்கை படிக்கிறவன்ல பாதி உங்களாவான்னே வச்சுக்குவம். விலை உயர்வால பாவம் அவாளுக்கும் பாதிப்பு உண்டுதானே. ( துக்ளக்கை படிக்கிறவன்ல மீதி எங்காளுங்கதேன். மெத்தபடிச்சவுகதேன். என்ன ஒரு இமிசைன்னா தாளி அவிகளுக்கு சரித்திரம் தெரியாது.

கட்சிக்காரவுக போடற துண்டு பிரசுரம் கூட பெட்டரா இருக்குமோ என்னமோ.. பக்கத்துக்கு பக்கம் ஜல் ஜக் ( ஒரே விதி விலக்கு நூலகத்தை மாத்தறதை பத்தி ரோச்சிக்கனும்னும் - நில மதிப்பீடுக்கான புது கைட்லைன்ஸை குறை சொல்லியும் எளுதியிருக்கு)

அவாள் இவாள்னு வித்யாசம்லாம் இல்லே.மன்சனோட பிறவிகுணமே என்னடான்னா அவனோட மனசு அப்பன் உசுரோட இருக்கிறச்ச தாளி செத்து தொலையமாட்டானான்னு மனசு நினைக்கும். அம்மா இருக்கிற வரை கிளவி இம்சியை தாங்க முடியலடாங்கும். அவிக செத்துதொலைஞ்ச பிற்பாடு "அந்த நாள் ஞாபகம்"னு ஏங்கும்.

எஸ்பெஷலி இந்த " நூல்" பரம்பரையோட சைக்காகலஜி என்னடான்னா ப்ரெட் ஹன்டிங் -ஜாப் ஹன்டிங் -கேரியர்ல சர்வைவ் ப்ராப்ளம் இத்யாதில்லாம் இருக்கும்போது பெரியாரை விட ஃபாஸ்டா வேதமா வெங்காயமாம்பான்.

ஓரளவு செட்டில் ஆயிட்டா கில்ட்டி வந்துரும். நாம அதையெல்லாம் (வேதம் -புராணம் -இத்யாதி) நெக்லெக்ட் பண்ணிட்டமோ -தெரிஞ்சுக்கிட்டு இருக்கனுமோன்னு மனசு அலைமோதும். அப்படி சோ ராமசாமி அவர்களோட குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடுதேன் எங்கே பிராமணன் இத்யாதி எல்லாம்.

துடைப்பம் புதுசா இருக்கும்போது கேல்குலேட்டரை விட வேகமா நெல்லா பெருக்கும் -துளி சத்தம் வராது. போக போக சத்தம் பெருகும். பெருக்கறது குறைஞ்சுரும்.அப்படித்தான் சோவோட நிலைமையும்.

இவரு பா.ஜ.கவை பப்ளிக்கா சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சதுலருந்தே முட்டாக்கூ வெல்லாம் அலார்ட் ஆயிட்டாய்ங்க. அட திமுக ஆயி.கலைஞரு கலீஜு . நீ ஜெவை தூக்கி புடிச்சே.புடிச்சுக்கோ. அந்தம்மாவோட வெற்றிக்கு .புரோக்கர் வேலைல்லாம் பண்ணதா அலட்டிக்கிட்டே அலட்டிக்கோ.

ஒரு பத்திரிக்கைக்கு வாசகன் முக்கியம். அவனோட உணர்வுகள் முக்கியம். அதைக்கூட கண்டுக்காம மார்கழி பஜனை கணக்கா சகட்டுமேனிக்கு ஜல்ஜக் .தூத்தேறிக்க..

சித்திராபவுர்ணமியை அரசு விழாவா ஆக்கிட்டாய்ங்களாமே அதுக்கும் ஒரு பாராட்டு. .. இதுல திராவிட நாட்டை கை விட்ட பழங்கதையை வச்சு ஆன்டி திராவிடன் பிரச்சாரம். ( ஆனால் புரோக்கர் வேலை பார்த்த அதிமுகவும் திராவிடன் மூவ்மென்டுதானே -ஓஹோ ..அது தொழில் தர்மம் போல --இன்னாது இனப்பாசமா..)

சோ வெல்லாம் நம்ம ஓம்கார் ஸ்வாமிகள் சொல்ற வேதகால வாழ்வு பள்ளியின் ட்ராப் அவுட்டுங்க.ஓப்பன் யூனிவர்சிட்டில கதை பண்ணிட்டு கதை விட்டுக்கிட்டிருக்காய்ங்க.

எத்தனை பேரு எத்தீனி வாட்டி துப்பினாலும் தி..ருந்த...மாட்டேங்கறாய்ங்களே..

Friday, November 25, 2011

ஜூ.ஐஸ்வர்யா ஜாதகம் : தாத்தாவுக்கு ஆப்பு


நாட்டு முன்னேற்றத்துக்காவ ஆராரோ என்னென்னமோ பண்றாய்ங்க. நம்ம பங்குக்கு எதுவும் செய்லின்னா நல்லாருக்காதே. அதனால இன்னைக்கு அமிதாப் பச்சனோட பேத்தி - அபிஷேக் பச்சன் & ஐஸ்வர்யாராய் ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சின்னதா ஒரு பதிவு போட முடிவு செய்திருக்கேன்.

மொதல்ல கிரக நிலை:

லக்னம் தனுசு , லக்னாதிபதியே 5 ல வக்ரம் . ரெண்டுல: குளிகன் மாந்தி , ஆறில் கேது,7ல் சந்திரன், 9ல் செவ்,11 ல் சூரிய,சனி சேர்க்கை, 12ல் புத,சுக்ர,ராகு

லக்னாதிபதி 5 ல இருந்தா நல்லதுதேன்.வக்ரமானா? அதுலயும் 4 க்கான் ஆதிபத்யமும் குருவுக்கே கிடைச்சிருக்கு. 4ன்னா அம்மா. அப்போ ஐஸு.. நிலை? 4ங்கறது வீடு,வாகனம்,கல்வின்னு பலதையும் காட்டுமிடம். இந்த பாவாதிபதி 5 ல நின்னா ஓகே.வக்ரமானா? டிசம்பர் 25 வரை வக்ரமே. அப்பம் மேற்படி விஷயங்களில் பல்புதானா?

ரெண்டுங்கறது தனம்,வாக்கு,குடும்பம்,நேத்திரம் இத்யாதிய காட்டுமிடம். இங்கன பாபகிரகங்களான குளிகன் மாந்தி இருக்கிறதால மேற்படி விஷயங்களில் பணால் தானா?

6 ல கேது இருந்தா நல்லதுதேன். கடன் தீரும். நோய் குணமாகும்.வழக்கு ஜெயமாகும். கடன் தீரனும்னா மொதல்ல கடன் ஏற்படனுமே. நோய் குணமாகனும்னா மொதல்ல நோய் வரனுமே.வழக்கு ஜெயமாகனும்னா மொதல்ல வழக்கு வரனுமே..

7 ல் சந்திரன்:
தனுசு லக்னத்துக்கு சந்திரன் அஷ்டமாதிபதி. இவர் 7 ல நின்னு காதல் ,கண்ணாலத்துக்கெல்லாம் எதிர்காலத்துல ஆப்படிக்கப்போறது வேற கதை.தற்சமயத்துக்கு பார்த்தா இவர் லக்னத்தை வேற பார்க்கிறாரே. இதனால சீதள ரோகங்கள்,மனக்கோளாறுகள்,நுரையீரல் பாதிப்பு இத்யாதி வருமோ?

9ல் செவ்:
9ன்னா அப்பா .செவ்வாய்னா கோபம் /யுத்தம்/ரத்தம் 9ன்னா அப்பா வழி சொத்து செவ்வாய் நெருப்பு கிரகமாச்சே. அப்பம் சாம்பல் தானா? இவரு யோகத்தை தரனும்தான். இல்லேங்கலை வக்ர குரு அஞ்சாம் பார்வையா இவரை பார்க்கிறாரே. 9ன்னா தூரபிரயாணத்தை வேற காட்டும். எட்டுங்கறது மர்ம ஸ்தானத்தை காட்டும். 9ங்கறது துடைகளை காட்டும். செவ்வாய்னாலே சர்ஜரி. ஒரு வேளை ..........

11ல் சூரிய சனி சேர்க்கை:

சூரிய,சனி சேர்க்கை இருந்தா அப்பாவுக்காகாதும்பாய்ங்க. ஜாதகருக்கும் அப்பாவுக்கும் ஒத்துவராதும்பாய்ங்க. அப்பா படிப்படியா நொடிச்சு போயிருவாருன்னும் சொல்றாய்ங்க. பாவம் அபிஷேக் பச்சன்.. சூ+சனி சேர்க்கை காரணமா தலை,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் கூட வரலாம். குழந்தை பகல் பத்து மணிக்கு பிறந்ததால பித்ருகாரகன் சூரியனேங்கறதை மறந்துராதிங்க.

இங்கே சனி உச்சம் தனாதிபதி உச்சம் பெற்றால் தனயோகம்னும் சிலர் சொல்வாய்ங்க. ஆனால் லக்னாதிபதி குருங்கறதையும் -சனிக்கும் குருவுக்கும் பகையிருக்கிறதையும் மனசுல வச்சு ரோசிங்க.

சூரியன் இங்கன நீசம்.(அப்பா) சூரியனுக்கு பகைகிரகமான சனி இங்கே உச்சம்ங்கறதை மறக்காதிங்க. கூட்டி களிச்சு சின்னதா கணக்கு போட்டுக்கிட்ட அப்பாறம் கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி பதிவை கேளுங்க.

அயனான மேட்டர்லாம் சொல்லியிருக்கேன்.லைஃப் லாங் உதவும். உடுங்க ஜூட்..

குறிப்பு:
நெட் ஸ்பீட்ல பிரச்சினை உள்ளவுக இங்கன அழுத்தி டவுன் லோட் பண்ணியும் கேட்டுக்கலாம்.

Thursday, November 24, 2011

உலகம் இப்படித்தான் இயங்குகிறது !

இந்த உலகத்தை பத்தி "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்"னு நெகட்டிவா சொல்ல மாட்டேன். தாளி இந்த உலகம் பேசறதாலயோ ஏசறதாலயோ ஒரு ம..ரும் நடந்துராது. அதே போல நாம வாழ்ந்தாலும் -தாழ்ந்தாலும் இந்த உலகத்துல ஒரு ம..ரு மாற்றமும் நடந்துரப்போறது கடியாது.

நம்முது கார்ப்போரேட் நிறுவனமா இருந்தா - நாம வி.ஐபியா இருந்தா ஏச்சால லேசா பாதிக்கலாம். அதை கூட காசு பணத்தை வச்சு "அஜீஸ்" பண்ணிரலாம். ஸ்பெக்ட்ரம் ஜி பணத்துல நடக்குதுன்னு தாய்க்குலம் கலைஞர் டிவியை பார்க்காம விட்டுட்டாய்ங்களா? உலகம் ரெம்ப பெருசு. இதுக்கு நம்மை கவனிக்கிற அளவுக்கு நேரம் கடியாது. அதனால ஃப்ரீயா உடுமாமேன்னு அடிச்சு சொல்லிரலாம் ! ஆனால் இதுல ஒரு சிக்கல் இருக்கு.

அது இன்னாடான்னா நாம ஒரிஜினல் உலகத்தை கண்டுக்கலின்னாலும் நம்ம நட்பு சொந்தம் பந்தம் இத்யாதியை ஓலகமா நெனைச்சு பதறிர்ரோம்.இங்கன அவனவனுக்கு ஆசனத்துல கும்பாபிஷேக டொனேஷன் கணக்கா ஆயிரத்து நூத்து பதினாறு கொப்புளங்கள் இருக்கு. அது உடைஞ்சு நச்சுத்தண்ணி ஒழுகிக்கிட்டு புண்ணாகி,ரணமாகி அகல உழறானோ இல்லியோ காலை அகட்டி வச்சுத்தான் நடக்கான்.

நம்ம மேட்டர் அவனுக்கு ஜூஜிபி. நம்மை பற்றி பேச நேரமும் கிடையாது. இதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. அவனோட "வேதனை" தாங்க முடியாத ஸ்டேஜுக்கு போனப்ப நம்ம கொப்புளத்தை பற்றி பேச ஆரம்பிச்சுர்ரான்.அவன் பேச்சுக்கு உலகத்துல மதிப்பில்லே.அதனால ஃப்ரீயா உடுமாமே !

அவனோட நோய்க்கு மருந்து கிடைக்காதவரை ஆசனப்புண்ணை அதிர்ஷ்டமச்சம் கணக்கா எஸ்டாப்ளிஷ் பண்ணி புலம்பிக்கிட்டிருப்பான். ஆனா கெட்டவாடை மட்டும் வந்துக்கிட்டே இருக்கும். நீங்க கை குட்டைய மூக்குக்கு வச்சு போயிட்டே இருப்பிங்க.ஆனால் அவன் உங்க குண்டி பின்னாடி கறையிருக்கான்னு பார்த்துக்கிட்டே இருப்பான்.

வேலை வெட்டி இல்லாததாலயும் - லக்னத்துல உச்சமான குரு கொடுக்கிற கருணை உணர்வாலயும் நம்மால மூக்கை பொத்திக்கிட்டு போக முடியலை.

பென்சிலின் ஆயின்ட்மென்ட் கணக்கா உபதேசங்களை அள்ளி விட்டுக்கிட்டிருக்கோம். (இதெல்லாம் நமுக்கும் சேர்த்துத்தேன் வாத்யாரே)

இந்த உலகத்துல எவனையும் -எவளையும் 365 நாளும் - 24 மணி நேரமும் திருப்தி படுத்த முடியாது. திருப்தி படுத்த ட்ரை பண்ணா நாம நாறிருவம்.இங்கன எல்லாருமே மன நோயாளிகள் தான். சதவீதத்துலதான் வித்யாசம்.

ஒரு மன நோயாளி இன்னொரு மன நோயாளியை சொஸ்தப்படுத்த முடியாது. மன்சன் மன நோயாளியாக காரணம் இந்த உலகமே ஒரு மொஃபசல் பஸ் ஸ்டாண்டுங்கறதை மறந்துட்டதுதான்.

இங்கன நாம பண்ற வேலை உத்யோகம் வியாபாரம் எல்லாமே ஒரு வாகனம் தான். வாகனமேறி எங்கே போறதுன்னு இந்த பன்னாடைகளுக்கு ஒரு ஐடியாவே கிடையாது.

பொஞ்சாதிங்கறவ லாரி க்ளீனர் மாதிரி. டயரை தட்டி கல்லு கில்லு இருந்தா எடுத்து விட்டு க்ரீஸ் அடிச்சு சைடு பார்த்து ரைட் சொல்லனும். பயணத்துல சமைக்கலாம். கேம்ப் ஸ்டவ் வச்சு நாலு சப்பாத்தி போட்டு பசிக்கு திங்கலாம். ஏன் கவுத்து கட்டில் போட்டு ரெஸ்டும் எடுக்கலாம்.ஆனால் சனம் லாரிலயே குடும்பம் நடத்திர்ராய்ங்க. லாரி முன்னுக்கு நகரமாட்டேங்குது. பின்னாடி வர்ர லாரில்லாம் முட்டிக்கிட்டு நிக்குது. ட்ராஃபிக் ஜாம்.இதனால தான் பிரச்சினையே வருது.

பிறந்தோம். பிறந்து படிச்சோம்.படிச்சு வேலை வெட்டிக்கு போகனும். போயி .. நாலு காசு சம்பாதிக்கனும். சம்பாதிச்சு செக்ஸுங்கற தவிர்க்க முடியாத பிரச்சினையை சானலைஸ் பண்ண கண்ணாலம் கட்டிக்கனும். கட்டிக்கிட்டு.. தேடனும்.

நான் யாரு.. எங்கருந்து எங்கன வந்தேன். எங்க போகப்போறேன். அதுக்கு நான் எப்டி ப்ரிப்பேர் ஆகனும்னு வழி வகை தேடனும். தேடி கண்டுப்பிடிக்கலின்னாலும் பஸ் ஸ்டாண்ட்ல 60/40 சைட்டுக்கு அலையறதையும்,பேரனுக்கு சொத்து சேர்க்கிறதையும் விட்டுரனும்.

ஞானம் கிடைக்கலின்னாலும் பரவால்லை தேடனும். அப்பத்தேன் உலகத்தோட மன நோய் குணமாகும். இந்த உலகத்தோட மன நோயை கண்டு உணர்ந்து பரிதாபப்படற உன்னத நிலைக்கு நீங்க வந்துட்டா இந்த உலகம் உங்களை மன நோயாளிங்கும்.

நீங்க கரீட்டான ரூட்ல போயிட்டிருக்கிங்க - உங்க மன நோய் குணமாயிருச்சுங்கறதுக்கு இந்த மன நோயாளி பட்டம்தேன் அங்கீகாரம்.

உலகியல் ரீதியா நீங்க எதை சாதிச்சாலும் அது நிரந்தரம் கடியாது. கடாஃபி காரரு பாவம் என்னென்னமோ எம்.ஜி.ஆர் வேலைல்லாம் செய்தாரு.ஆனால் அவரோட முடிவு என்னாச்சு பார்த்திங்கல்ல.

உங்களோட உலகியல் சாதனைகள் ,அச்சீவ் மெண்ட்ஸ் எல்லாமே வாரப்பத்திரிக்கையில வர்ர ஒரு பக்கக்கதை மாதிரி. அடுத்த மாசமே பழைய பேப்பர் கடைக்கு போயிரும். உளவியல் ரீதியா நீங்க அச்சீவ் பண்ற மெச்சூரிட்டிதான் (கவனிக்கவும்..ஞானமில்லை) அடுத்த பிறவில கை கொடுக்கும்.

நான் என் வாழ் நாளின் மொத சோசியரை சந்திச்சது 1989 பிப்ரவரி. ஆஃபீஸ் திறந்து சோசியம் சொல்ல ஆரம்பிச்சது 1990 மார்ச். இந்த இடைப்படட காலத்துல சோசியம் கத்துக்கற அளவுக்கு நான் புத்திசாலியும் இல்லை. அன்னைக்கிருந்த சூழலும் அதுக்கு ஏற்றதில்லை.

அந்த இடைப்பட்ட காலத்துல நான் சோசியம் கத்துக்கிட்டேன்னு சொல்ல தயக்கமா இருக்கு. வேணம்னா ரிவைஸ் பண்ணிக்கிட்டேன்னு சொல்லலாம்.

மெச்சூரிட்டி கதைய அடுத்த பிறவியில பார்த்துக்கலாம்னு நினைச்சா ..40 வயசு வரை படிக்கலாம். 45 வயசு வரை பணம்பணம்னு அலையலாம். அம்பானி கணக்கா ஊடு கட்டலாம் அதுக்கப்பாறம் பப்ளிக் லைப்ரரிக்கு புஸ்தவம் வாங்கின கணக்கா கண்ணாலம் கட்டலாம். ஃபெர்ட்டைல் சென்டர்கள்ள பழியா கிடக்கலாம். மன நோயாளியாவே வாழ்ந்து சாகலாம்.

இல்லைப்பா மரணத்துக்கப்பாறமும் தொடர்ந்து வரக்கூடிய மெச்சூரிட்டி தான் முக்கியம்.அதை இங்கயே இப்பவே பெறனும் - அடுத்த பிறவியிலயாவது ரிவைஸ் பண்ணிக்கிட்டு ப்ரொசீட் ஆயிரனும்னு நினைச்சா பஸ் ஸ்டாண்ட்ல குடும்பம் நடத்தாதிங்க..

Wednesday, November 23, 2011

ஜாதகத்தை க்ளோசப்ல பார்க்க..

அண்ணே வணக்கம்ணே!

அந்த காலத்துல தமிழ்வாணன் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்னு போட்டுக்கிடுவாரு. நமக்கு அந்த ரேஞ்சு இல்லின்னாலும் ஜோதிடம் தவிர கு.பட்சம் 1,116 மேட்டர்ல அடிப்பட்டு உதைப்பட்டு கதை பாடியிருக்கோம். நமக்கும் நாலு மேட்டர் தெரியும்.

இன்னைக்கு வலையுலகத்துல விலை போற சரக்கு சோசியந்தான்ங்கறதால் அதை விட்டுர மனசில்லாம கட்டியழறோமே தவிர சூப்பர் மேட்டர்லாம் கீது தலை!

பதிவோட தலைப்பை பார்த்து வந்தவுக ஏமாந்துராம இருக்க அயனான பாய்ண்ட்ஸ் சிலதை கொடுத்துட்டு சோசியத்தை தாண்டி சில மேட்டரையும் இந்த பதிவுல தரத்தான் போறேன். பதிவுக்கு போயிரலாம்..

ஜாதகத்தை பார்த்து பலன் சொல்றதுல எத்தனையோ டெக்னிக் இருக்கு.அதுல ஒரு டெக்னிக் ஒவ்வொரு பாவத்தையும் லக்னமாக கொண்டு பார்க்கிறது. இதை சகட்டுமேனிக்கு எல்லா பாவத்துக்கும் பார்க்காம எந்த மேட்டரை பத்தி எக்ஸ்ட் ரா டீட்டெயிலு தேவையோ அந்த பாவத்தை மட்டும் லக்னமாக்கி பார்த்தா போதும்.

உ.ம் :ரஜினி சார் ஜாதகத்துல ஆயுள் பாவம் எப்படின்னு தெரியனும்னா ஆயுள் பாவத்தை லக்னமாக்கிக்கிட்டு அனலைஸ் பண்ணனும். சாதாரணமா துவாதச பாவங்களை அனலைஸ் பண்றது லாங் ஷாட்டுன்னா இது க்ளோசப் ஷாட்.

ஒரு பார்ட்டிக்கு கண்ணால மேட்டர்ல சிக்கல் இருக்குன்னா 7 ஆம் பாவத்தை லக்னமாக்கி பார்த்து அனலைஸ் பண்ணா எதிர்கால மனைவியோட செல் நெம்பரை கூட கேட்ச் பண்ணிரலாம்.

ஒரு ஜாதகத்துல எந்த மேட்டரை பத்தி டீட்டெய்லா தெரியனுமோ அந்த மேட்டருக்கு காரக கிரகம் எதுன்னு பார்க்கனும். உ.ம் குழந்தைங்க மேட்டருன்னா குரு. அந்த கிரகம் நின்ற பாவத்தை லக்னமாக்கி அது முதற்கொண்டு 6,8,12 ராசிகளை பார்த்தா அந்த மேட்டர்ல உள்ள தங்கு தடை என்னன்னு புரியும்.

உதாரணமாக சுக்ரன் நின்ற பாவத்தை லக்னமாக்கி பார்த்தா ட்ரிபுள் எக்ஸ் சமாசாரங்க கூட அன் லாக் ஆயிரும்.


பிரச்சினை எதுவோ தீர்வும் அதுவே

முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. இதை பெண்களோட மார்பகத்துக்கு ஒப்பிட்டு எழுதாத கவிஞரே கிடையாது. அளவுக்கு மிஞ்சினா மெஜாரிட்டியும் நஞ்சுதேன். தாத்தாவுக்கு மெஜாரிட்டி இல்லாததால எதையும் உசத்தாமயே ( விலைய சொன்னேங்க) ஜமாளிச்சுட்டு போய் சேர்ந்துட்டாரு (வீட்டை சொன்னேங்க) ஆனால் அம்மா மெஜாரிட்டி கொடுத்த வசதியில நொங்கு எடுத்துட்டாய்ங்க. ஆங் எங்க விட்டோம்? மாங்கனி..யெஸ்..

சகட்டுமேனிக்கு மாம்பழம் தின்னு தொலைச்சுட்டா மந்தம் தட்டி - பசியே செத்துப்போயிருமாம். அதுக்கு என்னடா மருந்துன்னா மாங்கொட்டைய சுட்டு திங்கனுமாம். பாருங்க பிரச்சினை எதுவோ /எதனால வந்ததோ அதுவே தீர்வுமா இருக்கு.

கில்மாவை கூட எடுத்துக்கங்க. அதை ஜெயிக்கனும்னா ஒரே வழி அதை அனுபவக்கிறதுதேன். ( கொஞ்சம் விழிப்பு - கொஞ்சம் ஜாலாக்கு)

மரண பயத்துக்கு தீர்வு என்ன? மரணமே ..

தனிமைக்கு ஒப்பான உறவில்லை:

தனிமைன்னா என்ன? உறவுகளற்ற நிலை. ஆனால் அந்த தனிமை தான் மிகச்சரியான உறவு. மத்த உறவுகளை மரணமோ - பகைமையோ பிரிச்சுரும். பிரிஞ்சுபோகப்போற உறவுல்லாம் ஒரு உறவா?

என்னைக்கோ ஒரு நாள் பிரிஞ்சு போகப்போற உறவுகளை விட தனிமை பெட்டர் சாய்ஸ் இல்லியா? மற்ற உறவுகளில் போலித்தனம் -சுய நலம்லாம் கலந்து இருக்கும். நாம உண்மையா உறவாட முடியாது. ஆனால் தனிமை?

அதனாலத்தான் சொல்றேன் தனிமைக்கு ஒப்பான உறவில்லை:

அறியாமைக்கு மிஞ்சின ஞானமில்லை

மேலோட்டமா பார்க்கும் போது அறியாமை -ஞானம்ங்கற ரெண்டும் திமுக அதிமுக மாதிரி காண்ட் ராக்டரியோட தரிசனம் கொடுக்கும். கொஞ்சம் சூட்சுமமா பார்த்தா அரை குறை அறிவை விட்டு ஒழிச்சு அக்மார்க் அறியாமைக்கு -அதுவும் ஒரு குழந்தை கணக்கான அறியாமைக்கு திரும்பிப் போறதுதேன் உண்மையான ஞானம்.

அதனாலதான் சொல்றேன் அறியாமைக்கு மிஞ்சின ஞானமில்லை

Tuesday, November 22, 2011

ஜாதகம் எப்டி இருந்தாலும் ஜமாய்க்கலாம் வாங்க!

ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் .

ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.

எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.


ஆம் ..மிக சாதாரண ஜாதக‌த்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் ம‌ட்டும் ஈடுப‌ட்டு த‌ன‌யோக‌த்தை அனுப‌விப்ப‌தை காண‌முடிகிற‌து. ம‌ற்ற‌ 8 கிர‌க‌ங்க‌ள், 11 பாவ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ விஷ‌ய‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ள் இருந்தாலும் த‌ன‌ யோக‌ம் ம‌ட்டும் தொட‌ர்கிற‌து.


அதே நேர‌த்தில் 11 பாவ‌ங்க‌ள்,8 கிர‌க‌ங்க‌ள் ந‌ல்ல‌ நிலையில் இருந்தாலும் அவை கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் விஷ‌ங்க‌ளையெல்லாம் விட்டு விட்டு த‌ம் ஜாத‌க‌த்தில் தீய‌ப‌ல‌ன் த‌ரும் ஒரே ஒரு பாவ‌ம் அல்ல‌து ஒரே ஒரு கிர‌க‌த்தின் கார‌க‌த்துவ‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு உல‌கே மாய‌ம் என்று பாடி, சோக‌ம் கொண்டாடுவ‌தையும் காண‌முடிகிற‌து. இந்த‌ க‌ட்டுரைத் தொட‌ருக்கான‌ அடிப்ப‌டை தத்துவ‌ம் இதுதான்…….

நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..

நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள‌ வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

இனி ச‌ற்று விரிவாக‌ பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.

லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.

3ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். உட‌ன் பிற‌ந்த‌வ‌ர்க‌ளில் ஜாத‌க‌ங்க‌ளை ஜோதிட‌ரிட‌ம் காட்டி அல்ல‌து தாங்க‌ளே பார்த்து அவ‌ர்களில் யாருடைய‌ ஜாத‌க‌ம் ப‌ல‌ம் வாய்ந்த‌தாக‌ உள்ள‌தோ அவ‌ர்க‌ளுடைய‌ யோச‌னைப்ப‌டி,அவ‌ர்க‌ளின் கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.(குறிப்பிட்ட‌ ச‌கோத‌ர‌ர் அல்ல‌து ச‌கோதிரியின் ராசி த‌ங்க‌ளுக்கு வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக‌ இருக்க‌வேண்டும்)

4ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தாய்,தாய் வ‌ழி உற‌வுக‌ளை காடுமிட‌ம். என‌வே சென்ற‌ ப‌த்தியில் கூறிய‌ ப‌டி தாய்,தாய் வ‌ழி உற‌வுகளின் ஜாத‌கங்களை,ராசிகளை ப‌ரிசீலி‌த்து அதில் தேர்வு பெறுப‌வ‌ரின் யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

5ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது புத்தி,புத்திர‌ர்க‌ளை காட்டுமிட‌ம். என‌வே டேபிள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க் ம‌ட்டும் செய்து வ‌ர‌வேண்டும். வ‌ய‌து வ‌ந்த‌ ம‌க‌ள்/ம‌க‌ன் இருந்தால் அவ‌ர்க‌ள‌து யோச‌னை,துணையை நாட‌லாம்.(அவ‌ர்க‌ளின் ஜாத‌க‌ங்க‌ள் சுப‌ப‌ல‌மாயிருப்ப‌து முக்கிய‌ம். அவ‌ர்க‌ளின் ராசி தங்கள் ராசிக்கு வ‌சிய‌ம் அல்ல‌து ந‌ட்பாக‌ இருப்ப‌தும் முக்கிய‌ம்). மேலும் பெய‌ர் ,புக‌ழுக்கு ஆசைப்ப‌டாது,புத்திர‌,புத்திரிக‌ள் த‌ம் க‌ட்டுப்பாட்டில் இருக்க‌ வேண்டும் என்று எண்ணாது வாழ‌வேண்டும்)

7ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது க‌ண‌வ‌ன்/ம‌னைவியை காட்டுமிட‌ம். கணவன்/ம‌னைவியின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

9ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

11ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.


ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.


ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர‌ ஸ்தான‌ம். டேபுள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க்கில் ஈடுப‌ட‌க்கூடாது. அதிர்ஷ்ட‌த்தை ந‌ம்பி எந்த‌ செய‌லிலும் இற‌ங்க‌ கூடாது.சொந்த‌ யோசனையுட‌ன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போன‌தே வ‌ழி என்று செய‌ல் ப‌ட‌க்கூடாது."தென்னைய‌ பெத்தா/பிள்ளைய‌ பெத்தா க‌ண்ணீரு!" என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் வ‌ரிக‌ளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வ‌யிறும் வேறு" என்று உண‌ர்ந்து வாழ‌வேண்டும். பிள்ளைக‌ள் மேல் ப‌ற்றை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ கூடாது.


ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது ம‌னைவியை காட்டுமிட‌ம். வீதி வ‌ரை ம‌னைவி என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் த‌த்துவ‌பாட‌ல் வ‌ரி. இற‌ப்புக்கு பின் ந‌ம்முட‌ன் வ‌ர‌ப்போவ‌து இப்பிற‌வியின் நினைவுக‌ளே. என‌வே உள்ளுவ‌தெல்லாம் உய‌ர்வுள்ள‌ல் என்று வாழ‌வேண்டும். ம‌ற்ற‌ உற‌வுக‌ள் எல்லாம் பிற‌ப்பிலேயே அமைந்துவிடுகின்ற‌ன‌. ஆனால் க‌ண‌வ‌ன்/ம‌னைவி என்ற‌ உற‌வு விசயத்தில் ம‌ட்டும் ந‌ம‌க்கு இறைவ‌ன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை த‌ருகிறான். என‌வே 7 ஆம் பாவ‌ம் கெட்டிருப்பின் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ தேர்வு செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

ஒவ்வொரு ஆணும் உல‌க‌ அழ‌கியே ம‌னைவியாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணும் ம‌ன்ம‌த‌னே த‌ன் க‌ண‌வ‌னாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் ய‌தார்த்த‌த்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவ‌ம் கெட்டுள்ள‌ ஆண்,பெண்ணுக்கு அவ‌ர்க‌ள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது ந‌ர‌க‌மாக‌ மாறிவிடுகிறது. அதே நேர‌ம் 7 ஆம் பாவ‌ம் கெட்டிருந்தாலும் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ ஏற்று ஒற்றுமையுட‌ன் வாழ்ந்துவ‌ருவ‌தை காண‌முடிகிற‌து.

9ஆம் பாவம் கெட்டிருந்தால்:

சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.

11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுய‌முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைப்பீர்க‌ள்.(அதே நேர‌ம் தைரிய‌ம் அள‌வுக்கு அதிக‌மாகிவிடாம‌ல் பார்த்துக்கொள்ளுங்க‌ள்) பிர‌யாண‌ங்க‌ளால் ஏற்ப‌டும் நோய்க‌ளான‌
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வ‌ராது பார்த்துக்கொள்ள‌ வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்க‌ள் தான் இறுதி வாரிசாக‌ இருக்க‌ வாய்ப்பு அதிக‌ம். இத‌ர‌ கிர‌க‌ங்க‌ளின் பாதிப்பால் உங்க‌ளை அடுத்து வாரிசுக‌ள் பிற‌ந்தாலும் அவ‌ர்க‌ளை விட‌ நீங்க‌ள் உய‌ர்ந்த‌ நிலையில் இருப்பீர்க‌ள். என்ன‌ ஒரு பிர‌ச்சினை என்றால் வ‌யதாக‌ வ‌ய‌தாக‌ காதுக‌ள் தான் ட‌ப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர்.க‌ட‌ன் க‌ள் தீரும்,நோய்க‌ள் குண‌மாகும்.கோர்ட்டு வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ம் ஏற்ப‌டும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு துஸ்தான‌ம் என்ப‌தால் இது ப‌ல‌ம் பெறுவ‌து ஆயுட்குறைவை காட்டும். என‌வே இந்த‌ பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால் திடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌டும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்த‌துடன் தானும் கெட்டார்."

"ஆன‌ முத‌லில் அதிக‌ம் செல‌வானால் எல்லோர்க்கும் க‌ள்ள‌னாய்,ந‌ல்லோர்க்கும் பொல்ல‌னாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரிய‌ம் தீர்ந்து விட்டால் சுந்த‌ரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்க‌ள் அறியாத‌ ஒன்ற‌ல்ல‌ .. ஆக‌ தூக்க‌ம்,செல‌வு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உய‌ர்வு ஏற்ப‌டும் என்ப‌து உறுதி. இவை குறைய‌ 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆக‌வேண்டும். என‌வே தான் மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள் கெட்டிருந்தால் த‌ன‌யோக‌ம் பெற‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று கூற‌வில்லை. மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள்
வாழ்வில் தொல்லைக‌ள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக‌ த‌ன‌யோக‌ம் ஏற்ப‌ட்டு விடும்.

Monday, November 21, 2011

கனிமொழிக்கு ஜாமீன் - பத்திரிக்கைகள் வக்காலத்து

அண்ணே வணக்கம்ணே !

2 ஜி மேட்டர் லீக் ஆனப்ப அல்லா பத்திரிக்கையும் வீராவேசமா கிளிச்சிட்டிருந்தாய்ங்க.ஆனால் சமீப காலமா கனிமொழி மேட்டர்ல ப்ளேட்டை திருப்பி போட்டு எளுத ஆரம்பிச்சிருக்காய்ங்க. வெறுமனே கனிமொழிக்கு வக்காலத்து வாங்கினா "அசலான" விஷயம் வெளிய வந்துரும்னு மதுகோடா ,சத்யம் ராஜூன்னு சுத்தி வளைக்கிறாய்ங்க.

ஏறக்குறைய கலைஞர் ரேஞ்சுல கண்ணீர் விடறாய்ங்க. ஜாமீனுங்கறதென்னவோ அடிப்படை உரிமை மாதிரி எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. ஜாமீன்ல விடாத ஜட்ஜு மீடியாவுக்கு பயப்படறாரு -ஓவர் ஆக்சன் பண்றாருங்கற மாதிரி எளுதறாய்ங்க.

நம்ம அப்பாவி வாசகர்கள் இதையெல்லாம் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டா பாவம்யா..பொம்பள புள்ளை மாசக்கணக்கா செயில்ல போட்டா இன்னா பண்ணும்..கொடுத்துரவேண்டியதுதானேன்னு நினைக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

இந்த மாதிரி மேட்டர்லாம் பேப்பர்ல வர்ரதால இவிக மனித உரிமைகளுக்காவ கமிட்மென்டோட எளுதறாய்ங்கனு நினைச்சுட்டிங்கனா உங்களை மாதிரி முட்டாள் வேற யாருமில்லை. கனிமொழிக்கு ஜாமீன் வர்ரதுல நம்ம பத்திரிக்கைகளுக்கு என்ன அக்கறைன்னு கேப்பிக. மனித உரிமைகளை நிலை நாட்டறாய்ங்கனு சொன்னா அது ஜல்லி.

இவிகளை பொருத்தவரை .மனித உரிமைகள் மண்ணா போனாலும் நஷ்டமில்லை.தாளி இவிக வேலைக்கு வச்சிருக்கிற சப் எடிட்டர்,ரிப்போர்ட்டர் பொளப்பே நாறிக்கிடக்கு . ஜூ.விலருந்து வெளியே வந்த பார்ட்டிங்க கூட வாயை திறக்கலை.ஏன்னா எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதான்.

இவிக ஜூவியை பத்தி வாய் திறந்தா எந்த பத்திரிக்கையும் இவிகளை சேர்த்துக்காது. இதெல்லாம் ஒரு "புரிதல்". செரி செரி கனி மேட்டருக்கு வரேன்.

ஒரு காலத்துல மக்கள் கருத்தை பிரதிபலிக்கறதுதேன் பத்திரிக்கைகளோட வேலையா இருந்தது.ஆனால் இப்பம் மக்கள் கருத்தை உருவாக்கறதே நாங்கதேங்கற நினைப்பு அவிகளுக்கு வந்துருச்சு. ( நினைப்புத்தான் பொளப்பை கெடுக்குது)

இதுக்கு பிரதிபலனா என்ன கிடைச்சுரப்போகுதுன்னு கேப்பிக.வெய்ட் அண்ட் சீ.. கனி அம்மா வெளிய வந்தப்பாறம் விளம்பர வருமானம் குவியலாம். சங்கமம் அது இதுன்னு ப்ரோக்ராம் பண்ணுவாய்ங்க. விளம்பரங்களை அள்ளி விடுவாய்ங்க. இதெல்லாம் " ஜென்டில்மென் (?) அக்ரிமெண்டுங்கோ"

ராசா திகார்ல இருக்கிறப்பயே தான் அவரோட நண்பர் சந்தேக சாவு செத்தாரு. ராசாவுக்கு பெயில் கொடுத்து வெளிய விட்டிருந்தா இன்னம் ஆரெல்லாம் "தற்கொலை" செய்திருப்பாய்ங்களோ?

ஐ.பி.சில ஆயிரம் விதி -உபவிதி இருந்தாலும் கடேசியில ஜட்ஜூ தன் ஆறாவது அறிவை பயன்படுத்தித்தேன் தீர்ப்பு தரனும். அந்த ஆறாவது அறிவை இந்த நாலாவது தூண்கள் குழப்ப பார்க்கிறதுதேன் கேவலத்திலும் கேவலமா இருக்கு.

2ஜியை ஊதி பெருசாக்கினதும் இவிகளே. அதை ஊதி அணைக்க பார்க்கிறதும் இவிகளே. இதெல்லாம் எதுக்குன்னு கேப்பிக.வேற எதுக்கு? வசூல் ராஜா எம்பிபிஎஸ் தேன்.

வேலையோட வேலையா ஒரு காலத்துல பத்திரிக்கைகளை நாம கேட்ட பத்து கேள்விகளை இங்கன மீண்டும் தந்திருக்கம். அவிக பதிலே தரமாட்டாய்ங்கனு தெரியும். நீங்க ரோசிச்சு பாருங்களேன் இந்த கேள்விகளுக்கு அவிக கிட்டே பதில் உண்டா இல்லையான்னு ரோசிச்சு பாருங்க. இவிக (அவ)லட்சணம் என்னன்னு கொஞ்சமாச்சும் புரியும்.

பத்திரிக்கைகளுக்கு 10 கேள்விகள்:

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?


2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரிண்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன? ப்ளாக்ல வித்துர்ராய்ங்களா? இது குற்றமிலலியா? அல்லது அது தேவையில்லைன்னு எழுதிக்கொடுத்துட்டாய்ங்களா?


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு வெட்டியா,தண்டமா செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?

6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த ரொட்டீன் வேலைய கூட ஒழுங்கு மரியாதையா செய்யமுடியாத நீங்க பிரம்மாண்டமான அரசு இயந்திரத்தை குறை சொல்லலாமா?


7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?


10.உங்கள் வலை தளத்தில் contact என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி அதை கண்டுபிடிச்சு மெயில் அனுப்புபவர்களுக்கும் உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?



எச்சரிக்கை:

ஜோதிடம் 360 டிகிரி நூலுக்கான வேலைகள் மும்முரமா நடந்துக்கிட்டிருக்கு. நீங்க இந்தாளு ப்ளாக்/சைட்ல எழுதின அதே சமாசாரத்தை புஸ்தவமா போட்டு காசாக்கிர போறான்னு நினைச்சிருந்தா சாரி.. பொஞ்சாதி கிட்டே கூட கட் அண்ட் ரைட்டா பாய்ண்ட் டு பாய்ண்ட் பேசிரலாம். மிஞ்சிப்போனா கட்டிலை பிரிச்சு போடவேண்டி வரும் .அம்புட்டுதேன்.

ஆனால் ப்ளாக்/சைட்ல பாய்ண்ட் டு பாய்ண்ட் எழுதித்தொலைச்சுட்டா ஊத்தி மூடிர வேண்டியதுதேன்.அதனால துக்கினியூண்டு ரஸ்னா பவுடரை வச்சு 22 கிளாஸ் ஜூஸ் கலக்குறாப்ல மேட்டரை அடக்கி வாசிச்சு மஸ்தா பூச்சி காட்டோனம். இதனால பாய்ண்ட் சோனியாயிரும்.

புஸ்தவ விஷயத்துல மேற்படி மேட்டரை ரீ ப்ரொட்யூஸ் பண்ணா மேட்டர் டைல்யூட் ஆயிரும்.அதனால புஸ்தவத்துக்கான மேட்டரை ஏறக்குறைய புதுசாவே எழுதிக்கிட்டிருக்கம்.

Sunday, November 20, 2011

வறுமைக்கு மிஞ்சிய செல்வமில்லை

தாய்மொழியின் அடிப்படை இலக்கணம் நமக்கு ஜீன் வழியாவே வந்துருதுன்னு எங்கயோ படிச்சேன். குழந்தை கருவில் இருக்கும்போதே சொல் -பொருள் -வார்த்தை,வாக்கிய அமைப்புல்லாம் ஃபைனலஸ் ஆயிரும் போல.

நம்ம வாக்கிய அமைப்புகள்ள 99.99 சதவீதம் ஆக்டிவ் வாய்ஸாவே இருக்கும். ( இதுக்கு தமிழ்ல என்ன?)
உ.ம்: கலைஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினார்

இதை பாசிவ் வாய்ஸுக்கு மாத்தினா அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரால் கட்டப்பட்டது.

எனக்கென்னமோ இந்த ரெண்டு வாய்ஸுமே ஈகோயிஸ்டிக்கா இருக்குன்னுதான் தோனுது. மனித குலமே ஈகோயிஸ்டிக் தான். வாய்ஸும் அப்படித்தானே இழவெடுக்கும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரை கொண்டு தன்னை கட்டிக்கொண்டதுன்னு நான் சொன்னா பைத்தியக்காரத்தனமா நினைப்பிங்க. கால வெள்ளத்தின் ஓட்டத்தை - அதிலான சம்பவ கோர்வைகளை பார்க்கும் போது நான் சொன்னதுதான் கரெக்டுன்னு தோனுது.

மேற்சொன்ன ஆக்டிவ் வாய்ஸ் ,பாசிவ் வாய்ஸ் தான் மடத்தனமானதுன்னு புரிஞ்சிக்க நீங்க மனிதர்களை தேடும் சம்பவங்கள் ங்கற என்னோட பழைய பதிவை படிக்கனும்.

நாம பேசும் -எழுதும் வாக்கிய அமைப்புகள் எலலம் ஜீன் வழியா வந்தது. ஜீன் ? நம் முன்னோர் வழி வந்தது. அறியாமை காரணமா மனிதகுலம் தன்னோட நொய்மையை -பலவீனத்தை புரிஞ்சுக்காம வாழ்ந்த நூற்றாண்டுகளில் இந்த வாக்கிய அமைப்புகள் எல்லாம் ஏற்பட்டிருக்கனும்.

இன்னைக்கு நமக்குள் கருவாகி உருவாகும் வாக்கியங்கள் எல்லாமே ஜஸ்ட் ஈகோயிஸ்டிக் தான்னு நான் நினைக்கிறேன்.

டிஃப்ரண்டா எதுனா வாக்கியம் மைண்ட்ல ஸ்பார்க் ஆனா நமக்குள்ள கில்ட்டியே வந்துருது. என்னடா இது கிராமரும் இல்லை ,ஸ்ட்ரக்சரும் இல்லைன்னு பயந்துக்கறோம்.

நமக்கு சில சமயம் சில வரிகள் விபத்தே போல் மின்னும். பை.தனமாக இருக்கும். அர்த்தமற்றும் இருக்கும். அபத்தமாக இருக்கும்.

ஆனால் வாழ்க்கையே ஒரு அபத்தம் தானே. வாழ்க்கையை மிஞ்சிய அபத்தம் என்ன இருக்க முடியும்? அதே நேரம் இந்த படைப்பில் அர்த்தமற்றதாக எதுவும் இல்லை என்பதும் உறைகக மனதில் மின்னிய பை.தனமான வரி குறித்து சற்றே யோசிப்பதுண்டு.


இன்று ஸ்பார்க் ஆன அபத்தமான வரிகள்:

1.வறுமைக்கு மிஞ்சிய செல்வமில்லை:

வறுமையில் இருக்கும்போது வாழ்வின் வேறு எந்த பிரச்சினையும் பிரச்சினையாகவே தோன்றுவதில்லை.உறைப்பதில்லை. இந்த வறுமை மட்டும் ஒழிந்தால் போதும் வாழ்க்கையே ஸ்வர்கம்டா என்று தோன்றும்.

ஆனால் வறுமை சற்றே விலகிய பின் வாழ்வின் சிக்கல்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. எத்தனை செல்வம் வந்தாலும் சிக்கல்கள் தீருவதே இல்லை.

செல்வம் அதுவரை அவுட் ஆஃப் ஃபோக்கஸில் இருந்த பிரச்சினைகளை எல்லாம் ஜூம் போட்டு காட்டி நம் மீதான நம் நம்பிக்கையை நசிக்க செய்துவிடும்.

எனவே செல்வத்தை விட இதர பிரச்சினைகள் அனைத்தையும் அவுட் ஆஃப் ஃபோக்கஸ் செய்து வறுமை மட்டும் ஒழிந்தால் ..என்று ஜொள்ளு விட வைத்து நம் மீதான நம்பிக்கையை நமக்குள் அதிகரிக்க செய்யும் வறுமை தான் உண்மையான செல்வம்.

அதற்கு மிஞ்சிய செல்வம் எது?

Saturday, November 19, 2011

உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்

அண்ணே வணக்கம்ணே,
சனிப்பெயர்ச்சி பலன்லாம் தந்தாச்சு. அதை வச்சு ஹிட்ஸ் அள்ள இருக்கிற ஒரே வழி பரிகாரங்கள் தான்.

உங்க ராசிக்கு சனி 3,6,10,11 ல இருந்தா பரிகாரம் தேவையில்லை. நீங்க இந்த பக்கத்தை மூடிட்டு டாட்டா காட்டிரலாம்.

மத்தவுக உங்க ராசிக்கு சனி எத்தனையாவது வீட்ல இருக்காருன்னு பார்த்து வச்சுக்கிட்டு ( உங்க ராசிக்கு சனி எத்தனையாவது ராசியில இருக்காருங்கறதை உங்க ராசிக்கு பக்கத்துல ப்ரா'க்கெட்'ல தந்திருக்கேன்.)அப்பாறம் அடியில உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி ஆடியோ கேளுங்க‌.

1. மேஷம் (7)
2. ரிஷபம்(6)
3. மிதுனம்(5)
4. கடகம்(4)
5. சிம்மம்(3)
6. கன்னி (2)
7. துலாம்(1)
8. விருச்சிகம்(12)
9. தனுசு(11)
10. மகரம்(10)
11. கும்பம் (9)
12. மீனம் (8)

பரிகாரங்கள் Vs நவீன பரிகாரங்கள்

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கும் நம்ம வலைப்பூ/வலைதளங்களுக்கும் அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

நவக்கிரகத் தோஷங்கள்:
நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.
நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.
1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.
2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.
3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?

3. தானம் வழங்குதல்:
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!

விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.
இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.

நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

நான் டெவலப் செய்து பிரச்சாரம் செய்துவரும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும்.

வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.

Thursday, November 17, 2011

ராசியா? லக்னமா?



ஜாதகத்தை அனலைஸ் பண்ணும்போது,தசாபுக்திகளுக்கான பலனை கணிக்கும்போது லக்னத்தையும்,கோசார பலனை கணிக்கும்போது ராசியையும் பேஸ் பண்ணிக்கனுங்கறது அடிப்படை விதி. அதே சமயம் ராசியாதிபதி,லக்னாதிபதி ரெண்டு பேர்ல ஆரு பலம்மா இருக்காய்ங்கனு பார்த்து ஒர்க் அவுட் பண்ணனும்னுல்லாம் நேத்து சொல்லியிருந்தேன்.

ஒரு வேளை ராசியாதிபதி -லக்னாதிபதி ரெண்டு பேரும் பலம்மா இருந்தா ஆரை பேஸ் பண்றதுன்னு சிண்டை பிச்சுக்கனும் -அனுபவத்தை வச்சுத்தேன் டிசைட் பண்ணனும்னு சொல்லியிருந்தேன். இந்த மேட்டர்ல மொத பேஷண்ட் நாமதேன்.

நம்முது கடகலக்னம்,சிம்மராசி. லக்னாதிபதியான சந்திரனும் -ராசியாதிபதியான சூரியனும் பரிவர்த்தனம் அடைஞ்சிருக்காய்ங்களா.. ஒவ்வொரு சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சிக்கும் அது அனுகூலமா பிரதிகூலமான்னு சிண்டை பிச்சுக்கறதே வேலை.

ராசிய வச்சு பார்த்தா 3 ல சனி வேலை செய்யனும். லக்னத்தை வச்சுப்பார்த்தா 4 ல சனி வேலை செய்யனும். சமீபத்திய அனுபவங்களை வச்சுப்பார்த்தா ரெண்டுமே வேலை செய்யறது.

3-ல் சனி:

தினத்தந்தியில 2007 ஏப்ரல்ல சேர்ந்ததுலருந்தே வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் மகளுக்கு கொடுத்து விட்டாச்சு. அதனால கொஞ்சம் பொளச்சம். தினசரி தாதா மாமூல் கணக்கா காலை 30 மாலை 30 வாங்கி அதை மட்டும் அழிக்கிறது. அப்படியும் ரெண்டு தாட்டி பல்லு கட்டி மொக்கை. இப்பம் 3 ஆவது.

போன மாசம் (2-ல் சனி இருக்கிறச்ச) பொஞ்சாதியும் மகளும் ஏதோ கண்ணாலத்துக்கு போனாய்ங்க.மறு நாள் திரும்பிர்ரதா திட்டம். நமக்குன்னு பாப்பா ரூ.100 வச்சுட்டு போனாள். தாளி எதையாச்சும் உருப்படியா பண்ணா என்னன்னு வண்டியோட சைலன்ஸரை க்ளீன் பண்ண விட்டேன். அந்த பிக்காலி நம்ம தொப்பைய,முகத்துல தேஜஸை பார்த்து பார்ட்டி தாங்கும்டான்னுட்டு ஆயில் மாத்தினேன், ஸ்விட்சை மாத்தினேன்னு ரூ.300 க்கு பில்லை தீட்டி விட்டுட்டான். பல நாளைக்கப்பாறம் கை மாத்து வாங்கி சமாளிக்கவேண்டியதாயிருச்சு.

இதுவே சனிப்பெயர்ச்சிக்கப்பாறம் இதே போல ஒரு சந்தர்ப்பம் வந்தப்ப 400 ரூ வரை சர்ப்லஸ் பட்ஜெட்ல இருந்தம். பரவால்லடா மாப்ளே ராசிக்கு 3 ல சனி வேலை செய்றாருன்னு நிமிர்ந்தம். நம்ம பங்காளி ஜா.ராவுக்கு ஏதோ வேலை கிடைச்சுட்டாப்ல இருக்கு. பாவம் நேரமில்லை போல .வீக் எண்ட்ல மட்டும் கமெண்ட் போடறாரு

4-ல் சனி:
இந்த ஊட்டுக்கு பாடிகைக்கு வந்து 1 வருசமாகுது. வந்த நாளே ஊட்டுக்காரவுகளுக்கு நாம போட்ட கண்டிஷன் தனி மீட்டர் போட்டுரனுங்கறது.ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட். சரி ஒளிஞ்சு போவட்டும்னு நாமளே ரூ.2000 கொடுத்தம் ஏறப்போட்டு போட்டுருன்னுட்டம். இதுவரை ஒரு ம..ரும் நடக்கலை. இன்னைக்கு புதுசா தண்ணி விடமுடியாதுன்னுட்டாய்ங்க ( இதுக்கு அடிஷ்னல் சார்ஜு ரூ.300) .வண்டில சைலன்சர் ரெண்டு தாட்டி க்ராக்.கழட்டி -வெல்ட் பண்ணி மாட்டியிருக்கம். வீடு,வாகனம்லாம் நாலாவது இடம்தானே.

நம்ம ப்ளாகையும் ,சைட்டையும் (விதியில்லாம) பார்க்கிற சோதிடப்புலிகாள்! நீங்களே சொல்லுங்க. நமக்கு சனி 3 ல வேலை பார்க்கிறாரா? 4 ல வேலை பார்க்கிறாரா?

Wednesday, November 16, 2011

எந்த கிரகம் கொல்லும்?


அண்ணே வணக்கம்ணே !
பதிவுலகத்துக்கு வந்து 11 வருசம் ஆகுது ( 200,ஜூலை,31) ஓரளவுக்கு பேர் சொல்ல ஆரம்பிச்சும் பல காலம் ஆகுது ( 2009,மே) ஆனாலும் இந்த மேட்டரை டச் பண்ணவே இல்லை. எதைத்தான் விட்டுவச்சிருக்கம்.அதனால இதையும் இன்னைக்கு தோரஹா பண்ணிருவம்.அதாவது ஜாதகத்தில்
/கோசாரத்தில் எந்த கிரகம் கொல்லும் ,எந்த கிரகம் நன்மையை செய்யும்னு இப்பம் பார்த்துருவம்.Read More

Tuesday, November 15, 2011

ஜாதகம் இல்லாதவுக: பிரச்சினையும் தீர்வும்


அண்ணே வணக்கம்ணே!
ரெண்டு நாளைக்கு மிந்தி ஜாதகம் இல்லாதவுக தங்கள் பிரச்சினைகளை வைத்தே அந்த பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ஒரு குன்ஸா தெரிஞ்சுக்க ஒரு பதிவு போட்டோம். நேத்து பிரச்சினைக்கு காரணம்சூரியன்,சந்திரன்,செவ்வாய்னு தெரிஞ்சா செய்துக்கவேண்டிய பரிகார பேக்கேஜையும் தந்திருந்தம்.

இன்னைக்கு உங்க பிரச்சினைக்கு காரணம் ராகு,குரு,சனி,புத,கேது,சுக்கிரன்னு தெரிஞ்சா செய்துக்க வேண்டிய பரிகாரங்களை பதிவா போட்டிருக்கம். Read More

Monday, November 14, 2011

உயிரை பறித்த பரிகாரம்: திகீர் அனுபவம்

அண்ணே வணக்கம்ணே .. நேத்து பவர் கட்டோட டக் அஃப் வார் செய்து ஒரு பதிவு போட்டம். மேட்டரு இன்னாடான்னா ஜாதகம் இல்லாமயே நமக்கு வர்ர/வந்த பிரச்சினைகளை வச்சு மேற்படி பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கறதுதேன்.

உங்க பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கினவுங்க இங்கே கொடுத்திருக்கிற பரிகாரங்களை செய்ய ஆரம்பிங்க. நோயை விட சில நேரம் ட்ரீட்மென்டே பயங்கர லொள்ளு பண்ணிரும். அதனால பரிகாரங்களை ஸ்டார்ட் பண்றதுக்கு மிந்தி எப்போ -எப்பூடி ஸ்டார்ட் பண்றதுங்கற டிப்ஸை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிற ப்ளேயரோட ப்ளே பட்டனை அழுத்தி முழுசா கேட்டுருங்க. சகட்டுமேனிக்கு செய்து சீன் ரிவர்ஸ் ஆயிட்டா நாம பொறுப்பு கடியாதுங்கோ

Read More

Sunday, November 13, 2011

ஜாதகம் இல்லாதவுக : பிரச்சினையும் காரணமும்

ஜாதகம் இல்லாதவுக தங்களோட பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ஒரு குன்ஸா தெரிஞ்சுக்க இன்னைக்கு சிறப்பு பதிவு போட்டிருக்கம். பவர் கட் ஆற நேரம் அதனால டெக்ஸ்ட் குறைவு. ஆடியோ பதிவை கேட்க கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்துங்க.

பிரச்சினைக்கு காரணமான கிரகத்துக்குண்டான பரிகாரத்தை நாளைக்கு டெக்ஸ்டாவே தந்துர்ரன் தூள் பண்ணுங்க

Friday, November 11, 2011

நான் ஜோதிடனான கதை

அண்ணே வணக்கம்ணே !
நம்ம வலைப்பூவிலும் - வலை தளத்திலும் படித்த அதே பேச்சுத்தமிழை நீங்க இங்கேயும் ( ஐ மீன் இது ப்ரப்போஸ்ட் புஸ்தவத்துல) எதிர்பார்த்தா அது உங்கள் தவறு அல்ல. அடுத்த பத்திய படிச்சுட்டு பயந்துக்காதிங்க . முன்னுரையும் ஒரு சில சமாசாரங்களும் மட்டும்தேன் லேசு பாசான இலக்கண தமிழ் மற்ற படி நூல் முழுக்க பேச்சுத்தமிழ்தேன். உடுங்க ஜூட்!

ஜோதிடம் 360 டிகிரி என்ற இந்த நூலுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. இதுல நாம சோசியரானது எப்படிங்கற கதையும் அடக்கம். Read More

Thursday, November 10, 2011

எதிர்கால பிரதமர் மோடியா? : ஜோதிட ஆய்வு


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு டபுள் தமாக்கா. ஜோசியராக ஆசையான்னு நேத்து ஒரு மினி தொடரை ஆரம்பிச்சம். அதை 1,112 + 400 = 1,512 பேர் படிச்சாய்ங்க இன்றைய பதிவோட தலைப்பை படிச்சுட்டு என்னடா இது அதுக்குள்ளார முருகேசன் ட்ராக் மாறிட்டாருன்னு நொந்துக்காதிங்க. இன்னைக்கு நரேந்திர மோடியோட ஜாதக கணிப்பை எடுத்துக்கிட்டாலும் இந்த பதிவுல ஜோசியராக ஆசைப்படறவுகளுக்கு தேவையான டிப்ஸ் ஏராளமா கொட்டிக்கிடக்கு.Read More

ஜோதிடராக ஆசையா? இன்றே இப்போதே ஆகலாம்


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடராக ஆசையா நான் வெளியடப்போற புஸ்தவத்தை வாங்கிக்கங்கனு சன் பிக்சர்ஸ்/டிவி கணக்கா ப்ரமோட் பண்ண இந்த பதிவை போடலை. சமீபத்துல ஜோதிட பால பாடம்னு ஒன்னை துவங்கி திராட்டுல விட்டுட்டம்.

அந்த ரூட்ல ஒரு நாட் கிடைச்சது. கன்டின்யூ பண்றோம். தட்ஸால். Read More

Tuesday, November 8, 2011

அணு உலைக்கு கலாம் ஆதரவு : காலம் செய்த கோலம்


கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும். இயங்கவும் ஆரம்பித்துவிடும். என்னைக்கோ சுனாமியோ பூகம்பமோ வந்தா சனம் கொத்தா சாவாய்ங்க. இந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம்லாம் சோனி. நிக்காது.

இப்பமே போராட்டத்துக்கு பின்னாடி அமெரிக்க பணம் விளையாடுதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க. அணு உலைக்கு ஆதரவா போலி அமைப்புகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சு. இனி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்துவிடப்படும். அல்லாரும் சைடு வாங்கிக்கினு அவிகவிக வேலைய பார்க்க ஆரம்பிச்சிருவாய்ங்க. மிஞ்சிப்போனா நம்ம வை.கோ வீரகர்ஜனை செய்துட்டு ஜெயில்ல டென்னிஸ் டோர்னோ நடத்தவேண்டி வரும். Read More

Monday, November 7, 2011

பொருளாதார முடக்கத்துக்கு பளிச் பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
இந்த வலைப்பூ/வலைதளத்தில் உள்ள பதிவுகள் ஒரு புஸ்தவமா கிடைச்சா நல்லாருக்குமே - இந்த ஆளு சோசியத்தை எது மாதிரியும் இல்லாம புதுமாதிரியா சொல்றானே இந்தாளுகிட்ட நம்ம ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிரனும்பாங்கற எண்ணம் உள்ளவரானால் இந்த பதிவை ஆற அமர படிங்க. read more

Sunday, November 6, 2011

எனது டைரி ( ப்யூர்லி பர்சனல்)


அண்ணே வணக்கம்ணே !

அந்த காலத்துல பள்ளிக்கூடம் போற குழந்தைகளுக்கு திங்கள் கிழமையானா ஜுரம் வந்திரும். ரீஜன் இன்னடான்னா சனி ,ஞாயிறு லீவை நெல்லா எஞ்ஜாய் பண்ணியிருப்பாய்ங்க. ஊட்ல தாத்தா பாட்டி, அத்தை, சித்தப்பா,பெரியப்பா, ஊட்டாண்ட பசங்க இப்படி டைம் பாஸுக்கு குறைவே இருக்காது.

படக்குனு லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போவனும்னா ரெம்ப கஷ்டமா இருக்கும். அவிக சப்கான்ஷியஸ் மைண்ட்ல "கொய்யால ஜுரம் வந்துட்டா நெல்லா இருக்குமே ஸ்கூலுக்கு போகாம தப்பிச்சுக்கலாம்னு" ஒரு தாட் பலம்மா இருக்கும்.

ஹ்யூமன் பாடி ரெம்ப நொய்மையானது . ஆனால் மனசு ரெம்ப பலமானது. மனசு அதிலயும் உள் மனசு போடற உத்தரவுக்கு உடல் உடனே அடி பணியும் .

இந்த மேட்டரை சொல்றப்ப அந்த காலத்துலன்னு ஒரு வார்த்தையோட ஆரம்பிச்சேன். அப்பம் இந்த காலத்துல லீவு முடிஞ்சு வர்ர ஒர்க்கிங் டேவுல பிள்ளைகளுக்கு ஜுரம் வர்ரதில்லையான்னு கேப்பிக .Read More

Friday, November 4, 2011

செல்வம் பெருக பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே!
பொருளாதார முடக்கத்துக்கு என்ன காரணம்னு ஒரு பதிவுல சொல்லி - அதுக்கான் தர்கத்தை இன்னொரு பதிவுல விளக்கி உங்களை சீட் நுனிக்கே கொண்டு வந்துட்டன். இன்னைக்கு நிச்சயமா உங்களை ஏமாத்தாம எல்லா பரிகாரங்களையும் அவுத்து விட்டுர்ரன்.

மொதல்ல பொருளாதார முடக்கத்துக்கு என்னெல்லாம் காரணமா இருக்கும்னு ஒரு பட்டியலை தந்தேனே அது புதிய வாசகர்கள் வசதிக்காக இங்கன ரிப்பீட்டு.தொடர்ந்து படிக்க

Thursday, November 3, 2011

அல்லாருக்கும் சில்லறை : 2


அண்ணே வணக்கம்ணே !

நேத்து அல்லாருக்கும் சில்லறை புரளாம இருக்கிறதுக்கு காரணங்களை மட்டும் லிஸ்ட் அவுட் பண்ணி சூ காட்டி விட்டுட்டன். அந்த லிஸ்ட்ல வாஸ்து மேட்டரை கடேசில பார்ப்போம். இன்னைக்கு சாபங்கள்ங்கற சப் ஹெடிங்ல உள்ள சமாசாரங்களையும் (ரிவிஷன்) பரிகாரங்களையும் பார்ப்போம். Read More

Wednesday, November 2, 2011

வன் கொடுமைக்கு ஆளான தலித் நீதிபதி


சில அதிமேதாவிகள் சாதி அடிப்படையில இட ஒதுக்கீடு கூடாது, தலித் எல்லாம் முன்னேறிட்டாய்ங்க -பொருளாதார அடிப்படையில ஒதுக்கீடு தரனும் -மகளிர் ஒதுக்கீடுங்கற பேர்ல எங்க சாதி பெண்கள் தலித் ஒதுக்கீட்டுக்கு ஆப்படிக்கனும்னு மாய்மாலம் பண்ராய்ங்க.

நம்மளோட ஃபேமஸ் பஞ்ச் ஒன்னிருக்கு " ஒரு தலித் என்னவா வேணம்னா ஆகட்டும் உசரட்டும்.. ஆனா உயர்சாதியினர் பார்வையில அவன் தலித் தலித்துதேன்"

பாருங்க ஒரு நீதிபதிக்கே வன் கொடுமை நடந்திருக்கு. அவரு தேசிய எஸ்.சி.கமிஷனுக்கு புகார் அனுப்பியிருக்காரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் தனக்கு நிகழந்த கசப்பான அனுபவங்களை எஸ்.சி கமிஷனுக்கு அனுப்பியிருக்காரு.

ஆனா அவர் தன் புகார்ல எங்கேயும் நான் தலித் என்ற காரணத்தால் இந்த கொடுமைகள் நடந்ததுன்னு குறிப்பிடலை. சீமான்யா !

அவர் தனக்கு நடந்த அவமானங்களா சொல்லியிருக்கிற விசயங்க:

1.சொந்த மாவட்டத்துல நடக்கிற நிகழ்ச்சிகளுக்கு கூட என்னை கூப்பிடறதில்லை

2.முக்கியமான கேஸுங்க எதுலயும் என்னை பெஞ்ச்ல சேர்க்கிறதில்லை.

3.ஒரு நிகழ்ச்சியில எனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட சேர்ல இருந்த என் பேர் அச்சிடப்பட்ட காகிதத்தை ஒரு நீதிபதி பிடுங்கி கீழே போட்டு மிதிச்சாரு.

4.ஒரு திருமண நிகழ்ச்சியில பக்கத்துல உட்கார்ந்திருந்த நீதிபதி வேணம்னே கால் மேல கால் போட்டு தன்னோட ஷூவை என் மேல உரசினாரு.

5.இன்னொரு நிகழ்ச்சியில என் சேருக்கு பின்னாடி உட்கார்ந்திருந்த நீதிபதியோட சகோதரர் ஒருத்தர் என் சேரை பிடிச்சு ஆட்டிக்கிட்டே இருந்தாரு.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட எஸ்.சி.கமிஷன் தலைவர் இந்த புகாரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருக்காரு.

பார்ப்போம் நீதிபதிக்காவது நீதி கிடைக்குதான்னு..

அல்லாருக்கும் சில்லறை புரள டிப்ஸ்


அண்ணே வணக்கம்ணே !

நீங்க எந்த துறையில ,எந்த பிரிவுல செயல்பட்டுக்கிட்டிருந்தாலும் உங்களுக்கு சில்லறை சகட்டு மேனிக்கு புரள சில டிப்ஸ் எல்லாம் தர உத்தேசம்.

பதிவுக்கு போறதுக்கு மிந்தி விளம்பர இடைவேளை கணக்கா நம்ம ப்ளாக்/சைட்ஸோட ஹிட்ஸை காட்டும் படங்களை வச்சிருக்கன். ஜஸ்ட் ஒரு க்லான்ஸ் பார்த்துருங்கண்ணா. ( இம்மாம் பேரு படிக்கிறாய்ங்கன்னா மேட்டர் கீற ஆசாமிதாம்பான்னு ஒரு நம்பிக்கை வரும்ல. அந்த நம்பிக்கையே பலனை அதிகரிக்கும்ல அதுக்குத்தேன்) Read More

Tuesday, November 1, 2011

பெரும்பணம் ஈட்ட ஜோதிட,வாஸ்து ரகசியங்கள்


அண்ணே வணக்கம்ணே !

நாம இந்த வலையுலகத்துல அடி எடுத்து வச்சது 2000 ,ஜூலை. சூடு பிடிச்சதென்னவோ 2009 மே மாசத்துக்கு அப்பாறம் தேன்.

என்னென்னமோ தொடர்லாம் எழுதினோம். சிலதை முடிச்சோம்.சிலதை டீல்ல விட்டோம். என்னதான் பைத்தாரத்தனமா கிறுக்கி தள்ளினாலும் சனம் விடாம படிச்சுட்டு வர்ரிங்க.

நீங்களா கடுப்பாறதுக்குள்ளாற நமக்கே ஸ்பார்க் ஆகும் லைன் அப்பை மாத்திருவம். இப்படித்தான் ஓடிக்கிட்டிருக்கு.

இப்பம், இந்த நொடி ஒரு மேட்டர் ஸ்பார்க் ஆகுது. இதை வச்சு மறுபடி லைன் அப்பை மாத்த உத்தேசம். உங்கள்ள பலரும் நம்ம எழுத்துக்களை ஆர்வமா படிக்கிறிங்க. கமெண்ட் போடாட்டாலும் ஹிட்ஸ் மட்டும் கூடிக்கிட்டே போகுது. நன்றி.

நீங்க கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்து நம்ம சைட்ட தேடி படிக்கனும்னா உங்க கடமைகளை எல்லாம் நல்ல படியா முடிச்சிருக்கனும். உங்க தொழில்,வியாபாரம் ,உத்யோகம்லாம் சிறப்பா இருக்கனும்.அப்பத்தேன் ஒன்பது இடமும் குளிர்ந்திருக்கும். அப்பத்தேன் நாலு விசயத்தை தெரிஞ்சுக்கலாங்கற எண்ணமே வரும்.

அதுலயும் நம்ம சைட்ல ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத மேட்டர்லாம் படிக்கனும்னா நிறைய பொறுமை தேவை. அதிலயும் நம்ம பாசை கீதே படா பேஜாருப்பா. அதனால இன்னைலருந்து ஃபைனான்ஸ் மேட்டரை கவனிக்கலாம்னு இருக்கேன்.

உத்யோகஸ்தருங்கனா பரவால்லை. ( அதுலயும் என்னத்த வாழுது தினசரி இந்த பாஸுங்க கிட்டே ஏகறது புலி வாய்ல தலைய விட்டு எடுத்த கதையாத்தான் இருக்கு - மேலும் ஜாப் செக்யூரிட்டில்லாம் போன பத்துவருசத்தோட காலி. இப்பம் அல்லாருமே வேலை தேடிக்கினு தான் கீறாங்கோ)

இதுல யாவாரிங்க பாடு ரெம்ப நாஸ்தியா கீது. சனங்க கிட்டே காசில்லை. விலை வாசியா ஏறிப்போச்சு. போட்டியில விலைய குறைச்சு விக்கலாம்னாலும் பயமா கீது. இப்படி பல பிரச்சினை. அதனால மொதல்ல யாவாரிங்களை கவனிச்சுருவம். அப்பாறம் உத்யோகஸ்தருங்களை கெவுன்ச்சிக்குவம்.

1.வாஸ்து:

ஊட்டுக்கு சொல்ற மாரியே கடை ,கண்ணிக்கும் (கன்னிக்கு இல்லிங்கோ) வாஸ்து சொல்லி அலம்பல் பண்றானுங்கோ. நீங்க அதெல்லாம் கண்டுக்கிடாதிங்க. ஊட்டுக்கு இருக்க வேண்டிய வாஸ்து வேற. கடை கண்ணிக்கு இருக்கவேண்டிய வாஸ்து வேற.

மேற்கு ,தெற்கு பள்ளம், கிழக்கு,வடக்கு மேடா இருந்தாலும் பரவால்லை துரை.ஆனால் கடன்னு வாங்கினா பாங்கில மட்டும் வாங்கு. இல்லாட்டி கடன் கழுத்தை நெறிக்கும்.

தெருக்குத்துன்னு கும்மாங்குத்து குத்துவானுங்கோ.அதையும் கண்டுக்காதே வாத்யாரே. தெருக்குத்து இருந்தா யாவாரம் பிச்சிக்கினு பூடும்.

புதுசா கடை போட்டு/ மாத்தி நைருதில கல்லா பெட்டிய வச்சு உட்கார்ந்துக்கிட்டா ஈதான் ஓட்டனும். அக்னி மூலைல உட்கார்ந்து பாரு. ஒரு நிமிசம் நிம்மதியா இருக்க விடாம கஸ்டமருங்க வந்துக்கினே இருப்பாங்கோ.


2.லட்சுமி:

லட்சுமி நின்னா எல்லாம் ஓடிப்பூடும்னு எந்த அலக்கை ஊதிவிட்டுச்சோ தெரிலை. அல்லாரும் லட்சுமிய உட்கார வச்சு உட்கார வச்சு லட்சுமிக்கு பைல்ஸே வந்துருச்சுப்பா. லட்சுமின்னா பணம். பணங்கறது பாடில ப்ளட் மாதிரி .அது ஃப்ரீயா சர்க்குலேட் ஆகோனம். அதனால் தில்லா நிக்க வை நைனா. ஆல்ரெடி உட்கார்ந்துக்கினு இருந்தா அந்த ஃபோட்டோவை ஊட்ல எடுத்துக்கினு போய் வச்சிரு. லட்சுமிக்குரிய பீஜம் ஸ்ரீம். இதை பிரணவத்தோட சேர்த்து சான்ட் பண்ணிக்கினே வா. செமை சில்லறை புரளும்.

ஓம் ஸ்ரீம் ஓம் நமஹா

3.குழலூதும் கண்ணன்:

நம்ம கிட்னர் ஃப்ளூட்டை வாய்ல வச்சு ஊதினாருன்னு வை. புல்லாங்குழல் ஓசை கேட்டு வந்து குமிஞ்ச கோபிகா ஸ்த்ரீங்க மாதிரி கஸ்டமருங்க வந்து குமிவாய்ங்க. தில்லை வை.ஆனால் ஊட்ல வைக்காதே. ஊட்ல இருந்தா படக்குனு கொணார்ந்து கடையில வச்சுக்க. புதன் கிளமை ஒரு முளம் துளசி மாலை போட்டு ஓம் க்லீம் கிருஷ்ண க்லீம்னு ஜெபிச்சுட்டு இரு.

4.சண்டி:
சிங்கத்து மேல அம்மன் இருக்கிற படத்தை வச்சு வெள்ளிகிழமைல ஒரு எலுமிச்சம்பழம், ஒரு தம்ளர் மஞ்ச தண்ணி , பத்து ரூவா பட்டை லவங்கம் வாங்கி நைவேத்தியம் பண்ணு.

மறு நாள் மஞ்ச தண்ணிய கால் படாத இடத்துல தெளிச்சுரு. பட்டை லவுங்கத்தை வீட்டுசமையலுக்கு கொடு. எலுமிச்சம்பழத்தை ஜூஸ் போட்டு குடி. ( இந்த க்ளைமேட்ல மாணா வாத்யாரே - வெய்யில் காலத்துல மட்டும அப்படி செய் . மழை காலத்துல அதை கடை/வீட்டு சன் ஷேட்ல போட்டுரு.

இதை செய்தா கஸ்டமர் உன்கண்ட்ரோல்ல இருப்பான். போட்டிக்காரவுக கோட்டிக்காரவுகளா இருந்தாலும் அவிக முன்னே நீ தலை நிமிர்ந்து நடக்கலாம். அந்த அளவுக்கு செமை பிக் அப் இருக்கும் பாஸ்..

5.இன்னோரு மேட்டரு. நம்ம ஊர்ல ஆருனா பொளைக்க தெரியாத சோசியரு இருந்தா அவர் கிட்டே ஜாதகத்தை காட்டு. அவரு நல்லதா நாலு வார்த்தை சொன்னா ஓகே. இல்லை சகட்டு மேனிக்கு வினோலாக்ஸ் கொடுத்தாருன்னு வை. கல்லாவுல நீ உட்காராத. கல்லாவுக்கு நேர இருக்கிற சேர்ல உட்காராதே. பக்கவாட்ல இன்னொரு சேர் போட்டு உட்காரு. கடவுளே உன் கடைக்கு ஓனருன்னு நினை.

6. எனக்கு ஒரு செட்டியாரு (வயசாளி) கொடுத்த சஜஷனை அப்படியே தரேன். கப்புனு பிடிச்சுக்க. நீ பண்ற வியாபாரத்துல செலவெல்லாம் போக மொதலுக்கு வட்டி, ஒனக்கு கூலி கிடைக்குதான்னு பாரு. கிடைக்கலேன்னா கிடைக்கறாப்ல ப்ளான் பண்ணு. முடியலின்னா இழுத்து மூடிட்டு வேலை ,வெட்டி பார்க்க போயிரு.

கேஷுக்கு வாங்கி கேஷுக்கு வில்லு ( வித்துக்க) - முடியலியா கடனுக்கு வாங்கி கேஷுக்கு வித்துக்க. கடனுக்கு வாங்கி கடனுக்கு வித்தீனா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடியாயிரும்.

இருப்பை பணமா வச்சுக்காதே.சரக்கா வச்சுக்க. அவசரம்னா அசலுக்கு தள்ளி விட்டுரு.


7. கடை வியாவாரம் பண்ற இடம். கடைய கோவிலா மாத்திராதே. கடையில கஸ்டமருதான் கடவுள். கடையில கஸ்டமருங்க மஸ்தா கீனம். சாமி படங்க இல்லை. 3 ,5 ,7 மிஞ்சிப்போனா ஒன்பது படம் வச்சுக்க.
செத்து போனவுகளை சாமி படங்களோட கலக்காதே.

சில அய்யருமாரு வாயு மூலையில சாமி படங்களை வைக்கச்சொல்வாய்ங்க. நீ ஆரத்தி காட்டற நேரம் மட்டும் தான் அங்கே தெய்வ சான்னித்யம் ஏற்படும். நைருதில வை. கிழக்கையோ வடக்கையோ பார்த்த மாதிரி வை.

8.தகடு,யந்திரம்,சக்கரம் இதுக்கெல்லாம் அர்த்தம் இருக்கு. ஷக்தி இருக்கு. அதெல்லாம் சிடி,டிவிடி மாதிரி. அது எம்ப்டியாவே இருந்தாலும் அதுல ரைட்டிங் பண்றதுக்கு ஒரு வித்தை இருக்கு. பூஜை பண்ற சமயம் அந்த படம்/சக்கரங்களை தொட்டு ப்ராணஸ்ய சிவஹ் ப்ராணேச ஸ்வாஹான்னு சொல்லிக்கிட்டே வா. நாளடைவில் சிடி ரைட் ஆயிரும்.

9.கடை யாவாரத்துக்குத்தேன். டிவி பார்க்க, பாட்டு கேட்க, திங்க,தூங்க, ஃபிகர் மடக்க, தண்ணி போட வேற இடம் இருக்கு. பொஞ்சாதியாவே இருந்தாலும் கடைக்கு வந்தா கணக்கு கணக்காவே இருக்கனும்.

10.சனம் மானங்கெட்ட சனம் . நீ எத்தீனி தபா இன்சல்ட் பண்ணாலும் மறுபடி மறுபடி வருவாய்ங்க.ஆனால் பைசா,கடை,ஆஃபீசெல்லாம் மானஸ்தங்க.ஒரு தபா இன்சல்ட் பண்ணிட்டேனு வை. டாட்டா பை பைதான்.

11.பெருமாள் (ஏழுமலையான்) படத்தை வைக்காதே. வட்டி கட்டியே சாகனும். சிவன் தியானத்துல உள்ள படத்தை வை. அண்ணன் தம்பியாவே இருந்தாலும் யாவாரம் பேசற "தில்" வரும்.

12.உன் கடையில ஒவ்வொரு அங்குலமும் உனக்கு பரிச்சயமா இருக்கனும். கண்ணை கட்டிக்கிட்டாலும் எந்த பொருள் எங்க இருக்குன்னு தெரியனும். வெய்ட் எல்லாம் கிழக்கு வடக்குல வை தெற்கு,மேற்கை ஃப்ரீயா உடு (பாசேஜ்)